Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Statement diplomacy of EU [TamilNet, Monday, 23 February 2009, 15:26 GMT] Significantly deviating from its earlier position of justifying war on 'terrorism', the EU Council Conclusions on Sri Lanka, Monday, stressed the need for Government of Sri Lanka (GOSL) and the LTTE to comply with ‘provisions of international humanitarian law and principles of the laws of war’, treating them as equal parties engaged in war. Taking this stance, the EU called for an immediate Ceasefire. The EU also reiterated its intention to send a Troika as soon as possible. However, the rest of the EU conclusions are the usual rhetoric, ending with the never implemented GSP+investigation on Sri…

    • 2 replies
    • 1.1k views
  2. தமிழகத்திலுள்ள அகதிகளில் 20 பேர் நாடு திரும்புகின்றனர்.! உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 20 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு நாடு திரும்பவுள்ள அகதிகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர். மேலும் தாயகம் திரும்பும் அகதிகள…

  3. ஆவாகுழுவுடன் தொடர்பு முல்லை இளைஞன் கைது? முல்லைத்தீவு மாந்தைகிழக்கு விநாயகபுரம் பகுதியில் இளைஞர்ஒருவர் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா விதுசன் (வயது 20) என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் அவரது வீட்டிற்குச் சென்ற பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைது செய்து சென்றதற்கான கடிதத்தினை அவரது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளனர். …

  4. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களில் பலர் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  5. மாதகல் கடற்கரையில் கஞ்சாவுடன் இளம் பெண் கைது யாழ் மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. சந்தே கநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசார ணைகளை பொஸிச…

  6. மயூராபதி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜையில் பிரதமர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வேண்டி வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் நேற்று (2020.11.08) பிற்பகல் கலந்து கொண்டார். வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடந்த இந்த ஆசீர்வாத பூஜையில் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இதன்போது கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரதமரின் குடும்பத்தினர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/93990

    • 10 replies
    • 1k views
  7. ஜனாதிபதியின் சிறப்பு நாள் எதுவென உங்களுக்கு தெரியுமா.? அனைத்து பதவிகளையும் துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அன்றைய நாள் தமது அரசியல் வாழ்வில் சிறப்பானதொரு நாள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அதிகார சபையின் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுடன் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போமே ஜனாதிபதி; மேற்கண்டவாறு தெரிவித்தார். தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரையும் ஒரேவிதமாக நடத்துவது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுயாதீனம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநில…

  8. இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இந்திய இராணுவ சீருடையை அணிந்திருந்தனர் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாலச்சந்திரன் உடல் என்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இலங்கை வீரர் என்று சொல்லப்படும் நபர், இந்திய இராணுவத்தினர் அணியும் சீருடையில் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் மரணம் குறித்து இறுதிக் கட்டப் போரின்போது தலைமைத் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகையில், "பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில் இராணு வீரர் ஒருவ…

  9. ஏறாவூர் கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் நேற்று மாலை, பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கி காணாமல்போன மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கியபோது மீட்கப்பட்டது. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) எனும் மாணவனின் சடலமே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவரின் வலையில் சிக்கி மீட்கப்பட்டது. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் பங்குட…

  10. முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் …

    • 6 replies
    • 873 views
  11. 5 வருடத்தின் பின்னர் தமிழருக்கு ஒன்றும் செய்யவில்லையென குறை கூறாதீர்- என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன் 13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை கொடுக்கலாம் எனவும் ஐந்து வருடங்களின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையென தம்மை குறைகூற வேண்டாம் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இன்று வடக்கிலும் கிழக்கிலும் 160,000 வீடுகள் தேவையாக உள்ளதென குறிப்பிட்ட சுவாமி நாதன், இதனை கட்டிக்கொடுப்பதற்கு சிலர் இடை…

    • 1 reply
    • 378 views
  12. 2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் https://www.facebook.com/friendsofgajen/videos/580756212763661 2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை: நேர்மையாகக் கூறுவதானால் மிகுந்த தயக்கத்துடனேயே இந்த விவாதத்தில் கலந்துகொள்கிறேன். எதற்காகத் தயக்கம் என்றால், பாதுகாப்பு அமைச்சு விவகாரமானது இனங்களை துருவங்களாக ஆக்கியுள்ளது. இந…

    • 50 replies
    • 3.6k views
  13. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது : சிறிலங்கா ஜனாதிபதி தெரிவிப்பு திகதி: 01.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] "விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தத்திற்கு செல்லாது. யுத்தத்தை நிறுத்துமாறு உள்ளூரிலோ, சர்வதேச ரீதியிலோ எமக்கு எத்தகைய அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை" என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபச தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி படையினர் செயற்படுவதனாலேயே யுத்தத்தின் வெற்றி காலதாமதம் அடைந்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை நேற்றுக்காலை சந்தித்துப் பேசிய போதே மஹிந்த ராஜபச இவ்வாறு கூறினார். இங்கு அவர்…

  14. சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதித் தூதுவருக்கு இந்தியா நுழைவிசைவு வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தில் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட சப்ருல்லா கான், தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இராஜதந்திர நுழைவிசைவு கோரி விண்ணப்பித்தார். அவருக்கு இன்னமும் இந்தியா நுழைவிசைவு வழங்காமல் இழுத்தடித்த வருவதால், அவரால் தனது பணிகளைப் பொறுப்பேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதித் தூதுவர் சப்ருல்லா கானின் நிமனத்தை இந்திய அரசாங்கம் இன்னமும் அங்கீகரிக்காததாலேயே அவருக்கு நுழைவிசைவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து…

  15. முல்லைத்தீவு கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காக ஏவுகணை தொகுதிகளை சிறிலங்கா படை நிறுவியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 441 views
  16. போர் குற்ற அறிக்கை பகிரங்கப்படுத்த முடியாது; அமெரிக்காவிற்கு அரசாங்கம் அறிவிப்பு போர் குற்ற விசாரணை குறித்ததான அறிக்கையினைப் பகிரங்கப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையினை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 1957ஆம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும். இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணை அறிக்கைகளை வெளியி…

    • 2 replies
    • 712 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் மனு விபரம் வருமாறு: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் இராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க உள்ளோம். எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை…

  18. வவுனியாவுக்கு செல்வதற்கும் அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிடுவதற்கும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனவுக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  19. தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது அரசியல் தந்திரத்திற்காக என இந்தியாவின் றோ புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை ஆய்வாளர் ஜோதி சிங் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு செயற்படுவதாகவும், அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், போரின் இறுதிக்கட்டத்தில் அவ்வாறான போராட்டங்களை நடத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014 ஆம் நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைக்கு எதிரான இந்த பாரிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர். …

  20. தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும் - தாரகா - சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார். ஈழத்தில் இர…

  21. தனக்கு எதிராக சேறுபூசும் இணையத்தளங்களின் உரிமையாளர்கள் இருக்கும் இடத்தை தான் சரியாக அறிந்து கொண்டால், அவ்வாறான நபர்கள் உலகில் எங்கிருந்தாலும் அங்கு சென்று அவர்களை சந்தித்து மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, தன்னை குறித்து இணையத்தளம் ஒன்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மறைந்திருந்து சேறுபூசாமல், நேருக்கு நேர் மோதலுக்கு வருமாறு தான் இணையத்தள உரிமையாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எதிர்வரும் 06 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கு முன்னர் …

  22. இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஊடகவியலாளர்களுக்கு சிற்றுண்டியாக அப்பம் வழங்கியதுடன் நிகழ்வில் தானும் அப்பத்தை உண்பதைப் படத்தில் காணலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த அப்பம் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-30#page-1

  23. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் 12" அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தாழ்நில பகுதிகளிலுள்ள கிராமங்களான பன்னங்கண்டி, முரசுமோட்டை ,ஊரியான் ,கண்டாவளை போன்ற கிராமங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி மாவட்ட இர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு..! | Virakesari.lk

  24. Started by mayavan,

    இலங்கை அரசு போய்பரப்புரைக்கென கென கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகிறான். சிங்களவர்களின் போய்பரப்புரைகல் மூலம் UN பிரதிநிதிகளின் மின்னஞ்சல்கள் பெட்டிகளை நிரப்பி கொண்டிருக்கிறான். நாம் இப்பொழுது செயல்படாவிட்டால் நம்முடைய முயற்சிகள் அதற்க்கான சரியான பலன் கிடைக்காமல் போய்விடும். இந்தியாவும் போர் நிறுத்தத்தை நிற்பந்தித்துள்ளது. விமர்சிப்பதை இப்பொழுது தள்ளிவைத்து விட்டு அதை எமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது புத்திசாலிதனம். இவ்வளவு நாட்கள் செய்த போராட்டங்களை விட இப்பொழுது நாம் செய்யப்போகும் மின்னஞ்சல் ஊடறுப்பு போராட்டம் ஐ நா பாதுகாப்பு சபையில் இலங்கையை கடுமையான கண்டனங்களுக்குள்ளக்கி போரை நிறுத்த செய்ய வேண்டும். இந்த 10 naatkalum நாம் ஒவ்வொருவரும் ஐ நா பாதுகாப்பு சபைய…

    • 1 reply
    • 1.3k views
  25. சிறிலங்கா விவகாரத்தைத் திசைதிருப்பிய கமலேஸ் சர்மா [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 10:59 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக லண்டனில் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து வட்டமேசை மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக லண்டனில் உள்ள உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும், சிறிலங்காவில் இருந்து மாநாட்டை இடமாற்றம் செய்யும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையிலேயே, கொமன்வெல்த் செயலர் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.