ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்: வைத்தியர்கள் எச்சரிக்கை! யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும். ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள். அவர்களிலும் 5 பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின்னர் புற்றுநோய் வைத்தியசாலைய…
-
- 0 replies
- 782 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு உடன்பாடு: ஜனாதிபதி உரை இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின உரையின் போது தெரிவித்தார் தனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவ…
-
- 2 replies
- 330 views
-
-
ராஜதந்திரிகள் இலக்கு வைக்கப்படுகின்றார்களா? கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனரா?-விதுரன்- மட்டக்களப்பில் முழு அளவில் போர் நடைபெறுகிறது. தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். புலிகளின் பகுதிகளை நோக்கி அனைத்து படை முகாம்களிலிருந்தும் கடும் ஷெல் மற்றும் பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான், யுத்த முனைப்பகுதிக்கு இராஜதந்திரிகள் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். கிழக்கை விடுதலைப் புலிகள் வசமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவோமெனக் கூறிவரும் அரசும் படைத்தரப்பும் தினமும் அங்கு படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள …
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளில் நிய+யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் பேரணியை நடத்தியது. இந்தப் பேரணியை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதம மந்திரி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்தியொன்றை விடுத்திருந்தார். இதேவேளை தமிழின அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இலங்கை அரசின் போர்க்குற்ற மீறல்களைச் சர்வதேச நீதி வி…
-
- 8 replies
- 1.1k views
-
-
வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட்டு, இது தொடர்பான கடிதம் ஒன்றை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மாகாண சபை உறுப்பினர்கள் அதிக அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற காவற்துறை பாதுகாப்பினை போல தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/36398/57//d,article_full.aspx
-
- 0 replies
- 254 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில் அஞ்சலி 18 May, 2023 | 06:48 AM முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் வியாழக்கிழமை 18.05.2023 நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. குறித்த அஞ்சலியின் பின்னர் ரவி…
-
- 0 replies
- 356 views
-
-
கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்….. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களுக்குரிய 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின் தாக்கல் செய்த வழக்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு கருதப்படுகிறத…
-
- 0 replies
- 483 views
-
-
நாதியற்ற நிலையில் தமிழ்ச்சாதி இல்லை! தமிழர் தம் தேச இறைமையை மீட்டு தமிழீழம் எய்தும் வரலாற்றின் காலப்பகுதி தற்போது நடைபெறுகிறது எனறே தமிழினம் உணர்கிறது. ஆபத்தான ‘சமாதானம்’ எனும் நெருப்பாற்றை வெற்றியோடு கடந்து புடம்போட்ட புதிய புலிகளாக தமிழினமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எழுந்து நிற்கும் இக்காலப்பகுதி, தமிழரின் வீரம் செறிந்த, குருதியாலும் சதைகளாலும் வெல்லப்பட்ட விடுதலைவேள்வியை முடித்துவைக்கும் கணங்கள் என்றே எம் உளங்களும் உயிர்களும் கருதுகின்றன. புதிய தேசத்தை பிரசவிக்க பிரசவவேதனை தொடங்கிய உணர்வு உலகத்தமிழரை ஆட்கொள்ள தொடங்கிவிட்டது. இவை ஆவேச வார்த்தைகள் அல்ல(rhetoric) அது களயதார்த்தமாகும். ( ground reality). நீண்டபோராட்டத்தினதும் சமாதானப் பயணத்தின…
-
- 1 reply
- 1k views
-
-
Posted by சோபிதா on 01/06/2011 in செய்தி (செய்தி தொகுப்பு – இளந்தி -01/06/2011) தாயகத்தில் இருந்து வரும் செய்திகள் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பற்றிய கவலைகளை அதிகரிக்கின்றன. அங்கிருந்து வரும் தகவல்களின்படி கெடுபிடி யுகத்தின் அத்தாட்சியான குடும்ப விவரம் குடும்ப உறுப்பினர்கள் படங்கள் அடங்கிய பட்டியலை வீட்டுக்வெளியே தொங்க விடும் காலம் மீண்டும் வருகிறது. வீட்டுக்கு வெளியே தொங்கவிடும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் புகைப்படங்களும் அடங்கிய அட்டைகள் ஒரு அநாகரிகமான கட்டாயம். இதை அடிமைச் சின்னம் என்று கூடச் சொல்ல முடியும். ஆட்சியாளர்கள் தவிர்ந்த பிறிதொருவரும் இதை அங்கீகரிக்கவில்லை. இயல்பு நிலை தோன்றிவிட்டது. என்று பறை சாற்றும் இலங்கை அரசு ஏன் இந்த அட்டையை தொ…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை- நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த நாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவற்றை வழங்கவேண்டும் எனினும் இலங்கை சிறிய நாடு நாங்கள் நாட்டை பிரித்து சமஸ்டியை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 431 views
-
-
சிலநாட்களாக தேனீ ஏன் பொய்த்தேன் சொரி(றி)ய வில்லை? Global warming காரணமாக மழை அப்பக்கம் அடிக்கவில்லையா?
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்று இரவு இந்திய குழு வந்து இறங்குகின்றது அதற்குள் ரம்புக்வெல அவசர அவசரமாக தமிழர்க்கு 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம், பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். யாருக்கு யாரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம். . இன்று பத்திரிகையாளர் மா நாட்டில் பேசிய ரம்புக்வெல;தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லவெனவும். . 13வது சீர்திருத்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரம் வழங்கும் போது, பிரச்சனை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். . இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் யோசனை ஒன்று தமிழக முதலமைச்சரினால், நே…
-
- 8 replies
- 1.9k views
-
-
சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி நீர் கிணறுகள் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சனிக்கிழமை காலையில் பெரும் அளவிலான கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். சுன்னாகம் கதிரமலைசிவன்ஆலய முன்றலில் இருந்து பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கிய வண்ணம் அண்கள் பெண்கள் சிறுவாகள் முதியவாகள் என்றவேறுபாடுகள் இன்றி இந்த கண்டனப் பேரணியில் அனைவரும் கலந்துகொண்டார்கள். சுன்னாகம் பொலிசார் பாதுகாப்பு நிமித்தம் கண்டணப்பேரணி சென்ற பாதையிலும் மற்றும் மின்சார நிலைய வளாகத்திலும்’ காவல் கடமையில் ஈடுபட்டு இருந்தார்கள்.இதேவேளை சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்தில் காவல் கடமயில் ஈடுபட்டு இருந்த ஈராணுவத்தினர் அமைதியான முறையில் முன்வாசலில் இருந்தும் விலக உள்புறம…
-
- 2 replies
- 867 views
-
-
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் புழக்கத்தில் இருப்பது இந்த நாட்களில் பல குற்றச்செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால், தேடுதல் நடவடிக்கைகளை அதிகரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடுவதற்கு உதவும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தகவல் கொடுக்கும் தனியாருக்கு வழங்கப்படும் வெகுமதி தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வழங்கிய அறிவுறுத்தலின் படி, பொலிஸ் மா அதிபர் சி. ஈ. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அடிப்படை நடவடிக்கையாக இன்று (25) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் க…
-
- 2 replies
- 143 views
- 1 follower
-
-
திலீபன் நினைவேந்தலை தடுக்கும் சிறிலங்காவின் முயற்சி – நீதிமன்றில் இன்று முக்கிய விசாரணை தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், நாளை நடத்த ஏற்பாடாகியுள்ள 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறும், திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி உள்ளிட்டவற்றை அகற்ற யாழ். மாநகர சபைக்கு உத்தரவிடுமாறும் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட யாழ்.நீதிவான்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மூதூர் நலன்புரி நிலையத்தில் 6 தமிழ் இளைஞர்கள் கைது [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 15:12 ஈழம்] [செ.விசுவநாதன்] மூதூர் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இளைஞர்கள் தங்கியிருந்த போது கடந்த மார்ச் 31 ஆம் நாள் நள்ளிரவு இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக இளைஞர்களை அழைத்துச் செல்வதாக அவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னமும் எவரும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையத்திடம் இளைஞர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் விவரம்: அருள்நாயகம் யோசப் யேசுதாசன் (வயது 25) …
-
- 0 replies
- 765 views
-
-
இலங்கையிலுள்ள தற்போதைய சிங்களவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களின்வம்சா வழியினர் தான் என்று தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா கூறியுள்ளார். இந்தோ ஆசிய தொல்பொருள் ஆய்வு மையம் சென்னையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசு கையில்: முதலாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகிய அரசர்கள் சேர நாட்டில் இருந்து கூலிப்படைகளை வரவழைத்து இருந்தனர்.இந்தக்கூலிப் படைகளை சேர்ந்தவர்கள் இலங்கைப் பெண்களை திருமணம் செய்து இலங்கையில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர், தற்போதைய சிங்களவர்கள் இந்தக் கூலிப்படைகளின் தல…
-
- 1 reply
- 938 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டபூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லையென சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவரை இலங்கை அரசு கொலை செய்ததா என்பதில் அவர்களிடமே குழப்பம் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இன்று புலனாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இன்று மக்கள் குழம்பவில்லை. மாறாக அரசியல் தலைவர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyBRbKchvy.html
-
- 5 replies
- 1.3k views
-
-
“மைத்திரியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும் – ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்க அனுமதியோம்” October 3, 2018 இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தனக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் எனவும் அதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களை…
-
- 1 reply
- 525 views
-
-
ரணிலின் உயிருக்கு ஆபத்து : உயிர் தப்புவாரா? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு இன்று நாட்டிற்கு மீண்டும் திரும்ப உள்ள நிலையில் இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதிக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
-
- 0 replies
- 208 views
-
-
இந்த அரசமைப்பு வரையறைக்குள் தீர்வுக்கு இடமேதும் கிடையாது ` இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணலாம் என சில அரசியல் பிரகிருதி கள் பெரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்விடயத்தை ஒட்டி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ. நெடுமாறன் இப்போது தெரிவித் துள்ள இரண்டு விடயங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. ஒன்று இந்தியாவில் இருப்பது போன்ற இன சமரசம் பாகுபாடின்மை இலங்கையில் கிடை யாது. இங்கு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி நசுக்குவதே தனது வாழ்வியல் நோக்காகக் கொண்டு அந்தத் தீவிர வெறியில் செயற்படுகின்றது. அடுத்தது இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையின் அரசமைப்புக்குள் உட்பட்டு தீர்வு காணவே…
-
- 0 replies
- 692 views
-
-
சர்வதேச சித்திரவதை நாளில் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம் Friday, June 24, 2011, 0:47 உலகம், தமிழீழம் 26.06.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA முன்பாக கொலை சித்திரவதை பாலியல் வல்லுறவு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம். உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம் (AGTAS) Action Group of Tamil Asylum Seekers கரன் - 078…
-
- 0 replies
- 299 views
-
-
அரச நியமனங்கள் வழங்குவதில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன் ஊடாக அவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக் கொடுத்தமைக்கு, நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எங்கள் பக்கமுள்ள சரியான ஆதாரங்களை முன்வைத்து நியமனங்களை பெற்றுக்கொண்டோம். நியமனங்கள் பெற்ற சகலரும் தமது செயற்றிறன்களைக் காட்டி மற்றவர்களுக்கு ஒரு சவாலாக விளங்கவேண்டும். குறித்த வழக்கானது 278 பேர் கொண்ட…
-
- 5 replies
- 511 views
-
-
யாழில் தொடரும் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம்: பீதியில் மக்கள். யாழ்ப்பாணம் கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாதபோதும், கடைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடையிலுள்ள பொருட்களை கொத்தி நாசமாக்கி, சேதப்படுத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவட…
-
- 0 replies
- 289 views
-
-
யாழ். மீசாலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி ! Published By: Nanthini 22 Jul, 2023 | 02:08 PM யாழ். தென்மராட்சி மீசாலை, புத்தூர் சந்திக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது புகையிரதமொன்று மோதியதில், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இன்று கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், முற்பகல் 11.30 மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அப்புகையிரத கடவையை வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். அவ்வே…
-
- 3 replies
- 527 views
-