ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. …
-
-
- 41 replies
- 2.3k views
- 2 followers
-
-
அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித…
-
- 4 replies
- 488 views
-
-
'நபி' 'நரி'யானார், 'தாய்' 'நாய்' ஆனார்! - வடக்கு மாகாணத்தில் தமிழ் படும் பாடு [Wednesday 2015-11-25 07:00] முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள…
-
- 1 reply
- 1.6k views
-
-
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் இருகின்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்னமும் பலம் பொறுந்தியதாகவே விளங்குகின்றது என்றும் அதன் அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி நாட்டுக்கு வழிமையான தலைமைத்துவத்தை வழங்க கூடிய ஒருவரையே தாங்கள் வேட்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தேயிலை , இறப்பர் சிறு பயிர்ச்செய்கையாளர்கள், ஏற்றுமதியாளர்களுடனான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான சந்திப்பு கொழும்பு இலங்கை கண்காட்சி மகாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இதனை தெரிவித்தார். அரசியலமைப்…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை இராணுவ விவகாரத்திற்குள் சர்வதேசத்தின் திடீர் தலையீடு காரணமாக புதிய நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படுமா என்னும் கேள்வி அரசியல் வட்டாரங்களில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாதுகாப்பு படைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவீனங்களை குறைப்பதற்கான கட்டாயத்தை ஜெனீவா முதலில் இருந்தே வலியுறுத்தியுள்ளது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் குறிப்பிட்டுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்களை குறைப்பதன் பின்புலத்தில் சர்வதேசங்களின் அழுத்தங்கள் உள்ளன. இலங்கையின் பாதுகாப்பு செலவீன குறைப்பையும், மறுசீரமைப்புக்களையும் அவர்கள் வேண்டி நிற்கின்றார்கள். இ…
-
- 1 reply
- 416 views
-
-
சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? - பழ.நெடுமாறன் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்தி ரமாகக் கொண்டுஇருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சி…
-
- 0 replies
- 881 views
-
-
மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் ஒரு சிறிய மழைக்கே இவ்வாறு வெள்ளத்தில் மிதக்கும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டு நகரில் அமைக்கப்பட்ட தனியார்பஸ் நிலையம் 65மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டு இன்று காலை 10.00மணிக்கு மாநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணியின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ரணில்விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவரின் தவீர்க்க முடியாத காரணத்தினால் அமைச்சரும் அதிகாரிகளும்தான்…
-
- 1 reply
- 664 views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம். இ…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின், குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் ஏன் மறுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு மைத்திரி, ரணில் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டத்தக்கது. ஆனால், உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் உடனடியாக தமிழ் அரசி…
-
- 1 reply
- 642 views
-
-
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி! இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்த தொகை கடந்த ஒக்டோபர் மாதம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக 2024 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பலானது நவம்பர் மாதம் சரிவினை கண்டுள்ளது. மேலும், 2023 நவம்பரில் பதிவுசெய்யப்பட்ட 537.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒரு சிறிய வீழ்ச்சியையும் எடுத்த…
-
- 1 reply
- 379 views
-
-
இந்தியக்குழு கிழக்கு மக்களை சந்திக்காதமை கவலைக்குரியது : பொன். செல்வராசா _ இந்தியாவில் இருந்து வருகைதந்த இந்திய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிற்கு வந்து பாதிக்கப்பட்ட எந்தப் பொதுமக்களையும் சந்திக்காது இரண்டு வைபவங்களில் மட்டும் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றமை கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். இந்திய குழுவினர் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது 'வடக்கு , கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களையும் மீளக்குடியேற்றப்படாதவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகின்றோம்" என அறிவித்து இங்கு வந்தனர். ஆனால் கிழக்கிற்கு விஜயம…
-
- 0 replies
- 349 views
-
-
கூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமையவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரப்படலாம் என்று அதன் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந…
-
- 0 replies
- 290 views
-
-
அனைத்து தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி: 14 டிசம்பர் 2015 இன்று நள்ளிரவிலிருந்து ஆரம்பமாகவுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பொன்றுடன் மேற்கொண்;ட பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல யோசனைகள் தொடர்பாக இலங்கையின் முக்கிய தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்துடன் மிகவும் கடுமையாக முரண்பட்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக தொழிற்சங்க குழவினர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் பின்னர் கருத்துதெரிவித்துள்ள தொழிற்சங்க பேச்ச…
-
- 0 replies
- 461 views
-
-
(எம்.மனோசித்ரா) போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டால் மாத்திரமே சுதந்திரமான தேர்தலை நடத்த முடியும். அந்த உரிமையையும் சுதந்திரத்தையும் நாம் அனைவருக்கும் வழங்கியிருக்கின்றோம். தமது கருத்துக்களை கூறுவதற்கு இருக்…
-
- 1 reply
- 294 views
-
-
பிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே பிரதியமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். பிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின. இந்த இரண்டு பிரதான கட்சிகளின் பகைமை அரசியல் அதிகார ஆசையே இந்நிலைக்கு காரணமாக அமைந்தது. எனவே இனி மேலும் எம்மிடையே பகைமை அரசியல் வேண்டாம். அதனை கைவிடுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வ…
-
- 3 replies
- 598 views
-
-
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் பதவி விலகும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும். இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது. குறைந்தபட்ச அதிகாரம் இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும். …
-
- 2 replies
- 287 views
-
-
மட்டக்களப்பில் அதிரடிப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 30, 2008 - 05:40 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தும்பன்கேணிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி தினக்குரல் ஏடு தெரிவித்துள்ளது. வெல்லாவெளி தும்பன்கேணிப் பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது கடந்த வெள்ளியிரவு 8.30 மணியளவில் மோட்டார்கள் மற்றும் சிறிய ரக போராயுதங்கள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக தினக்குரல் எடு செய்…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுதலை செய்யக…
-
- 0 replies
- 420 views
-
-
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி .வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், அதன் அதிருப்தியாளர்கள் பலரும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றதால் இது கூட்டமைப்புக்கு எதிரான கூட்டு என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், மேற்படி அமைப்பின் இணைத் தலைவரான வடக்கு முதல்வர் அதை …
-
- 1 reply
- 624 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மறுநாளே இராணுவக்கைதிகளை விடுதலை செய்வேன் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச . பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை உடனடியாக விடுதலை செய்வேன் என்று கூறுகின்ற கோத்தபாய ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி எதுவும் கூறவில்லை. அப்படியானால் நான் ஜனாதிபதியாக வந்தால், இராணுவத்தை விடுதலை செய்வேன். ஆனால் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என்பதாக கோத்தபாய ராஜபக்ச வின் நிலைப்பாடு உள்ளது என அனுமானிக்கலாம். இது அவர்கள் பக்கம் என்றால், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் பொதுப்படையானதாக இருக்கின்றதே தவிர, எதையும் குறித்துரைப்பதாக இல்லை. அதாவது நாட்டைக…
-
- 0 replies
- 344 views
-
-
09 Jan, 2025 | 03:28 PM யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளா…
-
- 2 replies
- 363 views
-
-
ஈழத்தமிழ் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம் இருந்தபோதும் எமது கல்வியை அமைதியாக தொடர்வதற்கு இலங்கையரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே இருந்துவருகின்றது என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனுக்கு தமிழீழ மாணவர் பேரவை அனுப்பியுள்ள மனுவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முதலாம் தவணை பரீட்சை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது இலங்கை அரசுக்கும் நன்கு தெரியும். இருந்தும் கடந்த சில வாரங்களாக மிலேச்சத்தனமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் ம…
-
- 0 replies
- 855 views
-
-
மட்டக்களப்பு நகரில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக் கிழமை மாலை கலந்து கொள்ளும் நிகழ்வோன்று ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியில் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் தனித் தனியாக சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். மாலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் மற்றுமொரு சந்திப்பொன்றில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகவும் , அவ்விடுதியின் கட்டிடத் தொகுதயிலேயே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவ…
-
- 0 replies
- 664 views
-
-
கிணற்று நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? : மக்கள் ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடி நீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இந்த …
-
- 14 replies
- 962 views
- 1 follower
-
-
மருதமடு மாதா திருச்சொரூபம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் தலையீடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் காரணமாகவே பேராயர் இராயப்பு ஜோசப் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு................... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_09.html
-
- 0 replies
- 972 views
-