ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்! தீபாவளி தினமாகிய நாளைய தினம் பொது மக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்த…
-
- 65 replies
- 8.5k views
-
-
இந்து ஆலயங்களில் சேர்த்துவைக்கப்படும் பணத்தின் ஒருபகுதியை அந்தந்தப் பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று -1 கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (19) தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் இந்து விவகார அலுவல்களுக்கு பொறுப்பானவரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனிடமே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது பற்றி எம்.பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கையில், கடந்த …
-
- 5 replies
- 574 views
-
-
ஆலயங்களில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துதல், ஆலயத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாத்தல், மற்றும் மக்களின் வாழ்வு உயர்வடையச் செய்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூலப் பரம்பொருளான சிவனை ஆராதிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை தேவஸ்தானத்தில் இடம் பெறவுள்ளது. சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த ஆராதனை நிகழ்வில் சிவாச்சாரியார்கள், திருமுறையாளர்கள், நாதஸ்வர, தவில் வித்துவான்கள், இசை ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆலய பரிபாலன சபையினர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து மாமன்றப் பிரதிநிதிகள், சாயிசமித்து மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட சகலரையும் கலந்துகொள்ளுமாறு…
-
- 0 replies
- 418 views
-
-
ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த கும்பல் கைது எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ்…
-
- 0 replies
- 319 views
-
-
கிழக்கு மாணாண ஆலயங்களில் ஒலிபரப்பப்பட்டு வந்த கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் ஆலய நிர்வாகத்துக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் இரத்தினதுரைய 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வன்னி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பல பாடல்களுக்கு அவர் வரிகளை எழுதி இருந்தார். எனினும் தற்போது அவர் எங்கு உள்ளார் என்ற தகவல்கள் எவையும் தெரியவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழ் நாட்டுக்கு அகதியாக சென்ற போது, கியு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் உண்…
-
- 0 replies
- 400 views
-
-
யாழ். குடாநாட்டில் ஆலயங்களில் மாலை 6 .00 மணிக்கு பின்னர் மணிஒலிக்கக்கூடாது என்றும் தீ வெட்டி கொளுத்தக்கூடாது எனவும் படையினரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் சென்ற சீருடை அணிந்தவர்கள் மாலை 6 .00 மணிக்குப் பின்னர் மணி ஒலிக்கக்கூடாது என்றும் தீவெட்டி கொளுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இத்தகைய அறிவித்தலானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். குடாநாட்டில் பெருமளவான படையினரும் பொலிஸாரும்…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால் ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்குவது சரியானதா என்றும், மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்…
-
- 0 replies
- 534 views
-
-
ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா். http…
-
- 27 replies
- 2.6k views
-
-
ஆலயங்களில் மிருக பலியிடல் ; மனு மீதான தீர்ப்பு 10 ஆம் திகதி இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்தது. இந்து ஆலயங்களில் மிருக பலியிடலை …
-
- 3 replies
- 886 views
-
-
ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார். ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத் தடை ஆணை கோரி அகில இலங்கை இந்து மசா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றை யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு மற்றும் கோப்பாய் பிரதேசசபைகளின் செயலாளர்கள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், தெல்லிப்பழை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகரிகள் மற்றும் யாழ் பிராந்திய சுகாத…
-
- 0 replies
- 597 views
-
-
கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது எனவும் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார். சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி ஆலயங்களின் அனைத்து பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/284672
-
- 13 replies
- 1.5k views
- 2 followers
-
-
சர்வதேசத்தின் பார்வை தற்போது சிறீலங்காவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இனவாத சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீகத்தின் மீதே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சாகையிலும் தமிழ் உயிர் குடித்துச் சாவேன் என்ற நிலையிலேயே சிங்களம் தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வடபகுதியில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், தெய்வ வாகனங்கள் தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டமை தொடர்பாக பல தடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் நான்கு இந்து ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்…
-
- 1 reply
- 741 views
-
-
ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர் செனவி உறுதி 18 Jan, 2025 | 09:40 PM (நமது நிருபர்) ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் ஆகியோர் நல்…
-
- 0 replies
- 190 views
-
-
(எம்.நியூட்டன்) இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் சிவபூமியின் அறக்கட்டளைத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கருத்துத் தெரிவிக்கின்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும்தெரிவிக்கையில், தமிழர் பகுதிகளிலுள்ள ஆலயங்கள் தெய்வ விக்கிரகங்கள் அழிக்கப்படுவது சேதமாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இத…
-
- 8 replies
- 832 views
-
-
தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக இடம்பெறுவதாலும் ஆலயங்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆலய நிர்வாகத்தினரும் பக்தர்களும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டுமென பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயம் இரு வாரங்கள் முடக்கப்பட்டு ஆலய நிர்வாகத்தினரில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் நாம் அறிந்ததே. மேலும், பருத்தித்துறை சிவன் ஆலய அம்பாள் ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி சுவாமி வெளி உலா வந்தது. இதனால் திருவிழா தடைப்பட்டது. பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மூலம் மீண்டும் நிபந்தனைகள…
-
- 4 replies
- 410 views
-
-
புதன் 28-03-2007 02:08 மணி தமிழீழம் [சிறீதரன்] ஆலயத்திற்குச் சென்றவர்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலில் அமைந்துள்ள பன்றித்தலைச்சி ஆலயத்திற்கு சென்ற பக்கதர்கள் மீது இராணுவத்தினர் மிகவும் மோசமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். நேற்றைய தினம் பங்குனித் திங்களுக்கு பொங்குவதற்காக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்கதர்கள் வேண்டும் என்றே இராணுவத்தினரால் சோதனையென்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டு நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்கள். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குறிப்பாக வலிகாமம் தென்மராட்சி உட்பட வடமராட்சிப் பகுதிகளில் இருந்தும் அதிக எண்…
-
- 0 replies
- 710 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அரசியல் வாதிகள் மற்றும் அந்தணர்கள், சமூக ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பிரார்தனையை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆலயத்திற்கு வெளியில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆத்ம சாந்தி பூஜை இடம்பெற்று கொண்டிருந்தபோது ஆலயத்திற்குள் நுளைந்த புலனாய்வு பிரிவு அலுவலர் ஒருவர் நிகழ்வினையும், நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களையும் புகைப்படம் எடுத்திருந்தார். ஆலயத்திற்குள் நுளைந்து அவர் புகைப்படம் எடுத்தமை அங்கிருந்தவர்கள் மத்தியில…
-
- 2 replies
- 796 views
-
-
யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மூத்தவிநாயகர் ஆலயத்தில் சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஐம்பொன்னினாலான விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்நாள் இரவு நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் 3பவுண் தங்கச்சங்கிலி, காப்புகள், அட்டியல் மற்றும் ஐம்பொன் விக்கிரகங்கள் என்பன இனந்தெரியாதவர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரால் நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆலயத்தில் மிக அண்மையில் வருடாந்த உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. www.irruppu.com
-
- 0 replies
- 338 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆலயத்தில் வழிபட பத்து நாட்கள் மட்டுமே அனுமதி இராணுவத்தினரின் கட்டுப்பட்டில் உள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை நடாத்துவதற்கு இராணுவம் அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 10 ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். ஆலயத்தின் அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்ளவதற்காக இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தது. தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் குறித்த …
-
- 0 replies
- 241 views
-
-
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள டி.எம்.வி.பியினரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18வயதான முருகப்பன் கேதீஸ் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் 19வயதான அல்லிராஜ் காமராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கேதீஸ் என்பவர் சாதாரண தரப்பரீட்சையை எழுதிவிட்டு, கட்டிடத் தொழிலாளியாக வேலைசெய்து வந்துள்ளார். கமராஜ் என்ற இளைஞர் பரீட்சை ஒன்றுக்காக தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலையடிவேம்பு முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு திரும்பி…
-
- 0 replies
- 666 views
-
-
ஆலையடிவேம்பில் 24,529 பேர் பாதிப்பு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 7,417 குடும்பங்களைச் சேர்ந்த 24,529 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 46 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் இடம்பெயர்ந்து, உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். ஆலையடிவேம்பு பிரதே செயலகத்துக்குட்பட்ட 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமிருந்து கிராம உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, இத்தகவல் பெறப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார். இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை, பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை மாவட்ட செயலகத்தில் இருந்து பெ…
-
- 0 replies
- 322 views
-
-
ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் Leftin May 28, 2020ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்2020-05-28T23:11:14+00:00 திருக்கோவில் நிருபர் வீதி நிர்மாண ஒப்பந்தகாரரிடமிருந்து 3 இலச்சம் ரூபா லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார். அரசினால் நட…
-
- 1 reply
- 425 views
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:23 PM அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தை மண் நிரவி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வரை பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள இந்து மயானத்துக்கு எதிராகவுள்ள கண்டக்குழி குளத்திலிருந்து அந்தபகுதி விவசாயிகள் வயல் நிலங்களுக்கு நீரை பெற்றுவருவதுடன் கால்நடைகளும் அந்த குளத்து நீரை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த கால யுத்த சூழல் காலத்தில் அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
ஆலையடிவேம்பு பகுதிகளில் ஆயுதபாணிகள் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள் [14 - March - 2008] * பத்மநாதன் எம்.பி.யிடம் முறைப்பாடு அம்பாறையில் ஆலையடிவேம்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் வரும் ஆயுதம் தாங்கியோர் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் 25 ஆம் திகதிக்குப் பின்னர் ஆலையடிவேம்பு , கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா, அக்கரைப்பற்று -8 உட்பட பல பிரதேசங்களைச் சுற்றி வளைத்து பாரிய தேடுதல்களை நடத்திய விசேட அதிரடிப்படையினர் வீடு வீடாகச் சென்று அனைவரையும் வீடியோ படமெடுத்துள்ளனர். இதற்குப் பின்னரே இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் …
-
- 0 replies
- 860 views
-