Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் ஆரம்பமாகிவிட்டது. கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் என்கிற இடத்துக்கு இந்த ஊர்வலம் 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும், மாணவர்களுமே பெரும் பங்கேற்றுள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது. ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர். முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்துள்ளார். …

  2. யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை யாழ்.ஆயர் இல்லம் மறுதலித்துள்ளது. யாழ்.ஆயர் சார்பில் குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாhர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மதகுருமார் மீது சுமத்தப்பட்;ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்காது விசாரணைகளிற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில் 'யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெறோமி கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் க…

  3. வல்லைவெளியில் நேற்று நடந்த கோர விபத்து Saturday, April 16, 2011, 4:48 வல்லைவெளியில் தலை தெறிக்கும் வேகத்தில் பறந்து சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இருவரும் படுகாயங்களுடன் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஒருவர் நேற்றிரவு மரணமானார். மற்றவர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சண்டிலிப்பாய் வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த தே.தேவமகிந்தன் (வயது23) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.கரணவாய், நவிண்டிலைச் சேர்ந்த சோ.விஜயரட்ணம் (வயது 32) என்பவரே …

  4. இராசபக்சே தீர்வைத் தர முடியுமா? - பழ.நெடுமாறன் ஆளில்லாத கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்ட எக்களிப்பில் இருக்கும் இராசபக்சே இலங்கை இனப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு அளிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் இதற்கு ஆதரவாக நம்பிக்கையைத் தெரிவித்து இருக் கிறார்கள். இராசபக்சேவினால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தர முடியுமா என்பது பெரும் கேள்வியாகும். 2004-ஆம் ஆண்டு நடை பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்த லிலும் அதற்குப் பின்னர் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இராசபக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தனித்த பெரும்பான்மையைப் பெற முடிய வில்லை. ஜே.வி.பி., சிங்கள - உருமய போன்ற இனவெறிக் கட்சிகளி…

  5. http://senthil5000.wordpress.com/2009/03/0...ae%be%e0%ae%a9/

  6. எங்கள் மக்களின் காணியை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது! சம்பந்தன் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் எங்கள் மக்களுடைய காணிகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, படைத்தளபதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித…

  7. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. ”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) கிடைத்தது. அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநரின் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்த…

    • 6 replies
    • 1.3k views
  8. சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டு வருவதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 70 மில்லியன் யூரோ உதவி நிறுத்தி வைக்கப்படவுள்ளது. சிறீலங்காவில் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. COLOMBO, June 11 (Reuters) - The Europen Commission has serious concerns about Sri Lanka's human rights record and will withhold a 70 million-euro aid package unless it opens up, a top EU official said on Wednesday. The commission said the package was dependent on Sri Lanka removing barriers to humanitarian assistance, including resolving visa issues for Red Cross and U.N. workers in the country. "We …

  9. 67 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களளும், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நெடியவன், போதகர் இம்மானுவேல், ருத்ரகுமாரன் ஆகியோர் இணைந்து, இந்த வருடத்தில் இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டங்களை வகுத்துள்ளதாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் உரையாற்றி சோதிடர்கள் சிலர், 2012 ஆம் ஆண்டு தற்போதைய இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை இழக்கும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஈழ ஆதரவாளர்களின் பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளதாகவும் இதன் மூலம் இந்த திட்டம் உறுதியாகி உள்ளதாக திவயின கூறியுள்ளது. விஜய் தொலைக்காட்சி, இதனை ஒளிப்பரப்புவத…

  10. எமது அன்பான உறவுகளே!! அனைவருக்கும் வணக்கம்! இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை. அன்பான சொந்தங்களே!!! மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் தொடர்கின்ற …

    • 0 replies
    • 1.3k views
  11. வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ ஆனந்த சங்கரி இ சித்தார்த்தன் ஆகியோர் ஏங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. தனி ஆட்சியொன்றை அமைக்கப் போராடிய டக்ளஸுக்கும் தற்போதும் ஆயுதங்களை வைத்திருக்கும் புளொட் சித்தார்த்தனுக்கும் எப்படி முதலமைச்சர் பதவியை வழங்க முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் திஸ்ஸமஹாராம பிரதேச சபைத் தலைவர் எச்.எல்.விஜயசிறி தலைமையில் நடைபெற்ற 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியதாவது; வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏங்கித்தவிக்கும் ஆனந்த சங்கரிஇ அமைச்சர் …

    • 0 replies
    • 1.3k views
  12. விமானதாக்குலுக்கு உள்ளான படகுத்துறை கிராமத்திற்கு மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார். · விடுதலைப்புலிகளின் தளங்கள் எதுவும் அங்கு இல்லை ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் விமானத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட படகுத்துறை கடற்கரையோரகிராமத்திற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். படகுத்துறை கிராமத்தில் விடுதலைப்புலிகளின் எந்த தளங்களும் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இல்லை என தெரிவித்த ஆயர் மீனவர்களின் குடிசைகளே தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிந்திருப்பதாக தெரிவித்தார். விமானப்படையின் கோரத்தாக்குதலில் 3பிள்ளைகள் கற்பிணிதாய் தந்தை என ஒரேகுடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் குண்டுவீச்சினால் உடல்சிதறி பலியாகியிருப்பதாக ஆயர் ம…

  13. ஆட்கள் பலவந்தமாக காணமல் போதல் நடவடிக்கைகளில் உலகிலேயே மோசமாக குற்றமிழைத்தவர்களில் இலங்கை அரசாங்கமும் ஒன்றென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் கொழும்பு, இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெருப்பித்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவுக்குக் குறைந்து விட்டதாகவும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய நடவடிக்கைகளினால் இவை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வெளிவிவாகாரச் செயலாளர் பாலித ஹோகண தெரிவித்தாக பி.பி.சி. நேற்று குறிப்பட்டுள்ளது. 'துரதிஷ்டவசமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உண்மையகான நிலைவரத்தை அளவுக்கு அதிகமாக பெருப்பித்துக் காட்டியிருப்பதாக கோஹணெ கூறி…

    • 0 replies
    • 1.3k views
  14. புலிகளின் வான்படை கண்டு பயப்பட்டால் இந்திய வான்படையையே கலைத்து விடுங்கள்: ஜெனீவாவில் பழ. நெடுமாறன் [திங்கட்கிழமை, 11 யூன் 2007, 23:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் உலகின் 5 ஆவது வல்லரசான இந்தியாவுக்கு ஆபத்து என அச்சப்பட்டால் இந்தியாவின் வான்படையையே கலைத்து விடுங்கள் என்று ஜெனீவாவில் நடைபெற்ற "வெல்க தமிழ் - 2007" எழுச்சிப் பேரணி நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தமிழீழத் தனியரசை அங்கீகரிக்கக் கோரி ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பாரிய எழுச்சிப் பேரணியில் பழ.நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை: ஐ.நா. அவையின் முற்றத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கும் தமிழர்களே! உணர்ச்சிப் பெருக்கோடு உற்சா…

    • 3 replies
    • 1.3k views
  15. 53 ஆவது படைப்பிரிவுக்கு ஏற்படும் இழப்பு சிங்களத் தரைப்படைக்கு ஏற்படும் பின்னடைவு -வேலவன்- சிங்கப்பூர் பாதுகாப்பு நிறுவனத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவர் கலாநிதி றொகான் குணரத்னவை 'ஐலண்ட்" நாளிதழ் 2003 இறுதியில் செவ்விகண்டது. அதில் அவர் வலுவான ஓர் இராணுவக்கட்டமைப்பு, வலுவான ஒரு புலனாய்வுச் சமூகம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப முடியுமானால் இலங்கை எதிர்காலத்தில் ஒரு ஐக்கியப்பட்ட நாடாக இருக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசு கொமாண்டோ தாக்குதல்கள் மற்றும் விசேட நடவடிக்கைகள் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்ட உயர்தர திறன் வாய்ந்த போர் வீரர்களை உருவாக்க முதலீடு செய்யவேண்டும் என அவர் ஆலோசனை கூறியிருந்தார். சிறிலங…

  16. கொழும்பு உட்பட மற்றும் பல இடங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உடமைகள் என்பவற்றை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்த 50ற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக சிறி லங்கா புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

    • 4 replies
    • 1.3k views
  17. துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!! மூன்றாம் இணைப்பு : வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. இரண்டாம் இணைப்பு: வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையி…

    • 15 replies
    • 1.3k views
  18. தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் காங்கேசன் வந்தன தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருள்கள் "றுகுணு' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டுள் ளன. அரிசி, சீனி, கடலை, நற்சீரகம் போன்ற பொருள்கள் கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டதாக அறியவந்தது. இந்தப் பொருள்களை ப.நோ.கூ. சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். காங்கேசன் துறையில் பொருள்கள் இறக்கிய பின்னர் தமிழகம் சென்று அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இக் கப்பல் காங்கேசன்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. கொழும்பில் இருந்து எடுத்துவரப்படும் பொருள்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் தமிழகத்திலிருந்து குறைந்த விலைக்கு பொருள்கள்…

  19. அவுஸ்திரேலியப் பயணத்தில் கடலில் உயிரிழந்தவர்கள் - பெயர் விபரம் வெளியாகியது நவ 1, 2010 அவுஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக மேற் கொண்ட சுமார் ஒன்றரை மாத படகு பயணத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான ஜக்ஸன் (வயது 24) மற்றும் டிசான் (வயது 26), கிளிநொச்சி மாவட்டத்தின் உதயபுரம் நகர்ப் பகுதியை சேர்ந்த ரகுமார் செல்வரஞ்சினி ஆகியோரே இறந்தவர்கள் ஆவர். நடுக் கடலில் சிக்கியபோது மீன்பிடிப்படகு ஒன்றை கண்ட ஜக்ஸன் அப் படகில் சென்றுகொண்டிருந்தவர்களிடம் உதவி கோருகின்றமைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் குதித்தார். நீந்திச் சென்று அம் மீன் பிடிப் படகை அட…

  20. வடக்கில் அடுத்த மோதலுக்கான வழியை ஏற்படுத்தல் 02 ஏப்ரல் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் ஆவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததைக் கொண்டாடுவதற்கான அரச விழாவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எனினும், வடபகுதி தகவல்களை ஆராய்ந்து பார்த்த சுயாதீனமான விமர்சகர்கள் வெற்றி விழாவைவிட கவலைக்குரிய விடயங்களும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடபகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. இதன் மூலமும் வேறொரு அரசியல் தோற்றத்த…

  21. January 14, 2019 புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாடங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/109900/

  22. ஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயம் மிகுந்தது., அதை ஏகாதிபத்திய அரசுகள் வேண்டுமென்றே வீழ்த்தின என்று குறிப்பிட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும் களப்பணியாளருமான தேழர் ரான் ரைடனவர் அதற்கு சோசலீச நாடுகளும் துணை போனது மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டார். The The Tamil Nation in Srilanka என்ற அவரது நூல் வெளியிட்டில் பேசிய பொழுது தோழர் ரான் ரைடனவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்க்குற்றவாளியாக உள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுக்கு ஆதரவாக கியூபா எடுத்த நிலைப்பாடு தனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும் தோழர் ரான் ரைடனவர் தெரிவித்தார்;. புலிகள் பயங்கரவாத இயக்கம் கிடையாது என்று குறிப்பிட்ட ரான் ரைடனவர் அவர்கள் கையாண்ட முறைகளில் சில முறைகள் …

    • 2 replies
    • 1.3k views
  23. 13 ஆவது திருத்தம்: ஒரு பொறியா? [27 - January - 2008] [Font Size - A - A - A] -விதுரன்- இலங்கைப் பிரச்சினைக்கு புதுவடிவம் கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முனைகிறார். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட யோசனையொன்றை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வர முயல்கிறார். தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஏமாற்ற முயலும் அவரது நாடகத்திற்கு சில தமிழ் அமைப்புகளை துணைக்கிழுத்துள்ளார். போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த மறுநாளே அரசு தீர்வு யோசனை குறித்து பெரும் ஆரவாரம் செய்தது. போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகியதால் நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்படப்போவதாக உலக நாடுகள் கடுமையாக எச்சரித்த நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து விட்டதாகவு…

    • 1 reply
    • 1.3k views
  24. கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மர்மச் சுவரொட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் போராளிகளாக வருபவர்கள் சரணடைந்தால் அவர்களுடைய வாழ்கையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கும் இந்தச் சுவரொட்டிகள் கடந்த வாரத்தில் மர்மான முறையில் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு யார் காரணம் எனத் தெரிவிக்கப்படாமையால் இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்தால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை என அரசாங்க அமைச்சர் ஒருவர் கடந்தவாரம் தெரிவித்திருந்ததை அடுத்து, இதற்குக் காரணம் யார் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது. இந…

    • 1 reply
    • 1.3k views
  25. பிரபாகரனை காப்பாற்றவே தொழிற்சங்க போராட்டம் - ஹெல உறுமய தெரிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றுவதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இணைந்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை வெளிப்படையான உண்மை எனக் குறிப்பிட்டுள்ளது.உழைக்கும் மக்களை பாதுகாப்பதற்காக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தை ரீதியான தீர்வு பெற்றுக் கொடுப்பதே மிகவும் உசிதமானதென ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசிய

    • 5 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.