Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்திருந்தது. நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் பலரும், கடந்த சில நாட்க…

  2. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கோத்தாபய ராஜபக்‌ஷவும். விமல் வீரவன்சவும் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினருடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். பௌத்த பிக்குகள் பலரும் இதில் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளை நடத்தினார்கள். பங்குகொண்டவர்கள் அனைவரும் இவ்வருட புதுவருட அதிஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய விளையாட்டுக்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. http://www.malarum.com/article/tam/2015/04/14/9608/%E0%AE%…

    • 9 replies
    • 1.7k views
  3. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை இன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார். http://www.tamilmirror.lk/144296#sthash.tskunzYR.dpuf

    • 0 replies
    • 398 views
  4. மன்னாரில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு.. December 26, 2018 சுனாமிப் பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று புதன் கிழமை நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூறப்பட்டுள்ளது. சுனாமி பேரலையில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை லூசியா ம.வி பாடசாலையில் இன்று புதன் கிழமை காலை 9.25 மணியளவில் தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம் பெற்றன. குறித்த…

  5. Posted on : Tue Jun 26 7:27:45 EEST 2007 குடாநாட்டில் ஐவரைக் காணவில்லை; ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐவ ரைக் காணவில்லையென மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீசாலை தெற்கு சோலையம்மன் கோயிலடியைச் சேர்ந்த வர்களான வடிவேலு ரவீந்திரன்(வயது 32), சின்னத்தம்பி சிவந்தன் (வயது 27) ஆகியோர் கடந்த சனிக்கிழமை கொடிகாமம் சிவில் நிர்வாக அலுவலகத்துக்கு கையொப் பம் இடச் சென்ற பின்னர் காணாமற்போயுள்ளனர் என அவர்களது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கொடிகாமம் மந்துவிலைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ் வரன்(வயது 21) என்பவர் கடந்த 16ஆம் திகதி கொடிகா மம் சிவில் நிர்வாக அலுவலகத்துக்கு கையொப்…

  6. குடா­நாட்­டில் பதற்­றம் கலந்த அச்­ச­மான சூழ்­நிலை தொடர்­வ­தால் மக்­கள் பீதி­யு­டன் பொழு­தைக் கழிக்க வேண்­டிய நிலை­யில் உள்­ள­னர். கொக்­கு­வில் பகு­தி­யில் ஏரா­ள­மான இளை­ஞர்­கள் பட்­டப்­ப­கல் வேளை­யில் வாள்­க­ளு­டன் தாக்­கு­த­லுக்­குத் தயா­ராக வந்­தமை குடா­நாடு எத்­த­கைய ஆபத்­தான நிலை­யில் உள்­ள­தென்­பதை எடுத்­துக்­காட்­டி­விட்­டது. அர­சின் அச­மந்­தத்­தால் அதி­க­ரிக்­கும் குற்­றங்­கள் குடா­நாட்­டின் பாது­காப்பை உறு­தி­செய்­யப்­போ­வ­தாக அர­சின் சார்­பில் பாது­காப்பு அதி­கா­ரி­கள் அடிக்­கடி கூறி­வ­ரு­கின்­ற­போ­தி­லும் குற்­றச் செ­யல்­கள் தொடர்ந்தும் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மக்­க­ளும் பீதி­யில் உறைந்­து­போய்க் கிடக்­கின்…

  7. 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை 25 வீதத்தால் வீழ்ச்சி கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. குறித்த அறிக்கையின்படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/285005

  8. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது. தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எ…

  9. இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திராமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்ட முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்தே ஜோன் கெரியிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய தேவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. சந்திப்பில் மைத்திரி அரசிற்கு சம்பந்தன் பாராட்டுப்பத்திரம் வாசிக்க இரண்டு தடவைகளாக குறுக்கிட்ட சுரேஸ்பிறேமச்சந்திரன் அதனை மறுதலித்து அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரையில் இடைக்கால நி…

  10. பூதங்கள் இடம்மாறலாம்…… கிறீஸ் பூதங்களின் அட்டகாசம் இன்னமும் குறைவடையவில்லை. சட்டத்தை கையிலெடுத்தால் தண்டிக்கப்படுவரென அரசு கூறுகிறது. அதேவேளை, பாதிக்கப்படும் பெண்களுக்கு எவ்வாறு உதவி செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டுமென சிலர் ஆலோசனை வழங்குகின்றார்கள். தற்போது இந்தப் பூத விவகாரம், 18 ஆவது மனித உரிமைகள் பேரவையிலும் எதிரொலித்துள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்ற விவகாரத்தோடு பூதங்களும் இணைந்து விட்டன. அது மட்டுமின்றி நிபுணர் குழு அறிக்கை என்கிற பூதம், மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இலங்கை அரசை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்த முறை தப்பிப் பிழைத்தாலும் வருகிற வருடம் மார்ச் மாதம் வரை, இப்பூதம் இலங்கை ஆட்சியாளர்களை துரத்தியபடியே இர…

  11. தமிழ் மாணவர்கள் தமது மத, கலாசார சூழலில் கல்விகற்கும் இலட்சியத்துடன் உருவாக்கபட்ட அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திசங்க செயலாளருமான வி.ஞானசந்திரன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”1961ம் ஆண்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின…

  12. சிறிலங்காவில் யுத்தம் நிறைவடைந்துள்ள போதும், இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்ற கனடாவின் எதிர்கட்சியான லிபரல் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜஸ்ரின் ரியுடோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. பலர் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இறுதி யுத்ததின் போது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக, கனடாவின் லிபரல் கட்சி நியாயம் கிடைப்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தும் என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். இறுதியு…

  13. சர்வதேசத்தை திசைதிருப்ப போராளிகளின் விடுதலையை பயன்படுத்துகிறது கொழும்பு! - இராஜதந்திர வட்டாரம் தகவல் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் விடுதலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த 1,800 விடுதலைப் புலிகளின் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் நேற்று (30.09.11) விடுதலை செய்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசல்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் முன்னிலைய…

    • 0 replies
    • 680 views
  14. யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது. காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் - மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம் - கொக்குவில் ஆகிய தரப்புக்கு இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் கவச வாகனத்தில் அதிரடிப்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எ…

    • 15 replies
    • 898 views
  15. கொழும்பு மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் காணப்படும் 90000 வீடுகளை உடைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வாக்காளர்கள் அரசாங்கத்திற்கு நல்ல பாடகம் புகட்ட வேண்டுமென இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமாயின் இந்தத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குஆதரவாக்க வாக்களிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ம…

  16. என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன்! - கூட்டமைப்பை விட்டு ஓடிய பியசேன எம்.பி புலம்பல். [Thursday 2015-05-28 19:00] மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு கடந்த காலத்தில் பிழையான வழியில் சென்று விட்டேன். அதனால் நான் துடித்துக் கொண்டிருக்கின்றேன். என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. எச்.பியசேன தெரிவித்தார். அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ உள்ளிட்ட திறமை சித்திகளை பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில், தேவ…

  17. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/291253

  18. மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க JUN 03, 2015 | 2:01by கி.தவசீலன்in செய்திகள் பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார். சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிக்க வருமாறு கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவிடம், பந்துல குணவர்த்தன சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஹர்ஷா டி சில்வா ஏற்றுக் கொண்டுள்ளார். அதேவேளை, நாட்டைப் பொ…

    • 0 replies
    • 2.1k views
  19. பிரதமர் நாளை யாழ் செல்கின்றார் February 13, 2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் எதிர்வரும் சனிக்கிழமை வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்தநிலையில் நாளைய தினம் வலிகாமம், கோப்பாய், யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் காங்கேசன் துறை போன்ற பிரதேசங்களுக்கு செல்லவுள்ள பிரதமர் வலிகாமம் கிழக்குப் பகுதிக்கான பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறப்புவிழா, யாழ்பாண மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடலில…

  20. பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்…

  21. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வன்புணர்வுப் படுகொலை மற்றும் இனக்கலப்பு திருணம் என்ற இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நோக்கத்திற்காகவே மேற் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் வடக்கில் இன்று தீவிரமாக இடம்பெறும் பாலியல் வன் புணர்வுகளையும் துஷ் பிரயோகங்களையும் அணுக வேண்டும். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் எதிர…

  22. பொதுநலவாய அமைப்பில் மனிதவுரிமைகள் ஆணையாளர் பதவி: சிறிலங்காவுடன் இணைந்து இந்தியாவும் எதிர்ப்பு! பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது குறித்த ஆலோசனைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக The Times of India எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்திரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய பதினொரு உறுப்பு நாடுகளின் நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டிருந…

  23. சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா முழுமையான நிறைவேற்ற பிரித்தானியா ஊக்குவிக்கிறது. மேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரித்தானியா பாராட…

  24. இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373413

    • 10 replies
    • 1.2k views
  25. திருமலையில் தந்தை செல்வாவுக்குப் புதிய சிலை Monday, October 31, 2011, 23:36 திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டதனையடுத்து, அதனை முழுமையாக அங்கிருந்து அகற்றிவிட்டு அன்னாரது புதிய சிலை ஒன்று அதே இடத்தில் நிறுவப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரத்தின சிங்கம் தெரிவித்தார்.இதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.நேற்றிரவு சில விஷமிகள் திட்டமிட்டே இந்தச் சிலையை சேதப்படுத்தியுள்ளனர் என்று கூறிய அவர், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தாம் அறிவித்துள்ளதாகவும் கூறினார் http://www.tamilthai.com/?p=29254

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.