Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீலப்படையணியினர் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சே பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் சமல் ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவராவார். இந்த நிலையில், இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பும் அதன் இணை அமைப்பான நீலப்படையணியின் தலைவரான நாமல் ராஜபக்சே நேற்று முன்தினம் தங்காலையில் விசேட கூட்டமொன்றை நடத்தியதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தன்வசப்படுத்தியுள்ளார். நாமல் ராஜபக்சேவின் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சேவின் ஆசீர்வாதமும் கிடைத்திருப்பதாக …

    • 0 replies
    • 1.3k views
  2. அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மேலும் நீடிக்கப்போவதில்லை என அமெரிக்கா தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  3. சிறிலங்கா பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது. மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது. போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்…

    • 1 reply
    • 1.3k views
  4. தகர்க்கப்பட்ட இரண்டுவருட உழைப்பு: அஜித் நேற்றுவரைக்கும் இலங்கைத் தீவிற்கு அப்பால் போருக்குப் பிந்திய காலத்தைய விவாதங்களின் கருப்பொருளாக அமைந்ததெல்லாம் இன்னமும் உரிமைப் போர் தேவையா என்பது தான். உரிமையா அபிவிருத்தியா, மறுசீரமைப்பா தன்னுரிமையா என்பவை விவாதங்களின் மையப்பகுதி. தமிழ் நாட்டின் முன்னைய புலிகளின் வலையமைப்பின் மற்றொரு பகுதி, இழந்து போன ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்று தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. சு.ப.வீரபாண்டியன், ரவிக்குமார், ஜெகத் கஸ்பர், கனிமொழி என்று ஒரு நீண்ட பட்டியல் உரிமை வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றனர். ஏற்கனவே புலியெதிர்ப்பில் அரசியல் வளர்த்த இன்னொரு பகுதி இவர்களோடு கைகோர்த்துக் கொண்டனர். இடது சாரியத்தையும், பின்நவீனத…

  5. செவ்வாய், ஏப்ரல் 15, 2014 - 13:49 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு வன்னி யுத்தத்தில் இந்திய இராணுவமும் போரிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு ஈழத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இந்தியாவின் இராணுவத்தினரும் போரிட்டதாக தெரிவித்து, இந்திய உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியோ, அல்லது இந்திய ஜனாதிபதியின் அனுமதியோ இன்றி, இலங்கைக்கு எதிராக திறந்த யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்யாமல், எவ்வாறு இந்திய இராணுவத்தை அங்கு அனுப்ப முடியும் என்று இந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டெல்கி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்…

    • 12 replies
    • 1.3k views
  6. இன்று இரவு டென்மார்க் தொலைக்காட்சியில் "இலங்கையின் படுகொலைக்களம்" பதிந்தவர்: தம்பியன் புதன், 10 ஆகஸ்ட், 2011 2009ம் ஆண்டு முற்பகுதியில் தமிழீழ மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான இனப்படுகொலையை தொகுப்பாக்கி சனல்4 தொலைக்காட்சி "இலங்கையின் படுகொலைக் களம்" என பெயர்சூட்டி ஒரு ஆவணத் திரைப்படமாக்கியது. இத் திரைப்படம் பல நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டு எல்லோர் மனதிலும் ஈழத் தமிழர்களின் அவலங்களை பதிவாக்கியது. இந்நிலையில் இன்று புதன்கிழமை டென்மார்க் தொலைக்காட்சியிலும் (DR2) இரவு 10.50 மணிக்கு ஒளிபரப்பபடும் என தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் கொலைக்களம் ஒளிபரப்பப்பட்ட நாடுகளால் தமிழினப் படுகொலைக்கு எதிரான விசாரணையின் அவசியம் வலியுறுப்பட்டுள…

    • 4 replies
    • 1.3k views
  7. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலிதேவனின் சகோதரர் சீவரெத்திணம் பாலதயாகரன் (புலிமாறன்) குற்றமற்றவர் என யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளது கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி பேர்பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட புலிமாறன் என்று அழைக்கப்படும் சீவரெத்திணம் பாலதயாகரன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றமை, புலிகளுடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தெடுக்கப…

    • 2 replies
    • 1.3k views
  8. அமைச்சர் ஜெயராஜ் கொலை தொடர்பாக எண்மர் கைது செய்யபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதே நேரம் இந்தக் கொலைத் திட்டம் தெஹிவலை அத்திடியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் கொலையாளி சுமார் இரு வாரங்கள் தங்கியிருந்தது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அமைச்சர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கையடக்கத் தொலைபேசியின் 'சிம்காட்' அந்தப் பகுதியிலிருந்து கண்டெடுக்கபட்டு அதன் மூலம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர். அமைச்சர் மீதான தாக்குதல் தொடர்பான திட்டத்தை ஒரு குழுவினரே தயாரித்துள்ளதாகவும் இந்தக் குழுவின் தல…

    • 0 replies
    • 1.3k views
  9. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/video/index.php?...3&Itemid=43

    • 3 replies
    • 1.3k views
  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிவில் உரிமைகள் பறிபோகக்கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 6ம் இலக்க அரசியல் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்த் த…

  11. சொப்பின் பேக்குடன் கொழும்பு வந்த ரிஷாத் பதியுதீன் இன்று ஆசியாவின் 10 வது பணக்காரர் ஆகும் அளவிற்கு அவரும் அவரது குடும்பம் சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேரர் விதாரந்தெனிய நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். ரிசாத் பதியுத்தீன் அமைச்சர் தனது அமைச்சினை பயன்படுத்தி பாரிய வர்த்தகங்களிக் ஈடுவடுபதாகவும் அடிப்படை வாதிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பதிவு செய்த வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார். https://www.madawalaenews.com/2019/05/10.html

  12. தற்போதைய யுத்தம் எவராலும் வெற்றிகொள்ளப்பட முடியாது: அங்கிலிக்கன் திருச்சபை. யுத்ததிற்கான முதலீடுகள் இலங்கையில் வாழும் சிறுவர்களின் வாழ்வை பாதிக்கும் என அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் வணக்கத்திற்குரிய டுலிப் டீ சிக்கெர தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள யுத்த நகர்வுகள் குறித்து ஆயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.... தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் சரியானதல்ல என்றும் ஜனநாயக நாட்டின் தலைமைத்துவம் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறைகள் அற்ற சமரச தீர்வினை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்…

  13. இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதைச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் அரசியல்பணி என சென்னை கருத்தரங்கில் அரசியலறிவியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை லயோலா கல்லூரியில், ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை புவிசார் அரசியலெனும் நெருப்பாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எனும் தலைப்பில் சனிக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர்களைக் காப்பாற்றுவோம் இயக்கம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. . நிகழ்வில் முக்கிய பேச்சாளர்கள்பேசியதிலிருந்து....கலாநிதி பால் நியூமேன், (பேராசிரியர், பெங்களூர் பல்கலைக்கழகம்)முள்ளிவாய்க்காலில் முடிந்த போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைப் பற்றி யாரும் சொல்லமுடியாத நிலைதான் இருக்கிறது. செயற்கைக் கோள் படங்களில் வெ…

    • 1 reply
    • 1.3k views
  14. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி மற்றொரு புதிய கூட்டமைப்பினை உருவாக்க முற்பட்டுள்ளார். அவரது முன்னாள் அரசியல் எதிரிகளுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா தரப்பு உள்ளிட்ட வௌ;வேறு கட்சிகள் கூட்டு சேர்ந்து இப்புதிய கூட்டமைப்பினை உருவாக்க ஏற்பாடாகியுள்ளது. புதிய கூட்டமைப்புத் தொடர்பான முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் நல்லூரினில் இன்று இடம்பெற்றிருந்த போதும் நீண்ட இழுபறிகளுடன் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஈபிடிபி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டிந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியும் சிறீடெலோ சார்பினில் அதன் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் யாழ்.மாவ…

  15. புதன் 22-08-2007 14:31 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்கா - சிறீலங்கா இடையே இராணுவ சட்டப் பரிமாற்றம் அமெரிக்காவும் சிறீலங்காவும் தமக்கிடையே இராணுவ சட்டங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளன. இப் பரிமாற்றத்தின் போது இராணுவத்தினரின் கீழ் இரு நாடுகளிடையே தெளிவுபடுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களும் உள்ளடங்கப்படுகின்றன. கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகளும் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே இரு நாட்டு இராணுவத்தினரிடையே இராணுவச் சட்டங்களை பரிமாறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. pathivu

  16. உலகின் முதலாவது (1914-18) இரண்டாவது (1939-1945) போர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அவசியத்தை உணர்த்தியதுடன் அதன் உருவாக்கத்திற்கும் உடனடி காரணியாகவும் அமைந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் நிறுவப்படுவதற்கு முன்பாக முதலாவது உலகப் போரை தொடர்ந்து ~வேர்சை உடன்படிக்கை| யின் அடிப்படையில் 1919 ஆம் ஆண்டு ~லீக் ஓப் நேஷன்| (தேசங்களின் கூட்டமைப்பு) என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனது இணை அமைப்பாக ~சர்வதேச தொழிலாளர் அமைப்பு| உருவாகியது. ~தேசங்களின் கூட்டமைப்|பினால்; அவ்வேளையில் சுடர்வி;ட்டு எரிந்த இத்தாலியின் ~பாசிசத்தையோ| அல்லது ஜேர்மனியின் ~நாசிசத்தையேப| அல்லது 1935 இல் எதியோப்பிய மீதான இத்தாலியின் ஆக்கிரமைப்பையோ கட்டுப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ முடியாத காரணத்தினால் - இரண்டாவது…

  17. எதிர்வரும் ஞாயிறு அரங்கேறும் ஐ.தே.கவின் கட்சி தாவும் நாடகம் [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 16:31 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவும் படலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கோண்டுள்ள போதிலும் அதன் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவ உள்ளனர். இது தொடர்பில் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில்: 15-க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அதன் முன்னாள் பிரதித்தலைவர் கரு ஜெயசூர்ய தலைமையில் அரசில் இணைய உள்ளனர். அரசினால் புதிதாக உருவாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி தொடர்ப…

  18. புதன் 27-02-2008 23:22 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் மாணவர்கள் முன்னிலையில் கடத்தல் யாழ் கைதடி விக்னேஸ்வரா வித்தியாலத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய 28 அகவையுடைய சின்னத்தம்பி ராஜேஸ்வரன் இன்று காலை 7.00 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பாடசாலைவளாகத்தில் வைத்து மாணவர்கள் முன்னிலையில் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற படைப் புலனாய்வாளர்களாலே இவர் கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பாக கடத்தப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். இதேவேளை, கொக்குவில் ஆடியபாதம் வீதியில் வீட்டின் முன்பாக வைத்து முச்சக்கரவண்டிச் சாரதியான 29 அகவையுடைய ராசலிங்கம் பாலமுரளி ஆயுதம் தரித்த படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்…

  19. பில்லி சூனியமா ? பிரபாகரனா ? மந்திரவாதியா? மகிந்த சிந்தனையா? சிங்களப் பேரினவாத ஆட்சியாளர் சென்றவாரம் மந்திரவாதி ஒருவரை பிடித்து நாலாவது மாடியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி உலகத்தின் பல பாகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபாகரனை பில்லி சூனியம் வைத்து கொன்றது தானே என்றும், வரும் செப்டெம்பரில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இல்லாமல் போகும் என்றும் இந்த மந்திரவாதி கூறியிருந்தார். என்ன அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதை அறிய அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கள போலீசார் கூறியிருக்கிறார்கள். இதற்கு என்ன அடிப்படை இருக்கப்போகிறது, சுத்தமான கடைந்தெடுத்த மூட நம்பிக்கை என்பதை இயல்பாகவே அறிய முடியாமல், நாலாம் மாடிக்குக் கொண்டுபோய் சித்திரவதை செய்து அறி…

  20. Started by கந்தப்பு,

    இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது. அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது. இலங்கையின் தேசிய இ…

    • 1 reply
    • 1.3k views
  21. நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். வடக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தவர்கள் நீதிக்கான குழுவினர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமரசத்துக்கான ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதை இறுகப் பற்றிக் கொள்ளும் தீர்மானத்திலேயே இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் முன்னெடுப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். http://uthayandaily.com/story/7100.html

    • 5 replies
    • 1.3k views
  22. ஈழ நாதம் வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, யூன் 21, 2011 பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 வில் காண்பிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியில் காணப்படும் (படுகொலைகள், பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையவர்கள்) சிறிலங்கா படையினர் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். . காணொளியில் காணப்படும் இந்த 12 சிப்பாய்களும் சிறிலங்கா இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவினையும் 641 ஆவது விசேட படையணியையும் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பன்னிருவரில் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். . ஆனால் இவர்களை விசாரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுச் செயலகம் …

    • 3 replies
    • 1.3k views
  23. பாடசாலைகளில் சீனமொழியை ஒரு பாடமாக கற்பிக்க சிறிலங்கா அரசு முடிவு திகதி:16.08.2010, சிறிலங்காவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் விரைவில் சீனமொழி கற்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடன் நிறுவப்பட்ட துறைமுகத்தில் நீரை நிரப்பும் நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் ஏற்கனவே சீன மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சீனாவின் நிதியுதவியுடன் இது மேற்கொள்ளப்படுகிறது. சீன மொழி கற்பிக்கும் திட்டத்தை ஏனைய பாடசாலைகளுக்கும் வ…

    • 9 replies
    • 1.3k views
  24. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து ’ONLINE’ விசாவுக்காக கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் 7 கோடி ரூபா பணம் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதம கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலரத்ன பெரேரா தெரிவித்தார். இதேவளை, நேற்று முன்தினம் 10ம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நண்பகல் வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் இலங்கை வருகைத் தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருபவர்களுக்கு இதுவரை காலமும் இலங்கை இலவச விசா வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், இலவச விசா வழங்கும் நடைமுறை 2011 டிசம்பர் 31ம் திகதி முதல் ரத்துச் செய்து அதற்க…

    • 1 reply
    • 1.3k views
  25. வவுனியாவில்(vavuniya) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தைச்(jaffna) இளம் குடும்பஸ்தர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குடும்பஸ்தர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலை இதனையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.