ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவையும் சந்திப்பதற்கு சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐ.நா.வின் இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். . தான் விடுத்திருந்த கோரிக்கையை செனல் -4 தொலைக்காட்சி நிறுவன ஊடகவியலாளர் ஜோன் மில்லர் ஏற்றுக் கொண்டார் எனவும் இது குறித்து தான் பாதுகாப்புச் செயலருக்கு அறிவித்தள்ளதாகவும் .சவேந்திர சில்வா கூறியுள்ளார். மூலம்
-
- 0 replies
- 1.3k views
-
-
தளபதி பொன்னம்மான் நினைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு [காணொளி - படம்] தமிழீழத்தில் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர். நேற்று மாலை சரியாக 6.05 மணியளவில் கொளத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும் கு. காமராஜ் “ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அத…
-
- 2 replies
- 1.3k views
-
-
போதிய ஆசன வசதிகள் இன்மையால் புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. புதிதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 52 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையின் இன்று புதன்கிழமை இடம்பெற இருந்த முதலாவது கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் அமைச்சரவையில் ஏறக்குறைய 33 அமைர்களே காணப்படுவர்.அதற்கேற்றவாறே அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை 52 அமைச்சுக்கள் பதவியேற்றுள்ளமையால் அவர்களுக்கான போதிய ஆசன வசதிகள் இன்மையால் இன்று நடைபெற இருந்த புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. -Tamilwin-
-
- 5 replies
- 1.3k views
-
-
ஜே.வி.பியின் பெண் வேட்பாளருக்கு யாழ்.பருத்தித் துறையில் பொலிஸாரால் மிரட்டல்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு போட்டியிடுகின்ற ஜே.வி.பி கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று மிரட்டப்பட்டு உள்ளார்கள். தவராசா புஷ்பராணி என்கிற வேட்பாளரே மிரட்டப்பட்டு இருக்கின்றார். பொலிஸார் சீருடை அணிந்து கொண்டு இவரின் வீட்டுக்கு வந்து இருக்கின்றார்கள். இவருக்கும், ஜே.வி.பி கட்சிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துக் கேள்விக் கணைகளை தொடுத்தார்கள். தேர்தலில் இருந்து இவர் விலக வேண்டும் என்று அச்சுறுத்தி விட்டுச் சென்று இருக்கின்றார்கள். http://tamilcnn.com/index.php?option=com_…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசு நீட்டும் இலவச மக்டொனால்ஸ் – கீர்த்திகன் இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் யார் மீதும் உள்ள தனிப்பட்ட வெறுப்போ அல்லது யாரையும் புண்படுத்துவதோ அல்ல மாறாக தலை மொட்டைபோல் தெரிகிறதென்பதற்காக மிளகாய் அரைக்க நினைக்கக் கூடாதென்பதற்காகவும் தமிழினம் சந்திக்கும் சந்திக்க இருக்கும் மிகப்பெரும் சவால்களை தொட்டுச் செ(சொ)ல்வதற்குமேயாகும். ஏதிரி ஒரு இரையைப் போடுவதும் அதை நாங்கள் விழுங்கிக்கொண்டு திண்டாடுவதும் எங்களைப் பார்த்து எதிரிகொண்டாடுவதுமே அண்மைக்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் புலம்பெயர் தேசங்களில் வலுப்பெறும் போராட்டங்களும் அநேக நாடுகள் கொடுக்கும் அழுத்தங்களும் சிறீலங்கா அரசுக்கு கிலியையும் சினத்தையும் ஏற்படுத்தி…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பேராளிகளுக்கு அரசாங்கம் கண்டிய நடனப் பயற்சியளித்துள்ளது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் 100 பேருக்கு கண்டிய நடனப் பயிற்சி அளிக்கப்பபட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்தார். "இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கலாசார அமைச்சு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?" என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். Eelanatham
-
- 11 replies
- 1.3k views
-
-
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என…
-
- 4 replies
- 1.3k views
-
-
வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 3 படையினர் கொல்லபட்டுள்ளனர் என்றும் 20 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இங்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.அவர் சிறிலங்காவின் ஆளுநர் போன்று செயற்படுகிறார். சிறிலங்காவின் எதிரியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனப்படுத்த வேண்டும். எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்தாலும் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கக்கூடாது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு கூறியும் இணைத் தலைமை நாடுகள் ஏன் பதில் தரவில்லை? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லது ச…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிப் பூச்சாண்டி [06 - July - 2008] தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் போருக்கு ஆதரவாக மிகவும் கூடுதலான அளவுக்கு ஆக்ரோஷமாக பேசுகின்ற அரசியல் வாதியென்றால் அது விமல்வீரவன்சவைத் தவிர வேறு எவருமாக இருக்க முடியாது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் பிரசாரச் செயலாளராகவும் இருந்த வீரவன்ச, அக்கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டு இப்போது தேசிய சுதந்திர முன்னணி (ஜே.என்.பி.) என்ற புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஜே.வி.பி.யில் இருந்த போது போருக்கு ஆதரவாகப் பேசியதையும் விட தற்போது அவர் கூடுதலாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வன்னி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இது டாக்டர் மேவின் சில்வாவின் இந்த வருட நகைச்சுவை. http://isoorya.blogspot.com/2008/07/blog-post_1484.html
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் தமிழ் பெண்ணொருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் குறிப்பிட்ட பெண்ணை மோசமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நஞ்சூட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள மாவிலிஆறு என்ற பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள உறவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். முறைப்பாடு செய்தால் படையினரால் தாமும் படுகொலை செய்யப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களைக் காப்பாற்றப் போவதாகவும், விமோசனம் கொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரான்ஸின் புறநகர் பகுதியான சார்ஷல் எனுமிடத்தில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த தாஸ் எனப்படும் தமிழ் இளைஞர் ஒருத்தர் வயித்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.. மேற்படி பிரதேசத்தில் உள்ள பூங்காவொன்றில் மதுபானம் அருந்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்களிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து பலராலும் குகன் என அறியப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிய வருகின்றது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டுமொருமுறை இலங்கையை வலியுறுத்தியுள்ளது. முன்னர் பதில்களை தருமாறு சாதாரணமாக கேட்டது ஐ. நா. ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு இழுத்தடிப்பதால் ஆத்திரமடைந்த ஐ. நா. இனிமேல் இலங்கையால் தமக்கு அளிக்கப்படும் பதில் சாட்சியங்களுடன் காணப்பட வேண்டுமென ஐநா செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற்றப்பட்டுள்ளதாக தனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்களை மிரட்டுகிறார் கே.பி! தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் என்பவற்றை இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மீட்டுள்ளதாகவும், இந்த தரவுகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தொடர்பிலான வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், நிதி வழங்கியவர்கள் மற்றும…
-
- 3 replies
- 1.3k views
-
-
வன்னிப் பகுதியில் இருவேறு வான்வெளித் தாக்குதல்கள். வன்னிப் பகுதியில் சிறீலங்கா விமானப் படையினர் இருவேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 9.20 மணிக்கு மாங்குளப் பகுதி வான்பரப்புக்குள் நுழைந்த இரு கிபிர் விமானங்கள் அங்கு தாக்தலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வணிக நிலையம் ஒன்று சேதமடைந்துள்ளது. அத்துடன் மாங்குளம் மாகாவித்தியாலயம் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக்குண்டின் சிதறுதுண்டுகள் வீழ்ந்துள்ளன. இதேபோன்று இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வன்னியில் பகுதி வான்பரப்பினுள் நுழைந்து இரு மிக் 27 யுத்த விமானங்கள் கிளிநொச்சி நகரப் பகுதியில் பேரிரச்சல் சத்தத்துடன் வட்டமிட்டதோடு கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியில் நான்கு தடவைகள் அங்கு தாக்குதலை நடத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் ரொறன்ரோவில் இணைந்து நேற்று திங்கட்கிழமை (16.03.09) நடத்திய மாபெரும் உரிமைப் போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு வரலாறு படைத்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் புதன், வியாழனில் சர்வமதத் தலைவர்களின் உயர் மாநாடு விசேட தூதுவர் யசூசி அகாஷியும் வருகிறார் சமாதானத்தைக் கட்டி எழுப்பும் நோக்குடன் சர்வமதத் தலைவர்களின் உயர்மாநாடு எதிர்வரும் புதன், வியாழக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.யாழ். பொதுநூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார். ஏழு நாடுகளைச் சேர்ந்த மூத்த சமயத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவர். மாநாட்டில் பங்குபற்றும் சமயத் தலைவர்கள் இலங்கையில் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்முறைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் சமாதான வழிமுறைகள் மூலம் எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்தும், இதற்கு சர்வதேச ரீதியில் சமயங்களின் நல்…
-
- 3 replies
- 1.3k views
-
-
மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். From: Suki Sivam Sent: Tuesday, 20 March 2012 4:17 PM Subject: open letter to Tamil Eezham people-Suki Sivam Vanakkam, My open letter to Tamil Eezham people is attached to the mail.please see. Suki Sivam Subject: The nation of Eezham is not in our imagination. Thamizh Eezham is real, and we are its citizens./சிறிலங்காவுடன் செயற்படும் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்பு --------------- To: Date: Sunday, March 18, 2012, 11:49 PM Subject: WATCH CHENNAL 4 VIDEo. blood is coming from our eyes..... http://www.channel4.com/programmes/sri-lankas-kill…
-
- 5 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழர்களிடம் யாசிக்கும் சிங்களம்! தமது காரியங்களைச் சாதிப்பதற்கும், மற்றவர்களை முட்டாள்களாக்குவதற்கும் தாம் மனநிலை தவறியவர்கள் போல நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதை ‘காரிய விசர்’ என்று அழைப்பார்கள். அந்த வியாதி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளை, அதுவும் ஆளும் கட்சி சார்ந்தவர்களை முற்றாகப் பீடித்துள்ளது என்றே தோன்றுகிறது. தடந்த மாதம் பெய்த பெருமழையால் வவுனியா வதை முகாம் வெள்ளக்காடாகியதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர் கொண்டிருந்தனர். மழை வெள்ளத்தால் கூடாரங்கள் சகதிகளாகி நிற்க, உறங்க முடியாத அவலங்களுடன் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மல, சல கூடங்கள் நிரம்பி வழிந்ததால் மனிதக் கழிவுகள் முகாம்களுக்குள் அள்ளுண்டு வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழரின் கன்னி முயற்சி - சிங்கள படுகொலை இனவெறியர்கள் ஒவொருவரும் தண்டிக்கப்படவேண்டும் ! http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32287 வழக்கை தாக்கல் செய்தவர்கள் : -- மக்கள் அவை சுவிற்சர்லாந்து -- மக்கள் அவை நோர்வே -- படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு , ஐக்கிய அமெரிக்கா வழக்கின் சாராம்சம்: ஜெகத் டயஸ் - -- ஒரு போர்குற்றவாளியை செர்மானிய அரசு உப தூதுவராக விட்டது. -- இந்த குற்றவாளி என்ன செர்மனியில் செய்கிறார் ? என்பதும்.
-
- 6 replies
- 1.3k views
-
-
யேர்மனியை விமர்சிப்பதா? மோசடிப் பேர்வழிகள் அமைச்சர்களா? 50 வாக்குகள்கூட வாங்க இயலாத டக்ளசை வைத்து தீர்வா?: கொதிக்கிறார் அமைச்சர் அனுரா [சனிக்கிழமை, 28 யூலை 2007, 20:29 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவில் அரசியல் நிலைமைகள் குறித்தும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடைமுறைகள் குறித்தும் மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரான அனுரா பண்டாராநாயக்க மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஓன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்: இரண்டு பிரதான கட்சிகளின் ஐக்கியம் இல்லாமல் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகளிடையேயான ஒப்பந்தத்தை பாழடித்தது ஒரு தேசியக் குற்றமாகும். 50 வாக்குகள் கூட வாங…
-
- 1 reply
- 1.3k views
-
-
பெரும் தொகையான ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் தடுத்து வைத்து பறி முதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகின. தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறக்கப்படுவதாகத் தெரிவித்து அவசரஅவசரமாக தரையிறங்கிய விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விமானம் இலங்கைக்கு சொந்தமான ஆயுதங்களை சுமந்து வரவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. ஆனால் விமான ஓட்டி மற்றும் விமான சிப்பந்திகளின் தகவல்களின் படி இந்த விமானம் இலங்கைக்கே வந்தன என தெரிவிக்கப்ப…
-
- 5 replies
- 1.3k views
-