Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி!!! யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படை கப்பலான சுரநிமலவுடன் இணைந்து ஓகஸ்ட் 28ஆம் திகதி கடலில் பயிற்சியொன்றை முன்னெடுத்தது. இப் பயிற்சியானது கப்பல்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் திறன்களை முன்னேற்றுவதாகவும், இந்து - பசுபிக் பிராந்தியத்தில் நெருக்கடியான செயற்பாடுகளில் மாலுமிகளின் பரந்துபட்ட திறன்களை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது. இப் பயிற்சியின் போது தொடர்பாடல்கள் மற்றும் உத்திகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நிமித்தம் பல்வேறு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அங்கரேஜ் மற்றும் சுரநிமல கப்பல்களுக்கு மேலதிகமாக தரையிறங்கும் இரண்டு காற்றடைத…

  2. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2023/1333736

  3. அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சொத்துக்களையும், முதலீடுகளையும் முடக்கும் சதி நடவடிக்கைககளில் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஈடுபட்டு வருகிறார். ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோகித, அமெரிக்க திறைசேரியின் மூத்த உறுப்பினரும், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளான ஈரான் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ருவார்ட் லெவியை சந்திப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா றைஸை நேற்று சந்தித்து பேசிய சிறிலங்க…

  4. Sunday, June 5, 2011, 15:57இந்தியா, தமிழீழம் புரட்சியால் உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை பேசும் நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், இராணுவ உதவி ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில், இலங்கை அரசின் யுத்த குற்றவாளியென கூறும் ஐ.நா. அறிக்கையை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்:- ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து செய்வது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி…

    • 2 replies
    • 877 views
  5. புதிய பாணியில் இராணுவ குடும்பப்பதிவு நடைமுறை யாழ் மாவட்டத்தில் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று புதிய முறையில் இராணுவபப் பதிவுகளை மேற்கொள்வதனாலும், வீட்லுள்ளவர்களை வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதனாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமுமானதொரு நிலை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாக புகைப்படம் எடுப்பதுடன் தனித்தனியாகவும் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார்கள். இன்று உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபரோ அன்றி ய…

    • 0 replies
    • 672 views
  6. ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம் : நாடும் திரும்பும் ஜனாதிபதிக்கு உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாச வேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதக் குழுக்களின் தாக்குதல்…

  7. பளையில் சிறிலங்கா வான்படை வான்தாக்குதல்: 12 வீடுகள் சேதம். பளை இயக்கச்சிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையினரின் கிபீர் ரக வானூர்திகள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் வெளியேறிய நிலையில் இருந்த வீடுகளின் மீது வானூர்திகள் வீசிய குண்டுத் தாக்குதலில் 12 வீடுகள் சேதமாகியுள்ளன. இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து விட்டனர். -Puthinam-

  8. Tuesday, June 14, 2011, 9:32உலகம், சிறீலங்கா ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர் (அமைச்சர்) டக்ளஸ் அலென்சாண்டர் (Douglas Alexander) கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத்தீவின் அண்மைய அரசியல் நிலை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அம்மையார் அற்றிய உரை என்பன பற்றி அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே…

    • 1 reply
    • 619 views
  9. கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை சூழல் ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னர் தொடரப்போவதாக இலங்கை உறுதியளித்துள்ளது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் வெளிவிவகார செயலாளர் சி.மகேந்திரன், சின்குவா செய்திச்சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார். யதார்த்தபூர்வமான மற்றும் பரஸ்பர ஓத்துழைப்பை தொடர்வதற்காக சீனாவுடன் எமது அரசாங்கம் சிறந்த உறவுகளை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சீனா எப்போதும் இலங்கைக்கு உதவிவந்துள்ளது. தேசிய கட்டுமானம், தேசிய ஐக்கியம் ஆகியவற்றிற்கு சீனா பங்களிப்பு செய்துள்ளது, இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் அதற்காக நன்றியுடையவர்களாக உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். போர்சிட்டி திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முடிவடைந்த பின்னர…

  10. கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய இளைஞனை சுட்டுக் கொன்ற ஆயுதபாணிகள் -கோண்டாவில் பகுதியில் அக்கிரமம் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை, ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞனொருவர் அவர்களிடமிருந்து தப்பியோடிய போது ஆயுதபாணிகள் அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். கோண்டாவில் மேற்குப் பகுதியில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோண்டாவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் சசிதரன் (வயது- 20) என்ற இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த இளைஞன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதபாணிகள் இவரை பலவந்…

  11. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் குரல் கொடுப்பேன்: சத்யராஜ் [sunday, 2011-06-19 09:41:57] ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் எந்த மேடையிலும் நான் இருப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் நேற்றிரவு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்: நான் இந்த நாம் தமிழர் மேடையில் ஏன் ஏறியிருக்கிறேன் என்று நினைப்பீர்கள். நாம் தமிழர் மேடை மட்டுமல்ல. ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும்…

  12. நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின் நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (14) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். இதன்போது நெடுந்தீவுக்கு செல்லவிருந்த மக்கள், வயோதிபர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 8 மணிக்கு பயணமாகும் வடதாரகை பயணிகள் படகு இன்றையதினம் நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவ…

  13. தமது பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் மீளவும் நாட்டிற்கு வரவழைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அரசின் பாரிய பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மிகவும் அராஜக போக்கின் காரணமாக தனது பாதுகாப்பை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசியல் ஆர்வலர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் …

  14. மானிப்பாயில், ஹெராயின் போதை பொருளை வைத்திருந்த மூவர் கைது… October 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஹெராயின் உட்பட போதை பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மானிப்பாய் காவற்துறையினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளும் , மற்றுமொருவரின் உடமையில் இருந்து 50கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர். கைதான மூவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்…

  15. சக்தி வாய்ந்த ஆயுதங்கள் சந்தைகளிலே கிடைக்கும்போது சைக்கிள் பேரிங்குகளை கடத்த வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை: பழ. நெடுமாறன் தென் கிழக்காசிய சந்தைகளில் பல மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கிடைக்கும்போது சைக்கிள் பேரிங்குகளை கடத்த வேண்டிய அவசியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இல்லை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடன் வாரமிருமுறை ஏட்டுக்கு பழ. நெடுமாறன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: இராமேஸ்வரம் மீனவர்களையும் குமரி மாவட்ட மீனவர்களையும் கொன்றது இலங்கைக் கடற்படை அல்ல விடுதலைப் புலிகள்தான் என்று கூறப் படுகிறதே? தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்தக் கடற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு? மீனவர்கள் தாக்கப்படு…

  16. 28 ஜூன் 2011 சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க.. நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் அரசியல் தீர்வை வழங்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது, ஊடக நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அடுத்த வருடம் கட்டாயமாக வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என கூறினார். அதேவேளை பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்…

  17. காணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்! காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று (செ…

  18. வன்னி மீது தொடர்ந்து விமானத் தாக்குதல் வன்னியில் கடந்த சிலதினங்களாக இரவு-பகலாக குண்டு வீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. நேற்றுக் காலை வன்னியில் மூன்று இடங்களில் இரு விமானங்கள் அடுத்தடுத்து கடும் தாக்குதலை நடத்தியுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரு விமானங்கள் ஆறிற்கும் மேற்பட்ட தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. இதனைத் தொடர்ந்து முகமாலைக்கு கிழக்கே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் ஆட்லறி நிலைகள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இங்கும் பல தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் பின் காலை 10.45 மணிய…

  19. இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மிள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவசரக் கடிதம் ஒன்றையும் தான் பொலிஸ் மாஅதிபருக்கும் எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தக் கிணறுகளை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், …

  20. குருந்தூர்மலை பொங்கலை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் : சரத் வீரசேகர எச்சரிக்கை! முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார வீழ்ச்சிக்கு நாம் முகம் கொடுத்துள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினைக்கு முற்படுகிறார்கள். குருந்தூர்மலை என்பது வடக்கிலுள்ள பௌத்த மத்தியஸ்தலமாகும். இதனை பு…

  21. ஜனாதிபதி, மங்கள சமரவீர நீண்ட நேரம் பேச்சுவார்த்தை -அமைச்சரவையில் மீண்டும் இணையும் சாத்தியம்? [26 - April - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா , ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் மங்கள சமரவீர இச்சந்திப்பை அடுத்து மீண்டும் அமைச்சராவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரம…

  22. எதிர்வரும் மார்ச் மாதம் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. இதனை வெளியிட விடாது சிலர் தடுத்துவருவதாக அறிகின்றோம். இவைகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.இராஜகுமாரன் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். http://www.pathivu.com/news/37866/57//d,article_full.aspx

  23. இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். …

    • 5 replies
    • 581 views
  24. கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தற்போது நடைபெறும் மோதல்களை ம…

    • 2 replies
    • 1.1k views
  25. வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதம்: இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி ஏற்றுக் கொள்கிறார் [Monday, 2011-07-11 22:56:48] போரினால் பாதிப்புகளுக்கு உள்ளாகிய வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளதாக இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். ஆரம்ப கட்டமாக, ஆயிரம் வீடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.வடக்கு மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஒன்றிணைந்த சக்தியாகத் தொடர்ந்து செயற்படும் எனவும் இந்தியப் பிரதித் தூதுவர் தெரிவித்தார். வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய வீடமைப்புத் திட்டம் மற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.