ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா அதிர்ச்சியில் மஹிந்த! ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கத்தேய நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புதுடில்லி சென்றுள்ளார். இந்தியா - இலங்கை இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை புதுடில்லியில் ஆரம்பமாகியது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்…
-
- 6 replies
- 2.3k views
-
-
முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர் Editorial / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 11:31 அமைச்சுப் பதவிகளில் இருந்து அண்மையில் விலகிய, முஸ்லிம் பிரதிநிதிகளில் இருவர், இன்று (19) மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய, கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரே, இவ்வாறு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-அமைச்சர்கள்-இருவர்-மீண்டும்-பதவியேற்றனர்/175-234369
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 849 views
-
-
இலங்கையிலுள்ள முதியோர்கள் தொகையில் 2 லட்சத்து 62ஆயிரத்து 974 பேர் பாடசாலைப்பக்கமே செல்லாதவர்கள் எனக் கடந்த ஜூலை மாதத்தில் வெளியான பொது சன மற்றும் புள்ளி விவரத்தரவுகள்அறிக்கையொன்று கூறுகிறது இது நாட்டிலுள்ள முதியோர் சனத் தொகையில் 10.4 வீதமாகும். இலங்கையின் முதியோர்கள் சனத் தொகை 25 லட்சத்து 20 ஆயிரத்து 573 என்பதோடு மொத்தச் சனத் தொகையின் வீதாசாரமொன்றா கக் குறிப்பிடும்போது 12. 4 வீதம் முதி யோர்களின் சனத்தொகையாகும்.அதில் 11லட்சத்து 15 ஆயிரத்து 651 என்ற முதியோர்களான ஆண்களின் சனத்தொகையில் 57ஆயிரத்து 516 பேர் ஒரு நாளாவது பாடசாலைகளுக்குச் சென்றிருக்கவில்லை. அது ஆண்களின் சனத்தொகையின் வீதாசாரத்தில் 6.1 வீதமாகும். முதியோர்களான பெண்களின் சனத் தொகையான 14 லட்சத்து 4 ஆயிரத்து 922 பேரில…
-
- 8 replies
- 880 views
-
-
மனிதப் படுகொலை குற்றம் சுமத்த எந்த அடிப்படையும், சாட்சியும் இல்லை - நீதிவான் லங்கா ஜயரத்ன 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவே அவ்விருவரும் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தண…
-
- 2 replies
- 1k views
-
-
ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை! ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதில் சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399264
-
- 1 reply
- 1.1k views
-
-
சுங்கவரி அதிகரிப்பு - எகிறியது ஜப்பானிய வாகனங்களின் விலை! [Thursday 2015-10-08 07:00] சுங்க வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1993-16 வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் வாகனங்களுக்கான சுங்கத் தீர்வையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. டொயொடா அக்சியோ ரக வாகனம் 700,000 ரூபாவினாலும், டொயொடா அக்வா ரக வாகனம்; 770,000 ரூபாவினாலும், டொயொடா ஹை ஏஸ் பெற்றோல் வாகனம் 1350000 ரூபாவினாலும், டொயொடா ஹை ஏஸ் டீசல் வாகனம் 1700,000 ரூபாவினாலும், டொயொடா பிரிமியோ மற்றம் அலியான் வாகனம் 675000 ரூபாவினாலும், டொயொடா பிரியுஸ் வாகனம் 1150000 ரூபாவினாலும், டொயொடா ஹாரியார் வாகனம் 1150000 ரூபாவினாலு…
-
- 0 replies
- 621 views
-
-
திருகோணமலை, கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடாகும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பல்லாயிரம் காலங்களுக்கு முற்பட்ட இந்த புராதன வரலாற்றுப் பகுதியை தமிழ் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்து விகாரை கட்டப்பட்டுவரும் செய்தி தம…
-
- 2 replies
- 998 views
-
-
புதிய இணைப்பு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் சில உள்ளடக்கங்களை நீக்குமாறு, தேர்தல் ஆணையகம் விடுத்த கோரிக்கையை சமூக ஊடக தளங்கள் நிராகரித்துள்ளன. தேர்தல் சட்டத்தை மீறிய 201 இடுகைகளை நீக்க, தேர்தல் ஆணையகம் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் Meta, YouTube, TikTok மற்றும் Google ஆகியவை அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டன. சுமார் 937 கேள்விக்குரிய இடுகைகள் தேர்தலுக்கு முன்னர், குறித்த தளங்களில் இடுகையிடப்பட்டிருந்தன எனினும், தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறி 872 பதிவுகள் சர்வதேச சமூக ஊடக நிறுவனங்களால் நீக்கப்பட்டன. முதலாம் இணைப்பு அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர்ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சர் சமரசிங்க ஒத்துழைப்புடன் செயற்படவில்லை என அமைச்சர்பிரிஸ் ஜனாதிபதியிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளார். அமர்வுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை மஹிந்த சமரசிங்க தமக்குவழங்கவில்லை என பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யாது பொறுப்…
-
- 0 replies
- 636 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அரசாங்கம் வழங்கத் தவறினால், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன், கந்தபளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/220828/50-ரூபாய்-கொடுப்பனவு-தீர்க்கப்படாவிட்டால்-ஐ-தே-கட்சியின்-புதிய-கூட்டணியில்-இணையப்போவதில்லை-ராதாகிருஷ்ணன்-அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் அமைச்சுப் பதவியை துறப்பேன் - திகா நாட்டு மக்கள் எதி…
-
- 0 replies
- 333 views
-
-
ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு! நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களின் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் உரிய பொதுக் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. ஆணைக்குழு நேற்று கூடிய போது…
-
- 1 reply
- 334 views
-
-
ஞாயிறு 20-01-2008 15:18 மணி தமிழீழம் [முகிலன்] மொனராகல பகுதியில் 2000 சிங்களக் குடும்பங்கள் இடப்பெயர்வு மொனராகலக பகுதில் இருந்து இரண்டாயிரம் சிங்களக் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களின் முன்னர் நடந்த தாக்குதல்களை அடுத்தே பாதுகாப்பு அச்சுறுத்தலை எழுந்துள்ள நிலையில் இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 24 replies
- 3.8k views
-
-
வவுனியா வடக்கு மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் திருச் சொரூபங்களை வெளியே வீசி அட்டகாசம் வவுனியா வடக்குப் பகுதியிலுள்ள மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொரூபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பகுதியிலுள்ள இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த படையினரே இவ்வடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொரூபத்தினை அகற்றி வெளியே கொண்டு சென்று வைத்து அதன் மீது கழிவு நீர் போன்றவற்றை ஊற்றி படையினர் அசிங்கப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்றிரவு இந்த அடாவடி நடவடிக்கை இடம்பெற்றுள்ள நிலைமையில் அந்தப் பகுதி கிறி…
-
- 3 replies
- 1k views
-
-
யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைப் பொறிமுறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் பேசப்பட உள்ளது. 21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றக உள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க , எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளி;ட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்க…
-
- 0 replies
- 289 views
-
-
சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு -சண். தவராஜா- நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்கள், விமர்சனங்கள் என்பவற்றைச் சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிடும் நோக்குடன், அதற்கூடாக தமிழ் மக்களின் எதிர்ப்பை நிர்மூலம் செய்து விடும் நோக்குடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு போர் முடுக்கி விடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் ஒரு சில வருடங்கள் மென்னிலையாக நடந்து வந்த யுத்தம் 2005 நவம்பரில் தற்போதைய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னால் உக்கிரமடைய…
-
- 14 replies
- 2.2k views
-
-
ஜெனீவாவில் கூட்டமைப்பு சிங்கள அரசின் நிலைமையை விளக்கி அறிக்கை (இன்று) சமர்பிப்பு BROKEN PROMISES: TNA response to the position of the Government of Sri Lanka at the 19th session of the UN Human Rights Council Full statement release by TNA below: 14 March 2012 1.0 The Government of Sri Lanka has serious issues with regard to telling the truth and keeping its promises 1.1. In response to Minister Mahinda Samarasinghe’s statement to the 18th Session of the United Nations Human Rights Council [uNHRC] on 12 September 2011, the Tamil National Alliance [TNA] issued a statement the very next day correcting the record and urging the Sri Lankan gove…
-
- 3 replies
- 1k views
-
-
சிறைகளில் இருக்கும் புலிகளை விடுவித்து நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. இவர்களை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் எனவும் அவ் இயக்கம் எச்சரித்தது. நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து மஹிந்த ஆதரவு அணியின் முக்கிய அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திடம் வினவியபோதே அவ் அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேல…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னி மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதற்கு வீடின்றி நெருக்கடியான சூழலில் முற்று முழுதாக இராணுவத்தின் பிடியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று வடபகுதிக்கு அண்மையில் சென்றுவந்த ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்களது சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசியதாவது: அண்மையில் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். குடாநாட்டுக்கும் வன்னிப் பிரதேசத்திற்கும் விஜயம் செய்தோம். அங்கு மக்களை சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்தோம். இதன்போது அம்மக்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென்றும் வாழ்வதாரமில்லாது துன்ப…
-
- 1 reply
- 929 views
-
-
தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது புதிய அரசியல் கூட்டணி குறித்து அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 30.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/nz0xdpszpo5z
-
- 0 replies
- 339 views
-
-
"நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார். ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் எமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகி…
-
- 2 replies
- 833 views
-
-
சிலாபத்தில் உப மின் நிலையம் சேதம் 2/6/2008 9:41:42 AM வீரகேசரி இணையம் - சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள உப மின் நிலையம் இன்று காலை ஏற்ப்பட்ட வெடிச்சம்பவத்தில் சேதமாகியுள்ளது. 33,000 கிலோ வட்ஸ் கொள்ளளவு சக்தி வலு உடைய இந்த உப மின் நிலையத்திலிருந்து 5000 மேற்ப்பட்ட வர்த்தக நிலையங்கலுக்கும் 20 மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்களுக்கும் மின் விநியோகம் வழங்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள்: அடுத்தவாரம் அமெரிக்க செனற் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஸ்டீபன் ராப் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனற் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனற் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 716 views
-
-
கைதிகள் விடுதலை குறித்து சிறைச்சாலைக்கு அறிவிக்கப்படவில்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 நவம்பர் 2015 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து சிறைச்சாலைகளுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகள் விடுதலை இன்றைய தினம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கைதிகளை விடுதலை செய்வதற்கு சில நியதிகளை பின்பற்ற வேண்டியிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை தலைமையகம் இதுவரையில் எடுக்கவில்லை என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு ம…
-
- 1 reply
- 609 views
-
-
மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர்…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-