Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவின் நலன்களை பிரபாகரன் ஒருபோதும் எதிர்க்கவில்லை : கலாநிதி இமம்மானுவேல் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை. அண்மையில் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார் தலைமையிலான நால்வர் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்திருந்தனர். அது மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் காலாநிதி இம்மானுவேல் …

    • 0 replies
    • 1.3k views
  2. வியாழன் 03-04-2008 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] 38 ஆசனங்களுக்கு 1342 பேர் வேட்புமனுத் தாக்கல் - கிழக்கு தேர்தல் ஆணையாளர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 38 ஆசனங்களுக்காக 1342 பேர் விண்ணப்பித்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக கிழக்குத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 6 replies
    • 1.3k views
  3. Friday, 18 April 2008 ஜெயராஜ் பர்ணாந்து பிள்ளை கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பிரான்சிஸ் என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசியப் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைதாரிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த ஒரு சிலரும் கைதானவர்களில் அடங்குகின்றனர் என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இன்னும் சிலரை கைது செய்வதற்காக சில போலீஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் தென் இலங்கை மற்றும் கிழக்கை நோக்கி சென்றிருப்பதாக தெரிய வருகிறது. http://www.ajeevan.ch/content/view/1982/1/

    • 0 replies
    • 1.3k views
  4. கடமையில் இருந்த பெண்கள் திடீர் மயக்கம் ; 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண் பணியாளர்கள் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர…

  5. வவுனியாவில் ஆயுதக்குழு அட்டகாசம் பத்து வீடுகளில் தொடர் கொள்ளை! வந்து வீதியை மூடிவிட்டு விடிய விடிய தங்கி நின்று சூறை வவுனியா, ஏப்ரல் 20 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளைக் கும் பல் ஒன்று, அடுத்தடுத்து உள்ள பத்து வீடு களில் புகுந்து அங்கிருந்தவர்களை துப் பாக்கி முனையில் மிரட்டிப் பயமுறுத்தி விட்டு, சுமார் இரண்டு கோடி ரூபா பெறு மதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றைச் சூறையாடிச் சென்றிருக் கிறது. நள்ளிரவு நேரம் முகத்தை மூடி மறைத் துக்கொண்டு வந்த கொள்ளையர்கள் வீடுகள் அமைந்துள்ள வீதியை மூடிவைத்துக் கொண்டு விடிய விடிய அங்கே தரித்து நின்று சூறையாடியிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் (புதன்) நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் …

  6. விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் (கே.பி) பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியேற்றுமாறும் இல்லா விட்டால் தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதிக்கு கூறிக்கொள்வதாக கே.பி. குறித்த தொலைக்காட்சியில் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தோன்ற எப்படி வாய்ப்பளிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம், பிரித்…

    • 0 replies
    • 1.3k views
  7. யாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீண்டும் குடியேற விடவேண்டும் என்று சிறிலங்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் 90ம் ஆண்டில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் குடியேறுவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்குமா என்பது சந்தேகமே!

  8. தலைமை செயலகம் பேர்ண் 10.ஜனவரி .2008 "உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும்.. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது..." மேதகு வே . பிரபாகரன் அவர்கள் தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம் தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்! ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெற…

    • 0 replies
    • 1.3k views
  9. ஞாயிறு 15-07-2007 00:37 மணி தமிழீழம் [மயூரன்] வான்புலிகள் அச்சத்தால் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையின் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மத்திய மலைநாட்டின் கண்டி நகரில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்படடிருந்தது. கடந்த 12ம் திகதியும் நேற்றும் விடுதலைப்புலிகளின் வான் படைக்கு சொந்தமான விமானங்கள் வான்பறப்பில் ஈடுபட்டமை அவதானிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினரால் கண்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த கருத்தரங்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள…

    • 1 reply
    • 1.3k views
  10. நாம் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது - சிறிலங்கா திகதி: 16.05.2009 // தமிழீழம் பாதுகாப்பு வலயத்திலிருந்து பொது மக்களை மீட்பது தொடர்பில் அமெரிக்காவிடம் எந்தவிதமான இராணுவ உதவியையும் சிறிலங்கா அரசாங்கம் கோரவில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவ்வாறு இராணுவ உதவி தேவையாயின் சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அப்படியாயினும் நாங்கள் முதலில் எங்கள் நட்பு நாடான இந்தியாவிடமே உதவியை கோருவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை கப்பல் …

  11. இந்தோனேசிய கடற்பகுதியில் தரித்து நிற்கும் ஓசியன் விக்கிங் கப்பலில் இருக்கும் 78 பேரில் எட்டு பேர் தரை இறங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று வாரங்களாக கப்பலில் தரித்து இருந்தனர். இந்தோனெசிய நாட்டில் தரை இறங்கி அவர்களது அகதி அந்தஸ்து கோரும் சட்டத்திற்கு அமைவாக தாம் செயற்பட தயார் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் இந்த கப்பலில் விடுதலைப்புலிகள் உள்ளார்களா என நிரூபிக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.

  12. (வெள்ளிக்கிழமை) 17 நவம்பர் 2006, 20:31 ஈழம், (காவலூர் கவிதன்) இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது. இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துh தரகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னரே அறிவித்திருந்தார். இருப்பினும்இ இதற்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கவில்லை. வைகோ அறிவிப்பையடுத்து, இலங்கை தூதரகம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் துhதரகத்துக்கு வ…

  13. வளரியின் அறிமுகம் http://www.valary.tv/

    • 4 replies
    • 1.3k views
  14. ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச்சி என்று காட்டி, அதனை அடக்குவதற்குக் கங்கணம் கட்டிப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது. மறுபுறத்தில், தென்னிலங்கை பௌத்த-ச…

  15. இம் மனநிலையால் சாதாரண தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.இதற்கு மேலாக சட்டமென்பது சகலருக்கும் சமம் என்ற தத்துவத்தையும் நாங்கள் மறந்து விடுகின்றோம்.சிங்கள மக்கள் என்றால் அவர்களுக்கே முன்னுரிமை என்ற நினைப்பு.இந்த நினைப்புக்கும் அரசுக்கோ அன்றி சிங்கள மக்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது.மாறாக உயர் பதவிகளில் இருக்கக்கூடிய தமிழ்ப் பெருந்தகைகளின் மனப் பயமும் மனப் பிரமையுமே இத்தகைய பாகுபாட்டிற்குக் காரணமாகும். “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ...” என்று கேட்கும் கம்பனின் வீரம் நமக் கும் இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.அந்த வீரம் இனப்பற்றிருக்கும் போதே ஏற்பட முடியும். இதுபற்றி எல்லாம் இவ்விடத்தில் குறிப் பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படமாட்டா தென் பதா…

  16. பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை சிங்களத் தேசியப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு என் கையால் தான் சாவு நேரும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். “என்னைப் பற்றி ஒரு சிங்களத் தேசியப் பத்திரிகை தொடர்ந்தும் தாறுமாறாக விமர்சிக்கின்றது. நானும் முடிந்த மட்டும் பொறுத்துக் கொண்டிருக்கின்றேன். என்னைப் பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிகை நிறுத்திக் கொள்வது நல்லது. அப்படியல்லாது என்னைப் பற்றி தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருந்தால் அதன் ஆசிரியர் என் கையால் தான் கத்திக்குத்து வாங்கிச் சாக நேரும்” என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார். கொழும்பு-07ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பு அமைச்…

  17. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது. ஆயினும் அதை விடவும் முக்கியத்துவம் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் தங்கியிருக்கின்றது. பொது எதிரணியாக செயற்படும் போது தனி நபர் தொடர்பில் அக்கறைப்பட அவசியம் இல்லை என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசிம் செயற்படுவார் எனவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து அனைவரும் களத்தில் இறங்கியுள்ளோம். பல விட்டுக…

    • 0 replies
    • 1.3k views
  18. மனோகரன் எழுதிய "சிறீலங்கா அரசின் அணுகுமுறைகளை தமிழர்கள் இராசதந்திரம் தோற்கடிக்க வேண்டும்" சிறீலங்கா அரசாங்கம் இன ஒதுக்கலைக் கை விடவேண்டும் என்று ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லுாயிஸ் ஆர்பர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் போர் நிறுத்தத்திலிருந்து அரசாங்கம் விலகியபின்னர் தொடரும் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றமாகவே கருதப்படும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். லுாயிஸ் ஆர்பரின் இந்தக்கருத்துகள் முக்கியமானவை. இலங்கை தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிப்பிராயங்கள் படுமோசமாகவே இருக்கின்றன. அதிலும் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றனர். அதன் உச்ச நிலையில் இப்போது லுாயிஸ் ஆர்பரின் கருத்தும…

  19. மைத்திரி ரணில் படத்தை தாங்கி காவடி எடுத்த நபா் - யாழில் சம்பவம்! ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஆகியோருடைய படங் களை தாங்கியவாறு வலி,வடக்கை சேர்ந்த நபர் ஒ ருவர் காவடி எடுத்துள்ளார். யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் மக்களுடைய நிலம் இன் றைய தினம் மக்களிடம் மீள வழங்கப்பட்டது. வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து மக்கள் வாழ்ந்துவரும் நலன்புரி முகாம் ஒன்றுக்கு குறித்த நபர் தலைவராக இருந்தவர். மேலும் குறித்த நபர் மஹிந்த ராஐபக்‌ஷ ஆட்சி கா த்தில் அவருக்கு …

    • 4 replies
    • 1.3k views
  20. வீரகேசரி நாளேடு - நாங்கள் இலங்கையில் நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர்நிறுத்தம் வேண்டுமென கடந்த ஆறுமாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். எனினும் இலங்கை அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எமது குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாக போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகின்றன. அதைப்போலவே, நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும் பொதுவாக இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் "இப்பிரச்சினைக்கு போர் தீர்வல்ல, பேச்சு வார்த்தைதான் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும். என…

  21. பாலுமகேந்திரா, மகேந்திரன், கமல்ஹாசன் என தற்கால சினிமாவின் பிரம்மாக்கள் அமர்ந்திருக்கிற புத்தக வெளியீட்டு விழா மேடை. மைக் பிடித்தார் தங்கர்பச்சான். நம் சினிமா குப்பையாக இருக்கிறது. பெரிய பெரிய மாற்றங்களையெல்லாம் செய்த வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஆனால் நம் சினிமா மழுங்கி போய் கிடக்கிறது. ஒரே ஒரு சினிமாவில் ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருந்தால், நம் மக்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள். நான் வைத்திருக்கிறேன் ஒரு கதை. யார் செய்ய முன் வந்தார்கள் என வரிக்கு வரி தமிழ் படைப்பாளிகள் மீது சாடல். தங்கர்பச்சானை சந்தித்த இந்திய இணையத்தளமொன்று இந்தக் கேள்வியை முதல் கேள்வியாக அவரிடம் கேட்டது. யார் மீதுதான் உங்களுக்கு கோபம்? நல்ல சினிமாக்களும் வருகிறதே? சிற்ப…

    • 0 replies
    • 1.3k views
  22. சர்வதேச போர்க் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக கடந்த மாதம் ஐ.நா தலைமையகத்தின் முன்னே நடந்த மாபெரும் மக்கள் போராட்டம் (Massive protest in front of United Nation's HeadQuarters in New York against the International War Criminal Mahinda Rajapakse, The President of SriLanka)

    • 0 replies
    • 1.3k views
  23. இந்தியாவை இலங்கை முழுமையாக நம்பாது – அமைச்சர் கம்மன்பில கூறுகிறார் 36 Views “இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் இடைநடுவே கைவிடும் இந்தியா போன்ற நாடுகளைத் தொடர்ந்தும் நம்பி அவர்களிடம் தங்கியிருக்காது இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடனும் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் உதய கம்மன்பில. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் த…

    • 4 replies
    • 1.3k views
  24. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. இன்றுடன் முடிகிறது சீன – சிறிலங்கா படைகளின் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ போர்ப்பயிற்சி APR 17, 2015 | 9:32by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீன – சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும், ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ என்ற குறியீட்டுப் பெயரிலான, இருபது நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது. சிறிலங்கா படையினரும், சீனாவின் மக்கள் ஆயுதக் காவல்படையும், இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியை கடந்த மாதம் 29ம் நாள் ஆரம்பித்திருந்தன. சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்டொங் பகுதியில் உள்ள, மக்கள் ஆயுதக் காவல்படையின் இராணுவப் பயிற்சித் தளத்தில், கடந்த 20 நாட்களாக நடந்து வந்த பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதில் பிரதானமாக, தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான பயிற்சிகள…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.