ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
-
-
சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினரின் சுதந்திர நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனினும் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து படையினர் தமது சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
பகலில் வேலைக்காரி இரவில் இன்போர்மர் – தீரன் திரைப்பட பாணியில் தகவல் வழங்கும் பெண் சிக்கினார்… யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் , “கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடபட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த பெண்ணுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல ஒலிபரப்பு நிறுவனமாகிய `இன்ரர்நெஷனல் புரோட்காஸ்ரிங் கோப்பறேஷன்' (ஈன்டெர்னடிஒனல் Bரொஅட்cஅச்டிங் Cஒர்பொரடிஒன்) விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பிரபாகரன் மற்றும் அவருடைய குழுவினருக்கும் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் .......................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7791.html
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்...!!! யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன. வறுமையில் வாடும் தமிழ் மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவு பணங்களை கொடுத்து அவர்களின் நிலங்களை பெரும்பாலான சிங்களவர்கள் வாங்கிவருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் வடபகுதி எங்கும் அதிகளவான சி…
-
- 10 replies
- 1.3k views
-
-
சத்தம் சந்தடி இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்வறாம் எதுவும் இன்றி விடுதலை செய்துள்ளது. இந்த 7 சிறை கைதிகளும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ்பாப்னம் குருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (36) என்பவரை சமகளம் செய்தியாளர் சந்தித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை அதிகாரிகள் தம்மை திடீரென கூப்பிட்டு விடுதலை செய்வதாக கூறியதாகவும் மேலதிக அறிவித்தல் வரும்வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கையெழுத்து இடுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேல…
-
- 9 replies
- 1.3k views
-
-
பொதுமக்களை பாதுகாக்கவும்: யு.என்.எச்.சி.ஆர் வேண்டுகோள் மட்டக்களப்பு வாகரை மீதான சிறிலங்கா அரசின் படை நடவடிக்கைகளை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசையும் விடுதலைப் புலிகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறியதாவது: சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனைத்துலக விதிகளை மதிப்பதுடன் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் அனுமதியளிக்க வேண்டும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் போரில் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் 465,000 மக…
-
- 2 replies
- 1.3k views
-
-
புரியாத புதிராக குடாநாட்டின் வேலை வாய்ப்பு அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் “யாழ் மற்றும் வடக்கில் புதிராக விளங்கும் தொழிலாளர் சந்தை” எனும் தலைப்பிலான பகிரங்க பொது மன்றம் ஒன்று யாழ் பொது நூலகத்தில் இந்த மாதம் மூன்றாம் திகதி இடம்பெற்றது. இதன் பிரதான ஆய்வாளரான கலாநிதி.மு.சர்வானந்தா, இங்கு பரிமாறப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஆய்வு கட்டுரை ஒன்றினை ஒன்லைன் உதயனுக்காக வழங்கியிருந்தார். இதிலிருந்து சில பகுதிகள் : அரசாங்க வேலையே வேண்டும்! தனியார் பொறியியலாளர் நிறுவனம் ஒன்று அண்மையில் சில வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பங்களை யாழ்ப்பாணத்தில் கோரியிருந்த போது, அதற்கு எதுவிதமான விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில், மாவட்டச் செயலாளர் இமெல்டா…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம் ஏற்றுக் கொண்டது உண்மையானால் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டது உண்மையானால்……………….? நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள். 1989இல் தொடங்கிய இந்த மாவீரர்களைப் பூசிக்கின்ற வரலாறு என்றென்றும் நீடிக்க வேண்டும். இதுவே தேசியத் தலைவரின் விருப்பம்- ஆணை. முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழ மண் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே நாம் கருதி வந்துள்ளோம். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாதவை. தெரிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
"காரியம் முடிவுற்றதும் ஓரம் கட்டப்படும் ஒட்டுக்குழுக்கள்" தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதற்கான அங்கிகாரத்தைக் கோரிக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் தங்கள் ஏகோபித்த அங்கிகாரத்தை வழங்கியிருந்தனர். இப்பெரும் வெற்றி காரணமாக ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றவாகள் தமிழ் மக்களின் அரசியல் களத்திலிருந்து முற்றாகவே புறமொதுக்கப்பட்டனர். தமிழ் மக்களின் பேரால் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகமிழைத்து வந்த இவர்களுக்கு தமிழ் மக்கள் உரிய பாடத்தை வழங்கியிருக்கின்றனர். எனினும், இவர்கள் விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனத்தம்பட்டம் அடித்தவாறு தமிழ் மக்களின் விடுதலைப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வரவேற்பு நிகழ்விற்கு, நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்து கொமன்வெல்த் கூட்டத்துக்கு இலங்கையே இணைத்தலைமை வகிக்கிறது. இந்தநிலையில், சவீந்திர சில்வா பு…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்று அல்லவென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு இலங்கை ஓர் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடு ஆகவே அந்த நாட்டுடனான பலமானதும் நீண்டதுமான உறவு வைத்திருக்க விரும்புகின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸீற்கும் றொபர்ட் ஓ பிளெகிற்கும் இன்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடற் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு போன்ற …
-
- 1 reply
- 1.3k views
-
-
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் "வடக்கின் வசந்தம்" ஈனச் செயலைக் கண்டிப்போம்! தடுத்து நிறுத்துவோம்!! வன்னிப் பெண்களுக்கு களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈனச் செயலைக்கண்டித்து தடுத்து நிறுத்த தமிழர்களை ஒன்றிணைய நாம் தமிழர் இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது. நான்காம் ஈழப் போரில் வன்னிப் பெருநில மக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை இராணுவத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மக்களில் இளைஞர்களைப் பிரித்து அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. எனவே முகாம்களில் அதிக அளவில் இருப்பது பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும்தான…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடத்திய ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது [18 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து எஞ்சியோரை வடக்கே விரட்டியடித்த ஐ.தே.க.வினர் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரென வர்த்தக நுகர்வோர் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தெரிவித்தார். தெரணியகலை தெமத தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்துப் பேசிவருவதை எண்ண சிரிப்பு வருகிறது. இந்த நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்து தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் சிங்கள மற்றும் சர்வதேச வல்லாதிக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறிப் போரில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கும் வீரவணக்கங்கள்! சிங்களத்தின் இன அடக்குமுறைகளும், கடந்த கால இனக்கலவரங்களும் ஒரு பிரபாகரனை உருவாக்கியிருக்குமானால்..., முள்ளிவாய்க்காலிலிருந்து ஆயிரமாயிரமாய் பிரபாகரன்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது! முள்ளிவாய்க்கால் நாம் விழுந்த இடமல்ல.... மீண்டும் வீறுகொண்டு எழவேண்டிய இடம்! விதையாய் விழுந்து விருட்சமாய் மீண்டும் எழுவோம்! சிங்களம் எம்மக்களுக்கு தோண்டிய புதைகுழிகளில் அதுவே விழப்போகும் காலம் வெகுவிரைவில் வரும்! அழுது புலம்புவதில் அர்த்தமில்லை, வீறுகொண்டெழுந்து நம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
த நேசன், பொட்டம்லைன், ரிவிர ஆகிய பத்திரிகைகளை பிரசூரிக்கும் ரிவிர மீடியோ கோபரேசன் நிறுவனத்தின் உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று பத்திரிகைகளின் உள்ளடக்கங்களும் ராஜபக்ஸ சகோதரர்களின் கருத்துக்களை இனி பிரதிபலிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், ஆர்பிகோ நிறுவனத்தின் தலைவருமான சேன யக்தெனியவிற்கு சொந்தமான ரிவிர பத்திரிகை நிறுவனத்தின் 49 வீத பங்குகளை ஜனாதிபதியின் உறவினரான நிலங்க ராஜபக்ஸ ஏற்கனவே கொள்வனவு செய்திருந்தார். யக்தெனியவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40 மில்லியன் கடன் தொகையொன்றை மீளச் செலுத்துவதற்காக பத்திரிகையின் பங்குகளை யக்தெனியா …
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் இந்துக்கல்லூரியில் சிங்கள பாடத்திற்கு பெளத்த துறவி நியமனம் Posted on February 22nd, 2010 in செய்திகள் சிங்களபாடம் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருந்த பொழுதிலும் கடந்தகாலங்களில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இந்தப்பாடம் கற்பிக்கப்படுவதில்லை தற்போது மீண்டும் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான ஆசிரியர் நியமனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு தற்போது சிங்கள பாடக்கற்பித்தலுக்காக பெளத்ததுறவி ஒருவர் நியமனம் பெற்றிருக்கிறார் குறித்த ஆசிரியர் நேற்று அதிபரை சந்தித்து தமது நியமனம் குறித்தும் தங்குமிட வசதி தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகிறது. சிங்களபாடம் கற்பிக்க ஆசிரியர் நியமிக்கப்படுவது சாதாரண விடயம் என்றபொழுதிலும் வரலற்று…
-
- 9 replies
- 1.3k views
-
-
http://www.channel4.com/news/sri-lanka-white-vans-interview-leena-manimekalai-video
-
- 7 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்! திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 02:25 .புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவுச் செயல்பாட்டாளர்கள் என்று கூறப்படும் 20 பேரை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இண்டபோல் பொலிஸார் மூலமாக இவர்களை மடக்கிப் பிடிக்கும் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 20 பேரினதும் பெயர், விபரம் ஆகியன வருமாறு:- * வி.கிருபாகரன் - பிரான்ஸ் * எனா பரராஜசிங்கம் - ஆஸ்திரேலியா * ஆரூரன் - ஆஸ்திரேலியா * வசந்தி பிரான்ஸிஸ் - நோர்வே * ஜெயலட்சுமி - மலேசியா * எம். பாஸ்கரமூர்த்தி - ஜேர்மனி * ஜெயபாலன் - டென்மார்க் * சசிலா - கனடா * ரி.சரோஜா -…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆள் கடத்தும் வெள்ளை வான்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாம்! கதை விடுகிறார் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கொழும்பில் ஆள் கடத்தல் நடவடிக் கைகளுக்குப் பயன்படுத்தப்படும் போலி இயக்கத் தகடுகளுடனான வெள்ளை வான்களைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகக் கடினம் என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இந்த வெள்ளைவான்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்றும் கொழும்பில் வெள்ளைவான்கள் திரி வதால் இங்கு நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு எந்தப் பாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கை யிலேயே அமைச்சர் ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளை வைகிறதுதேசிய பாதுகாப்பு மத்திய நிலையம் கொழும் 05 ஜன. மன்னார் இலுப்பக்கடவையில் விமானத் தாக்குதல தொடர்பாக விடுதலைப்புலிகள் உண்மைக்குப் புறம்பான முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை இலங்கை அரசு முற்றாக மறுக்கிறது. - இவ்வாறு தேசியப் பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டடுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது - மன்னாருக்கு வடக்கே இலுப்பக் கடவையிலுள்ள விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளம் மீது மேற் கொள்ளபட்ட விமானப் படைத் தாக்குதல்கள் தொடர்பாக வி.புலிகள் உண்மைக்குப் புறம்பான. தவறான பிரசாரங்களை செய்துவருகிறார்கள். இதனை அரசு அடியோடு நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தைத் தவறான வழியி…
-
- 3 replies
- 1.3k views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, அதிபர் ராஜபக்சவால், ரோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு 9/25/2008 8:37:58 AM - ஆயுதங்களை கீழே வைத்து போர்த் திறன்களை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறி நாட்டை கூறுபோடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளியாகவிருந்த ஒருவரே இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணத்தை விடுவித்து ஒரு வருடகாலத்துக்குள் நாம் இவற்றை நிறைவேற்றியுள்ளோம். பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. இதனை நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும் *மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகிறார் இனப்பிரச்சினையை பணம் சேர்க்கும் கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக கவலை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், நாட்டின் நிலைவரம் ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் நிலைவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென அரசியல்வாதிகள் கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, இனங்கள் மத்தியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-