ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க பேர்த் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை வரவேற்க, அவுஸ்ரேலிய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு அவுஸ்ரேலிய பிராந்திய அதிகாரிகளே, சிறிலங்கா அதிபரை வரவேற்றுள்ளனர். மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விளையாட்டுத்றை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே நேற்றிரவு பேர்த் விமான நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கு, சிறிலங்கா அதிபரை அவுஸ்ரேலிய அரசின் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி முதல் மே 2 ஆம் திகதிவரை பிரான்சில், அர்ஜெண்டன் என்ற நகரில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற "கோசிமொடோ" (Quasimodo) என்ற Foire & Exhibition நிகழ்விற்கு சிறி லங்கா அரசை சிறப்பு விருந்தினராக அழைக்க அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும், அர்ஜெண்டன் நகரத்தின் மாநகரசபையும் முடிவு செய்து சென்றவாரம் சிறி லங்காவின் பிரான்சிற்கான துதுவர் தயான் ஜெயதிலக அந்த நகரத்தின் மாநகர சபையின் தலைவருடன் ஒரு பத்திரிகை செய்தியும் விட்டிருந்தார். அதில் சிறி லங்காவில் 30 வருடமாக நடைபெற்ற போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறி லங்கா ஒரு பாரிய மாற்றத்தில் இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், இன்று சிறி லங்கா…
-
- 1 reply
- 1.3k views
-
-
வீசா மோசடியில் ஈடுபட்ட இலங்கைப் பெண் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வீசா பெற்றுக் கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் தமது இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்டதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான விவகாரத்து சான்றிதழையும், ஹோட்டல் பதிவு சான்றிதழையும் குறித்த பெண் சமர்ப்பித்து பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பில் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீசா விண்ணப்பதாரிக்கு பத்தாண்டு கால பயணத் தடை விதிக்கப்பட்டதாகவும், வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அதிகரித்த இராணுவ மயமாக்கல் கட்டுக்கடங்காத நிலையை ஏற்படுத்திவிடும்-மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இலங்கையில் இராணுவ மயமாக்கல் அதிகமாக தற்போது இடம்பெற்றுள்ளது. அதிகரித்த இராணுவ மயமாக்கலானது கட்டுக்கடங்காத நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக சேவை அமைப்பான லக்ஜய மன்றத்தின் தலைவருமான ஜானக பெரேரா தெரிவித்தார். கொழும்பு 7இல் அமைந்துள்ள தொழில்சார் சங்கங்களின் அமைப்பு கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது, தற்போது அளவிற்கு அதிகமாக இலங்கையில் இராணுவ மயமாக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=4]சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுப்பதால் இந்தியாவுக்கே ஆபத்து என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, சிறிலங்கா விமானப்படையினர் ஒன்பது பேரும் பெங்களூரில் உள்ள ஜலஹங்கா விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா, “தமிழ்நாடு எங்களின் சகோ…
-
- 11 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டது உண்மையே - டப்ளின் நீதிமன்று இத்தாலி மிலானைத் தளமாகக் கொண்டியங்கும் மக்களுக்கான நிரந்தர நீதிமன்றம் எனப்படும் அமைப்பு கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அயர்லாந்து டப்ளின் நகரில் மேற்கொண்ட சிங்கள அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிலங்கா அரசு குற்றவாளிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆவணங்கள் என்பவற்றைத் தனது விசாரனைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியிருக்கும் இந்த நீதிமன்றம் சிங்களம் மேற்கொண்ட இனவழிப்புத் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. யுத்தத்தின் இறுதி வாரத்தின்போது முல்ல…
-
- 7 replies
- 1.3k views
-
-
டக்ளஸ் தேவானந்தாவை இலக்குவைத்து தர்கொலை தாக்குதல் நடத்த வந்த குண்டுதாரி முற்சக்கர வண்டியில் வந்துள்ளார் வீரகேசரி இணையம் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக அவரது அலுவலகத்திற்கு வந்த தற்கொலை குண்டுதாரி முச்சக்கர வண்டியொன்றிலேயே வந்துள்ளார் என இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். சிவப்பு நிறமுடைய இந்த முச்சக்கர வண்டியின் படமும் தங்களிடம் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, தற்கொலை குண்டுதாரியான சுஜாதா குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என இரகசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆயுத உற்பத்தி நிலையம் வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் சிக்கியது! நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்துவந்த தொழிற்சாலை ஒன்று வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரிடம் சிக்கியது. இப்பகுதியைத் திடீரென சுற்றிவளைத்த வலியத்த பொலிஸார், இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தில் இருந்து பேனா வடிவத்திலான சிறிய ரக கைத்துப்பாகி ஒன்றையும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கான இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் இருந்து 40 சிறியரக கைத்துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தமிழ்மக்களை காவல்துறையினர் பலவந்தமாக பம்பலப்பிட்டி "பொலிஸ் பார்க்" மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் பேனர் கிழிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடியில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டு கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் இயக்கம் சார்பில் சாரத் என்பவர் தூத்துக்குடி நகரில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட உத்தேசித்துள்ளனர். இதனையொட்டி தூத்துக்குடி நகரில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரபாகரன் உருவம் பதித்த டிஜிட்டல் விளம்பர பேனர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. பிரதான சாலையில் இருந்த விளம்பர டிஜிட்டல் போர்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரன் படம் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழின உணர்வாள…
-
- 0 replies
- 1.3k views
-
-
'வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை': சு.ப.தமிழ்ச்செல்வன் "நாம், எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையைப் பேணி வருகின்றோம்" சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முழுமையான பேட்டியின் விவரம்: கேள்வி: அமைதி உடன்பாடு ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அமைதி உடன்பாட்டை நீங்கள் தொடர்ந்து மதிக்கப்போகின்றீர்களா அல்லது மீறப் போகின்றீர்களா? பதில்: இந்த யுத…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!! திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது. சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை வருகிறார் என…
-
- 9 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - படையினரின் வன்னிக்கான களமுனை திறப்புக்களில் மன்னார் முன்னரங்கு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய களமுனை வாசல்களில் அமளிதுமளிகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில் மன்னார் மடு பகுதியை அண்டிய பிரதேசங்களில் போர் இரு தரப்புக்கும் இடையில் நீறுப்பூத்த நெருப்பாகவே உள்ளது. இந் நிலையில் மடுவிலும் மடுவை அண்டிய பகுதியில் இருந்தும் இடம்பெயர்ந்த பல்லாயிரக்காண மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்றுகொண்டு இருப்பதாக மன்னார் செய்திகளில் தெரிவிக்கின்றன . அத்தோடு எதிர்வரும் ஓகஸ்டில் க.பொ.த. உயர் தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கல்விச் சேவை வட்டாரங்களை ஆதாரம் காட்டி தெரிவிக்கப்படுகிறது.…
-
- 0 replies
- 1.3k views
-
-
நள்ளிரவு வேளையில் அலரி மாளிகையை தக்க வைப்பதற்காக பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடிய முன்னால் ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிர்பாராத விளைவுகளே பதில்கள் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார் தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் நள்ளிரவில் நடந்த திடக்கிடும் சம்பவங்கள் வெளிவராத நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இந்தியப் பிரதமர் மோடியின் பங்குகளும் உண்டு. இன்னும் பல அதிரடி மாற்றகள் இலங்கையில் இடம் பெறலாம் என லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtyBTdKbhr6.html
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக் அவர்களை சந்திப்பதற்காக அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்கா அமைச்சர் பீரிஸ் வரவுள்ளார். உண்மையில் ஜி.எல்.பீரிஸ் அவர்களை சந்திப்பதற்கு வில்லியம் ஹேக் இன்னமும் திகதி கொடுக்கவில்லை மேலும் சந்திக்க போவதாக உறுதிப்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த நிலையிலும் பீரிஸ் வர அடம்பிடித்துக்கொண்டு இருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? என்ன அவசரம் என்று தெரியவரவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகம் போன்று வேறு எந்த ஒரு நாட்டினது வகிபாகமும் அதிகமாக விவாதிக்கப்பட்டதோ மிகக் குறைந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டதோ கிடையாது. குடியரசு அதிபரா மகிந்த ராஜபக்ச இரண்டாவது ஆட்சிக் காலத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன் சேர்த்து, அதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்ற விவாதமும் கொழும்பில் எழுந்துள்ளது. தனது நடவடிக்கைகளில் இந்தியாவிற்குக் கிடைத்தது வெற்றியா தோல்வியா என்பதே அந்த விவாதத்தின் மையம். சிறிலங்காவில் யார் ஆட்சியாளராக இருக்கிறார் என்ற விடயத்திற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்தியாவின் பிராந்திய நலன் சார் நகர்வுகளில் அந்த விடயம் நிச்சயம் பிரதிபலிப்பை உண்டாக்குகிறது. உண்மையை அவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மீண்டும் அரசியலுக்கு வரும் நோக்கமில்லை; எனது பிள்ளைகளும் வரமாட்டார்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-11 08:26:51| யாழ்ப்பாணம்] மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற் கான எண்ணம் தன்னிடமில்லை எனவும் தற்போது பிரிட்டனில் வசிக்கும் தனது மகனோ மகளோ அரசியலுக்கு வரமாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நேற்றுமுன்தினம் இவ்வாறு கூறினார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கு அரசியலமைப்பில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மீண்டும் ஜனாதிபதி த…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை மீதான ஐ.நா. நிபுணர் குழுவின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தியா, உலகின் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக உருவாக வேண்டுமானால் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குரல் கொடுக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐ.நா. அறிக்கை தொடர்பாக தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் இதுவரை எதுவித கருத்தும் வெளியிடாது மௌனம் காத்து வருகின்றனர். ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா முயற்சித்து வருகின்ற சந்தர்ப்பத்தில் பிராந்திய நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
நெடுங்கேணியில் விமானத் தாக்குதல் நிஷாந்தி ஸ்ரீறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் இன்று காலை நெங்கேணி பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் விடுதலைப்புலிகளின் மோட்டார் தாக்குதல் நடத்தும் மையமொன்றை விமானப்படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6.40 மணியளவில் இவ் வான் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் புலிகளிற்கு சேதம் ஏற்ப்பட்டிருக்கலாம் எனவும் தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி
-
- 2 replies
- 1.3k views
-
-
பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா? தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது. வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. பலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்கள…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
Army Commander Lt Gen Sarath Fonseka has admitted in the United States last week that the military had had to sacrifice about 300 soldiers within a week-and-a-half of battle in Muhamalai. It was a larger figure than had ever been cited by the military in Sri Lanka following the Muhamalai battles. `However, engaging in such battles was necessary in order to deny the LTTE strategic advantage into security forces controlled areas, as they were seeking to do recently by trying to retake the Jaffna peninsula,` Fonseka is reported as telling US Under-Secretary of State Nicholas Burns on Tuesday. Fonseka was on a three-day official visit to the US. He met Burns…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடக்கில் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் - ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஹெரணவில் நேற்று இடம்பெற்ற புதுவருட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடக்கில் உள்ள விடுதலைப்புலிகளின் தளங்கள் மீது இன்னும் சில தினங்களில் தாக்குதல் நடாத்தப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை கிழக்கிலும் மீட்கப்படாத பகுதிகளும் விரைவில் மீட்க்கப்படும் எனவும் வடக்கை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்திற்குள் நாட்டின் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு முன்நகர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com…
-
- 2 replies
- 1.3k views
-
-
Brussels, March 12 (EuAsiaNews): The European Parliament (EP) adopted Thursday a resolution on the situation in Sri Lanka calling for an immediate ceasefire by the Sri Lankan army and the Liberation Tamil Tigers of Ealam (LTTE)in order to allow the civilian population to leave the combat zone. The EP condemned the LTTE’s violence and intimidation which are preventing civilians from leaving the conflict area. It voiced concern about reports of serious overcrowding and poor conditions in the refugee camps established by the Sri Lankan Government. EU parliamentarians called on both sides to respect international humanitarian law and to …
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான வாசிப்பின் போது சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி 27-07-2007 00:11 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜாதிக ஹெல உருமய முன்வைத்துள்ள கோட்பாடுகள் தவறானவை - பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி இலங்கையில் தமிழ் மக்களின் தாயக பிரதேசம் இல்லை என்றும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடையாது என்றும் ஜாதிக ஹெல உருமய முன்வைத்துள்ள கோட்பாடுகள் தவறானவை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜாதிக ஹெல உருமய அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு வழங்கிய யோசனைகள் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே பேராசிரியர் தாயசிறி இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஜாதிக ஹெல உருமயவினர் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் குறித்தம் சுய ந…
-
- 1 reply
- 1.3k views
-