ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143623 topics in this forum
-
அமைச்சரவையில் வாக்குவாதம் (நமது நிருபர்) பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட இரு அமைச்சர்களும் கடும் தொனியில் வாக்குவாதப்பட்டனர். பௌத்த சாசன அமைச்சுக்குள் வரும் பௌத்த துறைசார்ந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான காணியில் நகர அபிவிருத்திக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் காமினி …
-
- 0 replies
- 366 views
-
-
ஊரடங்கு சட்டம், தளர்வு ! நாடளாவிய ரீதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை ) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது . நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது . இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது . எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் அவசரகால சட்டம் தொடர்ந்தும் அமுலில் காணப்படுகின்றது . https://athavannews.com/2022/1274668
-
- 0 replies
- 93 views
-
-
“பிக்குகள் பிற சமயத் தலைவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்” ஒருசில புத்த பிக்குகளின் ஒழுங்கீனமற்ற, முறையற்ற நடவடிக்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த பௌத்த சமூகத்துக்குமே இழுக்கு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் கடல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கல்கிஸையில் ரோஹிங்யா அகதிகளை பிக்குகளும் மற்றும் சிலரும் சேர்ந்து பயமுறுத்தியதுடன் அங்கிருந்து துரத்தியடித்தமை குறித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இதுபோன்ற மதவாதம் பிடித்த சிலரின் நடவடிக்கைகளால், பிக்குகளின் மீதான மதிப்பை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நம் நாட்டின் ஏனைய சமயத் தலைவர்களை உதாரணமாகக் கொண்டு பௌத்த பிக்குகள் தமக்கும், தமது சம…
-
- 0 replies
- 147 views
-
-
ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு இராணுவ உதவிகள் இல்லை! – நரேந்திரமோடி உறுதிமொழி. [Monday, 2014-02-17 17:36:48] தமது கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படாது என நரேந்திர மோடி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக மக்கள் தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருவதாகவும் வைகோ குற்றம…
-
- 11 replies
- 981 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால், மத்திய அரசின் எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்…
-
- 2 replies
- 422 views
-
-
தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும்…
-
- 5 replies
- 1.3k views
-
-
-கெலும் பண்டார நல்லிணக்கத்திற்கான ஒத்துழைப்பை வழங்கும் தென்னாபிரக்க தலைவர்கள், இலங்கையின் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்க மாட்டார்கள் என அந்நாட்டுக்கான விஜயமான்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள தூதுக் குழுவிடம் கூறியதாக இலங்கையின் அமைச்சரொருவர் கூறினார். தென்னாபிரிக்கா சென்ற அணியில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு முயற்சியான்மைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ அவைத் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பைசர் முஸ்தபாஇ ஜனாதிபதி ஆலோசகர் அருன் தம்பிமுத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சியின் முடிவிற்கு பின்னரான நல்லிணக்கத்திலிருந்து நிறைய கற்க வேண்ட…
-
- 0 replies
- 259 views
-
-
உத்தேச அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர், அதனால் குறித்த அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் நேற்றைய தினம் இரவு ஜனாதிபதியின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் தலைமை…
-
- 0 replies
- 303 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278535
-
- 0 replies
- 180 views
-
-
மக்கள் துன்பப்டுகின்றார்களாம் கருணாவுக்கு திடீர் ஞானம்? வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்தாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த முரளிதரன் தான்; மஹிந்த அரசு தமிழ் மக்கள் மீது மிகவும் கவனம் எடுத்து அதிவேகமாக மீழ் குடியேற்றம் நடைபெறுவதாகவும், தனக்கு மிகவும் திருப்தியாக இருப்பதாகவும் தேர்தலிற்கு முன்பு கூறினார். தற்போது அமைச்சு பொறுப்பில் இருந்து ஒரு படி காற்று கு…
-
- 0 replies
- 624 views
-
-
இரா. சம்பந்தன் கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல் அன்பான கூட்டமைப்பினரே, 17ம் திகதி எல்லா ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்ய முடிவெடுத்துள்ளமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்,மே 18ம் திகதி என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்?. அன்றைய தினத்தில் 40,000 மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இப்போது உலகமே ஏற்றுக் கொள்ளுகின்றது. உலகத் தமிழர்கள் அத்தினத்தை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், போர்க்குற்ற நாளாகவும் அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதிபத்திய சிங்கள அரசு அந்தத் தினத்தை வெற்றி விழாவாகக் கொண்டாடத் தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினராகிய நீங்கள் இந்த நாளில் என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்? வீட்டைப் பூட்டி உள்ளேயிருந்து ஒப்ப…
-
- 7 replies
- 994 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 0 SHARES ShareTweet பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 20.10.2016 அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலையில் இன்று இடம்பெற்றது. http://newuthayan.com/story/38613.html காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவேந்தல் .. யாழ்.காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்…
-
- 1 reply
- 693 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிருவாகிகள் குழுவின் லண்டன் பிரதிநிதிகளாக சசிதர் மற்றும் சந்தோஸ் ஆகியோர் சற்று முன்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிரித்தானியப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் முழு விபரம் வருமாறு: விசுவநாதன் ருத்ரகுமாரன் (அமெரிக்கா), சாம் சங்கரசிவம் (கனடா), ஜெரால்ட் பிரான்சிஸ் (அமெரிக்கா), மகிந்தன் சிவசுப்ரமணியம் (பிரான்ஸ்), வித்யா (ஜேர்மனி), செல்வநாதன் (அவுஸ்திரேலியா) சசிதர் (பிரித்தானியா) சந்தோஸ் (பிரித்தானியா) இடைக்கால நிருவாகக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு.வி.ருத்ரகுமாரன் தற்போது …
-
- 3 replies
- 1.2k views
-
-
புலனாய்வாளர்களே சுட்டுக் கொன்றனரா? அரியாலையில் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை அடையாளம் காணப்படாத புலனாய்வு அணி ஒன்றே சுட்டுக்கொன்றதா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று உதயன் அறிந்தான். ‘‘இந்தச் சம்பவம் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதா என்பதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ மாட்டேன்’’ என்று இது தொடர்பில் உதயன் பத்திரிகைக்குப் பதிலளித்த யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி ஹேவாவிதாரண தெரிவித்தார். அரியாலையில் நேற்றுமுன்தினம் மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இளை…
-
- 1 reply
- 664 views
-
-
ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ரணில் புதிய பிரதமரானார். News that Ranil Wickremesinghe is the new prime minister has been largely met with dismay and disbelief in Sri Lanka. His appointment is being viewed as yet another arrogant response by President Gotabaya Rajapaksa to weeks of protests over rising prices and shortages. Mr Wickremesinghe is seen as being close to the Rajapaksa family, and many think he has been chosen because he will be likely to guarantee their security. Protests flared up in early April in the capital, Colombo, and have grown in size and spread across the country. People are furious…
-
- 3 replies
- 335 views
-
-
எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ள..! - கொழும்பு அமெரிக்கத் தூதரகம் தயார்நிலையில்! [sunday, 2014-03-23 09:22:17] அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிகாரி ஜுலியானா ஸ்பவனிடம் க…
-
- 0 replies
- 423 views
-
-
ஆட்சியைப் பிடிக்க மகிந்த விசமத்தனம் FacebookTwitterPinterestEmailGmailViber ஆட்சியைப் பிடிக்க மகிந்தவும் அவரது அணியினரும் புதிய அரசமைப்புத் தொடர்பிலும், வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு வலுச்சேர்ப்பது போல் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார். இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 293 views
-
-
யாழ். பல்கலையில் அஞ்சலி May 17, 2022 யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2022/176829
-
- 2 replies
- 538 views
-
-
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி சொல்லியும் அவற்றை கண்டு கொள்ளாததன் பயனாக இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது இனிமேலாவது சர்வதேசத்துடன் முரண்படாமல் புத்திசாலித்தனமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பிற்பாடு ஏழு பேரை கொண்டு குழு இலங்கைக்கு வருகை தந்து விசாரணையொன்றை மேற்கொள்ளும் இச்செயற்பாடானது மிகவும் பயங்கரமானது. அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது…
-
- 0 replies
- 799 views
-
-
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட... சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சி.ஐ.டியில் முன்னிலையாகின்றனர்? நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இவர்கள் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 09ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1283306
-
- 0 replies
- 93 views
-
-
உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார். பொல்கஹவெலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்தத் தொழிற்சாலையினை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைசச்ருமான கலாநதி சரத் அமுனுகம, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இலங்கையில் உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து கார்கள் மற்றும் வாகனங்களை நிர்மாணிக்கும் ஒரேயொரு தொழிற்சாலை இதுவாகும். இத்தொழிற்சாலையில் மாதாந்தம் 2800 வாகனங்களை பொருத்தக்கூடியதாக இருக்கும் என மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் தலைவர் கலாநிதி லோரன்ஸ…
-
- 3 replies
- 682 views
-
-
சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்! பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. கோவில் ஒன்றில் நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில்…
-
- 10 replies
- 610 views
-
-
டக்ளஸுக்கு பாவமன்னிப்பு? -எஸ். நிதர்ஷன் “கடந்தகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமுன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளார். அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? என்பதை, தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது 63ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள அவர் பிறந்த வீடு அமைந்திருந்த காணியின் முன்னால், இன்று (26) நடைபெற்றது. இதனையடுத்து, “மாவீரர் தினங்களை அனுஷ்டிப்பதற்காக, …
-
- 1 reply
- 447 views
-
-
சட்டவிரோதமாக... குடியேறிய எவரும், மீள்குடியேற்றப்பட மாட்டார்கள்! -அவுஸ்ரேலிய பிரதமர்.- இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தில் வருவதாகவும் அவுஸ்ரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எந்த தளர்வும் செய்யப்படவில்லை என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவ…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் மக்களிற்கு நிதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. இன்று காலை முதல் நண்பகல்வரை 20 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் 15 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். Bonneuil-sur-marne என்ற இடத்தில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் அவர், Sucy-ne-brie என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். பரிஸ் நகரில் இருந்து சிவந்தனையும், அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்த மக்கள், உலர் உணவுப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர். எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில்…
-
- 2 replies
- 726 views
-