ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143630 topics in this forum
-
உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்? -கு. தமிழ்ச்செல்வன் ‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை. ‘சிங்கள அரசு, ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்குத் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோக…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நியமனத்தின் ஊடாக கிழக்குமாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டமாவடி காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை கட்டியது நீதிபதியை மாற்றி நீதிமன்ற தீர்ப்பை மாற்…
-
- 8 replies
- 1.2k views
-
-
'விடுதலைப் புலிககள் பனை மரங்கள் நிறைந்த அவர்களது தாயக பூமியில் உயிரிழக்கின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களோ தொழிலுக்காக அந்நிய பிரதேசத்திற்குச் சென்று தமது உயிர்களைத் துறக்கின்றனர். அத்தோடு போதிய பயிற்சியின்றி தளபாட வசதிகளின்றி அவர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர் என்றும் அறிய முடிகின்றது' புதிய இடதுசாரி முன்னணியின் செயலாளர் சமில் ஜெயநெத்தியின் ஊடக அறிக்கையில் மேலும் : முகமாலையில் கடந்த சில நாட்களாக விடுதலப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் 150 ம் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 400 மேற்பட்ட இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுமுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது விடுதலைப் புலிகளளுக்கும் இழ்ப்பகள் ஏற்பட்டுளனவென்று இருசாரர்களின் அறிக்கைகளிலிருந…
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். வெள்ளை வானில் வந்த ஆயுத பாணிகளின் அராஜகப் பிடியில் சிக்கி, கண்கள் கட்டப்பட்டு, பின்பக்கம் மடக்கிக் கைவிலங்கிடப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்காகி அவலப்பட்ட அந்த இரண்டு மணிநேரக் கொடூரமும் பின்னர் அக்கடத்தல், "கைது" ஆக மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அனுபவிக்க நேர்ந்த இரண்டு மாத கால அவஸ்தையும் ஒருவாறு இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன். அடிப்படையோ, ஆதாரமோ அற்ற அபத்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
கொள்ளையனை துரத்தி பொலிஸார் சூடு அப்பாவி குடும்பஸ்தர் உயிரிழந்தார் வவுனியா காமினி வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளையனொருவனைத் துரத்திச் சென்ற பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிக் குடும்பஸ்தரொருவர் கொல்லப்பட்டுள்ளார். பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த சனிக் கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளை முயற்சியின்போது மூவர் பிடிபட மேலும் சிலர் தப்பியிருந்தனர். இவ்வாறு தப்பியவர்களில் ஒருவர் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் வீடொன்றிலிருப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து மாலை 5.30 மணியளவில் மேற்படி வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது அந்தக் கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து பொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா, உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக சனிக்கிழமை தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்றது. இம்மாநாடு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றது. மதுரை மாநகரில் உள்ள அரசடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் பங்கேற்று உரையாற்றினர். தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்களான தி.க. சிவசங்கரன், கி. இராஜநாராயணன், எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.), ஜே.வி. கண்ணன், வே. தங்கவேலு (நக்கீரன்) ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியமை தொடர்பாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு இணங்கியமையானது இலங்கை வாழும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்; தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடக தேசியத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடித்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இணைத்தலைமை நாடுகள் நோர்வே அரசின் தலைமையில் கடந்த காலங்களில் ஆற்றிய பணியை பாராட்டியுள்ள அவர் தற்போதைய இக்கட்டான சூழலில் இரண்டு தரப்பினருக்கும் அழுத்தங்களை கொடுத்து நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு இணங்க செய்துள்ளம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 21, ஜூன் 2009 (16:45 IST) நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வர வேற்றார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர், ‘’மதிமுகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆன…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். மாணவர்களின் பிரச்சினைகளை நன்கறிவேன்'' யாழ்ப்பாணம், மே 10 ""யாழ்.மாவட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் உள்ள பிரச்சினைகளை நன்கு அறிவேன்.'' யாழ்.வந்த அமெரிக்க ராஜாங்க அமைச் சர் றிச்சார்ட் பௌச்சர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகையில் இவ்வாறு கூறினார். யு.எஸ்.எயிட் நிறுவன உதவியுடன் நடத்தப்பட்டு வரும் இப் பயிற்சி வகுப்பில் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: யாழ்.மக்களின் துன்பதுயரங்களை நான் நன்கு அறிந்துள்ளேன். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மாணவர்கள் கல்வியைத் தொடர் வதில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை யும் நன்கு அறிந்துள்ளேன் என்றும் அவர் சொன்னார் uthayan
-
- 2 replies
- 1.2k views
-
-
இக் காணொளியைப் பதிவு செய்தோர் சிங்கள இராணுவத்தினர் ஆவர். ஒட்டுசுட்டான் பகுதியை சிங்கள இராணுவப் படையினர் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில், சிங்களப் படையினரில் ஒருவராக வட்டத் தொப்பி அணிந்த மனிதர் நிற்கிறார். அவரது தோற்றம் தேசியத் தலைவர் பிரபாகரன் போலவே உள்ளது. மேலும், தலைவர் பிரபாகரனது உடல் என சிங்களர் காட்டிய உருவம் இத் தொப்பித் தலையரது உருவம் போல் தெரிகிறது. இக்காணொளியைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறோம். ”இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது தான் பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள் தான் விடுதலைப் புலிகளின் சீருடையை அவரது உடலில் அணிவித…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா எச்சரிக்கை மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=2] [size=4] "அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் நாடு அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலை நீடித்தால், சிங்கள பௌத்தர்களும் காடுகளில் வாழவேண்டிய, வீதிகளில் சாகவேண்டிய அபாயநிலை தோன்றக்கூடும்'' என்று எச்சரிக்கிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்.[/size][/size] [size=2] [size=4]இந்த அபாய நிலையிலிருந்து நாட்டையும், சிங்கள, பௌத்த மக்களையும் பாதுகாக்கப் பௌத்த குருமார்கள் ஒழுக்கமாக நடந்து, பௌத்த மதத்தின் புகழைப் பரப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.[/size][/size] [size=2] [size=4]மாத்தளையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size][/size] [size=2] [size=…
-
- 3 replies
- 1.2k views
-
-
மீண்டும் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா : சிறிலங்காவுக்கு மற்றுமொரு நெருக்கடி! [saturday, 2014-03-15 09:41:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக ஊடகங்களின் கவனத்தில் சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்ட தாயும் மகளினதும் விவகாரம் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. அனைத்துலக ஊடகங்களின் செய்தி வழங்கியான ஏபி(AP) மற்றும் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஆகியன செய்தி வெளியிட்டுள்ளன. 14 வயதுடைய சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் சிறிலங்கா படையினால் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய மறுகணமே, இவ்விவகாரத்தினை EINPRESSWIREஎனும் அனைத்துலக செய்திவழங்கியூடாக அனைத்துலகத்தின் கவனத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றிருந்தது. …
-
- 3 replies
- 1.2k views
-
-
பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் யாழில் கைது பளையில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது பற்றைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பதற்றத்தையும் – பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மாறிவரும் அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது. இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது. இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எ…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் இன்று இருப்பது மன்மோகன் சிங் என்ற தவளையின் தலைமையிலான பலவீனமுற்ற ஆட்சியாகும். வெகுவிரைவில் இந்தியா துண்டு துண்டாகப் பிரியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெகுவிரைவில் சீனா பலமுள்ள நாடாக பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு உயரும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சூரியப் பெரும எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற பல தலைவர்கள் காணப்பட்ட இந்தியா இன்று பலவீனமடைந்துள்ளது. எதிர்காலத்தில் துண்டு துண்டாகப் பிர…
-
- 6 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழர்களின் உதவியை பெறுவதற்கான பொறிமுறையை வட மாகாணசபை உருவாக்க வேண்டும்! - மாவை சேனாதிராசா [Friday 2014-07-18 09:00] வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவென புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலர் எமக்கு பணத்தை அனுப்ப முன்வந்துள்ள போதும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே மாகாண சபை அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், யுத்த காலத்தில் மருத்துவர் பற்றாக்குறை மிக ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில், தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது. வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர…
-
- 8 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ்மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ்மக்களினால் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், யுத்தபிரதேசத்தில் அப்பாவி மக்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படக் கூடிய அபாயம் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இதே சமயம் இது தொடர்பான விவாதம் ஒன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது போன்று இவ் விடயம் ஐ.நாவின் பாது காப்புச் சபையில் விவாதிக்கப்டுவதற்கான முயற்சிகள் பிரித்தானிய தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது ள்நாட்டு யுத்தத்தில் தமக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்து வரும் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில் கடற்படை ரோந்து தீவிரம் ராமேசுவரம், ஜன. 8- இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனால் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே நார்வே நாடு சமரச முயற்சியை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றது. ஆனாலும் விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்தினர் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு ராணுவத் தினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
(ஆர்.யசி) எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடிப்புக்கு உள்ளானதன் தாக்கமானது இன்னும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படும் என்கின்றனர். அவ்வாறு இருக்கையில் மக்கள் கடல் உணவுகளை உண்ணலாம் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பொறுப்பற்ற வகையில் கருத்தொன்றை கூறியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதித்தது யார் என்பதே கேள்வியாகும். இந்த கப்பல் வெடிப்புக்குள்ளானதில் தற்போது கடல் சூழல் நாசமாக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். …
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன் http://meenakam.com/?p=11100 யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1984ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு புலம்பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பி…
-
- 7 replies
- 1.2k views
-
-
திருமலை இறுதிப்போருக்கான பரீட்சார்த்த களம் -இதயச்சந்திரன்- கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டது போல் லெபனான் விவகாரத்தில் உள்வாங்கப்படும் அனுபவங்கள், மாவிலாறு அணைக்கட்டில் பரீட்சித்துப் பார்க்கப்படுவது போல் தெரிகிறது. இரு இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டவுடன், லெபனான் மீது தொடர் விமான குண்டு வீச்சுக்கள் நிகழ்த்தப்படுவது போன்று, அணைக்கட்டு மறிப்பு விவகாரத்தை சாட்டாக வைத்து, திருமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மீது விமானத் தாக்குதல்களும் எறிகணை வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதலிற்கான பின்புலச் சதியில், மாவிலாறு சிக்கலை ஊதிப் பெரிதாக்கி திருமலை மாவட்டத்தை ஏனைய பகுதியிலிருந்து துண்டாடும் நீண்டகால பேரினவாதச் சிந்தனை தொழிற்படுவது போல் இருக்கிறது. இதனை …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும காலம் தாழ்த்தினால் வருந்தும் நிலை ஏற்படும் - ஈழத்தமிழர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர் மத்திய உரையாற்றிய அவர், இலங்கையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த தருணத்தில் இந்திய மத்திய அரசு உதவி செய்யாமல், பின்னர் உதவி செய்வதால் எந்தவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசு இலங்கையில் தமிழர்களை கொல்ல உதவி செய்து வருகிறது. இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளுக்குகிடையில் முரண்பாடு காணப்படுகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் கடும் மழை – குளங்களின் நீர்மட்டம் உயர்வு! FacebookTwitterPinterestEmailGmailViber கிளிநொச்சி மாவட்டத்திலும் வடக்கின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகக் கடும் மழை பொழிந்து வருகின்றது. இன்று பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கிளிநொச்சியில் கடந்த 3 நாள்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. குளங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளன. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 7 அடியில் இருந்து 13 அடியாக உயர்ந்துள்ளது. http://newuthayan.com/story/42991.html
-
- 3 replies
- 1.2k views
-