Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் இராஜதந்திரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஒரு போர்க்குற்றவாளி! - ஐரோப்பிய மனிதவுரிமைகளுக்கான மையம் குற்றச்சாட்டு வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பின்னணியில், சிறிலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது - European Centre for Constutitional and Human Rights (ECCHR) - ஐரோப்பிய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் போர்மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையினை இந்த அமைப்பு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா படைத்துறையின் 57வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மன் நாட்டிற்கான சிறிலங்காவின் துணைத் தூதுவரா…

  2. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில நேற்று வியாழக்கிழமை (05) ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில் கார்த்திகைப் பூவை குத்தியிருந்தனர். கார்த்திகை மாதத்தில் மாத்திரம் பூக்கும் இந்தப் பூ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/158493/வ-ர-ந-த-னர-கள-ன-சட-ட-ய-ல-க-ர-த-த-க-ப-ப-#sthash.UCrlzZip.dpuf

    • 1 reply
    • 1.2k views
  3. ஈழநாதம் திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையான ரெம்பிள் ட்ரீ (TEMPLE TREE) அருகே கல்லெறி தூரத்தில் விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் பலத்த எதிர்ப்புக்கள் மத்தியில் முற்றுகையிட்டனர். இரண்டு கிழக்கு ஐரோப்பிய பெண்களும் மூன்று சிங்களப்பெண்களும் இந்த விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்டனராம். பல நாட்களாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தும் பெரும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கினால் இவர்கள் கைதுசெய்யப்படுவதனை பொலிசார் ஒத்திப்போட்டனராம் ஆனால் சனிக்கிழமை இந்த முற்றுகையினை மேற்கொண்டிருந்தனர். இந்த விபச்சாரவிடுதி மஹிந்தவின் மாளிகைக்கு அருகில் இருந்ததும் இந்த இடம் அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏழாவது…

  4. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார். தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி …

    • 1 reply
    • 1.2k views
  5. கிளிநொச்சிப் படையெடுப்பும் இறுதி யுத்தமும் திகதி: 17.10.2008 // தமிழீழம் // [] எழுதியவர்- ஜெயராஜ் கிளிநொச்சியில் இருந்து மக்கள் வேகமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தவேளை ஒரு படைப்பிரதேச வாசி கூறினார் "பளையை விட்டு நாழும் இவ்வாறுதான் இடம்பெயர்ந்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இராணுவம் பளையை வந்தடையவில்லை" கிளிநொச்சியின் நிலையும் அதேதான்" என்று. கிளிநொச்சி மீது சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கான யுத்தப்பிரகடனம் செய்து சுமார் இரண்டு வாரகாலமாகின்றது. அதாவது கடந்தவாரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கிளிநொச்சி மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அவர் கூறினார். ஆனால், கிளிநொச்சி நோக்கியதான நகர்வு அன்றி கிளிநொச்சி செல்வதற்கான மார்…

  6. முல்லேரியா பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸார் காயம், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது [Wednesday, 2011-05-11 05:13:51] முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கு தாக்குதலை மேற்கொண்டனர் எனத் தெரிய வருகிறது.நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தால் பொலிஸ் நிலையத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லேரிய பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் தகாத முறையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து நுகேகொடை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸர் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவிக்கையில் மதுபோதையில் வந்த சிலர் இவ்வாறு நடந்து கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார். சம்ப…

  7. இன்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர். ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர். அதிர்ச்சியில் …

  8. ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த பல்வேறு உண்மைகளை, உச்ச நீதிமன்றில் வெளிக்கொண்டுவந்த சுப்பிரமணியசாமி, அண்மை =யில் அளித்த பேட்டியில், ““கலாநிதி, தயாநிதி வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே, நான் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தேன். அதனால், இப்போது அவர்களது வீட்டில் ஆவணங்கள் கிடைத்ததா? கிடைக்கவில்லையா என்பது முக்கியமல்ல. எப்படியானாலும் அண்ணனும், தம்பியும் இந்த வழக்கிலிருந்து இனி தப்ப முடியாது. அதற்கான அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இந்த வழக்கில், மற்றொரு பிரச்சினையை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. எயார் செல் பங்குகளை வாங்கிய இலங்கைத் தமிழரான அனந்தகிருஷ்ணன், மாறன் சகோதரர்களுக்கு நண்பராக இருந்துள்ளார். இலங…

  9. முழங்காவிலை நோக்கிச் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் ஊர்திகள் எதிராக வந்து கொண்டிருந்தன. மக்கள் செல்லும் திசைக்கு எதிராக களமுனைப் போராளிகள் சென்று கொண்டிருந்தனர். எதிரிகள் துரத்தியடிக்கும் எறிகணைகளுக்கு அஞ்சி மக்கள் அவை எட்டாத தூரத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முழங்காவில் இன்று ஜெயபுரம் நாளை வன்னேரி பின்னர் அக்கராயன் அதையடுத்து கோணாவில் கிளிநொச்சியென்று அவர்கள் ஊரோடிக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று நினைத்த தமிழர்கள் போராளிகளாகிக் களமுனையில் நிற்கின்றார்கள். முழங்காவிலில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னணிக் காப்பரண் கோட்டில் 2ஆம் லெப்.மாலதி படையணிப் போராளிகள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கா…

  10. வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே: தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யத் துணிந்துள்ள தமிழினம் முள்ளிவாய்க்கால்: இன்றோடு முடியும் இரண்டாண்டுகள்: தமிழரின் இந்த இரண்டு வருட இருண்ட வாழ்வின் முடிவு எப்போது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் இருண்டயுகம் நோக்கிய பயணத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒளியைத் தேடும் பயணத்தை நோக்கவும் இல்லை, தொடரவும் இல்லை. இந்தப் போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன். ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான். ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது. இதைவிட சோகமும்…

    • 1 reply
    • 1.2k views
  11. இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை. …

  12. நாட்டை அழித்த கருணாவுக்கு அமைச்சர் பதவி – தனக்கு சிறைத்தண்டனை- குமுறுகிறார் சரத் பொன்சேகா! Published on May 23, 2011-8:00 pm · No Comments நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தனக்கோ சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியம் அளிக்கும்போது தெரிவித்தார். ‘நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய கருணா நீதிமன்றில் நிறுத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். ஆனால்…

  13. தலைப்புச் செய்தியாக மாறி அதிரவைத்துள்ள கேர்டன் வைசின் புத்தகம்! இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளராகக் கடமையாற்றி பின்னர் இலங்கையை விட்டு வெளியேறிய கோர்டன் வைஸ் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்து வருவது என்பது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அல்ஜசீரா பி.பி.சி மற்றும் சனல் 4 போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு அவர் இலங்கையில் நடைபெற்ற பல விடையங்களை தெரிவித்து ஒரு சாட்சியாகவே மாறியிருந்தார். அவர் தொடர்ந்தும் இலங்கையில் ஈழத் தமிழர் படும் இன்னல் தொடர்பாக குரல்கொடுத்துவந்தார். இலங்கையில் தாம் கண்டதையும் தனது அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். த கேஜ் என்று அழைக்…

  14. ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன் இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படாமல், ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்…

    • 17 replies
    • 1.2k views
  15. http://www.globaltamilnews.net/includes/im...ுனியா நெல்லுக்குளம் பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் சொன்னது. ஆனால் பாதுகாப்புப் படையினரோ இதேப் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் மோதல் நடந்ததாகவும் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் இறுதி நாள் போரின் பின்னர் மக்களோடு மக்களாக முள்ளியவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி மானிக்பாஃம் முகாமுக்கு வந்தவர்கள் என்றும், அவர்களை சந்தேகத்தின் பேரில் இருபது நாட்களுக்கு முன்னரே இராணுவம் பிடித்துச் சென்றதாகவும். இப்போது அவர்களை அழைத்துச் சென்று ஒதுக்குப்புறமாக வைத்து என்கவுண்டர் செய்து கொன…

    • 0 replies
    • 1.2k views
  16. தம்புள்ள பள்ளிவாசல் இடம் நகர்த்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய இடத்திலேயே பள்ளிவாசல் இருக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையில் சுமார் மூன்று மணித்தியாலம் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு விரைவில் ஜனாதிபதியிடம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தலைமைத்துவத்தின் அன…

    • 3 replies
    • 1.2k views
  17. யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்…

    • 7 replies
    • 1.2k views
  18. வடக்கு நோக்கிய யுத்தத்தில் பாரிய இழப்பு: அமைதி முயற்சியை ஆரம்பிக்க அரசாங்கம் முனைப்பு ஸ்ரீலங்கா அரசாங்கம் நோர்வே தரப்பினூடாக மீண்டும் அமைதி முயற்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் படையினர் பாரிய இழப்புகளுடன் முன்னேற முடியாமல் இருக்கும் நிலையில் அமைதி முயற்ச்சிகளுக்கான முனைப்புகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக நோர்வே சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரடன் அங்கு நோர்வேயின் அனுசரணையாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜிஜ சேனாரத்ன முதல் கட்டமாக நோர்வேயி; சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை நேற்று சந்தித்து பேச்சு நடத…

    • 2 replies
    • 1.2k views
  19. ஈழத்தமிழர்களுக்கு 2010 ஒரு சாபக்கெடுவா??? சாபக்கேடா??? அனைவருக்கும் வணக்கமெங்க! தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் என்னை ஏளனமாகப் பார்ப்பது புரிகிறது, இருந்தும் சில விடயங்களை பகிரவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் இருப்பதினாலும், நானும் ஒரு பங்காளி என்ற உரிமையிலும் சில விடயங்களை கிறுக்க விரும்புகின்றேன். முக்கியமாக 2009ம் ஆண்டின் அந்த அவல நிலையைப்பற்றி இயன்றளவு இங்கு முன்னிலைப்படுத்தாது, இன்று இடம்பெறும் அரசியல் பித்தலாட்டங்கள் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தமிழீழத்தின் நிலை என்ன? வடக்கு, கிழக்கு, வன்னி இப்படி ஒவ்வொரு பகுதிகளையும், அங்குள்ள மக்களின் மனநிலைகள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், இப்படி ஒவ்வொரு விடயத்…

  20. Sri Lanka war Survivor: The future holds "Nothing" - By Sara Sidner, CNN Editor's note: CNN's Sara Sidner travels to Sri Lanka to report from ethnic Tamil areas and the victims of nearly three decades of civil war. Watch "Witness to Survival" March 13-16 on CNN International. Jaffna, Sri Lanka (CNN) -- Raveendran Jenatha doesn't exude the kind of excitement and wonder young adults often do when it comes to figuring out their future. She is 21 years old and confident about what her future holds. "Nothing," she said softly. Raveendran Jenatha is sure she has no future because of her past and what it has done to her. "Now I can't do anything. That is…

    • 4 replies
    • 1.2k views
  21. தத்துக் கொடுப்பதற்கு நான்கு குழந்தைகள் யாழ்ப்பாணம், பெப்.19 சாவகச்சேரி நீதிமன்றப் பொறுப்பில் உள்ள நான்கு குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளுமே தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறு அறி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரருடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தினை விண்ணப்பத்தில் குறிப்பிடுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. http://www.uthayan.com/pages/news/today/18.htm

  22. இலங்கை அரசியலில் சந்திரிகா வீரகேசரி நாளேடு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை அரசியலில் தலையிடப்போவதில்லை என தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் நான் தெரிவித்த கருத்துக்கு நன்றி தெரிவித்து சந்திரிகா குமாரதுங்க எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசியல் விவகாரங்களில் அவர் இனியொருபோதும் ஈடுபடப்போவதில்லை என்றும் அக்கடிதத்தின் இறுதிப்பகுதியில் அவர் குறிப்ப…

  23. வவுனியா கிளைமோரில் 7 பொதுமக்கள் படுகொலை- 27 பேர் படுகாயம். வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 குழந்தைகள் உட்பட 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா நகரின் மேற்குப் பகுதியில் 28 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா - மன்னார் வீதியில் உள்ள குருக்களுரில் இன்று சனிக்கிழமை காலை 7.40 மணிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரூந்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்-முஸ்லிம் பயணிகளை மன்னாரிலிருந்து ஏற்றிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தே கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் படுகாயமடைந்த சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் பணியாளர்கள் இருவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.