ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழாவும், 12வது திருக்குறள் மாநாடும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் திருக்குறல் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர், மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர், திருவள்ளுவர் படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்ததுடன், தமிழ்த்தாய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மலர் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயரும், யாழ். தமிழ் தொண்டருமான அதி வண. கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார். அண்மையில் ஜனாதிபதி …
-
- 1 reply
- 368 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினர் வசம் [saturday, 2011-07-23 11:45:00] இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த 02 படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட குழுவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=46989…
-
- 0 replies
- 362 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண வருகையிட்டு வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் - கீரிமலை வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள் வெட்டி அகற்றப்படுவதுடன் கீரிமலையில் இருந்து சேந்தான்குளம் செல்லும் வீதியில் சில பகுதி கற்கள் போடப்பட்டு துப்பரவு செய்யப்படுகின்றன. இந்தியப் பிரதமர் 14ஆம் திகதி கீரிமலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை திறந்து வைக்கின்றார். இதனால், இப்பகுதியில் துப்பரவு பணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. http://seithy.com/breifNews.php?newsID=128112&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 421 views
-
-
28 SEP, 2023 | 11:03 AM யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலர், பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு கட்டணங்களை வசூலிக்கின்றன. அதனால் நீண்ட காலமாக …
-
- 3 replies
- 546 views
- 1 follower
-
-
நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலை அடுத்து தீவகம் முழுவதும் ஊரடங்கு. நேற்று அதிகாலை நெடுந்தீவில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து வேலணை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு உதவி அரசாங்க பிரிவு ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பண்ணை பாலத்திற்கு அப்பாலும் காரைநகருக்கு செல்லும் மூளாய் வீதிக்கு அப்பாலும் எவரையும் உள் நுழையவோ வெளி நுழையவோ அனுமதிக்கவில்லை எனவும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 1 reply
- 1.2k views
-
-
வியர்வை துளிகளின் கூட்டமைப்பு (டாபிந்து கூட்டியக்கம்) அமைப்பின் ஏற்பாட்டில் “எனது குரலுக்கு செவிமடுங்கள்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் வவுனியாவில் நடைபெற்றது. வவுனியாவில் தனியார் விடுதியில், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவைச் சேர்ந்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். பெண்களிற்கெதிரான சர்வதேச வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமான இன்று இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்த…
-
- 0 replies
- 822 views
-
-
விடுதலைப் புலிகளும் படையினரும் பெரும் சமருக்கு தயாராகின்றனர்: கொழும்பு ஊடகம் சிறிலங்காப் படையினரும், விடுதலைப் புலிகளும் வடக்கில் மிகவும் அதியுச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இருதரப்பு உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாகவும், பெரும் மோதல் ஒன்று ஏற்படலாம் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பல வாரங்களாக வடக்கில் விடுதலைப் புலிகள் மிகவும் அதியுச்ச நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், எனினும் கடந்த இரு நாட்களாக களநிலைமைகள் அமைதியாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். எனினும் வன்னி மீதான தமது இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறுவதா…
-
- 0 replies
- 921 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சுயாட்சியை வழங்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தாலும், ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சுயாட்சியை வழங்க முடியும். . தற்போதுள்ள அரசியல் அமைப்பு விதிகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயகார குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த அரசியல் அமைப்பானது மாகாணங்களின் அதிகாரத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் அமைச்சர் செய்தி தாள் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். . இந்த நிலையில், ஜனாதிபதியை பொறுத்தவரையில் இனப்பரச்சினை தீர்வுக்கு பேச்சுவார்தை மூலம், பொறுப்பை மற்றுமொருவருக்கு கையளிக்கவே விரும்புகி…
-
- 0 replies
- 878 views
-
-
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா ஆகியோரை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் என்பன திருத்தப்படவுள்ள இந்த 19ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கிகாரமும் தேவையென மனுதாரர்கள் தங்களுடைய மனுவில் கூறியுள்ளனர். மனுவின் பிரிதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார். http://seithy.com/br…
-
- 0 replies
- 404 views
-
-
பாராளுமன்ற ஆசன குறைப்பு வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயல்: பாராளுமன்றில் இரா .சம்பந்தன். [Wednesday, 2011-08-10 21:50:20] யாழ் வாக்காளர்களுக்கான பாராளுமன்ற ஆசனத் தொகை குறைக்கப்படுவது என்பது வட பகுதி மக்களின் அரசியல் உரிமையை பறிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஆசன குறைப்பு குறித்து பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், வடக்கில் தற்போது சாதாரண சூழல் காணப்படவில்லை எனவும், அதேநேரத்தில் மீள்குடியேற்றம் அதிகளவில் நிறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், ஆசனக்குறைப்பு என்பது தவறான விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 709 views
-
-
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று சிறிலங்காவின் ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக, புதிய இராணுவத் தளபதி க்ரிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடக்கில் இருந்து ஒரு இராணுவத்துறுப்பினரேனும் குறைக்கப்பட போவதில்லை. அத்துடன் இராணுவ முகாம்களும் அகற்றப்படாது. முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்கான உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/38947/57//d,article_full.aspx
-
- 1 reply
- 740 views
-
-
யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(06) பிற்பகல்- 12.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார்ச் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்த நிலையில் வேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தியமையே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. மாணவியின் துவிச்சக்கர வண்டியின் பின்புறமாக மோட்டார்ச் சைக்கிள் மோதியுள்ள நிலையில் மாணவி தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்துடன் மயக்கமடைந்த நிலையி…
-
- 0 replies
- 420 views
-
-
கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம் சிறிலங்கா தலைநகரான கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர். வெள்ளவத்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளை இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர். அதன் பின்னர் அனைவரையும் வெள்ளவத்தை சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து 7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர். சிறிலங்காவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மேலக மக்கள் முன்னணியின் கொழும்ப…
-
- 70 replies
- 6.8k views
-
-
வன்னியில் அடை மழை கூடாரங்களில் வாழ்வோர் பரிதவிப்பு Tuesday, August 16, 2011, 21:38 சிறீலங்கா, தமிழீழம் கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இன்று கடும் மழை பெய்ததாகவும் சில பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு ஆரம்பித்த மழை சுமார் 3 மணிநேரம் தொடர்ச்சியாக பெய்ததாகவும் சில இடங்களில் மழையுடன் பனிக்கட்டிகளும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் பெய்த மழையால் கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராமநாதன் குடியிருப்பு, பரந்தன் சிவபுரம், மலையாளபுரம், பொன்நகர் பன்னங்கண்டி, சாந்தபுரம், மாயவனூர் போன்ற கிராமங்களில் மக்களில் பலர் கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இன்னும் வீட்டுத் திட்டங்கள் எத…
-
- 0 replies
- 653 views
-
-
ஜனாதிபதியின் குடியுரிமைக்கு ஆபத்து: விஜித ஹேரத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளமை உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ளமையால் அவரின் குடியுரிமை பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணாணதென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதி அரசியலமைப்பு தொடர்பாக நன்கு அறிந்திருந்தும் அதற்கு முரணான வகையில் செயற்படுவாராயின் அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் 38ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழக முதலமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான கணனித்தமிழ் விருதினை இலங்கைத்தமிழரான திரு து குமரேசன் அவர்கள் பெற்றுள்ளார் இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசின் அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியுட்டுள்ளது. http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr130415_151.pdf
-
- 1 reply
- 763 views
-
-
வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன் வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்…
-
- 16 replies
- 2.3k views
-
-
சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு [19 - June - 2007] தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கல…
-
- 3 replies
- 1.7k views
-
-
சூடுபிடிக்கும் சிறிலங்கா அரசியல் களம் – அடுத்தது என்ன? APR 21, 2015 | 2:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு நேற்று இடம்பெற்றதையடுத்து, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி, இன்று 19வது திருத்த யோசனை மீதான விவாதம் ஆரம்பமாகும் என்று ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை இதுதொடர்பாக கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. அதில், தேர்தல் முறைமையை மாற்றும் யோசனையை உள்ளடக்காத 19வது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிக்க முட…
-
- 0 replies
- 591 views
-
-
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள் hareஅனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலாளர்களும் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுமார் 2000 பேருக்கு நலன்புரி முகாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடியிருந்தாலும் நேற்று காலை முதல் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக மக்கள் மீண்டும் நலன்புரி நிலையங்களுக்கு…
-
- 0 replies
- 398 views
-
-
வெளிவிவகார அமைச்சருக்கு தண்டத் தொகை விதித்தது மாவட்ட நீதிமன்றம். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டத்தொகையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்துள்ளது. சண்டே லீடர் நாளிதழ் தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றில் ரோகித முன்னிலையாகததால் நேற்று செவ்வாய்க்கிழமை இத்தண்டத் தொகை விதிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் ரோகித போகல்லாகம நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று அவரது சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர நீதிமன்றில் தெரிவித்தார். இதற்கு எதிர்த்தரப்பு சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 11 (2006), மார்ச் 14 (2007) மற்றும் நேற்று என மூன்று விசாரணைகளின் போதும் நீதிமன்றில் ரே…
-
- 2 replies
- 1.3k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.கொழும்புத்துறை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் நோக்குடன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெடிபொருட்களை யாழ். காவற்துறை விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றுக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடி பொருட்கள் காணப்படுவதாக அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பகுதிக்கு சென்ற அதிரடி படையினர் அங்கிருந்து 01 கி…
-
- 0 replies
- 345 views
-
-
08 DEC, 2023 | 06:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களை அடிப்படையாக கொண்டு சமூக விரோத செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஊடக நெறிமுறையை கடைப்பிடிப்பதற்கு ஊடகங்கள் நியாயமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். உத்தேச ஒளி மற்றும் ஒலிப்பரப்பு சட்டமூலம் அடுத்த ஆண்டு சட்டமாக்கப்படும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம், கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவா…
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
இந்தியப் படையால் தொப்பிகலையை கைப்பற்ற முடியவில்லை என்பது தவறானது - மேஜர் ஜென்ரல் அசோக் மேத்தா இந்திய அமைதிப் படைக்காலத்தில் இந்திய இராணுவத்தால் தொப்பிகலையை கைப்பற்ற முடியவில்லை என்பது தவறானது என இந்திய அமைதிப்படையின் கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார் இந்திய அமைதிப்படை காலத்தில் தொப்பிக்கல பகுதியை கைப்பற்ற வேண்டிய அவசியம் தமக்கு இருக்கவில்லை என்றும் அது இராணுவ முக்கியத்துவம் மிக்க பிரதேசமல்ல என்றும் அசோக் மேத்தா குறிப்பிட்டுள்ளார் இந்திய இராணுவத்தின் 20 000 துருப்புகளால் கைப்பற்ற முடியாத தொப்பிக்கல பிரதேசத்தை தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக ஸ்ரீலங்காவின் படைத்துறை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும்…
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை: பவ்ரெல் சாடல் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 10:43 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமே இல்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரெல் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தேர்தல் ஆணையமோ தேர்தல் நடத்துவது குறித்து தனித்து முடிவெடுத்துவிட முடியாது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கிழக்கில் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பான ப…
-
- 0 replies
- 912 views
-