ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்? 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப…
-
- 8 replies
- 1.2k views
-
-
வட மாகாணசபையின் அம்பியுலன்ஸ் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை -க. அகரன் வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ் சேவையொன்று நடத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின் கீழ் வடமாகாணத்தில் எப்பிரதேசத்திலும் 24 மணிநேரமும் விபத்துக்களின்போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ், 100 வைத்தியசாலைகளைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டிகள் தற்போது இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதனைச் சர்வதேசதரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இது த…
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்க ஈழத்தமிழர்களுக்கான வக்கீல் வைகோவுடன் சந்திப்பு அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டார்னி ஜெனரலும், தற்போது அமெரிக்காவில் வாழும் ஈழத் தமிழர்களுக்காக வக்கீலாக செயல்பட்டு வருபவருமான புரூஸ் வெய்ன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்து பேசினார். ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல் குறித்து அவர் வைகோவுடன் விவாதித்தார்.[இலங்கை அதிபர் ராஜபக்சேவும், ] கோத்தபாய ராஜபக்ச ,ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். தமிழ் இனப்படுகொலை செய்து வரும் குற்றத்திற்காக அவர்கள் இருவர் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ம.தி.மு.க. தலைமைக்கழக…
-
- 2 replies
- 2.2k views
-
-
பாடசாலைகளில் இடம் பெறும் நிகழ்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விருந்தினர்களாக அழைக்க முடியாத இக்கட்டு நிலையில் முல்லைத்தீவுப் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது இல்ல மெய்வன்மைப் போட்டிகள், கால்கோள் விழாக்கள் உட்பட பல்வேறு வகையான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடா ளுமன்ற உறுப்பினர்க ளையோ அல்லது அந்தக் கட்சி சார்ந்த பிரமுகர்க ளையோ விருந்தினர்களாக அழைக்க முடியாத நிலை உள்ளதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பாடசாலையுடன் எந்த வித தொடர்பும் இல்லாத அரசு சார்பான பிரமுகர்களையே இந்த நிகழ்வுக்கு அழைக்க வேண்டிய சூழல் தமக்கு ஏற்பட்டு…
-
- 0 replies
- 303 views
-
-
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசிமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்புகொண்டபோது அஞ்சலி நிகழ்வு நடாத்தலாம் எனவும் விடுதலைப்புலிகளின் தேசியக் கொடி மற்றும் இலச்சினைகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது எனவும் ரணில் விக்கிரமசிங்கவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இ…
-
- 4 replies
- 644 views
-
-
5 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான் September 3, 2020 சிவநேசத்துரை சந்திரக்காந்தன் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் இன்று காலை 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் வாக்குமூலம் வழங்கியன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவ…
-
- 3 replies
- 587 views
-
-
முதல்வரின் கூற்று சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல வடக்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையைத் தவ றாக எடுத்துக்காட் டித் தெற்கிலுள்ள சில அரசியல்வாதிக ளும் மதத்தலைவர்களும் இனத்துவேஷ அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அறிக்கை விடுவதையிட்டு நாம் எமது வன்மையான கண்டனத்தையும், கவலையையும் வெளிப்படுத்துகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நாட்டில் 2015- ஜனவரி 08ஆம் திகதி நல்லாட்சி ஏற்படுத்துவதற்கு தமி…
-
- 0 replies
- 487 views
-
-
சென்னை: முத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள். முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், 'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மே…
-
- 0 replies
- 743 views
-
-
'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' -சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன் இசைநிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் 'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' என்பதை நினைவிற் கொள்ளுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொள்ளும் 'நண்பேன்டா' இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு 200, 1,000, 5,000 ரூபாய் பெறுமதியில் நுழைவுச் சீட்ட…
-
- 1 reply
- 499 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளினது பிரதிநிதிகள், க்ளோபல் தமிழ் போராம்(Global Tamil Forum) ஒழுங்கு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உரிமையுடைய நாடுகளே இவ்வாறு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளன. பிரித்தானிய பாராளுமன்றில் இந்த மாதம் 27ம் திகதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மீன் சூகா, இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானப் ப…
-
- 2 replies
- 679 views
-
-
யாழில் அதிகரித்துச் செல்லும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை பெற்றோர்களின் அக்கறையீனம் காரணமாக யாழ். மாவட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் 8 சதவீதத்தினால் வன்முறைச் சம்பவ ங்கள் யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்டச் சிறுவர் நன்னத்தைப் பராமரிப்புப் பிரிவின் புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது எனவும் தெரிவித்தார். யாழ். மாவட்டச் சிறுவர், நன்னடத்தைப் பாராமரிப்பின் ஏற்பாட்டில் சிறுவர்கள் நலன்களின் எதிர்காலச் செயற்றிட்டம் எனும் கருப்பொரு…
-
- 0 replies
- 160 views
-
-
உடனடி போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும், நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நீதியற்ற நடவடிக்கையைக் கண்டித்தும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-
-
கிளிநொச்சியில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகியன இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன. கையெழுத்துப் போராட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி, கிளிநொச்சி நகரம், பரந்தன் சந்தி, இரணைம…
-
- 0 replies
- 309 views
-
-
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 27ஆம் திகதி அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அன…
-
- 1 reply
- 597 views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
பௌத்த பிக்கு தலைமையில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்? மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்கள் குறித்த பிக்குவால் ஆபகரிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்து அத்து மீறி நுழைந்து தமிழர்களுக்குச் சொந்தமான மேச்சல் காணிகளை பிடித்து துப்பரவு செய்து வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மக…
-
- 0 replies
- 700 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஊடாக முயற்சிக்க வேண்டும் - எட்வர்ட் பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சராக கருதப்படும லிபரல் ஜனநாயக கட்சியின் எட்வர்ட் டாவே தெரிவித்துள்ளார். அரசியல் தர்மசங்கடத்தை தவிர்க்கஇ பிரவுண் கட்டாயம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு நம்பகத்தன்மையற்றது இதனால் பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஊடக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உடனடியான முயற்சிக்க வேண்டும் எனவும் எட்வர்ட் டாவே கேட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட தூதுவரை இலங்கை நிராகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 584 views
-
-
யாழ். அரியாலை கிழக்கு கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு கண்டித்து இன்று நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அரச அதிபரே ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை,நீதியாக வேலை செய்தவருக்கு அநீதி ஏன், நீதியான விசாரணை செய், உடன் கைதுசெய் தண்டணை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினையும் கண்டணத்தினையும் வெளிப்படுத்தினர். கடந்த 14 ஆம் திகதி J/90 கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…
-
- 0 replies
- 344 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் சண்முகம் தவசீலன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைஇ விடுதலை செய்யுமாறு வலியுறுத்திஇ முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகஇ இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 'நல்லாட்சியின் சிறைகளில் நமது பிள்ளைகள் கையெழுத்திடுகிறோம் கருணை காட்டுங்கள்' என்ற தொனிப்பொருளில்இ முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்துஇ இதனை ஒழுங்கு செய்திருந்தனர். வடமாகாண சபை உறுப்பினர் துரைரைாசா ரவிகரன் கலந்துகொண்டுஇ கையெழுத்திட்டு திரட்டலை உத்தியோகப்பூர்வமாக…
-
- 0 replies
- 199 views
-
-
அரசு திருந்தாவிட்டால் சர்வதேச சட்டம் பாயும்! - இரா.சம்பந்தன்.! இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசு, தமிழ் - முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் …
-
- 2 replies
- 460 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் இன அழிப்புப் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை கோரும் பிரமாண்டமான தமிழர் பேரணி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையும், கட்டாயமும் கருதி இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 481 views
-
-
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருகிறது. -- புஷ்பராயன் விக்டோரியா நேரம் Sunday, March 3rd 2013. பிரிவு featured, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், முதன்மைச்செய்திகள அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் People’s Movement Against Nuclear Energy இடிந்தகரை 627 104 Idinthakarai 627 104 March 3, 2013 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருகிறது. PMANE Demands Independent International Inquiry on the Genocidal Lanka அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் உலகெங்கும் போராடும் ஒத்தக் கருத்துடைய இயக்கங்களோடு சேர்ந்து ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவி…
-
- 0 replies
- 319 views
-
-
பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர். அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய அறிக்கையில், “முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவ…
-
- 9 replies
- 1.4k views
-
-
இராஜபக்சவை போர்க்குற்றவாளியாக முன்னிறுத்துவதற்கான எந்தத் தடயமும் அந்தத் தீர்மானத்தில் காணப்படவில்லை: - தினமணி [Monday, 2013-03-11 09:40:40] ஐ.நா. மனித உரிமைகள் குழுமத்தில் இரு நாள்களுக்கு முன்பு அமெரிக்கா தாக்கல் செய்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. குழுமத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் வரைவுத் தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டபோது, அதில் இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக முன்னிறுத்துவதற்கான எந்தத் தடயமும் அந்தத் தீர்மானத்தில் காணப்படவில்லை. இவை ஏற்கெனவே, சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட போது எவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினவோ, அதைப் போலவே இப்போதும் இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுகிறது.…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கைத் தீவு பொருளாதார ரீதியாக மேலும் பலவீனமான நிலையை அடைந்திருக்கின்ற சூழலில் தான், கொரோனாவின் இரண்டாவது அலை தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இப்போது நிலவுவது, இரண்டாவது அலையே இல்லை என்றும், இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அரச அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதல் அலையை விட மூர்க்கத்தனமானதாக இப்போதைய அலை காணப்படுகிறது. நாட்டில் நிலைமை படுமோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களால் ஊகிக்க முடிகிறது, உணர முடிகிறது. முதல் அலை தாக்கிய போது, நாடு பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தது. அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேய்ந்து போயிருந்தாலும், சமாளிக்கக் கூடிய நிலையில் அரச…
-
- 6 replies
- 956 views
-