ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுடன், கடந்த புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக இடம்பெற்றிருந்த வாக்குறுதி, 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். அதேவேளை, கிளிநொச்சியில் நேற்று ந…
-
- 0 replies
- 340 views
-
-
யாழில் மாற்றுவலுவுடையோருக்காக விசேட திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் இலங்கையில் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. https://www.facebook.com/LankasriTv/videos/1166145185015299/?ref=embed_video&t=42 சாரதி அனுமதி பத்திரம் இதன் பொழுது உள்ளூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பயணிப்பது மற்றும் அவ…
-
-
- 6 replies
- 315 views
- 1 follower
-
-
[size=5]தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் தொடர்பாக நூல் வெளியிடப்பட்டது[/size] தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சென்னையை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா எழுதிய நூல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. ஆயுத போராட்டம் உள்ளிட்ட பல வழிமுறைகள் ஊடாக பிரபாகரனினால் எவ்வாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது என்பது குறித்து சிரேஷ்ட ஊடகவியாலாளர் முத்தையாவினால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/43514-2012-06-25-13-01-16.html
-
- 0 replies
- 1.1k views
-
-
மஹிந்தவின் முகத்தை பார்க்கும்போது கவலையாகத்தான் உள்ளது (எம்.ஆர்.எம்.வஸீம்) அபேராம விகாரையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நாட்டில் மீண்டும் சிவில் யுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்தன தெரிவித்தார். தற்போது மஹிந்த ராஜபக்ஷ்வின் முகத்தை பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கின்றுது. அவர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக்கோரி எங்களுடன் பாத யாத்திரை மேற்கொண்டவர். ஆனால் அதிகாரத்துக்கு வந்ததன் பிறகு அவரின் நிலைப்பாடு மாறிவிட்டது. தற்போது செய்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்து வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாள…
-
- 0 replies
- 615 views
-
-
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு March 27, 2025 10:57 am காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 ஆயிரத்து 742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு…
-
- 1 reply
- 190 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உதலாகம ஆணைக்குழு வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இந்த ஆணைக்குழுவின் மூலம் நியாயமானதும், சுயாதீனமானதுமான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் இந்த ஆணைக்குழு அந்த நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புக்களுடன் இந்த ஆணைக்குழு கைகோர்த்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உதலாகம ஆணைக்குழு…
-
- 0 replies
- 856 views
-
-
2007ம் ஆண்டு மதிப்பீடுகளின்படி கிழக்கில் குடி அமைப்பு தமிழர் 40.39% முஸ்லிம் 37.64% சிங்களவர் 21.64% என அமைந்துள்ளது. 37 அங்கத்தவர் கொண்ட மாகாணசபையில் தனித்து போட்டியிட்டு தமிழ் கூட்டமைப்போ முஸ்லிம்காங்கிரசோ தலைக்கு 10 ஆசனங்களுக்கு மேல் பெறும் வாய்ப்பில்லை. கிழக்கில் சிங்கள வாக்கும் கணிசமான தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் பெறும் வகையில் ஆழும் UPA வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். கிழக்கு மக்கள் உரிமைக்காக தமிழர் கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். ஆமால் மாகாணசபைத்தேர்தல் தமிழ் முதல் அமைச்ரா முஸ்லிம் முதலமைச்சரா என்கிற கேழ்விதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ல பெரிய கேழ்வீயாகும். இதன் ஆதாயம் சிங்கள முஸ்லிம் வாக்குகளையும் பெறக்கூடியதாக ஆழும் …
-
- 5 replies
- 1k views
-
-
ஜெனீவாத் தீர்மானம், இறையாண்மைக்குள் மூக்கை நுழைக்காது முருகவேல் சண்முகன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, பல்வேறுபட்ட தவறான எண்ணக்கருக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் தலையிடும் முயற்சி அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அ…
-
- 0 replies
- 208 views
-
-
தமிழீழ போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு இந்திய அரசால் தான் தீர்வு காண முடியும். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மன்னார்ப் பகுதியில் எண்ணெய்க் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதால் இந்தியக் கடற்பகுதியின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் உறுப்பினா சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ராமேஸ்வரம், தனுஷ்கோடி அசிச்சல் முனைக் கடற்கரைப் பகுதிக்குச் சென்று அகதிகள் வந்திறங்கும் மணல் திட்டுப் பகுதிகளைப் பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தர். மேலும், அவர் அங்கு கூறியதாவது இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத்தினரின் கொலை வெறித்தாக்குதல்களை இலங்கை அரசு ஊக்குவிக்கின்றது. இனப்பிரச்சினை…
-
- 0 replies
- 774 views
-
-
[size=4]குன்னூரில் உள்ள படை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நாளை நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள சிறீலங்கா படையினரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ம.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமில் பயற்சியளிக்கப்பட்டு வரும் சிறீலங்கா படைஅதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் சில இந்திய அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வெலிங்டன் பயிற்சி முகாமில் வெளிநாட்டு படைஅதிகாரிகள் 40பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேஷ் சீனா உள்ளிட்ட நாடு…
-
- 2 replies
- 502 views
-
-
கடமையில் இருந்த இராணுவ வீரரின் கழுத்தில் தாக்கி துப்பாக்கி பறிப்பு – வவுனியாவில் சம்பவம் வவுனியா, போகஸ்வெவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த இராணுவ வீரர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கடமையில்-இருந்த-இராணுவ-வ/
-
- 2 replies
- 487 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைநாள் தலைவரும், இலங்கையின் முதலாவது பிரதமருமாயிருந்த காலம் சென்ற டி.எஸ்.சேனநாயக்காவின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்கவின் தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியானது இரண்டாக உடைந்துள்ளது. புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக காமினி அபயரட்ண நியமிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய சார்பான நிலைப்பாடே இந்த கட்சி உடைவுக்கு மூல காரணம் என அறியப்படுகிறது. மேலதிக விபரங்கள் விரைவில். http://www.orunews.com/
-
- 5 replies
- 1.9k views
-
-
விடுதலை என்ற இலட்சியத் தீயை தம் இதயங்களில் சுமந்து வீழ்ந்த வீரர்களின் பாதார விந்தங்களை பணிந்து, சுதந்திரமானதும், கௌரவமானதுமான தமிழ்மக்களின் வாழ்வுக்கான இன்னுமொரு சத்தியப் பயணத்தை தொடங்குகிறேன். தமிழ்த் தேசியப் போராட்ட அரங்கில், அதி முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் யூலை மாதமும் ஒன்று. 1958 ஆம் ஆரம்பமான நேரடியான இன அழிப்புப் படலம் மெல்ல மெல்ல நகர்ந்து, 1983ம் யூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை தொட்டது. இதனை, நேரடியான இனஅழிப்பின் தீவிர ஆரம்பப்புள்ளி எனலாம். சிங்கள அரச பயங்கரவாதத்தின் முதலாவது பெருமெடுப்பிலான இன அழிப்பில் சுமார் 3500 அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தருணத்திலேயே, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப…
-
- 0 replies
- 448 views
-
-
முப்படைகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாகவே முப்படைகளின் பதில் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர குணவர்தன இன்றுடன் ஓய்வுபெறுகின்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/72252
-
- 1 reply
- 778 views
-
-
மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதலில் காயமடைந்த இரண்டு படையினர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த படையினர் வைத்தியசாலைக்கு தொடர்ந்து அழைத்துவரப்படுவதால் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிவளாகத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி சங்கதி இணையம்
-
- 2 replies
- 1.7k views
-
-
[size=4]அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்காத் தமிழர் ஒருவர் மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் இவரது புகலிடக் கோரிக்கை ஆராயப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையானது வேண்டுகோள் விடுத்திருந்த போதும், அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், சிறிலங்காவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவார் என அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தமிழரை மீண்டும் சிறிலங்காவுக்கு நாடுகடத்துவதை தடுப்ப…
-
- 1 reply
- 422 views
-
-
அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மாணவர் ஒன்றியத்தால் இன்றையதினம் வெளியிடப்பட் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவு கூறும் மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்ச் சமூகத்திற்கான தெளிவூட்டல். தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைவடைந்து இருக்கும் இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்க…
-
-
- 3 replies
- 361 views
- 1 follower
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 891 views
-
-
தழிழீழ விடுதலைப் புலிகளும் தமது உறுப்பினர்களை தமிழ் ஊடகங்களில் பணியாற்ற அனுப்பினார்கள். அந்த உறுப்பினர்களே தழிழ் ஊடகவியலாளர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள் கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே. இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார் சிங்கள வாரப் பத்திரிகையான லங்காதீப பிரதம ஆசிரியர் ஆரியநந்த தும்ப விகாவத்த. வடமேல் மாகாண ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழனம குருநாகலிலுள்ள இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது இன்றைய சூழலில் போதைவஸ்து வியாபாரம் செய்பவர்கள் தாராள…
-
- 1 reply
- 431 views
-
-
சி.விக்கு எதிராகவும் முறையிட முஸ்தீபு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் உணவு வழங்கலும் விநியோகமும் சுற்றாடலும் கூட்டுறவும் அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக, முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் -பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்களே, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. வடமாகாண விவசாய அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பில், விவசாய அமைச்சருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குற்ற…
-
- 1 reply
- 442 views
-
-
யாழ்ப்பாணம் நகரில் பறந்த பௌத்த கொடி -எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில், “இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது,…
-
- 3 replies
- 1.1k views
-
-
மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 492 views
-
-
வவுனியா மாவட்டம் இறம்பைக்குளத்தில் நேற்றிரவு குடும்பப்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
[size=4]''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.[/size] [size=4]இந்திய ஊடகமொன்றுக்கு ராஜபக்ச அளித்த பேட்டியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.[/size] [size=4]ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட…
-
- 1 reply
- 329 views
-
-
மூன்று மாதத்திற்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகும்;ஜனாதிபதி உறுதி! யாழ்.மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் எதிர்வரும் மூன்று மாதங்களிற்குள் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரா கல்லூரியை கையளித்து மக்கள் முன்பாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், 30 வருடகாலமாக பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கிய எமது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 65 ஆயிரம் வீட்டு திட்டத்தை பார்வையிடவும், காணிகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு காணிகளை வழங்குவதற்காகவுமே நான் இங்கு வருகை தந்துள்ளேன்…
-
- 0 replies
- 214 views
-