ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
Please send thanking emails to this show producers and CTS TV management for this discussion and creating awareness about the war in Srilanka. http://srilankanconflict.blogspot.com/
-
- 1 reply
- 1k views
-
-
ஒரே தடவையில் தலா மூன்று குழந்தைகளை இரு தாய்மார்கள் பிரசவித்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் ஒரு தாயார் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு தாய்மாரும் மினுவன்கொட மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67476-2013-05-17-06-51-13.html
-
- 0 replies
- 303 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்துகொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: …
-
- 1 reply
- 440 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொக்காவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திக்குப் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் இராணுவ வட்டாரங்கள், தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் வேறு வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தன. செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிலின் - 143 ரக வானூர்திகளையே விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த…
-
- 12 replies
- 1.7k views
-
-
இலத்திரனியல் வருமானவரி பத்திரம் January 23, 2017 வடமாகாணத்தில் முதற் தடவையாக இடம்பெறும் இலத்திரனியல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவையினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடமாகாண போக்குவரத்து வர்த்தக கிராம அபிவிருத்தி வீதி அபிவிருத்தி மோட்டார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பீ.பி.அமரசேகர மற்றும் வடமாகாண வர்த்தக கிராம அபிவிருத்தி வீதி அபிவிருத்தி மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இணைய…
-
- 0 replies
- 355 views
-
-
வன்னி மக்களை பட்டினி அவலத்திலிருந்து காப்பாற்றுங்கள் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவசர கோரிக்கை வன்னியில் உள்ள மக்கள் பாரிய பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதால், அவர்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவதற்கு சர்வதேச சமுகம் மற்றும் மனிதநேய அமைப்புகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்>>>
-
- 0 replies
- 516 views
-
-
சிவப்பு விளக்கை கடந்து சென்ற பொலிஸார் -எம்.றொசாந்த் திருநெல்வேலி சந்தை பகுதியில் உள்ள வீதி சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரியும் போது, அதனை மீறி, போக்குவரத்து பொலிஸார் வீதியை கடந்து சென்ற சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ள நிலையில், வீதி ஒழுங்கை சரியாக பேணி, போக்குவரத்தை இலகுபடுத்தி, விபத்தை தவிர்க்கும் நோக்குடன், வீதி அதிகார சபையினால் யாழ். பிரதான சந்திகளில், வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் திட்டம், கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன. சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதனை பின்பற்றி, …
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு! வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார். இதன…
-
- 0 replies
- 340 views
-
-
வடமாகாணத்தில் 92 வீதமான விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண விவசாய கால்நடை காணி நீர்பாசன மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு அமைச்சின் செயலாளர் உதுமான் லெப்பை முஹமட் ஹால்டீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய காணிகளில் 92 வீதமானவற்றில் தற்போது விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏனைய 8 வீதமான காணிகள் கைவிடப்பட்ட காணிகள் கைவிடப்பட்ட காணிகளாக உள்ளன. இவ்வாறு குறித்த காணிகள் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகள், மிதிவெடி அபாயம் உள்ள பிரதேசங்கள், கடல் நீர் உட்புகக் கூடிய இடங்கள், நீர் போதுமானதாக இல்லாத பிரதேசங்கள், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களது நிலங்க…
-
- 1 reply
- 681 views
-
-
மலையக மக்கள் குறித்து சோனியா காந்திக்கு எடுத்துரைப்பு இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான குழு சந்தித்துள்ளது. சந்திப்பு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 13ம் அரசியல் அமைப்பு, மலையக இந்நிய வம்சாவளி மக்களுக்கான தனித்தன்மை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், என்பவற்றை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்ப…
-
- 6 replies
- 903 views
-
-
‘தேர்தலில் குதித்தால் கோட்டா தோற்பார்’ இக்பால் அலி “2020ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் சந்தேகத்துக்கு இடமின்றித் தோல்வி அடைவார்” என, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். புஹதஹேவாஹெட்டவில், அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைவார். எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா …
-
- 0 replies
- 264 views
-
-
பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை எனில் "அதற்கான விளைவுகளை" சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது :அமைச்சரவை இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும். இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழ…
-
- 0 replies
- 403 views
-
-
சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் என்பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நியமனத்தை வழங்குவதற்கு நீதித்துறைசார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென, இலங்கை மனித உரிமை மையம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கோரியுள்ளார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமே, தெளிவுபடுத்துமாறு அவர் கோரியுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 374 views
-
-
மே தின கூட்டங்களுக்குத் தடை. மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணியின் தலைவரும் , இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் . கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று ( செவ்வாய்க்கிழமை ) இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை தனியே நடத்த ஆளுங்கட்சியிலுள்ள சுதந்திரக்கட்சி தீர்மானம் எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1211215
-
- 0 replies
- 408 views
-
-
தமது சொந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஆராய்ந்து வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வெற்றிலையில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. தனது வீணைச் சின்னத்தைக் கைவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பில் அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னர், ஈ.பி.டி.பி. தனித்துப் போட்டியிடுவதா, இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று பின்னர் வெற்றிலையில் போட்டியிடும் …
-
- 0 replies
- 736 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கப் போவதில்லை – ஐரோப்பிய ஒன்றியம் 19 ஜூலை 2013 எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலுக்கு தமது கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கப் போவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவி ஜேன் லம்பார்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் பாரிய தேர்தல்களை கண்காணிக்கும் எனவும், வட மாகாணசபைத் தேர்தல்களை கண்காணிப்பதற்கு போதியளவு கால அவகாசம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நல்லிணக்க…
-
- 0 replies
- 298 views
-
-
இந்து சமுத்திரத்தின் இராஜதந்திர வெற்றி அமெரிக்காவிற்கு விசேட நன்றி தெரிவிக்கிறது வெளிவிவகார அமைச்சு சோமாலியா கடல் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை மீட்டமையானது அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றி மாத்திரமன்றி மாறாக இந்து சமுத்திரத்தின் இராஜதந்திர வெற்றியாகும். இதனையிட்டு அமெரிக்காவிற்கு விசேட நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களின் விடுதலை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. அங்கு தொடர்ந்தும் கூறுக…
-
- 0 replies
- 251 views
-
-
கனடாவிலிருந்து 200 அகதிகள் நாடு கடத்தப்படும் நிலை [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Jun 18, 2009 04:00 GMT ] கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். 200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமந்தா பவர் என்பவரே இவ்வாறு அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட தூதுவர் ஆவார் மேலும், http://tamilworldtoday.com/?p=23986
-
- 0 replies
- 397 views
-
-
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கற்பிக்க தனியான கல்வி பிரிவுகள் : சந்திரிகா குமாரதுங்க (க.கமலநாதன்) மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தில்ப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம…
-
- 0 replies
- 175 views
-
-
தேர்தல் சீர்திருத்தம் - தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது! ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும். அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 323 views
-
-
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை. ‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப…
-
- 0 replies
- 839 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விடுதிகள்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுதிகளை அமைத்து பராமரிப்பதற்காக 40 வருடங்கள் குத்தகைக்கு வழங்கல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளமையால் விமான நிலைய எல்லைக்குள் இரண்டு விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பிரேரணை தொடர்பாக …
-
- 1 reply
- 333 views
-
-
வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்கு நாளை வரை வழங்கப்பட்டிருந்த இரண்டு வார கால அவகாசம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் சமூக ,சமய பிரமுகர்களுடன் இடம் பெற்ற கூட்டமொன்றில் இந்த கால அவகாசம் பற்றி கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க அறிவித்திருந்தார்.. புதிய கால அவகாசத்தின் படி எதிர்ரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை ஆயுதங்களை கையளிக்க முடியும் என கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின…
-
- 0 replies
- 553 views
-