ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் கேட்கிறோம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக தாங்கள் காத்திருந்ததாக தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் முகமாக நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் பைடனின் புகைப்படத்தை தாங்கிய பதாகையையும் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளையும் உறவினர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தம…
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை அழிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் விளக்கம் (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த 121 படகுகளை அழிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் அதிகாரம் இல்லை என்றும் , அவற்றை கிருமி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து அதன் பின்னர் உரிய தரப்பினருடன் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு அனுப்பியுள்ள தெளிவுபடுத்தல் கடிதத்திலேயே சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு வந்த படகுகள் தொடர்பான விசாரணைகள் கு…
-
- 0 replies
- 377 views
-
-
மண்டைதீவில் கடற்படைக்கு காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்.. November 10, 2020 யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி, அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண்டைதீவுச் சந்தியில் கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, காணி உரிமையாளர், அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்றிருந்…
-
- 0 replies
- 319 views
-
-
மட்டு முகத்துவார ஆற்றுவாயினை வெட்டுவது தொடர்பான கலந்துரையாடல் 30 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவகால மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ள நிலைமையில் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட 3212 ஏக்கர் தற்போது நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் விவசாய மக்கள் முகத்துவார ஆற்றுவாயினை வெட்டி நீரினை வெளியேற்றுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக் கோரிக்கையினை கருத்திற்கொண்ட அரச அதிபர் அவசர கூட்டம் ஒன்றினை இன்று (09) கூட்டினார். இது தொடர்பாக சம்மந்தபட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ்வாண்டு பரு…
-
- 1 reply
- 460 views
-
-
யாழில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்த குடும்பத்தினர் கைது யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில், திருகோணமலை பகுதியை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அகதிகளாக இந்தியாவுக்குள் அவர்கள் வருகை தந்தமை பொலி…
-
- 6 replies
- 951 views
-
-
அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ் அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டும் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியுமே வந்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் ம…
-
- 7 replies
- 1.1k views
-
-
கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்! வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்´ மற்றுமொரு கட்டம் இன்று (08) வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சா…
-
- 7 replies
- 918 views
-
-
மயூராபதி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜையில் பிரதமர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வேண்டி வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் நேற்று (2020.11.08) பிற்பகல் கலந்து கொண்டார். வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடந்த இந்த ஆசீர்வாத பூஜையில் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இதன்போது கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரதமரின் குடும்பத்தினர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/93990
-
- 10 replies
- 1k views
-
-
ஊடகங்களை தூற்றினார் ஜனாதிபதி எமது சுகாதார சேவையினால் கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக மக்களின் ஒத்துழைப்பே தேவைமக்களை தெளிவுபடுத்துவது ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமாகும்சுகாதாரவழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் கடமையாகும் என்றார். எமது நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என்றும் மக்களின் ஒத்துழைப்பே தேவை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள…
-
- 1 reply
- 793 views
-
-
நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்! October 12, 2020 எனது சிறைவாசத்திற்கு ஐந்து வருடங்கள். நல்லாட்சி தந்த பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் மேற்கண்டவாறு தனது உள்ளக்குமுறலை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், 11.10.2020ம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு ஐந்து வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் த…
-
- 31 replies
- 3.5k views
-
-
ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை J.A. George ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சி.அலவத்துவல, மயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு எதிராகவும் அதன் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 418 views
-
-
கொழும்பு நகரத்துக்கு வருகை தருவது குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன? Daya Dharshini கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய விடயங் களுக்காகக் கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்களை…
-
- 0 replies
- 371 views
-
-
மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – வாழைச்சேனையில் ஊரடங்கு நீடிப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-720x450.jpeg வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா மைய காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) திறந்து…
-
- 0 replies
- 334 views
-
-
தனிமைப்படுத்தல் சட்டம் இன்றுமுதல் தனித்துவமாகின்றது! BATTINEWS MAINNovember 9, 2020 சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற நச்சுயிரி வைரஸானது முழு உலகத்தையும் ஆட்டிப் படைத்துகொண்டிருக்கின்றது. உலகில் 5கோடி மக்கள் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தொற்றுக்களின் அடிப்படையில் அமெரிக்கா 1கோடி என்ற எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் என பட்டியல் நீளுகின்றது. சுமார் 12லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இலங்கையில் இதுவரை சுமார் 13ஆயிரம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 35பேர் மரணமாயுள்ளனர்.வெளிநாடுளில் 90இலங்கையர்கள் மரணமாயுள்ள செய்தியும் வெளிவந்துள்ளது. .குறிப்பாக சவுதிஅரேபியாவில் 31பேரும் குவைத்தில் 20பேரும் பலியாகி…
-
- 2 replies
- 772 views
-
-
தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் இந்தியா அக்கறையாகவுள்ளது; அவர்களுடன் பேசுவோம் – மாவை சேனாதிராஜா Bharati November 8, 2020தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் இந்தியா அக்கறையாகவுள்ளது; அவர்களுடன் பேசுவோம் – மாவை சேனாதிராஜா2020-11-08T06:25:19+05:30 FacebookTwitterMore தமிழினத்தின் விடுதலைக்கு, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவி…
-
- 5 replies
- 842 views
-
-
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்’ Bharati November 8, 2020யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்’2020-11-08T22:28:43+05:30 FacebookTwitterMore இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ மற்றுமொரு கட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூ…
-
- 1 reply
- 572 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை விரைவில் அனுப்புவோம் என்கிறார் டக்ளஸ் (ஆர்.ராம்) இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து படிப்படியான முன்னோக்கி செல்லுதல் என்பதை மையப்படுத்திய முன்மொழிவொன்றை புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் முன்மொழிவு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சதாகிய பின்னர் தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் ஈழம…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது – நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கேள்வி பதிலில் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவருடைய கேள்வி பதிலில் பிவருமாறு அமைந்துள்ளது . கேள்வி :- இன்று நடந்த “கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டக்” கூட்டத்தில் நீங்கள சில முக்கியமான கருத்துக்களைஆங்கிலத்தில் எடுத்துரைத்தீர்கள். அவற்றைத…
-
- 1 reply
- 445 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்- வியாழேந்திரன் தெரிவிப்பு SAVITHNovember 8, 2020 (கல்லடி , செங்கலடி நிருபர்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேற்றைய தினம் கடுக்காமுனையில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இப்பொழுது சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை அரசியல் கைதிகளின் விடுத…
-
- 1 reply
- 484 views
-
-
தமிழ் மக்களுக்கு, இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர்ப் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில், நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும். எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும்…
-
- 17 replies
- 2.3k views
-
-
வடக்கை வளர்க்கும் இளம் தொழில்முனைவோர் ஜெகன் அருளையா ஜெகன் அருளையா ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு! கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலயத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட…
-
- 1 reply
- 1k views
-
-
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா November 6, 2020 நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவரும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்ரன் பெனான்டோ தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே…
-
- 12 replies
- 1.1k views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் சட்டத்தரணி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் பிரதமரின் இந்து விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (29) பிரதமரிடம் இருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.https://newuthayan.com/முன்னாள்-பிரதம-நீதியரசர்/
-
- 4 replies
- 1.2k views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச முடியாமைக்கான காரணத்தை தெரிவித்தார் டக்ளஸ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (07.11.2020) கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பனை தென்னை கூட்டுறவார்கள் பனை தென்னை கூட்டுறவாளர்களின் தேவைகள் கேட்டு அறியப்பட்டது. அதன்ப…
-
- 6 replies
- 1.3k views
-