Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுகொள்வதாகவும் ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் என…

    • 5 replies
    • 1k views
  2. மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன தெரிவித்துள்ளார். மன்னாரில் ஐந்துபேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டுபேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்திற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவினை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தடைஉத்தரவை மீறுபவர்களிற்கு எதிராக பொலிஸார் கடும் ந…

  3. ஜனாதிபதியால் லீ குவான் யூ ஆக முடியாது: சாணக்கியன் சபையில் தெரிவிப்பு

    • 2 replies
    • 1.1k views
  4. மாவீரர் நாள் நினைவேந்தல் மனு மீதான விசாரணை! நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள சுமந்திரன் பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்…

  5. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) எமக்குள்ள மக்கள் ஆணையினைக் கொண்டு அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறவும், இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், நியாயத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதையும் அரசாங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என நீர் வளங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயகார சபையில் தெரிவித்தார். இன்றுள்ள நெருக்கடியான பொருளாதார நிலைமையில் 20 பில்லியன் ரூபாவிற்கு அதிகமான இறக்குமதிகளை செய்ய முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போத…

  6. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) சர்வதேச கடன்களில் எமது நாடு சிக்குக்கொண்டுள்ள போதிலும் கடன்களை நம்பியே எம்மால் முன்னோக்கி நகரவும் முடியும், கடன்களை தவிர்த்து எம்மால் பயணிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர சபையில் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தில் குறைபாடுகள் உள்ளது உண்மையே, ஆனால் அதனை சகலரும் ஏற்றுக்கொண்டு பயணித்தாக வேண்டும் எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று , 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலகமுமே வீழ்ச்சி கண்டுள்ள நிலைலேயே எமது அரசாங்கம் வரவு செலவு திட்டமொன்றை முன்வைத்துள்ளது. இ…

  7. 50 ரூபாவைக் கூட பெற்றுக்கொடுக்காதவர்கள் 1000 ரூபாவை விமர்சிப்பது இயலாமையே : அனுஷா சந்திரசேகரன் ஆட்சியில் அங்கம் வகித்த போது 50 ரூபாவைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத பலவீனத்தை ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என்று சட்டத்தரணியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இது போட்டா போட்டியான விடயமாகவும் தொழிலாளர்கள் திருப்தியடையாத விடயமாகவும் மாறிவிட்டது. முழு மலையகத்தையே ஸ்தம்பிக்கச் செய்து தேசிய மட்டத்தில் பல அமைப்புகளினதும் முழுமையான ஆதரவையும் பெற்று நடைபெற்ற அட்டன் சத்தியாக்கிரகப் போர…

  8. பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கை J.A. George இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கை நேற்று (19) சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் இந்த பட்டியில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், செயின்ட் யூஸ்டேடியஸ் & சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து சனிக்கிழமை முதல் இங்கிலாந்துக்கு வரும்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்…

  9. தமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு by : Yuganthini காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும், விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னாரில் மாவீரர் தினம் நினைவு கூற தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (23 ஆம் திகதி) மேன் முறையீடு செய்ய இருக்கின்றோம். அந்த மேன் முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நடத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழம…

  10. புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்! இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர். காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது. https://samugammedia.com/scholarship-exam-result-two-students/

  11. தமிழின இருப்பு மற்றும் பாதுகாப்புக்காக தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும், ஒரு ஆரம்பப் புள்ளியாக வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது.இதன்படி, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனேயே அதனை தோழர் பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சம…

  12. தமிழரின் காணிகளை அபகரித்து புத்தருக்கு கோயில்கட்டி சிறுபான்மையின மனங்களைப் புண்ணாக்காதீர் – சுரேஷ் பிரேமச்சந்திரன் November 19, 2020 “தமிழ் பேசும் மக்களின் நிரந்தர வாழிடங்களான வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் அபகரித்து பௌத்த கோயில்களை அமைக்கும் பணியையும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அபகரித்து மேற்கொள்ள முயற்சிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் கைவிட்டு சிறுபான்மை தேசிய இனங்களின் மகிழ்ச்சிக்கு வித்திடுமாறு ஈழ ம…

  13. யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்புவிழா Bharati November 7, 2020யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி திறப்புவிழா2020-11-08T06:13:07+05:30 LinkedInFacebookMore யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்தத் திறப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடு…

  14. கட்டாயப்படுத்தி கலியாணம் செய்ய முடியாது..! கஜேந்திரன்கள் குறித்து உறுதியான தீர்மானம் எடுங்கள், தமிழ் தேசிய கட்சிகள் கூட்டத்தில் காரசாரம்.. தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை அனுட்டிப்பது தொடர்பாக இன்று மாலை ஆராய்ந்துள்ள நிலையில் குறித்த கூட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் சிலர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இந்தச் செயற்பாட்டிற்கு தமது கடுமையான கண்டனத்தை தொிவித்திருக்கின்றனர். குறிப்பாக யாரையும் கட்டாயப்படுத்தி கலியாணம் செய்து வைக்க முடியாது. கஜேந்திரன்களின் உறுதியான தீர்மானம் என்ன என்பதை அறியுங்கள். அவர்களுக்காக…

  15. முதலீடுகளே எமக்கு தேவை: கடன் அல்ல – புதிய சீன தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார். அதனைத் தொடர்ந்து சீன தூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “குறிப்பாக பிரிவினைவாத…

  16. மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்" என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவ…

  17. இலங்கையின் இறக்குமதித் தடை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் கரிசனை.! உலக வர்த்தக நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கமைவாக இலங்கையின் நீண்ட கால இறக்குமதித் தடை அமைந்திருக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வர்த்தகம் என்பது ஒருவழித் தடமல்ல. தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஐரோப்பிய ஒன்றியத் துதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனிய தூதரகங்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அற…

  18. ‘எதிலும் நான் தலையிடவே இல்லை’ - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கின்றார். ஏனைய நாடுகளுடன் நட்புற பேணப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஒருவருட காலத்தில், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகளும் செய்யப்படவில்லை என்றார் “கடந்த நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியது” என்றும் தனதுரையில் தெரிவித்தார். சிங்கள மக்கள் வாக்களித்தனர் இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜ…

  19. எத்தடை வரினும் மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம் – சிவாஜிலிங்கம் சூளுரை November 19, 2020 எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமை போல் இடம்பெறும். எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனை…

  20. துயிலும் இல்ல சிரமதானத்தில் ஈடுபடுவோருக்கு உதவினால் சூடு – புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை 37 Views மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுவோருக்கு தண்ணீரோ, தேநீரோ வழங்கவேண்டாம். அவ்வாறு வழங்கினால் சுடுவோம் என்று இராணுவப் புலனாய்வு என்று தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் எச்சரித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதையொட்டி தமிழர் தாயகம் எங்கும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் அருகேயுள்ள வீடுகளுக்குச் சென்றசிலர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினர…

  21. பச்சை மீனை உட்கொண்டு காட்டிய முன்னாள் அமைச்சர் – நல்லதல்ல என GMOA எச்சரிக்கை! சமைக்காமல் பச்சை மீனை உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீன்களின் தோலில் உள்ள பற்றீரியா மற்றும் நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பைக் கடுமையாகச் சேதப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீன் உட்கொள்ள வேண்டுமானால் மீன்களைக் கழுவி, சுத்தம் செய்து, சமைத…

  22. யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதா..? தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கூறியது என்ன..? யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாக மவ்விம சிங்கள பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது. அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை) இடையே 906 பயணிகள், 60 தடவ…

  23. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார். அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், http://cdn.virakesari.lk/uploads/medium/file/138857/sss.jpg கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை நாட்டில…

  24. மட்டு பண்ணையாளரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம் November 18, 2020 மட்டு பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு; மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் பண்ணையாளர்களுக்க உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டரை மாதங்களாக ப…

  25. கொரோனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவத்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/124336/selvam.jpg கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியக்கிடைத்துள்ளதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதிவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரவர் மத அனுஸ்டானங்களை மதித்து இற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.