ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
புதிய அரசியலமைப்பு வயதான பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுக்கு ஒப்பானது!!! http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-01#page-11
-
- 0 replies
- 146 views
-
-
30 வருடத்தின் பின்னர் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக்கின்றோம் - யாழ் ஆயர் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 4, 2010 முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள். இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை…
-
- 33 replies
- 2.6k views
-
-
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் 12 ஆயிரம் உறுப்பினர்களை கொலை செய்யாது அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன. சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வரும் துரைமாருக்கு இது மறந்து போய்விட்டது. போரில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக எம்மில் சிலரே கூறுகின்றனர். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் ஒன்றில் எப்படி ஈடுபடுவது. போரில் மக்கள் கொல்…
-
- 5 replies
- 688 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (04-10-2017)
-
- 0 replies
- 237 views
-
-
இராமநாதபுரம் மகா வித்தியாலய நிர்வாகத்தை பழிவாங்கக்கூடாது Share கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையின் வைரவிழா நிகழ்வை இடைநிறுத்துமாறு மாகாணக் கல்வி அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால், அதனை மாகாண சபை வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அந்த விடயத்தால் அந்தப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள பழிவாங்கப்படக்கூடாது எனவும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையின் வைரவிழா கடந்த 2ஆம் திகதி எழுச்சியுடன் நடைபெற்றது. வைரவிழாவை இடைநிறுத்துமாறு மாகாணக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தினார். பாடசால…
-
- 0 replies
- 192 views
-
-
யாப்பு மாற்றம் விரைவில் - கோத்தா கூறுகின்றார் கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 இலங்கையின் அரசியல் யாப்பினை விரைவில் மாற்றுவதற்கு மஹிந்த கட்சிகளுடன் பேசி வருவதாகவும் விரைவில் அதனை செய்வார் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.அல்ஜசீராவுக்கு தொலைபேசியூடாக பேசிய கோத்தபாய அரசாங்கம் அதிக ஆசனங்களைபெற்றுள்ளதாகவும் கூடவே தனது சகோதரர் எல்லா வகையான அதிகாரங்களை கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலதிக அதிகாரங்களை பெறவேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இல்லை ஆகவே யாப்பு மாற்றத்தினை மேற்கொள்ள அவர் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறியுள்ளார். கோத்தபாய. http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 583 views
-
-
கோபிதாஸ் மரணம் குறித்து சந்தேகம் கிளப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை! - எச்சரிக்கிறார் சிறைச்சாலை ஆணையாளர். [Friday, 2014-02-28 08:00:57] மகசின் சிறைக்கைதி கோபிதாசின் மரணம் தொடர்பாக, பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம எச்சரித்துள்ளார். வெலிக்கடைச் சிறையில் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்த விடுதலைப் புலிக் கைதி விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணத்தை சில தமிழ் அரசியல்வாதிகள் கொலையாக சித்தரிக்க முயல்கின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கப்பல் மூலம் புலிகளுக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டமைக்காக கோபிதாசுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 328 views
-
-
லசந்த கொலை வழக்கில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கில், இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாக இரகசிய பொலிஸார் இன்று (12) கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர். லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு ஆஜரான இரகசிய பொலிஸ் பிரதிநிதி, பெறப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி சம்பாஷணைகள் குறித்த விபரங்கள் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திக…
-
- 0 replies
- 317 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் விடுதலை April 26, 2022 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவானினால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். கடந்த வருடம் மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலை நினைவு கூர்ந்தமைக்காக இவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த நினைவேந்தலை நினைவு கூர்ந்த வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் உள்ளிட்ட 10 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருந்த கல்குடா காவல்துறையினா் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ததனை தொடர்ந்து அவா்கள்…
-
- 0 replies
- 248 views
-
-
2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர் 02 May 10 05:51 am (BST) யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கடத்தல் கப்பம்கோரல் படுகொலை செய்தல் கற்பழித்தல் போன்ற சமூக சீரழிவுகளுக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்படவிருந்தது. யாழ் துரையப்பா மைதானத்திற்கு அருகில் உள்ள முனயப்பர் கோவிலின் முன்பாக தொடங்க இருந்த இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருந்தனர். இன்று காலை குறித்த பேரணிக்கு சென்ற எமது விசேட செய்தியாளர் அங்கு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பிலான செய்தியை தருகிறார். யாழில் மக்களை பயத்திற்குள் தள்ளும்…
-
- 5 replies
- 1k views
-
-
புத்த பெருமானின் சின்னங்களை அவமானப்படுத்திய தேரர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் புத்த பெருமானின் புனிதச் சின்னங்களையும், தலதா மாளிகையையும் பகிரங்கமாக விமர்சனங்களை மேற்கொண்டுவந்த பிட்டிதுவே சிறிதம்ம தேரர், மல்வத்துப்பீட மகாநாயக்கரிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கோரிய சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மல்வத்துப்பீட மகாநாயக்கர் முன்பாக மண்டியிட்டு மன்னிப்புக் கோரியதோடு, எழுத்து மூலமும் தனது மன்னிப்பை அவர் கேட்டதை அடுத்து மல்வத்துப்பீடம் அவருக்கான மன்னிப்பை கடும் எச்சரிக்கையுடன் வழங்கியுள்ளது. பகிரங்க மேடைகளிலும் பல இடங்களிலும் தலதா மாளிகை, மல்வத்துப்பீடம் மற்றும் புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை அவமானப்படுத்தியும், பகிரங்கம…
-
- 0 replies
- 649 views
-
-
பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான எரிபொருள் பௌசர்களே இருப்பதாகவும் எரிபொருள் பௌசர்கள் நாளை முதல் இயங்காது என்றும் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கத் தவறியமைக்கு எதிராக இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. தனியார் எரிபொருள் பௌசர் உர…
-
- 0 replies
- 356 views
-
-
மரணத்தை வென்ற மாவீரன் இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது?????? இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம். உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை வி…
-
- 3 replies
- 2.2k views
-
-
PreviousNext பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹேலவிடம் இருந்து அதிரடி அறிவிப்பு..! தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர…
-
- 0 replies
- 243 views
-
-
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது உறுதியாகியிருப்பதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கடற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்த சென்ற மூதூர் நீதவானுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியமைச்சரின் தலையீட்டை அடுத்தே நீதவான் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் இந்திய தொழிலாளர்கள் மாத்திரமே மூதூர் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். சம்பூர் பகுதியில் உள்ள ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலம்…
-
- 4 replies
- 902 views
-
-
-கனகராசா சரவணன் நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக்கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டுவிட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை வாகரை, புல்லாவி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத இரு சந்தேகநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். வாகரை, காயங்கேணி பாலத்திற்கு அருகில் மலசலம் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பற்றைக்கு சென்றபோதே அங்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் இவர்கள் இருவருக்கும் துப்பாக்கியை …
-
- 0 replies
- 348 views
-
-
கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இச் சடலங்கள் காணப்படுகின்றன. குறித்த காணியினைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மலக்குழியினை துப்புரவு செய்ய முற்பட்டவேளை அது நிரவப்பட்டிருந்த மணலினை வெளியெடுத்திருக்கின்றனர். அவ்வேளை குறித்த குழியினுள் கறுத்தப் பைகளால் முடிக்கட்டப்பட்ட நிலையில் பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் காணப்பட்டிருக்கின்றன. ஐந்துவரையான பொதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்களால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்! வேலுப்பிள்ளை பிரபாகரன். பூமியின் பரப்பிலெல்லாம் தமிழின விதை விழக் காரணமானவர். இணைய வயல்களில் தமிழும் கதிர் விட்டு உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாய் ஒளி வீச மூல விசையாயிருந்தவர். வள்ளுவப் பெருமானார் சொன்ன வீரம், மானம், நடத்தை, தெளிவு நான்கிற்கும் முதல் எடுத்துக்காட்டாய் நின்றவர். "கூலிகள்' என்று உலகால் அறியப்பட்ட தமிழ் இனத்திற்கு வீரம் மிக்கவர்கள் என்ற வீரியப் பார்வை தந்தவர். காலம் செய்த சதியால் மகத்தான ஈழ விடுதலைப் போராட்டம் மீது ""பயங்கரவாதம்'' என்ற சாம்பற் கரித்துகள் படிந்து விட்டது. ஆனால் சிங்களப் பேரினவாதம் இதுவரை காலம் நயவஞ்சகமாய் மறைத்து நின்ற இனவெறிப் பயங்கரவாதத்தின் கோரப்பற்களை உலகத்தமிழர்கள் வெற்ற…
-
- 14 replies
- 4k views
-
-
சிலாகிப்பதற்கு எதுவுமில்லை FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான விவாதம் மூன்றாவது நாளையும் தாண்டி நான்காவது நாளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை என்பதை அடுத்தே, விவாதம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எல்லா உறுப்பினர்களுக்கும் இந்த விடயத்தில் வாய்ப்பு வழங்கப்படுவது நல்லதே. முக்கியமான தருணம் ஒன்றில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்வதற்கு அது வசதியாக இருக்கும். இந்த விவாதத்தில் உரையாற்றிய…
-
- 0 replies
- 559 views
-
-
”யுத்த காலத்திலும் பரீட்சைகளை புலிகள் தடுக்கவில்லை” May 23, 2022 2005- 2010 ஆம் ஆண்டு வரை தான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரீட்சைகள் அனைத்தும் தடையின்றி நடத்தப்பட்டன, இதன்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூட எந்தவொரு பரீட்சையையும் நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தவில்லை என்பதையும் என கல்வி அமை்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22.05.22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இன்று (23.05.22) ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும்…
-
- 0 replies
- 169 views
-
-
-- தென்மராட்சி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மக்களை சந்தித்தார். -- "அரசியல்" வேலைகளில் ஈடுபடவுள்ளார் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32111
-
- 1 reply
- 1k views
-
-
-அஸ்ரப் ஏ சமத் வடக்கு கிழக்கு மக்களிடம் மிகப்பிரசித்தி பெற்று விளங்கும் கொடுவாய் மீனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக குச்சவெளி பிரதேசத்தில் 500 சதுர அடிப்பரப்பில் கொடுவாய் மீன் குஞ்சுகளை வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தமீன் திட்டத்தில் ஆர்வம் கொண்ட நோர்வேநாட்டு முதலீட்டாளர் குழு அண்மையில் கிழக்குமாகாணத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வளங்களை பார்வையிட்டதுடன் திருகோணமலைக்குச் சென்று விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொடுவாய் மீன் வளர்ப்புத் திட்டத்தில் தமது ஆர்வத்தை வெளியிட்ட த…
-
- 0 replies
- 521 views
-
-
செவ்வாய்க்கிழமை, 13, ஜூலை 2010 (9:58 IST) இலங்கைத் தமிழருக்கான ஆதரவு எழுச்சி ஓயாது : பழ.நெடுமாறன் இலங்கைத் தமிழர் ஆதரவாளர்களை மிரட்டும் வகையில் புதியச் சட்டம் கொண்டுவரப் படுவதாக தமிழக அரசு மிரட்டுவதாகவும், அப்படி ஒரு அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு எழுச்சி ஓயாது என்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டி நேற்று (12ந் தேதி)அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து, மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுபவர்களைத் தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வர அரசு தயங்காது என்று அமைச்சர் …
-
- 0 replies
- 331 views
-
-
வடமாகாணசபை அமைச்சுக்கள், திணைக்களங்களின் பாதுகாப்பு பணியாளர் விபரங்களைத் திரட்டுகிறது இராணுவம்! [Tuesday, 2014-04-15 18:03:21] வடமாகாண சபை திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளின் பாதுகாப்பு பணியாளர்களின் விவரங்கள் கடந்த சில தினங்களாகத் திரட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அமைந்துள்ளன. அவற்றில் பாதுகாப்புக் கடமைகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணசபையின் சகல திணைக்களங்கள் …
-
- 0 replies
- 351 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு வரவேற்பு! சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்துவது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதவுரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகளை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்ததின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இம் முடிவை தாம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழுவின் ஒருங்கு கூட்டுனர…
-
- 1 reply
- 1.6k views
-