ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க யோசனை?: ஜே.வி.பி. கடுமையாக அரசை எச்சரிக்கின்றது. அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் திஸ்ஸ விதாரன சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையின் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிட்டால், அரசாங்கம் பெரும் அவலமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான விமல் வீரவன்ச இவ்வாறு ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் அங்கு மேல…
-
- 0 replies
- 716 views
-
-
கொழும்பு, மார்ச் 26- சீனா உட்பட 6 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இலங்கையில் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், இலங்கையில் உள்ள சபுகஸ்கந்த முகாம் மற்றும் கூட்டுப்படைகளின் முகாம் ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த முகாமில் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 80 பேர் தற்போது இலங்கையில் ராணுவப் பயிற்சி பெற்று வருவதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் இணையயதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 1 reply
- 1.1k views
-
-
பெளத்த தலைமையை உருவாக்கும் சக்தியாக நாம் இருப்போம் மாநாயக்க தேரர்களின் தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. அவர்களே அடுத்த தலைவரை தீர்மானிக்க வேண்டும் மாநாயக்க தேரர்களின் தலைமையில் சகல இனங்க ளையும் இணைத்துக்கொண்டு பயணிக்கும் தூய்மையானதும் தைரியமானதுமான தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும். அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க நாம் முன்வருவோம். ஆனால் தேர்தலில் நேரடியாக ஒருபோதும் நாம் குதிக்கப்போவதில்லை. தேரர்கள் மன்னர்களாக முடியாது, மன்னராவது எமது கடமையுமல்ல. ஆனால் மன்னர்களை உருவாக்கும் சக்தி நாமாகவே இருக்க வேண்டும். அதுவே எமது அடுத்த பயணம். இந் நாட்டினை கட்டியெழுப்ப ஹிட்லர் போன்ற ஒருவரே சரிய…
-
- 2 replies
- 363 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆதரவு 54 வீதத்தில் இருந்து 47 வீதமாக குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலைக் இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு இருந்த மக்கள் ஆதரவு 7 வீதத்தினால் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத பின்னணியில் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளமை சிக்கலுக்குரியது என கருத்து கணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை அறிவித்தால் ஜனாதிபதிக்கான மக்களின் ஆதரவு மேலும் வீழ்ச்சியடையலாம் எனவும் இதனால், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி அவதானக்கு உள்ளாகலாம…
-
- 2 replies
- 625 views
-
-
விஜயகலா புலம்பெயர் புலிகளின், நெருப்புக் கிடங்கில் பெற்றோல் ஊற்றியுள்ளார்… இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வது குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையப்போவதில்லை. அந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கான நடவடிக்கையாகவே இராஜினாமா கலாசாரத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது. எனினும் அவருக்கு எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து கூட்டு எதிர்க்கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளரர் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதன…
-
- 0 replies
- 223 views
-
-
இருதரப்பினரும் உடன்பாட்டை ஏற்படுத்துங்கள்: நோர்வேயின் முன்னாள் தூதுவர் சிறிலங்கா அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமும் அது தொடர்பான பேச்சுக்களும் ஆக்கபூர்வமானவை, அது தொடர வேண்டும் என நோர்வேயின் சிறிலங்காவிற்கான தூதுவர் ஜோன் வெஸ்ற்பேர்க் கூறியுள்ளார். "இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க உதவும். அதுவே இனப்பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வுக்கான அடித்தளமாக அமையும். நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் அதாவது நாங்கள் தீர்வைக் கொண்டுவர முடியாது. "இருதரப்பையும் ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வரவே எங்களால் முடியும். தீர்வை எட்டுவது அவர்களைப் பொறுத்தது. சர்வதேசத்தின் கர…
-
- 0 replies
- 910 views
-
-
பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தால் 100ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு பதுளை, லுணுகல – சோலன்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். லுணுகல சோலன்ஸ் மேற்பிரிவை சேர்ந்த 117 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லுணுகல பிரதேச செயலாளர் டீ.எம்.எல்.எச் திசாநாயக்க தெரிவித்தார். இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் சோலன்ஸ் மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை தொடக்கம் சோலன்ஸ் தோட்ட மக்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பி…
-
- 0 replies
- 335 views
-
-
பிறந்திருக்கும் புதுவருடத்தை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் புதுவருட பிறப்பையொட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.கோட்டைக்கல்லாறு பிறன்ஸ் விளையாட்டுக்கழகத்தினரால் இந்த புதுவருட விளையாட்டுப்போட்டிகள் நடாத்தப்பட்டன. இன்று காலை முதல் நிகழ்வாக மரதன் ஓட்டப்போட்டி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பித்து கோட்டைக்கல்லாறு பிரதேசத்தை சுற்றி இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கோட்டைக்கல்லாறு பாலத்துக்கு அருகில் படகு போட்டிப் இடம்பெற்றது.படகு போட்டியை தொடர்ந்து நீச்சல் போட்டியும் இடம்பெற்றது. இந்தபோட்டிகளில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து போட்…
-
- 0 replies
- 985 views
-
-
தமிழீழத்தின் யாழ் பல்கலைக்கழகத்தில் சற்றுமுன்னால் மாவீரர் நாள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. காலையில் இருந்து சிங்கள ராணுவப் படையினர் குவிக்கப்பட்ட நிலையில் பாரிய கண்காணிப்பின் மத்தியில்,ஒவ்வொருவராக சோதனையிடப்பட்டே வளாகத்தில் அனுமதிக்கப்பட்டபோதும்,குறித்த நேரத்தில் மாணவர் கூடும் அறையில் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடி சுடரேற்றிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். சுதந்திர தாகம் தணியாது. ஆயுதம் கொண்டு எம்மை அடக்கவும் முடியாது.
-
- 1 reply
- 398 views
-
-
மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா நாமல் ராஜபக்சவின் சிறப்பு பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி அளித்தது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மங்கள சமரவீரவின் கருத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விளக்கம் கோரியிருக்கிறோம் என்று ரஷ்ய தூதரக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். நாமல் ராஜபக்ச ரஷ்யாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றார் என்று அண்மையில் மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருந்தா…
-
- 0 replies
- 499 views
-
-
ஹம்பாந்தோட்டை, கிரிந்தயில் நில அதிர்வு!நிலத்தில் பிளவு! வீடுகளில் வெடிப்புகள்! Posted by uknews On April 20th, 2011 at 4:01 am ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறினார். இதன் விளைவாக இப்பிரதேசத்திலுள்ள 8 வீடுகளில் வெடிப்புக்களும் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. என்றாலும் ஒ…
-
- 0 replies
- 990 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது பதவிக்காலம் முடிவடைய முன் ஜனாதிபதி ஆட்சி முறை இந்நாட்டு அரசியலிலிருந்து ஒழிக்கப்படும். அதற்கு பின் இந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் இருக்க மாட்டார் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். மாத்தறை மாவட்டத்தில் ரண்பிம காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிடுபவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கே முயற்சி செய்கின்றனர். ஜனாதிபதிக்குள்ள ஒரேயொரு பாதுகாப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையாகும். இதனை ஒழித்தால் ஜனாதிபதியை இலகுவில் யுத்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யலாம் என்று அல்ஜ…
-
- 0 replies
- 374 views
-
-
இன்று திங்கள் காலை 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வந்த இரு ஆயுததாரிகளினால் சாவகச்சேரி நகர சபை பொதுசந்தை இறைச்சிக் கடை ஒன்றினுள் வைத்து இரு இளைஞார்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 22 அகவையுடைய குணரெட்ணம் தர்சன் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவரான 27 அகவையுடைய செல்லத்தம்பி செல்வரூபன் என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரழந்துள்ளார். இரு சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
-
- 0 replies
- 957 views
-
-
ஐ.நா அறிக்கையை வெளியிடாது தடுக்க இந்தியா துணைபோகின்றதா? - தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் கேள்வி! சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை வெளியிடவிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தொ.பரமசிவம் குற்றம் சுமத்தியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைக்கு இந்தியாவும் முணை நின்றதால், ஈழத்தமி;ழ் மக்களிடம் மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இலங்கைத் தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிட க…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
திங்கள், டிசம்பர் 8, 2014 - 09:12 மணி தமிழீழம் | சயந்தன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு! சிறிலங்கா அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த, இதொகா தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமானுடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த இதொகா குழுவினர், மலையகத் தமிழர்கள், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பிரதியமைச்சர் திகாம்பரம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாகவு…
-
- 1 reply
- 518 views
-
-
மத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. தங்காலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர், “நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கையினால், எமது நாடு பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றிச் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.n…
-
- 0 replies
- 176 views
-
-
Published By: VISHNU 11 APR, 2023 | 05:09 PM கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து அனுராதபுரம் - வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு விஜயபாகு கம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருத்த வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கிராம மக்களை அப் பாதையில் இருந்து சுமா…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கை மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா – ரஷ்யா தடுக்கக் கூடாது – ம.உ.கண்காணிப்பகம்! Posted by admin On April 30th, 2011 at 11:47 am இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுக்கக்கூடாது என வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை மேற்கொண் டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந் துள்ள நிலையிலும், அதில் மேற்கொள்ளப் பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அரசு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அற…
-
- 0 replies
- 863 views
-
-
இராணுவத்தால் பிடிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை : ஆணைக்குழு முன் சாட்சியம் ராணுவத்தால் முகமாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகிய எனது கணவரை இதுவரை காணவில்லை என அவரது மனைவியான பி. பாலேஸ்வரி சாட்சியமளித்தார். வவுனியா மாவட்டத்திற்கான காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றையதினம் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு சாட்சியமளிக்கையில், நாங்கள் வவுனியாஇ ஈச்சங்குளத்தில் வசித்து வந்தோம். பின்னர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முரசுமோட்டைப் பகுதியில் குடியேறிய போது எனது கணவர் தொழிலுக்காக வேறு பலருட…
-
- 2 replies
- 778 views
-
-
சபாநாயகரே தீர்மானம் எடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கண்டியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வு வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை இன்று சபாநாயகருக்குத் தெரியப்படுத்தவுள்ளது. அந்த வகையில் நாளைய அமர்வில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிப்ப…
-
- 0 replies
- 294 views
-
-
காவல்துறையினரின் தடுப்புக்காவலில் இருந்த சிங்கள இளைஞர் மரணம் சிறிலங்கா குற்றத் தடுப்புப் பிரிவினரால் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்களவர் ஒருவர் கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் கழிவறையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஓ.ஜி.சந்திரசேகர என்பவரே தமது போர்வைத்துணியை பயன்படுத்தி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதைனையின் பின்னரே அது தற்கொலையா அல்லது கொலையா என கூறமுடியும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு நவம்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறைக்கைதிகளுக்கான உடையில் ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஞானசார தேரர் தற்போது சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் 5 ஆவது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஒரு சிறை அதிகாரியும், இரண்டு சிறைக்காவலர்களும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடையை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். சிறைக்கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அணியும், காற்சட்டை மற்றும் மேலங்கியே ஞானசார தேரருக்கு…
-
- 0 replies
- 480 views
-
-
''வெடிகுண்டு போலாகிய யுத்தநிறுத்த ஒப்பந்தம்'' மனோகரன் இலங்கை இனப்பிரச்சினையைச் சமாதான வழி முறைமூலம் தீர்ப்பதற்கான முதற்படியாக ஐந்து ஆண்டுகளின் முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இப்போது ஒரு வெடிகுண்டு போலாகியிருக்கிறது. புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கைத் தீவு முழு அச்சத்தில் இருந்ததே இதற்குச் சான்று. உடன்படிக்கையின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி பெரும் தாக்குதல்களோ படை நடவடிக்கைகளோ நிகழலாம் என்ற அச்சத்தில் மக்கள் திகிலடைந்திருந்தனர். எல்லைக் கிராமங்களிலிருந்தும் படை நிலைகளுக்கு அண்மையிலிருந்தும் தமிழர்கள் இடம் பெயர்ந்திருந்தனர். தொண்டு நிறுவனங்கள் கூட பெரும் தாக்குதல்களை அல்லது முழு அளவிலான யுத்தத்தை …
-
- 0 replies
- 789 views
-
-
இராணுவ சீருடை ,ஆயுதங்களுடன் 8பேர் கொண்ட குழு பேருந்தை கடத்தி பயணிகளிடம் கொள்ளை ..! இன்று காலை பணமுன அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை இராணுவ சீருடை , ஆயுதங்களுடன் வருகை தந்த எட்டு பேர் கொண்ட ஆயுத குழு இடை மறித்து வேறு பகுதிக்கு கடத்தி அதில் வருகை தந்த பயணிகள் அணைவரிடமும் ஆயுத முனையில் மிரட்டி நகைகள் பணம் என்பவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது . இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்களை விசாரித்து நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டனர் . இந்த திருடர்களை மடக்கி பிடிக்க இரு பொலிஸ் விசேட குழுக்கள் அமைக்க பட்டுள்ளன . Short URL: http://www.ethirinews.com/?p=6…
-
- 0 replies
- 1.8k views
-
-
அண்மையில் கொழும்பு காந்தானை மற்றும் அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட சடலங்களும் கருணா ஒட்டுக்கும்பலின் முன்னால் உறுப்பினர்களினதே என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடியவர்களே, இவ்வாறு கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பதாக, அவர்களது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இதேவெளை சிறிலங்காப் படையினரின் துணையின்றி, பல சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு கந்தானைப் பகுதியில் சடலங்கள் வீசப்பட முடியுமென பல அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மட்ட்க்களப்பில் கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட சி…
-
- 9 replies
- 4.8k views
-