நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஆட்டு மூளைப் பொரியல் ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.......... தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் எண்ணைய் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். * அடிக்கடி மூளை…
-
- 3 replies
- 966 views
-
-
இறால் சூப் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இது மாதிரியான சூப் வகைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தெரியும். தேவையானவை சிக்கன் (வேகவைத்த) - 1/4 கப் லவங்கம் - சிறிது கேரட்- 1 வெங்காயம் - 1 பூண்டு - சிறிது தக்காளி (வேகவைத்து மசித்தது ) - 1 கப் மிளகு தூள் - சிறிது இறால் - 1/4 கிலோ தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை தண்ணீர் கொதிக்கவைத்து இறாலை அதில் சிறிது நேரம் வேகவைக்கவும்.இறால் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம்,கேரட்,பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.இதனோடு வேகவைத்த சிக்கன்,உப்பு, மிளகு தூள், இறால்,இறால் வேகவைத்த தண்ணீர்,வேகவைத்து மசித்த தக்காளி ஆகியவற்றை …
-
- 3 replies
- 792 views
-
-
30 வகை பிரியாணி எவ்வளவுதான் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் சமைத்துப் பரிமாறினாலும்... டேஸ்ட் பார்த்துவிட்டு, பல சமயங்களில் உதட்டைப் பிதுக்கும் பிள்ளைகளும், எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுவிட்டு கைகழுவும் பெரியவர்களும், பிரியாணி செய்துகொடுத் தால்... 'வாவ்!’ என்று வாய்பிளப்பார்கள். அந்த அள வுக்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அள்ளி அள்ளி சுவைக்க வைக்கும் பிரியாணியில் 30 வகைகளை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இளநீர் பிரியாணி, முருங்கைக் காய் பிரியாணி, பைனாப்பிள் பிரியாணி ஆகிய வற்றுடன் உடல்நலத்துக்கு உற்ற துணையாய் கைகொடுக்கும் வேப்பம்பூ பிரியாணி, நார்த்தங்காய் பிரியாணி போன்றவையும் இதில் அடங்கும். ''அப்புறமெ…
-
- 8 replies
- 10.7k views
-
-
தக்காளி வெண்ணெய் வெங்காயம் தேவையான பொருள்கள்: தக்காளி = 5 வெங்காயம் = 1 மிளகுத்தூள் = தேவையான அளவு பூண்டு = 6 பல் வெண்ணெய் = 2 தேக்கரண்டி சோள மாவு = 1 தேக்கரண்டி உப்பு = தேவையான அளவு கொத்தமல்லி இலை = தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமா…
-
- 1 reply
- 609 views
-
-
அவல் தோசை ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST) தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-t…
-
- 8 replies
- 1.9k views
-
-
கச கசா ..இதனை எப்படி பாவிக்க வேண்டும் ? கச கசா ..இதன் பயன்கள் பற்றி கூற முடியுமா நண்பர்களே ? சர்பத் தயாரிக்கும் பொழுது கச கசா இதனை பாவிக்கின்றார்கள் இதனை சுடு நீரில் அவித்து பாவிப்பதா ,,அல்லது தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா.. எப்படி என்ற தகவல்கள் அறியத்தாருங்கள் கச கசா ITHIL பலவகை உண்டா..அல்லது ? தயவு செய்து பதில் தாருங்கள்
-
- 7 replies
- 7k views
-
-
ஹோட்டல் சரவணபவன் காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது! அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1 (தோலுரித்து, நீளமாக வெட்டியது) கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் ஓமம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் - 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெயானது சூடானதும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை மாவில் பிரட்டி போட்டு பொன்னிறமாக பொரித்த…
-
- 5 replies
- 926 views
-
-
உருளைக்கிழங்கு வடை. உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது. அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) பெருங்கா…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 10 replies
- 1.8k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 728 views
-
-
-
சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி. தேவையான பொருட்கள்: சேமியா – 200 கிராம் தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 கேரட் – 25 கிராம் பீன்ஸ் – 25 கிராம் பட்டாணி – 25 கிராம் இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 1 பல் பட்டை – 2 துண்டு கிராம்பு – 3 கசகசா – 1/2 தேக்கரண்டி செய்முறை சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டுதாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்…
-
- 0 replies
- 1.9k views
-
-
“வெஜிடபிள் சமோசா செய்யும் முறை தேவையான பொருட்கள் மைதா மாவு – ஒன்றரை கோப்பை வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி சீரகம் – அரைத் தேக்கரண்டி உருகைக்கிழங்கு – அரைக் கிலோ பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி – ஒரு பிடி எண்ணெய் – இரண்டு கோப்பை செய்முறை : இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்…
-
- 0 replies
- 664 views
-
-
கே.எஃப்.சி. சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..? பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று ஆசை. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்) இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 1…
-
- 12 replies
- 8.1k views
-
-
தேவையான பொருட்கள் உழுந்து – 1 கப் சோம்பு – 1 ரீ ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 3 கறிவேற்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு பொரிப்பதற்கு ஓயில் – ¼ லீட்டர் வறுத்து அரைத்து எடுக்க ஏலம் – 2 கராம்பு – 1 கறுவா – 1 குழம்பு செய்வதற்கு மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன் தனியாப்பொடி – ½ ரீ ஸ்பூன் தேங்காய்ப்பால் – 2 கப் உப்பு தேவையான அளவு எலுமிச்சம் பழம் – ½ மூடி தாளிதம் செய்வதற்கு கடுகு உழுத்தம் பருப்பு வெங்காயம் கறிவேற்பிலை செய்முறை உழுந்தை ஊற வைத்து வடை மாவிற்கு அரைப்பது போல சோம்பு உப்புச் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுங்கள். இத்துடன் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேற்பிலை கலந்து விடுங்கள். எண…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
கட்லட் கறி செய்யத் தேவையான பொருட்கள் எலும்பில்லாத கோழி ¼ கிலோ உருளைக்கிழங்கு -1 வெங்காயம் – 2 இஞ்சி உள்ளி பேஸ்ட் – 2 ரீ ஸ்பூன் மிளகு தூள் – 1/4 ரீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1/2 ரீ ஸ்பூன் கறிவேற்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு இறைச்சிச் சரக்குத் தூள் – 1/2 ரீ ஸ்பூன் தேசிச்சாறு சில துளிகள் எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன் தோய்ப்பதற்கு தேவையான பொருட்கள் முட்டை வெள்ளைக்கரு -2 ரஸ்க் தூள் – 1/2 பைக்கற் பொரிப்பதற்கு எண்ணெய் ¼ லீட்டர் சோஸ் தயாரிக்க தக்காளிப்பழம் – 4(சுடுநீரில் போட்டு தோலை நீக்கி மசித்து எடுங்கள்) சிலி சோஸ் – ¼ கப் வெங்காயம் – 1/2 இஞ்சி பேஸ்ட் – ½ ரீ ஸ்பூன் வினாகிரி – ½ ரீ ஸ்பூன் உப்பு சிறிதளவு- எண்ணெய் 2 ரீ ஸ்பூன் செய்ம…
-
- 0 replies
- 1k views
-
-
பற்றிஸ் கறி செய்யத் தேவையான பொருட்கள். 1. எலும்பில்லாத மட்டன் – ¼ கிலோ 2. வெங்காயம் – 1 3. மிளகாயத் தூள் – 1 ரீ ஸ்பூன் 4. தனியாத் தூள் – ½ ரீ ஸ்பூன் 5. சீரகத்தூள் – ½ ரீ ஸ்பூன் 6. மஞ்சள் தூள் – சிறிதளவு 7. மட்டன் மசாலா – 1 ரீ ஸ்பூன் 8. இஞ்சி உள்ளி பேஸ்ட் 2 ரீ ஸ்பூன் 9. உப்பு தேவையானளவு 10. கறிவேற்பிலை – சிறிதளவு 11. எலுமிச்சைச் சாறு – சில துளிகள் 12. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்யும் முறை இறைச்சியை அரைத்து எடுத்து அதனுடன் உப்பு, தனியாத் தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலாத் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி உள்ளி பேஸ்ட் பிரட்டி, 15 நிமிடம் ஊறவிடுங்கள். பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேற்பிலை போட்டு, இறைச்…
-
- 2 replies
- 4k views
-
-
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு …
-
- 0 replies
- 686 views
-
-
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு கீரையை சட்னி போன்று செய்து கொடுத்தால், நிச்சயம் சாப்பிடுவார்கள். இங்கு வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து, நீரில் அலசியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) வர மிளகாய் - 3 பூண்டு - 5 பற்கள் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்…
-
- 2 replies
- 1.8k views
-
-
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப) சோளமாவு: 1 தே. கரண்டி முட்டை : 1 பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப) இஞ்சி : ஒரு சிறு துண்டு டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி சோயா சாஸ் : 2 தே. கரண்டி சில்லி சாஸ்: 1 தே.கரண்டி மஞ்சள் தூள் : சிறிதளவு உப்பு தேவையான அளவு எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி செய்முறை *கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். *ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி …
-
- 2 replies
- 937 views
-
-
கறி ரொட்டி தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு 1. மைதா மா – 2 கப் 2. ஈஸ்ட் – 1 ரீ ஸ்பூன் 3. உப்பு சிறிதளவு 4. மார்ஜரீன் – 1 டேபிள் ஸ்பூன் கறி தயாரிக்க 1. மீன் துண்டுகள் – 1 கப் 2. வெங்காயம் – 1 3. பூண்டு – 2 4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன் 5. கடுகு – ¼ ரீ ஸ்பூன் 6. மிளகாய்த் தூள் – ரீ ஸ்பூன் 7. மஞ்சள் தூள் – ½ ரீ ஸ்பூன் 8. கறிவேற்பிலை சிறிதளவு 9. உப்பு, புளி தேவையான அளவு 10. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை 1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள…
-
- 7 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள் : கோதுமை மா - 500 g வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 4 உப்பு - அளவானது தண்ணீர் - அளவானது எண்ணெய் - அளவானது செய்முறை : வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக அரிந்து மாவுடன் உப்பும் சேர்த்து கையால் பிசைந்து பின் சிறிது சிறிதாக நீர் விட்டு ரொட்டி சுடும் பதத்திற்கு குழைத்துக்கொள்ள வேண்டும். தாச்சிச் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சாடையாகத் தட்டி நடுவே துளை போட்டு, அடுப்பை அளவாக எரியவிட்டு வடையைப் போட்டு சிறிது நேரத்தில் அகப்பையால் பிரட்டி வேகவிட்டு பொன்னிறம் வந்ததும் எடுக்கவேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைக்கலாம். சுடச் சுட உண்ணவும் ஆற…
-
- 12 replies
- 6.1k views
-