நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம். உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில் இதே திகதியில் (11/ 09/2001) காலை 8:46 மணியளவில் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்கள் மீது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று மோதியது. 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் வொஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு மோதியது. எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இவ் விபத்தினால் அமெரிக்காவே அதிர்ந்துபோய் இருந்த நிலையில் தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில்அதாவது காலை 9:03க்கு…
-
- 1 reply
- 413 views
-
-
இன்னுமொரு கள உறவு இதே செய்தியை இணைத்திருப்பதால் நீக்குகிறேன்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா விளைபொருள் உற்பத்தியார்கள் சங்கம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்ப…
-
- 35 replies
- 3.9k views
-
-
"அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] ஆகஸ்ட் 6, 1945 அன்று, இரண்டாம் உலகப் போரின் போது (1939-45), ஒரு அமெரிக்க B-29 குண்டுவீச்சு விமானம் உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது B-29 நாகசாகியின் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. ஒரு ஆகஸ்ட் 6, மற்றும் ஆகஸ்ட் 9, ஆகிய தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு நான் சென்ற போது, அங்கு முன்பு ஏற்பட்ட பேரழிவை என் கண்களால் நேரடியாக பார்த்த பிறகு, முன்பு அறிவும் உண்மையான விளக்கமும் வர நீண்ட காலமாக இருந்ததாக உணர்ந்த நான், இப்போது, அது எனக்கு வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல …
-
- 0 replies
- 133 views
-
-
கோவிட்-19 வந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? - வழிகாட்டல் நிகழ்ச்சி ச.அ.ராஜ்குமார்ஜெனி ஃப்ரீடா வழிகாட்டல் நிகழ்ச்சி பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா நிகழ்ச்சியில் பங்கேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில்தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. திடீர் ஆக்ஸிஜன் குறைபாடு கொரோனா அறிகுறிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னையும் தற்போது தலைவிரித்தாடுகிறது. கொரோனா பரவல் அதிகரித்துச் ச…
-
- 0 replies
- 654 views
-
-
வாக்கிய கணிப்பின்படி கர வருஷம் பிறக்கும் நேரம் 14.04.2011 (சித்திரை 01) வியாழக்கிழமை முற்பகல் 11.31 மணியளவில் கர வருடம் பிறக்கின்றது முற்பகல் 7.33 இலிருந்து பிற்பகல் 3.33 வரை விஷûபுண்ணிய காலமாகும் திருக்கணித கணிப்பின் படி கர வருடம் பிறக்கும் நேரம் 14.04.2011 வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் கர வருஷம் பிறக்கிறது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஷû புண்ணியகாலமாகும். கை விசேடம் சித்திரை 1 வியாழன் மாலை 6.42 7.29 இரவு 7.41 8.11 சித்திரை 2 வெள்ளி இரவு 6.49 8.08 குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட நேரங்கள் மிக சிறப்பான நேரமாகும்.ஏனைய நேரங்கள் வாக்கியத்தில் மத்திமமான நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு October 24, 2020 Share 14 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 24.10.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘கடு’ என்பது ஓர் பழந்தமிழ்ச் சொல். இச் சொல் பற்றித் தொல்காப்பியர் எழுதியுள்ளார். இச் சொல்லுக்குப் பத்து பொருள்களைக் அவர் குறிப்பிடுகிறார். அப் பத்து பொருள்களில் கூர்மை என்பதும் ஒன்று. இக்’கடு’ என்னும் சொல், ‘கடி’ எனவும் இதே கூர்மை பொருளில் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள்ளது. ட>ர திரிபில் இக்’கடு’ சொல், …
-
- 0 replies
- 555 views
-
-
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். 16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது…
-
- 2 replies
- 579 views
-
-
Nov 6, 2010 / பகுதி: செய்தி / கவிஞர் சேரனின் நாடகம் மீண்டும் ரொரன்ரோவில் மேடையேற்றப்படவுள்ளது கவிஞர் சேரனின் ‘Not By Our Tears’ நாடகம் மீண்டும் ரொரன்ரோவில் மேடையேற்றப்படவுள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி மாலை 4:30க்கும் 8:00மணிக்கும் இரு காட்சிகளாக கொலிஜ் அன் சென் ஜோர்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள ரொரன்ரோ பல்கலைக் கழகத்தின் Koffler Centre அரங்கில் நிகழ்வு இடம்பெறும். Asylum Theatre Group ஆல் தயாரிக்கப்பட்ட இந்நாடகம் துஷி ஞானப்பிரகாசத்தின் நெறியாள்கையிலும் கருணாவின் வடிவமைப்பிலும் கடந்த நவம்பர் மாதம் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, ஒட்டாவா நகரிலும், அமெரிக்காவின் நியு ஜேர்சி, கனற்றிக்கற் ஆகிய மாநிலங்களிலும், நியு யோர்க், சிக்காகோ ஆகிய …
-
- 1 reply
- 827 views
-
-
நுழைவாயில் கோபுரம் திறந்து வைப்பு! வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற் கோபுரம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப்பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்து வைத்திருந்தனர். https://newuthayan.com/நுழைவாயில்-கோபுரம்-திறந்/
-
- 0 replies
- 900 views
-
-
யேர்மனியில் எதிவரும் ஞாயிற்றுக்கிழமை (24-01-2010) அன்ற நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானதின் அடிப்படையில் இறைமையுள்ள சுதந்திரமான தனித்தமிழீத் தனியரசுக்கான மீள் வாக்கெடுப்பு நடைபெறும் இடங்களும் முகவரிகளும்:யேர்மனியில், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மையங்களின் முகவரிகள் 1. Tennenbacherstr38,79106 Freiburg 2. Weinstr-6,91710 Gunzenhausen 3. Allaanstr-90,73230 Kirchheim/Teck 4. Enzstr-22,75417 Mühlacker 5. Alexanderstr-23,90459Nürnberg 6. Matterstockstr-41,97080 Würzburg 7. Hemaurstr-20a,93047 Regensburg 8. Marbacherstr-18,70135 Stuttgart 9. Aspacher Str32,71522 Backnang 10. Sp…
-
- 0 replies
- 596 views
-
-
திருக்கேதீஸ்வர மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம். June 30, 2022 மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் இன்று வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. கும்பா விசேசத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள் ,தர்மபுர ஆதி யினத்தினை சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்க பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர். -அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள் தர்மபுர ஆதீன மு…
-
- 1 reply
- 346 views
-
-
கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில்போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு,சிறியோர், முதியோர் காப்பகங்களுக்கான உதவி இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின்பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம்செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுநாமறிந்த உண்மை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாள்வாதரத்தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியதேவைகளைப் பூர்த்தி செய்த…
-
- 0 replies
- 731 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது! சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையயில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது இம்மாதம் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சு…
-
- 0 replies
- 355 views
-
-
வணக்கம் தமிழ்ச் சகோதரர்களே...! எமது தமிழீழ மண்ணின் விடிவிற்காக, நாம் அரசியல் வழியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்கான ஒரு திறவுகோலாக, எமது முன்னோர்கள் வழிமொழிந்த அரசியற் பாதையான வட்டுகோட்டைத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தை (ஜனவரி)மாத இறுதியில் ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. எமது வேணவாவாகிய தமிழீழம் என்ற நாட்டிற்காகப் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு உழைக்கவேண்டும். ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பதினெட்டு வயதைக்கடந்த எம்உறவுகள் அனைவரும் வாக்களித்து, அனைத்துலகத்திற்கு எமது வேணவாவைத் தெரியப்படுத்துவோம். உங்கள் நகரங்களுக்கு அருகாமையில் எங்கெங்கு வாக்குச்சாவடிகள் அமையபெறவிருக்கின்றன என்ப…
-
- 8 replies
- 1.7k views
-
-
30.01.2010 அன்று மன்கைம் நகரிலே தமிழ்த்திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத்திரைப்படம் திரையிடப்படுகிறது.
-
- 0 replies
- 1k views
-
-
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்! சைவசமயத்தவர்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது. கந்தசஷ்டி விரதம் நேற்று(புதன்கிழமை) ஆரம்பமான நிலையில் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. மாவிட்டபுர கந்தசுவாமி பெருமானுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை அரிச்சனை வாழ்த்து தோத்திரம் என ஆகம முறைப்படி வழிபாடுகள் நடாத்தப்பட்டிருந்ததுடன், காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கந்தசுவாமி பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகைதந்து பக்த அடியார்களுக்கு அளுள்பாலித்திருந்தார். https://athavannews.com/2022/1307096
-
- 0 replies
- 259 views
-
-
லண்டனில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் 14 ம் 15 ந் திகதிகளில் காண்பதற்கு ஆயத்தமாகுங்கள்.
-
- 5 replies
- 2.5k views
-
-
இன்று மகா சிவராத்திரி விரதமாகும்! சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி இன்று பெப்ரவரி 26 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும். சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும். முதல் காலம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கு தொடங்கும், மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும், நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். இந்த 4 பூஜைகளிலும் பங்கேற்று சிவனை மனமுருகி தரிசித்தால் அவரின் அருளை பெற்று உங்…
-
- 6 replies
- 358 views
- 1 follower
-
-
டெல்லி: உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும். புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங…
-
- 0 replies
- 1k views
-
-
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பூரணையே சித்திரா பூரணையாகும். அன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். அந்த நாளில் பொங்கி வழியும் பால் நிலவைப் போல் மக்கள் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கித் திளைக்கும். அந்நாளில் பொங்கலிட்டுத் தெய்வங்களை மக்கள் வழிபட்டு விழாவாற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். இதற்கு சித்திரைக் கஞ்சி என்று பெயர், மாலையில் சித்திரகுப்தருடைய கதையை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாரும் பயபக்தியுடன் கதையைக் கேட்டு அனுபவிப்பார்கள். பொன், வெள்ளி இவைகளாலான பதுமையில் சித்திர குப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம், வெல்லத்துடன் கலந்த எள், பால். நெய் முதலியவை படைத்து வழிபாட்டின் முடிவில் பாயாசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் …
-
- 5 replies
- 1.4k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்! முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் விஜயதசமியான இந்நன்நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்றது. விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவ…
-
- 0 replies
- 383 views
-
-
-
- 16 replies
- 2.4k views
- 1 follower
-
-
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும் கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட …
-
- 2 replies
- 849 views
-
-
கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின்... சிலை, மட்டக்களப்பில் திறந்து வைப்பு! உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர் சிவலிங்கம் மாமா.அவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதைமூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.எங்கும் யாரிடமும் இல்லாத சிறுவர்களுக்கு வித்தியாசமான முறையில் கதைகூறும் ஆற்றல்கொண்டு க…
-
- 0 replies
- 320 views
-