Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    ஆளுமை லலிதா மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது பன்னாட்டு வங்கியின் அலுவலகம். நீண்டு கிடந்த அந்த அறை முழுவதும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்களும் பெண்களுமாக அலுவலக ஊழியர்களும் பணி மும்முரத்தில் தம்மை மறந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மதியநேரம் வருவதற்குள்ளாகவே பரபரப்பு மெல்ல அடங்கி மாலை நேரம் நெருங்கிய போது அலுவலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது. அவ்வலுவல் அறையில் தனக்குண்டான இருக்கையில் அமர்ந்து பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த இளங்கோ அலுவலகம் வெறுமையாவதை உணர்ந்து, நேரத்தை அறிந்து கொள்ள இடது கையின் மணிக்கட்டினைப் பார்க்க அந்த இடம் வெறுமையாக இருந்தது. கைக்கடிகாரம் என்னவாயிற்று? அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்றிரவு…

  2. கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை 1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை …

  3. வளாகம் போன புதிது. புதிய இடம். புதிய போதனை மொழி-ஆங்கிலம். புதிய பாவனை மொழி-சிங்களம்.( கடை கண்ணிக்கு போறதெண்டால் சிங்களம் வேணும்). சிங்களவர்களாக ஆமிக்காறனை மாத்திரம் தெரிந்த எங்களுக்கு சிங்கள ஊரில் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அனுபவம். புதிய நண்பர்கள் நண்பிகள் என்று எல்லாமே புதிது. ஒரு மாதகாலத்தில் எல்லாம் ஓரளவு பழக்கத்தில் வரத் தொடங்கியிருந்தது. அன்றும் வழமை போல விரிவுரை சென்ற எமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வேறுபாடு தெரிந்தது. நட்புடன் சிரிக்கும் எமது சிங்கள நண்பர்களின் முகம் இருண்டிருந்தது. வழக்கமான புன்னகை தொலைந்திருந்தது. பிறகுதான் தெரிந்தது காரணம். ஆனையிறவை புலிகள் பிடித்துவிட்டார்களாம். ஆயிரக்கணக்கில் ஆமி பலியாகிவிட்டதாம். எங்களுக்கு உள்ளுக்குள் …

  4. http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_20.html யாழ் குடாநாட்டில் ஒருவன் தடக்கி விழுந்தால் ஒரு பள்ளிகூடத்திலோ ஒரு கோயிலிலோ விழுவான் என்று நகைச்சுவையாய் சொல்வார்கள். கோயிலை சுற்றி வாழும் மத பண்பாட்டு கோலங்களினூடாக இவர்களின் வாழ்வின் அசைவும் இருந்தது. இந்த பக்தி மய கோசங்கள் ஜகதீகங்கள்,கர்ண பரம்பரை கதைகள் போன்றவற்றில் எங்கள் வீட்டு பெரிசுகளுக்கு ஈடுபாடு கொஞ்சம் கூட. இவர்கள் செய்யும் மூல சலவை செய்யும் கதைகளினூடாக வளர்ந்தாலும் பின்னர் இதில் நம்பிக்கை அற்றவனாக விட்டேன். இவர்கள் சொன்ன கதைகளில் ஒன்று ஞாபகத்தினூடு ஞாபகமாக

  5. விசேட இ-மெயில்கள் உருவாக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவுக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த பதிவை எழுதுகின்றேன். எங்கள் முதலாவது இ-மெயில் ஆக என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, எமது யாழ்கள நண்பர் வானவில் எழுதிய “இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.” என்ற கூற்றுக…

  6. லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்) பருத்திதுறை(குட்டலை) இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார். அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி. …

    • 2 replies
    • 1.1k views
  7. Started by Manivasahan,

    காதலர் தினத்திற்காக எழுதிய கதை சற்றுக் காலதாமதாக வருகிறது. வாசிச்சப் போட்டு அப்படியே போகாமல் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். தெளிவு முற்றத்தில் வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங் கால்களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது. தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிர…

  8. Started by வானவில்,

    அலைகள் மணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். மணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர…

  9. http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_5401.html லொக் லொக் என்று சதா இருமியபடி கொண்டிருந்தது உந்த அப்பம்மா. சாடையாய் வந்த தூக்கத்தை கெடுத்து போட்டுது என்று மனதிலை பொருமி என்று படுக்க . அதைவிட வெளியே வேலிக்கு போட்ட சொத்தி பூவரசு மரத்திலிருந்து அண்ட காகம் ஒன்று தலையை குத்தி குத்தி கரைந்து கொண்டிருந்தது. வராத ஆக்கள் தூரத்திலிருந்து வர போயினோமோ .அல்லாட்டி மண்டையை போட்டினமோ.காகத்தின் பாசையை தெரிந்த மாதிரி மொழி பெயர்த்து கிழவி தன் பாட்டில் புறு புறுத்து கொண்டிருந்தது. வாசலில் சைக்கிள் மணி அடிக்க தந்தியோடாய் மோனை திடுக்கிட்டு பட படக்க. இல்லை இவன் மூர்த்தியணை என்று கொண்டு படலைக்கு போக அவன் பட படத்துக்கொண்டு பேய் அறைஞ்சவன் மாதிரி நின்று

  10. வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான். “டேய்! சின்னத்தம…

  11. இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இங்கு புதிது என்பதால் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும். என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை. அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே. அ…

  12. சிறிது காலமாக சிறீலங்கா சிறைகளில் அப்பாவித் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பிடிக்கப்பட்டு அடைக்கப்படுகிறார்கள். இந்தச் சிறை அனுபவங்கள் பயங்கரமானது. நேரில் அனுபவித்தவர்களிற்குத்தான் இதன் துன்பங்கள் தெரியும். யாழ் களத்திலும் சிறீலங்கா சிறைகளில் வைத்து செய்யாத குற்றத்திற்காக சிங்களக் குண்டர்களால் துன்புறுத்தப்பட்ட பலர் இருக்கக்கூடும். உங்கள் சிறீலங்காவில்பட்ட சிறைஅனுபவங்களை யாழ்கள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இக்கருத்தாடலை நாம் ஒட்டியுளோம். இங்கு எமது அனுபவங்களை நாம் கூறுகின்றோம். சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்களையும் கூறி வெளி உலகத்திற்கு தெரியாத உண்மைகளை அம்பலப்படுத்துங்கள்! இங்கு நாம் எழுதப்போகும் சம்பவங்கள் எமது சொந்தவாழ்வில் நடைபெற்ற…

    • 103 replies
    • 15.7k views
  13. அன்பார்ந்த யாழ்கள உறவுகளே! ஒரு பேப்பரில் தொடராக வெளிவரத் தொடங்கியிருக்கின்ற எனது இந்த பதிவை (ஒரு வகையில் இதுவும் ஒரு வித அனுபவப் பதிவுதான்) யாழ்கள நண்பர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுமாறும் வேண்டிக்கொள்கிறேன். சாய்ந்த கோபுரங்கள் சிறு வயதில் நம்மில் பலருக்கு பல விதமான கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் மனிதில் உருப் பெறுகின்றன. நாளடைவில் அந்தக் கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் எங்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி பலமான கோட்டைகளாகவும் கோபுரங்களாகவும் வலுப்பெற்று விடுகின்றன. அதே வாழ்க்கைப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கும் போது நம்மில் சிலரின் தேடலும் அந்த தேடலின் விளைவாக நாம் அறிந்த…

  14. Started by Manivasahan,

    யார் சொந்தம்? மாசிமாதப் பனிக்குளிரின் பிடியில் சிக்கி ஊரே நடுங்கிக் கொண்டிருக்கிறது. உடம்பை உதற வைக்கின்ற, மூக்கில் நீர் சிந்த வைக்கின்ற, பற்களை ரைப் அடிக்க வைக்கின்ற அந்தக் குளிருக்குள்ளும் எங்கோ ஒரு கோடியிலிருந்து தன்னுடைய 'கடமையைச்' செய்துகொண்டிருந்த சேவலொன்று நான்கு தடவைகள் கூவி ஓய்கின்றது. அவசரமாகப் படுக்கையை விட்டு எழுந்த தர்சன் பாயிலே ஆங்காங்கே தலைகாட்டியிருக்கின்ற சிலும்பல்கள் மேலும் பெரிதாகிவிடாதவாறு அவதானமாகச் சுருட்டி அசவிலே வைத்துவிட்டு கொல்லைப் புறத்தை நோக்கி நடக்கிறான். முற்றத்திலே தெருநாயொன்று தன்னுடைய உடம்பை வளைத்து கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறது. இந்தப் பனிக்குளிருக்கு நன்றாகக் கம்பளியால் போர்த்துக் கொண்…

  15. அவளும் அவளும்! - வி.சபேசன் நன்றி : www.webeelam.com நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக் காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்.. அம்மா, நான் இனிமேல் வீட்டுக்கு வரப் போவதில்லை. என்னுடைய வாழக்கையை நானே தீர்மானித்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அந்த அங்கீகாரத்திற்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், அவ்வாறான போராட்டம் பெரும் கண்ணீரையும் வேதனையையும், இழப்ப…

    • 21 replies
    • 4.1k views
  16. என் கைபிடித்தவன் - புதிய தொடர்கதை -------------------------------------------------------------------------------- -மோகன் கோடம்பாக்கம் பாலத்தை கடந்து சட்டென்று ஒரு வளைவு எடுத்து சேகர் எம்போரியத்தின் முன் தனது யமாஹாவை நிறுத்தினான் ரிஷி. பிசிஏ, எம்சிஏ முடித்த கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கணினி துறையில் முப்பதாயிரம் சம்பளத்தோடு முதல் வேலையில் அமர்ந்தான் ரிஷி. வண்டியை அணைத்து காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது எதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான். பத்திரகாளியாக மாறி நின்றிருந்தாள் ரம்யா. இளங்கலை கடைசி ஆண்டு. கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில். அழகாக இருந்தாள். ஆத்திரத்தில் இருந்தாள். ரிஷி காலால் எட்டி உதைத்தபோது இடர்பட்டவள் தான் ரம்ய…

    • 7 replies
    • 4.1k views
  17. அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வேலை பாக்குறா. என்னய மாரி நல்ல கலர்ரா ரெண்டு பசங்க. கறுப்புத்தா நைன…

    • 7 replies
    • 1.8k views
  18. நானும் என் ஈழமும் - 4 தினமும் ஏதோ ஒரு செயல், ஒரு பொருள், ஒரு மனிதர்...என் நினைவுகளை ஊருக்கு கொண்டு செல்ல தவறுவதில்லை. எதிலும் சொந்த ஊரை காண்பது எம்மவருக்கு புதிதல்லவே. "சொர்க்கமே வந்தாலும் அது நம்மூரை போல வருமா" என்ற பாடலை கானாபிரபா அண்ணாவே எத்தனை தடவை வானொலியில் போட்டிருப்பார். அடுத்த மாதம், என் பல்கலைக்கழக நண்பன் ஒருவருக்கு திருமணம். அதே நண்பன் 3 வருடங்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்திற்கு எனக்கு தந்த வாழ்த்து மடலை பார்த்தே ஆக வேண்டும் என அவரின் வருங்கால துணைவியார்ஆசைப்பட்டார். என் விலை மதிக்க முடியாத கடிதப்பெட்டியை எடுத்த பொழுது கண்ணில்பட்ட ஒரு மடல்..... இந்த பாகத்தை எழுத தூண்டியது! --------------------------------------------------------…

  19. நெஞ்சின் ஆசை நனவாக... செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது. முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது. வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அ…

  20. Started by sathiri,

    வணக்கம் யாழ்உறவுகளிற்கு நீண்ட நாளின் பின்னர் மீண்டும் ஓர் தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதுவும் வழைமை போல உண்மை சம்பவமே நான் 2003 ம் ஆண்டு தமிழ் நாட்டில் சந்தித்த ஒரு ஈழ தமிழ் தாயின் கதை அதை எனதுநடையி்ல் எழுததொடங்குகிறேன் கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்ததில் தொடரும்.....என்றே வைத்தேன் காரணம் கதையின் இறுதியில் புரிந்து கொள்வீர்கள் நன்றி பாகம் 1 தொடரும்....... 2003ம் ஆண்டு நான் இந்தியா போயிருந்தேன் இங்கு பிரான்சில் வேலை பழு நேரமின்மையென்று ஏதோ பசிக்காக இரண்டு தடைவை சில நேரம் இரவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ள நான் இந்தியா போகும் போதெல்லாம் அங்கு காலை மதியம் இரவு என்று வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிடுவது வழைமை. அப்பே…

    • 34 replies
    • 5.3k views
  21. வலைபதிவர் தமிழ்நதி சென்னை தமிழில் கதை எழுதி இருக்கார். அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வே…

  22. Started by siluku,

    அவனுக்குக் குழப்பமா இருந்தது, ஒருவகை பயம் கலந்த ,எண்ணங்கள் மாறி மாறி வந்தன.கிராமத்தின் புதிய சூழல், முதல் முதலாக தனியாக ஒரு வீட்டுக்குள், எவரது கண்காணிக்கும் பார்வைகள் அற்ற நிலையில்.அவனுக்கு, எழும் உணர்வுகளை அதன் சூழலை அலசுவது அதன் பின்னரே நிதானமாக செயற்படுவது என வயசுக்கு மீறிய சிந்தனைகள் அந்த விடலைப் பருவத்திலும்.விடலைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் எழுந்த போதெல்லாம் அதே அலசல் அதே நிதானம்.ஆனால் இப்போ அந்த நிதானத்தை ,இவள் விழுங்கி விடுவாளோ என்று மனசு படபடத்தது. அவள் பக்கத்து வளவுக்குள் இருந்து பனை ஓலையினால் வேயப்பட்ட கதியால் வேலிக்குள்ளால் மறைந்திருந்து இவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடுவது.ஒவ்வோரு நாள் காலையிலும் இவன் பக்கத்து வீட்டு அண்ணையிடம் இருந்து அன்றைய ப…

  23. இது தமிழ்நதி எழுதிய கவிதைக்கதை. http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post.html நிர்வாகத்துக்கு! தமிழ்நதிக்கு படைப்புக்களத்தில் அவரது படைப்புகளை பதிவு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவன்: நீ ஒரு ராட்சசி! அவள்: உனது தேவதை எங்குதானிருக்கிறாள்? அவன்: எனக்குள் இருக்கிறாள். அவள் எனது இனிய கனவு! பால்யத்தைப் பசுமை செய்தவள்…! கிராமத்தின் பின்புறமாய் பாசிப்பச்சை நிறத்தில் துவைத்துப் போடப்பட்ட சேலையைப் போல ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் கரையோரம் அவளை முதன்முதலில் சந்தித்தேன். தோழிமாரெல்லாம் வீதியை ஒட்டிய உயரமான பாலத்திலிருந்து குதிக்கஇ இவள் மட்டும் விழிகளில் ஆசையும் பயமும் கலந்திருக்க தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கு…

  24. மார்கழியில் ஒரு காலை.... -------------------------------------------------------------------------------- மார்கழியின் காலை பொழுதை ரசித்தவரா நீங்கள். இப்போது அதை பார்க்காமல் ஏங்குபவரா நீங்கள்.......... கட்டாயம் படியுங்கள். நன்றாக கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அப்பா எழுப்பி “போய் பால் வாங்கிட்டு வா” என்று மார்கழியில் ஒரு காலையில் எழுப்ப மார்கழியின் காலை எத்தனை ரம்மியமானது என்று உணர ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எழுந்திரிக்க மனம் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றும். இத்தனை ரம்மியமான அழகான உணர்ச்சிப் பூர்வமான மார்கழியை இத்தனை ஆண்டுகாலமாக ரசிக்காமல் விட்டுவிட்ட இந்த சோம்…

    • 4 replies
    • 2.6k views
  25. இந்த இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்யலாம் கடைசி பேட்டி மெல்லக் கொல்வேன் மேற்கே செல்லும் விமானம் - பாகம் 1 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 2 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 3 நேற்றைய கல்லறை கறுப்பு வரலாறு

    • 10 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.