கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
, http://www.madathuvaasal.com/2013/10/blog-post.html இன்று வேலை முடிக்கும் நேரம் என் மேலதிகாரி என்னிடம் வந்து "நாளைக்கு நான் வேலைக்கு வரமாட்டேன் நாங்கள் இருக்கும் இடங்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள் எனவே வேறு இடத்து மாற வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கடந்த சில நாட்களாக சிட்னியின் பெரும்பாகத்தைத் தாண்டிய புற நகர்ப்பகுதிகளில் பரவலான காட்டுத்தீயின் கொடூரம் பல உடமைகளை நாசப்படுத்தி விட்டது. இன்னும் இன்னும் அதிகமாகும் என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாக காட்டுத்தீ பரவக்கூடிய அண்மித்த இடங்களில் உள்ள மக்களையும் இடம்பெயரச் சொல்கிறார்கள். எனது மேலதிகாரி ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியர். நகரத்தித்தின் அடர்த்தி இல்லாத எளிமையான இயற்கை வனப்புள்ள கிராமம…
-
- 1 reply
- 814 views
-
-
சாத்தான் தேவனின் கழுத்தைப் பிடித்து திருகினான். சாத்தானின் கண்களில் கொலை வெறி தெரிந்தது. முடிந்தால் தேவனை உடனேயே கொலை செய்திருப்பான். ஆனால் அதுதான் முடியாதே. தேவன்தான் கடவுள் ஆகிற்றே. சாத்தானின் கையை விலக்கி விட்டு தேவன் அன்பாக புன்னகைத்தார். „என்ன காரியம் செய்தாய்? எதற்காக அவர்களை விடுவித்தாய்?' சாத்தான் வீரிட்டுக் கத்தினான். „என் குழந்தைகளை நீ இப்படி ஒரு அறிவற்ற நிலையில் வைத்திருப்பதை நான் எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் உடை கூட அணியாமல் இருந்தார்கள். தாம் நிர்வாணமாக நிற்கிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இதை எப்படி நான் பொறுக்க முடியும்? இதற்காகவா அவர்களை நான் படைத்தேன்' தேவன் அதே புன்னகையோடு கேட்டார். „உண்மை என்பதை அறிய முடியாமல் என் குழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
உடைந்த போத்தல்கள் ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது. அருகே கொட்டிலில் கட்டியிருந்த ஆடு கட்டையில் சுற்றி சுற்றி வர அதன் சின்னஞ்சிறு குட்டிகள் இரண்டும் " ம்...மே... ம்...மே..." என்று தங்கள் கிச்சுகுரலில் தாயை கூப்பிட்டபடி பின்னே ஓடின. இவளைக் கண்டதும் ஏதாவது தீனி போடுவாளோ என்ற நினைப்பில் தன் புதிய குஞ்சுகளை "கொக்... கொக்..." என அழைத்துக்கொண்டு ஓடி வந்த அடைக்கோழி (அதுதான் அதற்கு அவள் வைத்த பேர்)அவள், அதனைக் கவனிக்காத ஏமாற்றத்துடன் அவளை தலையை சரித்து ஒரு பார்வை பார்த்த பின்னர் தன் குஞ்சுகளுடன் மீண்ட…
-
- 6 replies
- 4.3k views
-
-
பனங்காடு – கருணாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும். யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் என்பது அவருடைய வாதம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்பு கோட்டை ராஜ்ஜியத்துக்கும் கோட்டை ராஜ்ஜியத்திலிருந்து கா…
-
- 1 reply
- 880 views
-
-
அவள். அவன். அப்புறம்..... அப்புறம் ............................................... என்ன ஒண்ணுமில்லை சரி ஒண்ணுமில்லையா ஆமா ஒண்ணுமில்லை சரி வைச்சிடறேன் வைக்கப் போறியா நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொல்றியே ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லைன்னு அர்த்தமா அதுக்கென்ன அர்த்தம் ஒண்ணுமில்லைன்னு (சிரிக்கிறாள்) நீ தானே என் பொன்வசந்தம் ஏன் ப்ளாப் ஆச்சுன்னு இப்ப தெரியுது என்ன தெரியுது? ஏன் நீயும் தானே படம் பார்த்தே நான் பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா ஏன் ப்ளாப் ஆச்சு ம்ம்ம்ம்ம். நீ நூறு தடவை பார்க்கலை, அதனால. இல்ல நீ ப்ளாப்புக்கு காரணம் சொல்லு ஒண்ணுமில்லை என்னது இல்ல படத்துல ஒண்ணுமில்லைனு சொன்னேன். …
-
- 0 replies
- 1.7k views
-
-
‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும். அதாலை நாலு சனத்துக்கு நல்லது செய்யமுடிஞ்சால் செய்யும். இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை.’ என்ற குலசேகரத்தாரின் பேச்சில் யதார்த்தம் இருப்பதாகப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சரியென்றும் பிழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று.. காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம். அந்த காலகட்டத்தில் அவுஸ்ர…
-
- 34 replies
- 5.4k views
-
-
நானும்... எனக்கும், நீயும்... உனக்கும் என்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது. அதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொ…
-
- 4 replies
- 1.6k views
-
-
வரகு மான்மியம் ஆசி கந்தராஜா 1 கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்! 'வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்..., கோயில் விஷயமப்பா..., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ...' மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்...? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு! கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது யாரோ ஒருவரிடம் கடன் வாங்கிய புத்தகம் ஒன்று இன்னும் திருப்பிக் கொடுக்காமலே இருப்பது தெரிந்தது. ஆனால் யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது. உரிய நேரத்தில் கடனை அடைக்காவிட்டால் அதை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பே சமயத்தில் நழுவி விடக்கூடும். சில நாட்களுக்கு மு…
-
- 3 replies
- 1.1k views
-
-
நினைவின் நிழல் நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். உடலில் ஒரு அசைவும் இல்லை. பத்து குதிரைத்திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தை போல கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவைக்கொண்டு தீர்மானமாகச் சொன்னார்கள். நெடிய உருவம் கொண்ட ஆங்கிலேயரை நினைவுபடுத்தும் தோற்றம் உள்ள அந்த மருத்துவர்& இது அவருடைய குரலை வைத்து நான் செய்த கற்பனை& என்னை ஏறத்தாழ இறந்துவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிச்சை ஏ.எம். சாலன் அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பாலச்சந்திரன் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற சாயந்திரம் 5.30 மணிக்கு மேலாயிற்று. வழக்கமாக அவன், ஞாயிற்றுக் கி-ழமைகளில் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவான். ஆனால், இன்று அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மறந்ததால் வசமாக மாட்டிக் கொண்டான். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் வேலை நடைபெறுவதுண்டு. நான்கு அஞ்சல் பிரிப்பாளர்களும், ஒரு தலைமைப் பிரிப்பாளரும் இருப்பார்கள். இம்மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வார ஓய்வு நாளாக வேறொரு நாள் கொடுக்கப்படும். பாலச்சந்திரன் வேலை பார்க்கும் முதல் பிரிவில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு வேண்டும் என்ற பேச்…
-
- 1 reply
- 948 views
-
-
பேயோட்டி வினையூக்கி முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன். என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்…
-
- 1 reply
- 867 views
-
-
பரமேஸ்வரி படுக்கையில் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இது தன் வீடு இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. கண்களைச் சுழலவிட்டு அவ்விடத்தை அடையாளம் காண முற்பட்டாலும் எதுவும் நினைவில் வர மறுக்கிறது. பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணவே இல்லை. தாகம் எடுப்பதுபோல் இருக்கிறது. யாரையாவது கூப்பிட வேண்டும் என எண்ணி கூப்பிட எத்தணிக்கிறாள். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை. என்ன இது தொண்டை அடிக்குதே. யாருமில்லையா என எண்ணியவளுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி எழ முயல்கிறாள். அதுவும் முடியவில்லை.பதட்டம் மேலும் அதிகரிக்க இரு கைகளையும் கண்டபடி அசைத்ததில், மேசையில் இருந்த எதோ ஒன்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியதில் பக்கத்து அறையில் இருந்த தா…
-
- 30 replies
- 3.1k views
-
-
நடுவிலை நாலு நாளைக்காணோம் செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. :( :( 17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில் வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர் தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்த…
-
- 37 replies
- 4.5k views
-
-
மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி செப்ரெம்பர் 17, 2012 மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி , கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும் சிலசமயம் அவர்களை நம்புவேன். “அவள் தனது தம்ஷ்த்ராவால்(கோரைப்பற்களால்) உன்னைக் கிழித்துவிடுவாள்.பிறகு உன் இரத்தத்தை ஒரே மூச்சில் குடித்துவிடுவாள். அப்புறம் உன் எலும்புகள்? அவற்ற…
-
- 0 replies
- 1.8k views
-
-
(a+b)2 = a2+b2+2ab கல்யாணமாகி ஒரு மாதம் - A கல்யாணமாகி 2 வருடம் - B ---------- ஆருயிர் நண்பன் ரமேஷ் - C கண்ணதாசன் பாடல் - D A "என்னங்க உங்களுக்கு ஹார்லிக்ஸ் வேணும்மா, பூஸ்ட் வேணும்மா" இங்கி, பிங்கி போட்டு பார்த்ததில் பூஸ்ட்தான் வந்தது. ஆனால் எனக்கு ஹார்லிக்ஸ்தான் பிடிக்கும். அதனால், "எனக்கு ஃபில்டர் காஃபிதான் வேணும்" B "எருமைமாடு அந்தப் பாலை குடிச்சாத்தான் என்ன? அதுல என்ன வெஷம்மா கலந்திருக்கு, அப்பனும், பிள்ளையும் ஒரே மாதிரி வந்து வாச்சிருக்கு பாரு. எனக்கு வேலை வைக்கணும்னே பிறந்து தொலைச்சிருக்கு" "ஏய்..... ஏண்டி பிள்ளைய திட்டுற" "ம்....... எனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு அதான் திட்டுறேன்" "உனக்கு திமிறு அதிகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
பட்டணம் தான் போகலாமடி..! சென்னையில் அடுக்கு மாடிகளாகும் மனைகள்... சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் துடிப்பான இளைஞன். ஒருநாள் தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப் போகிறேன். 5 லட்சம் பணம் தாருங்களப்பா..” என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை! அதற்குள் என்ன அவசரம்?” என்றார். "இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது" என்றான். யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி, உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடீரென்று 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
லூக்கா 22:34 அ. முத்துலிங்கம் ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப…
-
- 0 replies
- 768 views
-
-
ஓணான் கோட்டை தான் இருப்பது எந்த இடம்? என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் ரமேசும், அவனும் சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து …
-
- 19 replies
- 6.9k views
-
-
மனிதன் பிறந்தவுடன் தொடங்கிய என்ட என்னுடைய என்ற சொல் அவன் இறக்கும் வரை தொடரும் என்பது யாவரும் அறிந்தது.சுரேஸுக்கும் அது விதிவிலக்கல்ல. அந்த பாடசாலைக்கு அவன் முதல் காலடி எடுத்து வைத்தவுடன் ஆசிரியை அவனை அழைத்து சென்று இதுதான் உன்னுடைய இடம்,மணி அடித்தவுடன் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் வந்து இருக்க வேண்டும் என ஆசிரியை கூறியவுடன் "ஒம் டீச்சர்" என்றவன் அதில் அமர்கின்றான்.சிலேட்டும்,சிலேட் பென்சிலும் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு பக்கத்து கதிரையில் அமர்ந்திருக்கும்பெடியனை பார்த்து சிரிக்கின்றான்.அவன் அழுது கொண்டிருந்தான்.அவனை பார்த்தவுடன் இவனுக்கும் அழுகை வந்துவிட்டது.அம்மாவிட்ட போகப் போறன் என அழத்தொடங்கிவிட்டான். முதல் நாள் பாடசாலைக்கு வருபவர்களில் அநேகர் அழுவார்கள்,பாடசா…
-
- 20 replies
- 2.7k views
-
-
# நம் மனமும் இக்கதையைப் போலதான்! கோவணம்! எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன். ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு புள்ளிகளால் சித்தி எய்த தவறுகிறாள் தாரணி. அந்தக் கவலையின் மத்தியிலும்.. தொடர்ந்து ரீயுசனுக்கு ஓடிஓடிப் படித்தே வந்தாள். பிரபல.. பாடசாலை புகுமுகப் பரீட்சை ஒன்றிற்காக தோற்றுவதற்காகவே அந்தப் படிப்பு. 10 வயதே தாண்டி இருந்தவளின் முதுகிலும் தலையிலும்.. சுமைகள் என்பதே அதிகமாக இருந்தது. அவளால் அந்த வயதை சுமையாக உணர முடிந்ததே தவிர சுகமாக உணர முடியவில்லை. எப்படா இந்த 5ம் ஆண்டு தாண்டிப் போகும் என்பதே அவளின் நினைவாக இருந்தது. 5ம் ஆண்டை தாண்டிய பின் வர இருக்கும் சோதனைச் சுமைகள் பற்றி அவள் அன்று அறிந்திருக்கவில்லை என்பதால்.. 5ம் ஆண்டு தாண்டினாலே போதும் என்பது தான் அவளின் எண்ண ஓட்டமாகவே இருந்தது. ஒருவாறு.. அந்தப் புகுமுகப் பரீட்சைக்கான நாளும் வர…
-
- 4 replies
- 3.5k views
-
-
"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா "கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே. ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் ) சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்…
-
- 0 replies
- 1.1k views
-