கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிடும். அதன் பின்னர் அவள் தூங்கும் சமயமாக நான் வெளியே புறப்படும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். மகளுக்கு இரண்டு வயது நடந்தபோது என்னை ஆச்சரியப்படுத்த ஆரம்பித்தாள். நான் எப்போவாவது பயணம் புறப்பட ஆரம்பித்தால் உடனேயே அழத் தொடங்கி திரும்பி வரும்வரை நிறுத்…
-
- 17 replies
- 2.2k views
-
-
F இயக்கம் நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் பிடிகொடுக்காதவாறு கதையை நகர்த்திச் செல்வதும் அதைக் கதை முடிந்த பின்பும் காப்பாற்றுவதும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் முக்கியமான உத்திகள். எனவே அறியப்படாத ஒன்றை குறிப்பதற்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
எல்லாம் ஒரு நாள் முடியும்! மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க …
-
- 0 replies
- 1k views
-
-
வட்டியும் முதலும் - ராஜுமுருகன். ராஜுமுருகனின், "வட்டியும் முதலும்" என்னும்... கட்டுரை சிலமாதங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது எழுத்துக்கள் ஒவ்வொரு கிழமையும்... வித்தியான சமூகப் பிரச்சினைகளை, முக்கிய கருவாக எடுத்துக் கொண்டு எழுதுவதில் மிகவும் சிறந்த எழுத்தாளர். பல லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப் பட்ட அவரது எழுத்துக்களை... நீங்களும் வாசித்துப் பாருங்களேன். -------------- நம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கும் நடுவில் கிழிகின்றன நாட்கள்! புதிய கீர்த்தனா ஒருத்தி, நம்பிக்கையின் இசையால் என் இரவுகளை நிறைக்கிறாள் இப்போது. இவள் என் வாழ்க்கைக்குள் வருவாள் என நான் நம்பியதே இல்லை. 10 வருடங்கள் பழகிய பிறகு எங்கோ தூர தேசம் போய்விட்டவள் இப்போது திரும்பக் …
-
- 9 replies
- 4.8k views
-
-
அவளும் அவளும்! - வி.சபேசன் நன்றி : www.webeelam.com நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக் காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்.. அம்மா, நான் இனிமேல் வீட்டுக்கு வரப் போவதில்லை. என்னுடைய வாழக்கையை நானே தீர்மானித்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அந்த அங்கீகாரத்திற்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், அவ்வாறான போராட்டம் பெரும் கண்ணீரையும் வேதனையையும், இழப்ப…
-
- 21 replies
- 4.1k views
-
-
இறுமாப்பு கூடாது... ................................. மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போது தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து இறங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், ஒளியும் நிறைந்து காணப்பட்டது. ” உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் “மெசடோனியா” வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர். யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, …
-
- 4 replies
- 1k views
-
-
மொட்டை மொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன் குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்…
-
- 1 reply
- 4.4k views
-
-
Proud To Be Tamil அப்போது(சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!) எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுகள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்... என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவ…
-
- 2 replies
- 1.9k views
-
-
வலி தெரியாக் காயங்கள்.... முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம். அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொ…
-
- 120 replies
- 14.6k views
-
-
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள். அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம…
-
- 6 replies
- 1.3k views
-
-
தர்க்கத்திற்கு அப்பால்... ஜெயகாந்தன் வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட 'வெற்றி 'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன. என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல 'தோல்வி நிச்சயம் ' என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் …
-
- 0 replies
- 997 views
-
-
மக்களை ஈர்த்த மகராசர் தி. ஜானகிராமன் விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார். இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ? கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்…
-
- 0 replies
- 872 views
-
-
எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிக கண்டிப்பாக இருந்தார். நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
நாடு தொலைத்தவனின் பயணக் குறிப்புக்கள் அனுபவம் : அகிலன் நடராஜா உலகத்தின் திசையெங்கும் விரிந்த ஈழத்தவர்களின் அகதிப் பயணங்களில் மலேசியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. கனடா ஆகட்டும், லண்டன் ஆகட்டும், பிரான்ஸ் ஆகட்டும் பயண வழியில் மலேசியா ஒரு சத்திரம். அப்படித்தான் எனக்கும். பயணங்கள் பற்றி என்னிடமும் நிறையக் கனவுகள் இருந்தன. ஆனால் காலம்- நிலம், நீர், ஆகாயமென ஆபத்தான பயணமொன்றை என்னில் திணிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. நம்பிக்கைகளின் அழிவில் அது தனது வேலையைக் காட்டுகிறது. 2009 மார்ச் மாதத்தில் வலைஞர் மடத்தில் இராணுவம் புகுந்தபோது எல்லாம் முடிந்தது என்று தலையில் கைவைத்து உட்கார்ந்த அண்ணர் ஒருவரிடம், “ஏன், முள்ளிவாய்க்கால் இன்னமும் இருக்குத்தானே..” என்…
-
- 0 replies
- 789 views
-
-
தேவன் வருவாரா? ஜெயகாந்தன் சிறுகதை! தேவன் வருவாரா? ஜெயகாந்தன் சிறுகதை! பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பிவிட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு,குடிசைக்கு வெளியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது. 'நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போணா ? 'கிழவிக்கு நெஞ்சு படபடத்தது. இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை. சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோழைச் சோழன் ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சுரேஷ் தனது மீசையை தடவிய படியே தனது சிந்தனையை ஓட விட்டான் இந்த மீசை அரும்ப தொடங்கிய காலத்தில் இருந்து அது படும்பாட்டை பத்தி தான் இந்த மீசை வளர்வதிற்கே இத்தனை தடைகள் கட்டுபாடுகள் சூழ உள்ளோர்களாள் உண்டாக்கபடும் போது குழந்தை வளர்ந்து பெரிதாக வளரும் வரை எவ்வளவு கஷ்டங்களை அது எதிர்நோக்க வேண்டிய வரும் என்று அவனால் எண்ணி பார்க்கவே முடியவில்லை. க.போ சாதாரணம் படிக்கும் போது சுரேஷ்ஷின் மீசை அதிகமாகவே வளர்ந்திருந்தது.ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் படிபிக்கும் போது சிரித்து விட்டான் ஆசியருக்கு கோபமாய் திட்ட தொடங்கிவிட்டார்,வில்லன்கள் மாதிரி மீசையை வளர்த்து கொண்டு படிக்க வந்திட்டான்கள் நாளைக்கு வகுப்பிற்கு வரும் போது உந்த மீசையை எடுத்து போட்டு தான் வரவேண்டும் என்று கட்டளை இட்டா…
-
- 17 replies
- 5k views
-
-
மீண்டும் ஒரு தடவை குப்புற படுத்துக் கனவுகண்ட இந்தியக் கனவான்களின் வல்லரசுக் கனவு எனும் கோவணம் கழன்று உலக அரங்கில் அம்மணமான கோலம் அரங்கேறியது.அதுதான் பீகார் பள்ளிக் குழந்தைகளின் மரணம். வீதிகள் எங்கும் அழுக்கு'கங்கையில் பிணவாடை'கிராமங்கள் தோறும் நோய் பசி மூதாட்டி முதல் சிறு குழந்தைவரை பாலியல் துன்புறுத்தல்கள். இத்தனை அழுக்குகளையும் உள்ளாடைகளுக்குள் வெளியே அழகான ஆடைகளுடன் அரசியல் நாடகம் ஆடியவர்களை நாடு வீதிகளில் வைத்து அம்மணமாக்கினர் அந்தச் சிறுகுழந்தைகள்.அநேக குழந்தைகள் மதிய உணவுக்காகவே பள்ளிக்கு சென்றிருப்பார்.அவர்களுக்கு மரண உணவு கொடுத்தது இந்திய அரசியல் கூட்டம்.ஒவ்வொரு மரணமும் எவ்வளவு கொடுமை என்பது நாம் அறிவோம்.அதிலும் குழந்தைகளின் மரணம் சோகத்தின் உச்சம்.பிள்ளைகளே உங்கள…
-
- 0 replies
- 1k views
-
-
அண்று முழுவதும் நல்ல மழை. இப்படி சொல்லத்தான் மன துடிக்குது. ஒருவேளை மழை பெய்திருந்தால் இந்த கதை வேற மாதிரி இருந்து இருக்கும்... என் குடும்பம் அப்ப கொழும்பு "சிலேவைலன்" பகுதியில் "பரக்ஸ் லேனிலை" வசித்து வந்தது. முன்னாலை பொலீஸ் குவாட்டஸ், பின்னாலை "வத்தை", இல்லை "தோட்டம்" எண்று சொல்லும் சேரி பகுதி. கொழும்பு-2 கொம்பனி தெருவின் ஒரு ஒழுங்கை எண்ட வகையில் சுறு சுறுப்புக்கும் வாகன நெரிசலுகும் பஞ்சமே இல்லை. அதிகமாய் தமிழர் வசிக்கும் பகுதி, அனேகமானோர் இந்திய வம்சாவளிகள். அங்கை வெட்டு குத்து குழுக்களுக்கும் பஞ்சம் இல்லைத்தான்... 'காலை வேளை' நான் வெள்ளனவே தூக்கத்தால் எழுந்து குளித்து பள்ளிக்கு வெளிக்கிட்டு தயார்... வழமை போலவே காலை ஏழு மணிக்கு படசாலை, ஆறு மணி பஸ்ஸை பிடிக்க வேணும்…
-
- 17 replies
- 3.3k views
-
-
"அண்ணே எங்க போகவேணும்" பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு "தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ" "அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்" "என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்". . யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்…
-
- 25 replies
- 3k views
-
-
பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும்…
-
- 25 replies
- 2.4k views
-
-
"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவ…
-
- 9 replies
- 4.5k views
-
-
காணாமற்போனவர் ஷோபாசக்தி எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது. இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார். அம்மா வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு மறுநாள் திரும்பி வந்தபோது, கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்த வீட்டுக்குள் அப்பா தரையில் விழுந்து இறந்து கிடந்தார். காவற்துறை வந்து பூட்டை உடைக்க வேண்டியிருந்தது. அம்மா …
-
- 21 replies
- 2.5k views
-
-
ஒரு வீடு, இருவேறு உலகம் - எஸ்.கிருஷ்ணமூர்த்தி நாதனது கன நாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவுஸ்திரேலியாவில் காணி வாங்கி பெரிய மாடி வீடு கட்டு வேண்டும் என்பது. அவனும் மனைவியும் மாறி மாறி உறக்கமின்றி கடுமையாக உழைத்து காசு சேமித்து நிலம் வாங்கி அதில் ஒரு அழகிய பெரிய மாடி வீடொன்று கட்டிவித்தான். வீட்டைக் கட்டிப் போட்டு சும்மா இருந்தால் அதில் என்ன சுகம் இருக்கிறது? நாலு சனம் வந்து வீட்டைப் பார்த்தால் தானே கஸ்டப்பட்டதன் திருப்தி கிடைக்கும். பார்த்த நாலு சனம் பார்க்காத நாலு சனத்திற்குச் சொல்ல அந்தப் பார்க்காத நாலு சனம் இன்னும் பத்துப் பேருக்கு சொல்ல நாதனது வீட்டைப் பற்றிய நியூஸ் கொஞ்ச நாளாவது மெல்பேண் தமிழ் சனத்துக்குள்ளே பரபரப்பாக உலாவும். ‘வீடுகுடிபூர்வை’ என்று யாழ்பாண…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, December 19, 2012 http://mullaimann.blogspot.de/2012/12/blog-post_19.html இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்…
-
- 6 replies
- 1.7k views
-