Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by லியோ,

    1, அவனது சிறுபராயம் விளையாட்டில் கழிந்தது.கிட்டிப்புள்ளு, கிளித்தட்டு,கிரிக்கட்,உதைபந்தாட்டம் என ஒரே விளையாட்டுத்தான். பாடசாலை அணிநடை,மெய்வல்லுனர் அணியிலும் இருந்தான். அவன் ஊரில் ஓரளவு பிரபல்யமான கோவில் இருந்தது.அந்தக்கோவில் கொடி ஏறினால் பத்து நாள் திருவிழா நடக்கும். நாலாம்,ஏழாம்,ஒன்பதாம் திருவிழாக்களுடன் பூங்காவனமும் கோலாகளமாய் நடக்கும்.எல்லா நாள் திருவிழாவிலும் அவனது சமுகமும் இருக்கும். மேளக்கச்சேரிகளுக்கு முன் வரிசையில் வாயை ஆவென்றபடி இருப்பான்.பின் வீட்டில் கோயில் கட்டி அந்தக்கோயில் கொடிஏறும்.அங்கயும் மேளக்கச்சேரி இருக்கும். தகர ரின் எடுத்து மூடியை கழற்றிவிட்டு பழைய கொப்பித்தாள்களை அந்தப்பக்கம் வைச்சு சைக்கிள் ரியுப் ரப்பர் எடுத்து…

    • 3 replies
    • 1.2k views
  2. இது தமிழக அரசியல் இதழில் புலவர் புலமைபித்தன் எழுதிய/எழுதிக்கொண்டிருக்கும்?? தொடர் (அரசியல் தொடர் ) இந்த தொடர் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் இணைக்க முடியுமா தெரியவில்லை என்னால் முடிந்தவரை இணைக்கிறேன் குறைகள் இருப்பின் மன்னிக்கவும் ******************************************************************************************************************************************************************* [size=4]நெஞ்சமும் இல்லாமல்; நீதியும் இல்லாமல் இருக்கிறவர்கள் எல்லாம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்று சுயசரிதம் எழுதிக் குவிக்கிறார்களே! ‘[/size] [size=4]அதனால்தான் நெஞ்சத்துக்குள்ளேயே இருட்டில் கிடந்த ஒரு சிலவற்றையாவது வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைத்து எழுதுகிறேன். [/size…

  3. Started by ukkarikalan,

    பா. இராகவன் எழுதிய கொசு என்னும் தொடரை வாசிக்க கிடைத்தது. அதனை உங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். *************** அத்தியாயம் ஒன்று கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன. "பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்ச…

    • 9 replies
    • 2.3k views
  4. Started by லியோ,

    எங்கட ஊர் யாழ்ப்பணத்தில ஒரு கிராமம் .ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின்ர தொடக்கம் அது . அம்மா என்னை,தம்பியாக்களை தட்டி எழுப்பினா எழும்புங்கோ எழும்புங்கோ நான் எழும்பினன் எனக்கு அடுத்தவனும் எழும்பி சோம்பல் முறித்தான். சின்னவன் நல்ல நித்திரையில் கிடந்தான்.நான் எழும்பி வந்து திண்ணையில கொஞ்சநேரம் குந்தியிருந்தன். முன்னுக்கு மல்லிகைப்பந்தல் வாசம் மூக்கைத்துளைத்தது.பந்தலுக்கு கீழ மல்லிகை பூக்கள் கொட்டிக்கிடந்திது. பந்தலுக்கு அருகில முன்வேலி. தென்னை ஒலையால பின்னி வரிசைக்கீறாய் அடைக்கப்பட்டிருந்தது.முன்வேலியில கிழுவையும் சீமையும் பூவருசுகளும் இடையிடையே முள்முருக்கை மரங்களும் பலம் சேர்த்தன.வேலியில எங்கட குடும்ப உழைப்பு சேகரிக்கப்பட்டிருந்தது. சில காகங்கள…

    • 14 replies
    • 1.1k views
  5. அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு, காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன…

  6. [size=4]அண்டைக்கு, லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்! விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது! நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குட…

  7. Started by ukkarikalan,

    செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா. 'பரவாயில்லையே குணா சீக்கிரத்திலேயே வந்திட்டியே!" சொல்லியவாறே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, குணாவின் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி முருகேசன், அத்தோடு நில்லாது கடைக்குள் திரும்பி, 'டேய்..நம்ம குணாவுக்கு ஒரு கூல் டிரிங்ஸ் உடைச்சுக் குடுடா!" ஆணையிட்டார். பையன் கொண்டு வந்து கொடுத்த கூல் டிரிங்ஸை வாங்கி தானே தன் கையால் குணாவிற்கு கொடுத்து விட்டு, 'நீ குடி குணா…நான் போய் மூட்டைகளை இறக்க ஏற்பாடு பண்றேன்!" சொல்லிவிட்டு நகர்ந்த அந்த முதலாளியைப். பார்க்கப் பெருமிதமாயிருந்தது குணாவிற்கு. அதே நேரம் உள்ளே, 'ஹூம் டெம்போக்காரனையெல்லாம் உபசரிக்க வேண்டியிருக்கு, இல்லாட்டி வர்ற வழில மூட்டைக…

    • 0 replies
    • 664 views
  8. ஊ..ஊ..ஊ... டிங்..டாங்.. ஊ... சங்கு சத்தம், கிலு..கிலு னு உண்டியல் குலுக்குற சத்தம் வேறை வாசல் கதவிலை கனகம்மா வீட்டு நாய் வேறை வாள்..வாள் என்ற நித்திரை முறிச்ச அம்மா சனியனுகள் வந்திட்டிதுகள் விடியக்காலமையே என்ற அம்மான்ரை அர்ச்சனையோடை, ம்ம்ம்ம்... வரச்சொன்னதே நான் தானே அப்பத்தானே விடுவிங்கள் என்று மனசுக்குள்ளையே நினைச்சுக்கொண்டு அம்மா நான் கோயிலுக்கு போட்டுவாறேன் என்றதும் இந்த விடியக்காலமையே வேலை வெட்டி இல்லாம வாய்பார்த்ததுகள்... இதுக்குமேலை நின்றா தாங்க முடியாது ஜீவா எஸ்கேப்புடா என்று அம்மான்ர புறு புறுப்பிலை இருந்து தப்பி ஓடிவந்து பொடியளோடை சேர்ந்து திருவெம்பா பாட்டுக்குள்ளை செந்தமிழும் கலந்து ஜக்கியமாயிட்டம். ஏற்கனவே போட்ட பிளான் இண்டைக்கு மத்தியானம் கோழிப்புக்கை போ…

    • 16 replies
    • 1.1k views
  9. இது ஒரு கதை அல்ல...நடந்த சம்பவங்களின் தொகுப்பே..... அந்த காலத்தில்- 80 களில், 5 வகுப்பு கொலர்ஷிப் இப்பமாதிரி, பேப்பர்ல படம் எல்லாம் போட்டு, "எங்கட பாடசாலையில் இருந்து 302 பேர் தோற்றி அதில் 4 யாழ்பாணத்தின் முதல் பத்து இடத்தில வந்திருக்கினம், 87.3 பேர் சித்தியடைந்திருக்கினம், இன்னும் 33.21 பேர் தசம் 33 மார்க்கால பெயல் விட்டிருக்கினம்", அவைகளை நாங்கள் வாழ்த்துகிறோம், அவர்கள் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்த்துகிறோம் என்று வராதகாலம், நானும் எனது "சக்சவிவ்" பிள்ளை பிராக்காட்டல், பிராக்கு பார்த்தல் கோர்ஸ் எல்லாம் முடித்து, அந்த காலத்தில் கொலஷிபிக்கு பெயர் போன டீச்சரிடம், ஒருமாதமோ, இரண்டு மாதமோ இருக்கையில் சேர்ந்தேன், ஐந்தாவது ஆளாய்.... யார் யார் எனக்கு முன்னம்...அவ…

  10. நானும் பில்லாவும். சாத்திரி ஒரு பேப்பர். நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால் ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு வாற ஞாயிற்று கிழைமை படம் நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன் இந்தியாவ…

  11. [size=1]மரணம், [/size]இதோ இந்தக்கணத்திலும் என் மூக்கருகில் வந்து சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்போது இரவு ஒன்பது மணி. ‘மிக் 27’ விமானங்கள் பேரிரைச்சலோடு குண்டு வீச அலைகின்றன. காதைப்பிளக்கும் இரைச்சல். உயிரைக்கரைக்கும் இரைச்சல். எந்த வீட்டிலும் வெளிச்சம் இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. எந்த வீட்டிலும் யாருமில்லை. எல்லோரும் பங்கருக்குள். குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன. எல்லோருக்கும் அழுகை வருகிறது. ஆனால் அழமுடியுமா. அழுதால் இந்தப் பயம் நீங்கி விடுமா? இந்த அபாயம் தொலையுமா? பயம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமா? எல்லோருடைய கால்களும்தான் நடுங்குகின்றன. இதயத்தின் நரம்புகளில் மரண நடனம். பிரமாண்டமான பாம்பாக அலைகிறது மரணம். அது எங்கே கொத்தப்போகிறது? யாரைக்…

  12. [size=2][size=4]ரயில் வண்டி கோப்பன்கேகன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது..[/size][/size] [size=2][size=4]ஐ.சி 4 வண்டி… பிரேக்கட்டையில் பழுதிருப்பதோ, நடு வழியில் எகிறிவிடுமென்றோ அந்த இருவருக்கும் தெரியாது… குடித்திருப்பார்கள் போலிருந்தது..[/size][/size] [size=2][size=4]” நாட்டின் பிரதமர் பெயர் தெரியுமோ உனக்கு..? ”[/size][/size] [size=2][size=4]” அவ்வளவுக்கு நான் முட்டாள் இல்லை கெல தொனிங் சிமித்..”[/size][/size] [size=2][size=4]” இப்ப அவ எங்கே…? ”[/size][/size] [size=2][size=4]” கோடை விடுமுறை… உல்லாசப் பயணத்தில இருக்கலாம்..”[/size][/size] [size=2][size=4]” வருசத்தில எத்தினை தடவை உல்லாசப் பயணம் போறா.. நாலு தடவைகள்..? ”[/size][/size] [size…

  13. பக்கத்து வீட்டு இளைஞன் !! : மொழி பெயர்த்தவர்: சுரா நன்றி: www.lekhabooks.com/ சுராவின் முன்னுரை ‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இற…

    • 19 replies
    • 7.9k views
  14. பிப்பிலிப் பேய் இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கதையின் காலம் 1984 ஆஆஆஆஆஆஆஆஆஆ..............ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஜயோ.........வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள். டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம் என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன்.(சிவா). டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை …

  15. Started by கிருபன்,

    [size=6]நவகண்டம்[/size] கதையாசிரியர்: ரஞ்சகுமார் நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ‘முப்பது ஆண்டுகள்’ என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்றுவிடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துட…

  16. ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே அவனுடன் பழகுவதை அந்தப் பெண்ணின் குடும்பம் அவனுடைய குடும்பச் சூழலையும் பின்னனியையும் காரணம் காட்டி, அவனுடன் இருந்தால் தன் மிகுதியுள்ள வாழ்நாள் முழுமையும் அவள் துன்பப்பட வேண்டி இருக்கும் என்ற அடிப்படையில் தீர்க்கமாக எதிர்த்தது!... இந்த மாதிரியான குடும்பத்தின் மனநிலையால் இந்தக் காதலர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்!... இந்தப்பெண் அவனை அதிகப் படியாக நேசித்தாலும், அடிக்கடி அவனைப் பார்த்து கேட்பது, “நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்” என்பதுதான்!.... அத்தருணங்களில் அவனிடமிருந்து அவ்வளவாக நல்ல பதில் கிடைக்காததனால் இவளுக்கு வருத்தமே மிஞ்சியது!...அதனுடன் குடும்பத்தின் எதிர்ப்பும் சேர்ந்து கொள்ள அவனிடம் எப்போதுமே தன் கோப முகத்தைய…

  17. [size=4]அன்றைக்குச் சனிக்கிழமை![/size] [size=4]ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது![/size] [size=4]மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,[/size] [size=4]மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்![/size] [size=4]மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை![/size] [size=4]அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்![/size] [si…

  18. வன்னிச்சி அம்மன் கோவிலடியில் பஸ்சுக்காக காத்திருந்த குமார்,நேரத்தை பார்க்க முழுக்கை சேட்டின் முன்பக்கத்தை இழுத்த போது கையில்கட்டியிருந்த கறுத்த மணிக்கூட்டை பார்த்தான். மிகவும் பழுதாகி விட்டாலும் எதோ ஒரு ஈர்ப்பின் காரணத்தால் இன்னும் எறியாமல் வைத்திருப்பதை எண்ணி தனக்குள் மலர்ந்து உற்சாகமானவன், எப்படியும் இன்னும் ஒருபத்து நிமிடமாவது செல்லும் பஸ் வர, என முனுமுனுத்த படி சேட் பொக்கற்றை தட்டிப் பார்த்து ஒரு சீக்கரட்டை எடுத்து வாயில் வைத்தவன், திருப்ப எடுத்து பார்த்தான். இதையெலாம் பத்தி பழகவேண்டி வந்ததே என சலித்துக்கொண்டவன், கசக்கிபோடவும் முடியாமல் திருப்ப வாயில் வைத்து பத்தவும் முடியாமல் தடுமாறிய கணத்தில் இரைச்சல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க முடக்கில் பஸ் வருவதைக்கண்டான்.சிவப…

  19. Started by nunavilan,

    [size=4]நிலக்கிளி அண்ணாமலை பாலமனோகரன் முதற்பதிப்பு மே 1973. வெளியீட்டாளர் - வீரகேசரி, கொழும்பு இரண்டாவது பதிப்பு செப்டெம்பர் 2003 வெளியீட்டாளர் - மல்லிகைப்பந்தல், கொழும்பு ------------------------------------------------------- முதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும். என்னுடைய பிறந்த மண்ணையும், அங்குவாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதைய…

    • 10 replies
    • 1.7k views
  20. [size=6]ஆமிக்காறர் போட்டுக்குடுத்த அம்மாவின் வீடு [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, July 17, 2012 2010...., அம்மா வீட்டிலிருந்து நாட்டுக்காக 4பிள்ளைகளைக் கொடுத்தாள். இன்று அம்மாவுக்காக ஒரு பிள்ளையும் அம்மாவோடு இல்லை. அம்மா உழைச்சுக் கட்டிய கனகபுரம் வீடும் போய் இப்ப பரந்தனில் அம்மாவின் முதிசமான அரை ஏக்கர் வயல் நிலத்தில் ஒரு குடிசைதான் அம்மாவின் வசந்தமாளிகை. 7தகரத்தோடும் ஒரு சின்ன உரப்பையோடும் 2நாளாக காணியில் போயிருந்தாள் அம்மா. ஆண்துணையும் இல்லை ஆட்களின் துணையும் இல்லாமல் தன்கையே தனக்குதவியென்ற முடிவில் புல்லைச் செருக்கி ஒரு பாயை விரித்துப் படுத்துறங்கக்கூடிய அளவுக்குத்தான் நிலத்தைத் துப்பரவாக்கினாள். கதியால் இறுக்கி கிடைச்ச தகரங்களைப்…

  21. “கந்தசாமி சொல்லுரத கேட்கிறது ஹரித? இந்த வீடு ஆர்மிக்கு தான் .. வீடு உண்ட பேர்ல இல்ல” கந்தசாமி தனியனாக ப்ளேன் டீ ஊத்திக்கொண்டிருக்கும்போது தான் செல்வராணியை நினைத்துப்பார்த்தார். இந்த நாச்சார் வீடு அவளின் சீதன உரித்தம் தான். இங்கே தான் 1982 இல் கந்தாசாமிக்கும் செல்வராணிக்கும் கலியாணம் நடந்தது. அப்போது எல்லாம் இரவில் தான் திருமணம்; முடிந்து மாப்பிள்ளை, பொம்பிளை முதலிரவு அறைக்குள் போனபின்பும் வெளியே நாற்சார் திண்ணையில் “தாள்” ஆட்டம் தண்ணியுடன் அனல் பறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் யாழ்ப்பாணத்து தூஷணங்கள் பற்றி பிஎச்டி செய்ய அமெரிக்கா போகலாம். கந்தசாமிக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கும் அவர் தண்ணியை சாதுவாக போட்டுவிட்டு ஒரு “கை” விளையாடிவிட்டு தான் அறைக்குள…

  22. [size=4]பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான். காரணம், எங்கள் கூட்டத்திலிருந்த ஒருவன் கூடப் படித்தவளொருத்தியைக் காதலித்திருந்தான். எங்கள் மூவரையும் துணைக்கழைத்துச் சென்று, அவளது சைக்கிள்க் கூடைக்குள் காதல்க் கடிதத்தை போட்டுவிட்டான். அவள் வாத்தியாரது மருமகள் முறையானவள். வாத்தியார் இப்படித் தான். சாதாரணமாக திட்டமாட்டார். நல்ல உவமான உவமேயங்களுடன்தான் திட்டுவார். தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியார்கூட பிச்சை வாங்க வேண்டும். வகுப்பில் தூங்கி விழுபவனை நிற்க வைத்து ‘இஞ்ச பாரும் ஐசே கும்பகர்ணன்’ என செம்மொழியிலான திட்டலை ஆரம்பிப்பார். சற…

    • 3 replies
    • 971 views
  23. கிழக்கில் உதிக்காத சூரியன் என்ற இக்கதையில் கர்ணனால் எழுதப்பட்டுள்ள கடாபியண்ணா தலைவருக்கு நிகரான இயல்பும் தலைமையையும் தான் வளர்த்த போராளிகளையும் தனது உயிரைவிட மேலாக நேசித்த உன்னதமானவர். இந்தக் கடாபியண்ணா பற்றி பலரிடம் கேட்டிருந்தேன் எழுதுமாறு. இன்னும் யாரும் அந்த மனிதன் பற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆயினும் அவரது வாழ்வு பற்றிய ஒருபகுதியை கர்ணன் எழுதியிருப்பதால் இங்கு இணைக்கிறேன். [size=5]கிழக்கில் உதிக்காத சூரியன் (தளபதி கடாபியின் வாழ்வைப் பதிந்துள்ள கதையிது)[/size] யோ.கர்ணன் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான…

  24. பெரிய அலையும் சிற்றலையும் பக்கத்தில் பக்கத்தில் பயணித்திருக்க, சிற்றலை அழுதுவடிந்தது கண்டு பேரலை கேட்டது. எதற்காக அழுகிறாய் என்று. சிற்றலை சொன்னது. பாருங்கள் நீங்கள் தாம் எத்தனை பெரியவர். உங்களை போன்றோர் என்மீது சாயும்போது என்போன்ற சிறியவர்கள் அழிந்து போகிறோம். எமக்கான வேதனை உமக்கெங்கே புரிய போகிறது என்றது. பேரலை சிரித்துக் கொண்டே சொன்னது. உன்னை நீ அறிந்து கொண்டாயாயின் இத்தகு பிரச்சினை எழவே வாய்ப்பில்லை. சிற்றலை கேட்டது “நான் அலையில்லையா பின் நான் என்ன ?? என்ன அறியவேண்டும் என்கிறீர்கள்” பேரலை சொன்னது ” அலை என்பது தற்காலிக வடிவம் தான். நீயும் நானும் நீரின் எழுச்சி. சீற்றம் அடங்கிடில் நீயும் நானும் ஒன்று தான். தண்ணீர். அப்புறம் எங்கே உயர்வு தாழ்வு வரும் ??…

    • 10 replies
    • 2.4k views
  25. [size=3] ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.[/size] [size=3] அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.[/size][size=3] [/size][size=3] இந்தக் கடுமையான சட்டத்துக்கு ப…

    • 0 replies
    • 988 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.