கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
எதுவரை சஞ்சிகையில் இருந்து நன்றியுடன் கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன் தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு முதலே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிலிருந்தனர். சரி. ஏன் அபூர்வமாகக் கிடைக்கிற விடுமுறையை …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஊர் திரும்புதல் கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20, திகதி :…
-
- 3 replies
- 764 views
-
-
வணக்கம் கள உறவுகளே ! இந்தக்கதையினூடாக ஒரு வேறுபட்ட முகத்தை காட்ட முயற்சிக்கின்றேன் . இது சரியா அல்லது பிழையா என்பதை என்னைத் தூக்கி வளர்க்கும் வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும் . இந்தக் கதையில் ஆக்க பூர்வமான உங்கள் விமர்சனத்தை வாசகர்களாகிய உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் . ******************************************************************************************************************************************* வேள்விக் கிடாய் ஒரு பேப்பருக்காக கோமகன் விடிய 2மணிக்கு வேலையால வந்தவுடன உடுப்பை மாத்தாமல் குசினிக்குள்ளை பாஞ்சன். குஞ்சன் கோழிக்கறியும் கீரையும் மஞ்சள் சோறும் போட்டு வைச்சிருந்தான் . நான் இருந்த பசியில பரதேசி …
-
- 29 replies
- 3.1k views
-
-
http://www.lexpress....n-mars-2010.jpg கார் து லியோன் (Gare de lyon ) புகையிரத நிலையம் காலையின் அமைதியை இழந்து காணப்பட்டது . புகையிரத நிலையம் நவீன வடிவமைப்புடன் முற்றுமுழுதாகவே மாறியிருந்தது . நான் 89களில் பார்த்த தகரக்கொட்டகை போலில்லாமல் முற்றுமுழுதாகவே கார் து லியோன் அசுர வளர்சியடைந்திருந்தது . நாங்கள் புகையிரத மேடை 6 ஐ நோக்கி மக்கள் வெள்ளத்தில் மிதந்தோம் . அங்கு பிறான்சின் வெளியிடங்களுக்குச் செல்ல ரீ ஜி வி ( T g v ) க்கள்* அணிவகுத்து நின்றன . நான் ரீ ஜி வி யைப் பற்றிக் கேள்விப் பட்டாலும் இதுவே எனக்கும் குடும்பத்திற்கும் முதல் பயணம் . பிள்ளைகள் ரீ ஜி வி யைப் புதினமகப் பார்தார்கள் . நான் எங்களுக்கான பெட்டியை தேடுவதில் மும்மரமாக இருந்தேன் . http://upload.wiki…
-
- 27 replies
- 2.4k views
-
-
பக்கத்து வீட்டு இளைஞன் !! : மொழி பெயர்த்தவர்: சுரா நன்றி: www.lekhabooks.com/ சுராவின் முன்னுரை ‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இற…
-
- 19 replies
- 7.9k views
-
-
[size=4]தமிழனும் நோ இங்கிலீசும் .....................[/size] [size=4] இலங்கையின் வடபகுதியின் விவசாயக் கிராமத்தில் இருந்து அண்மையில் கனடா நாட்டுக்கு குடும்ப ஒன்றிணைவின் மூலம் வந்திருந்தார்கள் திரு தமிழனும் திருமதி தமிழனும ... வந்து மூன்று மாதங்கள் தான் இருக்கும் . அவர்களது மகள் வழிப் பேரப்பிள்ளைகளுடன் பொழுது இனிமையாக் கழிந்தது. ஒரு நாள் மகள் தனது இரு குழந்தைகளையும் நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று இருந்தார். இவர்கள் காலாற நடக்க அந்த தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்றலில் உலாவிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அறுபதின் இறுதி வயதுகளில் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. திரு தமிழன் முன்னே செல்ல திருமதி பின்னே சென்று கொண்டு இருந்தார். ஒரு (சீயேன்னா )ரக வாகனத்தில் வெள…
-
- 20 replies
- 1.9k views
-
-
எங்கட ஊர் யாழ்ப்பணத்தில ஒரு கிராமம் .ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின்ர தொடக்கம் அது . அம்மா என்னை,தம்பியாக்களை தட்டி எழுப்பினா எழும்புங்கோ எழும்புங்கோ நான் எழும்பினன் எனக்கு அடுத்தவனும் எழும்பி சோம்பல் முறித்தான். சின்னவன் நல்ல நித்திரையில் கிடந்தான்.நான் எழும்பி வந்து திண்ணையில கொஞ்சநேரம் குந்தியிருந்தன். முன்னுக்கு மல்லிகைப்பந்தல் வாசம் மூக்கைத்துளைத்தது.பந்தலுக்கு கீழ மல்லிகை பூக்கள் கொட்டிக்கிடந்திது. பந்தலுக்கு அருகில முன்வேலி. தென்னை ஒலையால பின்னி வரிசைக்கீறாய் அடைக்கப்பட்டிருந்தது.முன்வேலியில கிழுவையும் சீமையும் பூவருசுகளும் இடையிடையே முள்முருக்கை மரங்களும் பலம் சேர்த்தன.வேலியில எங்கட குடும்ப உழைப்பு சேகரிக்கப்பட்டிருந்தது. சில காகங்கள…
-
- 14 replies
- 1.1k views
-
-
[size=4]நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.[/size] [size=4]சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.[/size] [size=4]நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது![/size] […
-
- 19 replies
- 1.3k views
-
-
இன்னொரு தடவை மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்....- Jeya Sellappah ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்... திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அ…
-
- 4 replies
- 698 views
-
-
பிப்பிலிப் பேய் இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கதையின் காலம் 1984 ஆஆஆஆஆஆஆஆஆஆ..............ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஜயோ.........வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள். டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம் என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன்.(சிவா). டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை …
-
- 38 replies
- 3.5k views
-
-
[size=5]சமீபத்தில் ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய இந்த சிறுகதையை வாசித்தேன். இவர் ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரை தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு உதாரணம் போலிருக்கிறது இந்த கதை. அதை எளிமையாக தமிழ்படுத்தியிருக்கிறேன். - எஸ்.ராமகிருஸ்ணன் *** உலகை சிருஷ்டித்து சலித்து போன கடவுள் எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதை பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி எழுந்த போது அங்கிருந்த டிவியைக் காணவில்லை. எங்கே போனது என்று தெரியாமல் குழம்பி போனார். இதனால் என்ன விளைவுகள் உருவாக போகிறதோ தெரியவில்லை…
-
- 7 replies
- 915 views
-
-
[size=4]அண்டைக்கு, லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்! விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது! நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குட…
-
- 15 replies
- 1.2k views
-
-
1, அவனது சிறுபராயம் விளையாட்டில் கழிந்தது.கிட்டிப்புள்ளு, கிளித்தட்டு,கிரிக்கட்,உதைபந்தாட்டம் என ஒரே விளையாட்டுத்தான். பாடசாலை அணிநடை,மெய்வல்லுனர் அணியிலும் இருந்தான். அவன் ஊரில் ஓரளவு பிரபல்யமான கோவில் இருந்தது.அந்தக்கோவில் கொடி ஏறினால் பத்து நாள் திருவிழா நடக்கும். நாலாம்,ஏழாம்,ஒன்பதாம் திருவிழாக்களுடன் பூங்காவனமும் கோலாகளமாய் நடக்கும்.எல்லா நாள் திருவிழாவிலும் அவனது சமுகமும் இருக்கும். மேளக்கச்சேரிகளுக்கு முன் வரிசையில் வாயை ஆவென்றபடி இருப்பான்.பின் வீட்டில் கோயில் கட்டி அந்தக்கோயில் கொடிஏறும்.அங்கயும் மேளக்கச்சேரி இருக்கும். தகர ரின் எடுத்து மூடியை கழற்றிவிட்டு பழைய கொப்பித்தாள்களை அந்தப்பக்கம் வைச்சு சைக்கிள் ரியுப் ரப்பர் எடுத்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=5]ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்…. கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்…. …
-
- 3 replies
- 971 views
-
-
அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு, காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன…
-
- 14 replies
- 1.7k views
-
-
கிழக்கில் உதிக்காத சூரியன் என்ற இக்கதையில் கர்ணனால் எழுதப்பட்டுள்ள கடாபியண்ணா தலைவருக்கு நிகரான இயல்பும் தலைமையையும் தான் வளர்த்த போராளிகளையும் தனது உயிரைவிட மேலாக நேசித்த உன்னதமானவர். இந்தக் கடாபியண்ணா பற்றி பலரிடம் கேட்டிருந்தேன் எழுதுமாறு. இன்னும் யாரும் அந்த மனிதன் பற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆயினும் அவரது வாழ்வு பற்றிய ஒருபகுதியை கர்ணன் எழுதியிருப்பதால் இங்கு இணைக்கிறேன். [size=5]கிழக்கில் உதிக்காத சூரியன் (தளபதி கடாபியின் வாழ்வைப் பதிந்துள்ள கதையிது)[/size] யோ.கர்ணன் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான…
-
- 5 replies
- 1.2k views
-
-
பா. இராகவன் எழுதிய கொசு என்னும் தொடரை வாசிக்க கிடைத்தது. அதனை உங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். *************** அத்தியாயம் ஒன்று கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன. "பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்ச…
-
- 9 replies
- 2.3k views
-
-
1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டா வெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இ…
-
- 64 replies
- 8.6k views
-
-
[size=6]நமக்கு வேண்டாம் கொலைத் தொழில் [/size] [size=2][size=4]கோடை வெயிலும் குளிர் காற்றும் குழைந்து கிடந்தன…[/size][/size] [size=2][size=4]அவசர உலகில் அவன் அவசரமாக நடந்து கொண்டிருந்தான்…[/size][/size] [size=2][size=4]” பொத் பொத் .. ” என்ற ஓசையுடன் அவன் சப்பாத்துக்கள் தரையில் மோதின.. அவசரம்..[/size][/size] [size=2][size=4]கீழே பார்த்தான்..[/size][/size] [size=2][size=4]ஒரு பூச்சி..[/size][/size] [size=2][size=4]சாணத்தின் நிறம்.. சிறக்கைகளில் கருமையாக கோலங்கள்..[/size][/size] [size=2][size=4]அதனுடைய அசைவு சாதாரணமாகப்படவில்லை… ஏராளம் பிரச்சனைகளை சுமந்து அந்தரப்படுவது தெரிந்தது..[/size][/size] [size=2][size=4]பூச்சிகளின் உலகில் அத…
-
- 8 replies
- 862 views
-
-
ஊ..ஊ..ஊ... டிங்..டாங்.. ஊ... சங்கு சத்தம், கிலு..கிலு னு உண்டியல் குலுக்குற சத்தம் வேறை வாசல் கதவிலை கனகம்மா வீட்டு நாய் வேறை வாள்..வாள் என்ற நித்திரை முறிச்ச அம்மா சனியனுகள் வந்திட்டிதுகள் விடியக்காலமையே என்ற அம்மான்ரை அர்ச்சனையோடை, ம்ம்ம்ம்... வரச்சொன்னதே நான் தானே அப்பத்தானே விடுவிங்கள் என்று மனசுக்குள்ளையே நினைச்சுக்கொண்டு அம்மா நான் கோயிலுக்கு போட்டுவாறேன் என்றதும் இந்த விடியக்காலமையே வேலை வெட்டி இல்லாம வாய்பார்த்ததுகள்... இதுக்குமேலை நின்றா தாங்க முடியாது ஜீவா எஸ்கேப்புடா என்று அம்மான்ர புறு புறுப்பிலை இருந்து தப்பி ஓடிவந்து பொடியளோடை சேர்ந்து திருவெம்பா பாட்டுக்குள்ளை செந்தமிழும் கலந்து ஜக்கியமாயிட்டம். ஏற்கனவே போட்ட பிளான் இண்டைக்கு மத்தியானம் கோழிப்புக்கை போ…
-
- 16 replies
- 1.1k views
-
-
நானும் பில்லாவும். சாத்திரி ஒரு பேப்பர். நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால் ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு வாற ஞாயிற்று கிழைமை படம் நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன் இந்தியாவ…
-
- 17 replies
- 2.8k views
-
-
செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா. 'பரவாயில்லையே குணா சீக்கிரத்திலேயே வந்திட்டியே!" சொல்லியவாறே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, குணாவின் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி முருகேசன், அத்தோடு நில்லாது கடைக்குள் திரும்பி, 'டேய்..நம்ம குணாவுக்கு ஒரு கூல் டிரிங்ஸ் உடைச்சுக் குடுடா!" ஆணையிட்டார். பையன் கொண்டு வந்து கொடுத்த கூல் டிரிங்ஸை வாங்கி தானே தன் கையால் குணாவிற்கு கொடுத்து விட்டு, 'நீ குடி குணா…நான் போய் மூட்டைகளை இறக்க ஏற்பாடு பண்றேன்!" சொல்லிவிட்டு நகர்ந்த அந்த முதலாளியைப். பார்க்கப் பெருமிதமாயிருந்தது குணாவிற்கு. அதே நேரம் உள்ளே, 'ஹூம் டெம்போக்காரனையெல்லாம் உபசரிக்க வேண்டியிருக்கு, இல்லாட்டி வர்ற வழில மூட்டைக…
-
- 0 replies
- 662 views
-
-
[size=4]அன்றைக்குச் சனிக்கிழமை![/size] [size=4]ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது![/size] [size=4]மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,[/size] [size=4]மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்![/size] [size=4]மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை![/size] [size=4]அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்![/size] [si…
-
- 22 replies
- 3k views
-
-
http://tinyurl.com/7ra25wl ரஞ்சகுமார் -ஒரு முக்கிய எழுத்தாளர். அதிகம் எழுதியதில்லை. மேலேயுள்ளதுதான் நான் அறிந்த ஒரே தொகுப்பு. கதைகளைக் copy/paste செய்ய முடியவில்லை காரணம்: கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். ----------------------------- முழுக்க வாசிக்க நேரம் இல்லாவிடின் வாசிக்கவும் "கோசலை"
-
- 5 replies
- 1.9k views
-
-
[size=2][size=4]ரயில் வண்டி கோப்பன்கேகன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது..[/size][/size] [size=2][size=4]ஐ.சி 4 வண்டி… பிரேக்கட்டையில் பழுதிருப்பதோ, நடு வழியில் எகிறிவிடுமென்றோ அந்த இருவருக்கும் தெரியாது… குடித்திருப்பார்கள் போலிருந்தது..[/size][/size] [size=2][size=4]” நாட்டின் பிரதமர் பெயர் தெரியுமோ உனக்கு..? ”[/size][/size] [size=2][size=4]” அவ்வளவுக்கு நான் முட்டாள் இல்லை கெல தொனிங் சிமித்..”[/size][/size] [size=2][size=4]” இப்ப அவ எங்கே…? ”[/size][/size] [size=2][size=4]” கோடை விடுமுறை… உல்லாசப் பயணத்தில இருக்கலாம்..”[/size][/size] [size=2][size=4]” வருசத்தில எத்தினை தடவை உல்லாசப் பயணம் போறா.. நாலு தடவைகள்..? ”[/size][/size] [size…
-
- 6 replies
- 797 views
-