விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
விளையாட்டுலகம் எங்கே செல்கிறது? http://www.youtube.com/watch?v=RDbdCbo-LNE&feature=related
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் ஆசிரியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடரில் 25 தொடக்கம் 30 வயது பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணம் சார்பாக யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போன்றவற்றில் தங்கப் பதக்கத்தையும் 4× வீராங்கனைகள் பங்குபற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6284&cat=3
-
- 8 replies
- 1.2k views
-
-
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது. எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல் [12 - January - 2008] [Font Size - A - A - A] * கப்டன் பொண்டிங் கூறுகிறார் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தனது பெற்றோருக்கு, பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அணிக்கப்டன் ரிக்கி பொண்டிங் குற்றம் சாட்டியுள்ளார். கப்டன் ரிக்கி பொண்டிங் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "சிட்னி டெஸ்ட் போட்டி வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள் என்னையும் அணியினரையும் வசைபாடியிருக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிரடி ஆட்டத்திற்கு ஆப்கானும் தயார் [04 - February - 2009] உலக அரங்கில் போர் பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தலிபான் தீவிரவாதிகளால் கிரிக்கெட் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையிலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கடுமையாகப் போராடி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பொருளாதார பின்னடைவு இவற்றின் மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் அந்நாட்டில் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 1990 களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
மிகப்பெரிய இலக்கை விரட்டிச் சென்று கடைசி ஓவரில் வெற்றிபெற்ற இந்திய அணி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] நெஞ்சம் படபடத்த ஓவல் ஒருநாள் போட்டியில் பதற்றப்படாமல் ஆடிய உத்தப்பா இந்திய அணிக்கு திரில் வெற்றியை தேடிக் கொடுத்தார். கடைசி ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து 3௨ என்ற முன்னிலையிலிருக்க மிக முக்கியமான 6 ஆவது போட்டி நேற்று முன்தினம் ஓவலில் நடந்தது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரொபின் உத்தப்பா வாய்ப்புப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 வெம்பிளி மைதானத்தில் நடந்த சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியில் பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 என்ற ரீதியில் ஸ்பெயின் நாட்டின் கழகமான பார்சலோனா வென்றது. ஆர்ஜெண்டீனியரான லயனல் மெசி சிறந்த வீரராக தெரிவானார். Lionel Messi: 'Tremendous' Barcelona want to keep winning trophies The Argentine striker, who was named as Man of the Match in the Champions League final, issued an ominous warning that his side will not rest on their laurels http://www.goal.com/en-gb/news/2914/champions-league/2011/05/29/2508176/lionel-messi-tremendous-barcelona-want-to-keep-winning Champions League 2011 Final Manchester United…
-
- 5 replies
- 1.2k views
-
-
உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக காயத்தினால் வெளியேறும் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழப்பது பிரச்சினையல்ல, உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவி முதலிடத்தை இழந்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்ட இந்திய அணி இப்போது முதலிடத்தில் தனியான அணியாகத் திகழ்கிறது. ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தர்மசங்கடமான தோல்வியைத் தழுவியது. கேப்டன் மைக்கேல் கிளார்க் …
-
- 0 replies
- 1.2k views
-
-
2019 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இடதுகை பெருவிரல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்த ஷிகர் தவான், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில், அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓய்வுக்கு தயாராகும் ஹேரத் March 26, 2016 டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எனது முழுகவனமும் டி20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே. அதேசமயம் இந்த தொடர் முடிந…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வளரிவான் . 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைELAVENIL VALARIVAN இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் . …
-
- 2 replies
- 1.2k views
-
-
டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 ல் பங்குபெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல் முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன. இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டியிடவுள்ளன. இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1 மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது. மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159 Facebo…
-
- 16 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு வோர்ன்-முரளி கிண்ணத்திற்கான மூன்று போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் மெல்பேர்ணில் ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களால் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை…
-
- 7 replies
- 1.2k views
-
-
சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் பங்குகொண்ட கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைப…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jPVKIyYtAKE
-
- 4 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமைSANKAR VARATHAPPAN/ FACEBOOK கிரிக்கெட் விளையாட்டின் மீதான தீராத காதலும், கடின உழைப்பும் ஒரு தமிழக இளைஞரை குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தொடங்கியதுதான் கிரிக்கெட் வீரர் சங்கர் வரத்தப்பனின் சாதனைப் பயணம். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சங்கர். கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பாச்சல் கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு …
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி அமெரிக்காவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. இவ்விரு போட்டிகளும் புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்டர்டேல் நகரிலுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30) மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்கு இச்சுற்றுப்போட்டி உதவி…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு? - கலக்கத் தயாராகும் புதுமுகங்கள் வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம், வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
‘அழகிய’ ஆபத்து நவம்பர் 23, 2014. கால்பந்து களத்தில் பிரபல ‘மாடல்’ கிளாடியா, நடுவராக களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பெண் நடுவர்கள் இல்லை. இருப்பினும், சியான் மேசே–எல்லிஸ், 29, என்பவர், நீண்ட நாட்களாக ‘லைன்’ நடுவராக செயல்பட்டு வருகிறார். ஆண்கள் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக நடுவராக களமிறங்கிய பெருமை, ஜெர்மனியின் பிபியானா ஸ்டெயின்ஹாஸ், 35, என்பவருக்கு உண்டு. சமீபத்தில் பேயர்ன் முனிக், மான்சென்கிளாடுபேக் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. அப்போது கூடுதல் நேரம் வழங்குவதில் நடுவர் பிபியானாவுடன் மோதலில் ஈடுபட்டார் பேயர்ன் அணி மானேஜர் குவார்டியலோ. அப்போது, பெண் தானே என…
-
- 7 replies
- 1.2k views
-
-
முப்பரிமாண மின் பொம்மலாட்ட கிரிக்கெட் வலைதளஒளிபரப்பு www.cricinfo.com வலைதளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் வர்ணனையாளரின் வர்ணனையினை உடனடியாக அதற்கேற்ற அசைவுகளுடன் முப்பரிமாண மின் பொம்மலாட்டமாக மாற்றி படியடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ( simulated Players) நேரடியாக ஒளிபரப்பில் பார்ப்பது போல் மின்பொம்மலாட்ட கிரிக்கெட்டியினை 30-4-0 வினாடிகள் காலதாமதத்தில் வலைதள பொம்மலாட்ட ஒளிபரப்பில் காட்ட ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற இந்திய –இலங்கை கிரிக்கெட் போட்டி வலைதள பொம்மலாட்டமாக வலைதள ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விளையாட்டு அரங்கின் எந்த பக்கத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோமோ அந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
1 12/06 17:00 Sao Paulo Brazil - Croatia Group A 2 13/06 13:00 Natal Mexico - Cameroon Group A 3 13/06 16:00 Salvador Spain - Netherlands Group B 4 13/06 18:00 Cuiaba Chile - Australia Group B 5 14/06 13:00 Belo Horizonte Colombia - Greece Group C 6 14/06 22:00 Recife Côte d'Ivoire - Japan Group C 7 14/06 16:00 …
-
- 6 replies
- 1.2k views
-
-
தொடரும் மழையின் ஆட்டம் ; கைவிடப்பட்ட அடுத்த போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே ஆரம்பமாகவிருந்தது. எனினும் தொடர்ச்சியாக அங்கு பெய்து வந்த மழை காரணமாக போட்டி நாணய சுழற்சிகூட மேற்கொள்ளப்படாது இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டி இது என்பதும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
புதிய ஒலிம்பிக் கோபுரம் 2016 - Solar City Tower அடுத்த ஒலிம்பிக் சர்வதேச விளையாட்டுக்கள் 2016 ல் பிரேசில் நாட்டிலுள்ள "ரியோ டி ஜெனிரோ" நகரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஒலிம்பிக் கண்காணிப்பு கோபுரம் ஒன்று அருகிலுள்ள "கடோந்துபா" தீவில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இது வான்வெளியாகவும், கடல் மூலமாகவும் நகருக்கு வருபவர்களை வரவேற்கவும் பயன்படும். இதில் சிறப்பம்சம் என்னவெனில், பகலில் சூரியஒளிச் சக்தி மூலம் இயக்கப்படும் இறைப்பாண்கள், கடல் நீரை மேலிருந்து அருவியாகக் கொட்டுவதன்மூலம் கிடைக்கும் உந்து சக்தியை விரயமாக்காமல் அதனைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய "டர்பைன்"களை இயக்கி, இரவில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதுதான். இதில் வணிக வளாகங்கள் கேளிக்கைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடைசி நிமிடத்தில் பெனால்டி கொடுத்த நடுவரை கொல்ல வேண்டும் போலிருந்தது [16 - June - 2008] * போலந்து பிரதமர் ஆவேசம் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போலந்து அணி வெற்றியை நெருங்கிய கடைசி நிமிடங்களில் ஆஸ்திரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கிய இங்கிலாந்து நடுவர் ஹாவட் வெப்பை கொலை செய்ய வேண்டும் போல், தான் உணர்ந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் துஸ்க் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். "ஒரு பிரதமர் என்ற முறையில் நான் நடுநிலைமையோடு இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கால்பந்து ரசிகர் என்ற முறையில் இந்த ஆட்டத்தை பார்த்த போது, அந்த நடுநிலைத் தன்மையை இழந்து ஆத்திரத்தில் பேசினேன். அந்த நேரத்தில் நடுவரைக் கொல்ல வேண்டும் போல் தோன்றியது. நடுவர்களும் தவறு செய்வர் என்பது எல்லோருக்கும் தெரியும…
-
- 1 reply
- 1.2k views
-
-
<p>Your browser does not support iframes.</p> ரங்கன ஹேரத் ஓய்வு ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=79013
-
- 0 replies
- 1.2k views
-