விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை! [sunday, 2014-03-09 08:42:39] ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. நேற்றிரவு மீர்பூரில் நடந்த போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர். பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார்.இலங்கை அணி தனது மட்டை வீச்சில் சிறப்பான துவக்கத்தைக் கண்டது. துவக்க ஆட்டக்காரர் திரிமான்ன சதமடித்திருந்தார்…
-
- 3 replies
- 684 views
-
-
ஒரு நாள் போட்டியில் புதிய விதிகள் [01 - October - 2007] [Font Size - A - A - A] ஒரு நாள் போட்டிக்கு ஐ.சி.சி. அறிவித்த புதிய விதிகள் நேற்று முன்தினம் இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானது. * `கிரீசை'த் தாண்டி நோ போல் வீசினால் அடுத்த பந்து எதிரணிக்கு பிரி- ஹிட்டாக வழங்கப்படும். இதில் ரன்- அவுட் மூலம் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்ய முடியும். * முதல் `பவர் பிளே தவிர அடுத்த இரண்டு பவர்- பிளே' ஓவர்களில் 90 அடி சுற்றளவுக்கு வெளியே மூன்று களத்தடுப்பாளர்கள் நிற்கலாம். இதற்கு முன் மூன்று `பவர் பிளே' ஓவர்களிலும் 2 களத்தடுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. * ஒவ்வொரு அணி பந்து வீசும் போதும் 35 ஓவர்களுக்கு…
-
- 3 replies
- 1.4k views
-
-
கவுண்டி கிரிக்கெட்: தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்ககாரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் Surrey அணியும், Essex அணியும் மோதின. Surrey அணி சார்பாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் Surrey அணி சார்பில் இந்த சாதனையை செய்த முதல் வீ…
-
- 3 replies
- 563 views
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் காஷ்மீரை சேர்ந்த ஷீத்தல் தேவி, மாற்று திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். அவருக்கு பிறக்கும் போதே கைகள் இல்லை. அவர் பிறந்த போது அவரது பெற்றோர்கள் மிகவும் கவலை கொண்டனர். அவர் வாழ்ந்த மலை பகுதியில் எங்காவது கீழே உருண்டு விடுவாரோ என்று அச்சப்பட்டனர். பள்ளிக் காலத்தில் தன் திறமைகளை வளர்த்துக் கொண்ட ஷீத்தல் இன்று இந்தியாவுக்கு ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறார். https://www.bbc.com/tamil/articles/c3g25k98e5ko
-
- 3 replies
- 388 views
- 1 follower
-
-
ஊர்காவற்றுறையில் பாரம்பரிய படகுப் போட்டி September 05, 2015 ஊர்காவற்றுறை, தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 66ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்திஜி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்து படகோட்டும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதன்போது பார்வையாளர்கள் பலர் பிற படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று போட்டியினை நேரில் கண்டுகளித்திருந்தனர். குறித்த பாரம்பரிய படகோட்டும் போட்டிக்கு கடற்தொழிலாளர் சங்கத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=676
-
- 3 replies
- 388 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் யாழ்பாண இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்றைய தினம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தலைமையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சிவகுமாரன் மதியாபரணன், கெளரவ விருந்தினர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வைத்திய கலாநிதி சிவபாத மூர்த்தியும் கலந்து கொண்டனர். இப்பாடசாலை காசிப்பிள்ளை, நாகலிங்கம் , பசுபதி, சபாபதி, செல்லத்துரை அகிய இல்லங்களைக் கொண்டுள்ளது. இவ் விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப்ப நிகழ்வாக பிரதம விருந்தினர்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்…
-
- 3 replies
- 629 views
-
-
நேற்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு ஆரம்பமான தமிழீழ அணிக்கு இடையிலான நடந்த உதை பந்தாட்ட போட்டியின் விபரங்கள். 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – Husum - 0 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 2 – Holstebro – 1 போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 4 –Vardeneset BK 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 – LKB /Gistrup– 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 - Stenløse BK – 0 எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.sankathi24.com/news/44892/6…
-
- 3 replies
- 626 views
-
-
ஜேர்மனி பயிற்றுவிப்பாளரின் பதவிக்காலம் 2018வரை நீடிப்பு உலக சம்பியன் ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லூயி, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண தொடர் வரை பயிற்றுவிப்பாளராக நீடிக்கப்பட்டுள்ளார். 55 வயதான இவர், 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணம் வரையே பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவரின் பயிற்றுவிப்பின் கீழ் மகுடம் சூடியுள்ளோம். மீண்டும் ஒரு தடவை அதை ருசி பார்க்க வேண்டும். எனவே, நல்ல முறையில் அணியை வழி நடத்தி செல்லும் லூயி மூலம் அதை நடத்த முடியும் என நம்புவதாக ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இணைந்த ஜோக்கிம் லூயி, 2006ஆம் ஜேர்மனி உல…
-
- 3 replies
- 504 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் நேற்று முதல் விளையாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, நேற்று (ஏப்ரல் 28) நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தக் காரணமாக இருந்தது சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம். இந்நிலையில், அவருக்கு கிரிக்கெட் உலகின் பிரபல ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 'அச…
-
- 3 replies
- 370 views
- 1 follower
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இறுதியாக நடைபெற்ற டி20 போட்டி என்பவற்றில் மேற்கொண்ட வித்தியாசங்கள், வியூகங்கள் மற்றும் பங்களாதேஷ் அணி தொடர்பில் தன்னிடம் காணப்பட்ட அறிவு உள்ளிட்டவை காரணமாகவே சொந்த மண்ணில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பலமிக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்த முடிந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார். அத்துடன், ”பங்களாதேஷ் வீரர்களை பல்வேறு அணுகுமுறைகளுடனும், திட்டங்களுடனும் கையாள முடிந்தமையினால் தான் இந…
-
- 3 replies
- 363 views
-
-
Over = வீச்சலகு Pitch = வீசுகளம் Out = ஆட்டமிழப்பு Wicket = முக்குச்சி Middle Stump = நடுக்குச்சி Out Swinger = வெளிநாட்ட வீச்சு Inswinger = உள்நாட்ட வீச்சு Maiden Over = வெற்றலகு Wicket Maiden = வீழ்வெற்றலகு Leg Side = கால்புறம் Off Side = எதிர்ப்புறம் Wicket Keeper = முக்குச்சிக்காரன் Boundary = எல்லை One Step Forward = முன்கால்வைப்பு Square Cut = செந்திருப்பு Run = ஓட்டம் Bowler = பந்தாள் Batsman = மட்டையாள் All Rounder = முழுவல்லார் Fielder = களத்தர் Bouncer = எகிறன் Hook Shot = கொக்கியடி Sweep Shot = துடுப்பு வலிப்படி Pull Shot = இழுப்படி Straight Drive = நேர்செலுத்தடி Yorker = நேர்க்கூர் எறி Leg Spin = வெளிவிலகுச் சுழல் Off Spin = உள்விலகு…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழில் மைலோ கிண்ண கால்பந்தாட்டம் ஆறு லீக்குகளிலிருந்து 160 கழகங்கள் யாழ். மாவட்டத்தில் கால்பந்தாட்டக் கழகங்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட செயலகமும் நெஸ்ட்லே லங்கா (பி எல் சி) நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘மைலோ கிண்ணம் யாழ்ப்பாணம்’ என்ற பெயரிலான கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. 40 கழகங்களுடன் 2013இல் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் தொடர்ந்த வருடங்களில் முறைஙே 60 கழகங்களும் 100 கழகங்களும் பங்குபற்றின. இவ் வருடப் போட்டிகளில் தீவகம் (31 கழகங்கள்), யாழ்ப்பாணம் (28), வலிகாமம் (38), வடமராட்சி (17), பருத்தித்துறை (28),, மருதங்கேணி (18) ஆகிய லீக்குகளைச் சேர்ந்த 160 கழகங…
-
- 3 replies
- 433 views
-
-
சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்” இலங்கையின் விளையாட்டுத்துறைசார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி.மகாலிங்கம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்தவர். விளையாட்டுத் துறையோடு பொலிஸ் துறையில் இணைந்துகொண்ட இவர் எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கி 1966 ஆம் ஆண்டு உயிரிழந்தார். விளையாட்டுத்துறையில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், நீளம்பாய்தல், உயரம் பாய்தல் என பல்வகை ஆளுமை கொண்டவர். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார். பொலிஸ் துறையில் இணைந்தபோதும் தனது விளையாட்டுத்துறைமீதான ஈடுபாடுகளைக் குறைத்துக்கொள்ளாத இவர் மரணிக்கும்வரை இலங்கையில் புகழ்பூத்த விளையாட்டு வீரராகவே திகழ்ந்தார். வி.ர…
-
- 3 replies
- 1.1k views
-
-
மதுசனின் சகலதுறை ஆட்டத்தோடு யாழ். மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி 19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளான புத்தளம் புனித சேவியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் (இரண்டு நாட்கள் கொண்ட) போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு சொந்தக்காரர்களாக யாழ் வீரர்கள் மாறியுள்ளனர். வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை விருந்தினர்களான சேவியர் கல்லூரிக்கு வழங்கியிருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாடியிருந்த …
-
- 3 replies
- 426 views
-
-
றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் இன்று குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளார். இவர், மங்கோலியரான CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக இன்று தனது முதலாவது போட்டியை சந்திக்கிறார். தனது 18 ஆவது வயதில் ஜேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தர்மலிங்கம் கட்டார் நாட்டின் சார்பில் விளையாடுகிறார். பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்தில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழு முறை ந…
-
- 3 replies
- 937 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். பின்னர் மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மூன்று மணிநேரம் நடைபெற்றது. விசாராணைக்கு பின் குருநாத்தை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸ் அறிவித்துள்ளது. கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் …
-
- 3 replies
- 499 views
-
-
கவுன்டி கிரிக்கெட்டில் 2017-ல் மட்டும் 8 சதங்கள் விளாசி சங்ககரா அசத்தல் இலங்கை அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சங்ககரா 2017-ல் மட்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் 8 சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சங்ககரா. 39 வயதாகும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொழும்பில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் 2017-ம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று அறிவித்தார். அதன்படி இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை அணி வீரர்களின் நேர்த்தியான துடுப்பாட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3 ஆவது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 307 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரின் சீரானா துடுப்பாட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 307 ஓட்டங்களை குவித்தது. அவிஷ்க ப…
-
- 3 replies
- 928 views
- 1 follower
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. 10 முறை சாம்பியன்ஸ் அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகி…
-
- 3 replies
- 1.1k views
-
-
சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். https:/…
-
- 3 replies
- 609 views
- 1 follower
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறுகிய காலத்திற்கு பதவி வகிக்கவுள்ளார். இவர் நேற்று இரவு இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனியின் முயற்சியின் பயனாகவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது இலங்கை அணியினரின் களத்தடுப்பு தரம் குன்றியிருந்ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த எட்டாவது இண்டியன் …
-
- 3 replies
- 540 views
-
-
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்! 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.0…
-
- 3 replies
- 364 views
- 1 follower
-
-
இன்று நடந்த Champions League Twenty20 விளையாட்டில் தமிழகத்தை சேந்த தினேஸ் கார்த்திக் Mendisண் பந்தை ஒரு கை பாத்தார் Mendis போட்ட ஒரு ஒவரில் SIX SIX SIX அடிச்சு அசத்தினார்
-
- 3 replies
- 4.5k views
-
-
-
- 3 replies
- 752 views
-
-
ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு புதுடில்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி, கோஹ்லி உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (ஜூலை 10, 12, 14), இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகளில் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தோனி ஓய்வு: கடந்த 7 மாதங்களாக கேப்டன் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே தொடரில் …
-
- 3 replies
- 457 views
-