Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் திருவாளர். பிரான்சிஸ் சேவியர் காலம் ஆகினார்... பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர். பிரான்சிஸ் சேவியர் அவர்கள் யூன் 10, 2016 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் காலம் ஆகினார். யூலை 25, 1933ல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்த இவர், தனது இளமைக்காலத்தினை யாழ்ப்பாணத்திலேயே கழித்திருந்தார். ஆரம்பத்தில் தபாலதிபராக நியமணம் பெற்றிருந்த அவர் தனது விடாமுயற்சி, கல்வியறிவு மற்றும் தனிப்பட்ட ஆளுமைகளின் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதியினை ப…

  2. கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாக இருந்த வடமராட்சி இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் மாமா அவர்கள் இன்று விபத்தொன்றில் சாவடைந்துள்ளார். தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும்,1992 இல். கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாகவும், படகோட்டி பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் பல நீரடி நீச்சல் வீரர்களை உருவாக்கியவரும் போராளிகளால் அன்பாக மாமா என அழைக்கப்பட்டு வந்தவரும் ஆவார். குறிப்பாக இவருடைய மகன் கடற்புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் அதேவேளை இவருடைய உடன்பிறந்த சகோதரி லண்டனில் தாயகத்து தேசியச் செயற்பாடுகளுக்குள் முன்னின்று உழைத்துவரும் திருமதி இரத்தினேஸ்வரி அம்மா என்பதும் குறிப்…

  3. இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் 21,22 .10.1987 அன்று, வைத்தியர்கள், தாதிமார் உட்பட 21 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நாள். இந்தியப் படையினரால், படு கொலை செய்யப் பட்ட.... நோயாளிகள், வைத்தியர்கள், தாதியருக்கு... நினைவு வணக்கங்கள்.

  4. -எஸ்.நிதர்ஷன் ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பன-சவகமரனன-ஜனன-தனம/71-254843

  5. முதன் முதலாக.... தமிழ் எழுத்தை கணனிக்கு, கொண்டு வந்தவர் மறைவு! இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணனிப் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார். 1980களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை புலம்பெயர் நாடுகளில்; விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர். போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சி…

  6. தூரிகை நாயகன்.. மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஓவியர் மாருதி மறைவு.. சென்னை: பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். இவருக்கு சு…

  7. இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்மராசா முத்துக்குமார் – சிவகுரு வவ…

  8. மொன்றியல் கிய10பெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் களத்தின் தலைமையாளராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேசப்பற்றாளர் முரளி (துரைரத்தினம் முரளிகரன்) அவர்கள் இந்த மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இரவு மொன்றியல் வைத்தியசாலையொன்றில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். தமிழீழத் தாயகத்தில் புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முரளி அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். 1966ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி ‘சான்டோ’ என அழைக்கப்பட்ட துரைரத்தினம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முரளி இளமைக் காலத்திலிருந்தே தேசிய விடுதலை உணர்வின்பால் ஈர்க்கப்பட்டு அப்பாதையில் தடம் பதித்தவர். 1992ம் ஆண்டு கனடாவுக்குப் புலம் பெயர…

  9. தினக்குரல், யாழ். தினக்குரல் பத்திரிகைகளின் நிறுவுனர் எஸ். பி. சாமி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்

  10. முருகனின் தந்தை யாழில் மரணம்; முகம் பார்க்க அனுமதிக்காத அரசு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கா…

  11. ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு ! 29 டிசம்பர் 2025 யாழ்ப்பாணத்து ஓவியர்களில் நாம் மிகவும் இரசித்த ஓரு ஓவியர் ரமணி. வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, மாற்றாக நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் எம்மை அதிகம் கவர்ந்தவை. அதுவெ அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும். அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் கூட தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புக்களுக…

  12. தலைசிறந்த தமிழ் அறிஞரும், இலக்கிய விமர்சகரும், திறனாய்வாளருமான பேராசிரியர் கார்திகேசு விவத்தம்பி அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியி்ட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தழிழ் அறிஞரும், கடல் கடந்த நாடுகளிலும் கூட புகழ் பூத்தவருமான மறைந்த பேராசிரியர் சிவத்தம்பியை நான் நன்கறிவேன். அவரது எளிமையான, பணிவான தோற்றம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இலக்கிய ஆய்வரங்குகளில் அவர் கலந்து கொண்ட பல சந்தர்ப்பங்களில் குறுகிய நேரமே …

  13. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவு- வைகோ இரங்கல் 19 Views மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார். ஐ.நா.மன்றத்தில் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் ஆய்வு உதவிய…

  14. இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர், சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/அமிர்தலிங்கத்தின்-93வது-ஜ/

  15. ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான வாசுதேவர்-நேரு கொரோனாவால் கனடாவில் உயிரிழப்பு.! ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த வாசுதேவர்-நேரு கொரோனாத் தொற்று காரணமாக கனடாவில் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த வாசுதேவர்-நேரு அவர்கள் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களில் முக்கியமான முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்…

  16. மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்! சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர…

  17. முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அ…

  18. முன்னாள் போராளி மாரடைப்பால் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளியான சிவநாதன் அருந்ததி ( இன்று அதிகாலை சாவடைந்துள்ளார். கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொன்ட இவர் கடந்த 03.02.1999. அன்று மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஷெல் வீச்சு காரணமாக விழுப்புண் அடைந்தார். நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்தவர். இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது (இவரும் மாற்று திறனாளிகள் ) இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் …

  19. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்! AdminJanuary 29, 2023 சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம். முத்துகுமாரின் கடைசிக் கடிதம்: ஈழத்தமிழர் பிரச்சனை முடி…

  20. 17 FEB, 2025 | 03:21 PM இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங…

  21. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 34 வது நினைவு தினம் இன்று! AdminDecember 24, 2021 எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்! மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர்…

  22. யாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் : October 9, 2018 திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார். அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடு…

  23. இன்று இணையம் முழுவதும் GIF என்ற அசையும் படத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கமெண்ட் செய்வதற்கும், ரியாக்ட் செய்வதற்கும் ஜிஃப் படங்கள் அதிகம் பயன்பட்டு வருகின்றன. ஜிஃபை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்நிலையில் இந்த ஜிஃப் அசையும் படத்தை கண்டுபிடித்த கணிப்பொறி விஞ்ஞானி ஸ்டீபன் வில்ஹிட் கொரோனா காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 74. இந்த செய்தி தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. வில்ஹிட் ஜிஃப் படத்தை 1987-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இவரது முதல் ஜிஃப் இமேஜ் பறக்கும் விமானத்தின் படமாகும். அவர் அப்போது கண்டுபிடித்த ஜிஃப் இன்று இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஜிஃபை …

    • 5 replies
    • 456 views
  24. இ.தொ.கா. முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார் August 1, 2020 இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி இன்று கொழும்பில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 95. சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படுக்கையிலிருந்த அவர் வீட்டிலேயே இன்று நண்பகல் அளவில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/59421

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.