Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன் October 27, 2023 மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் அரசாங்கம் கவனமாகவுள்ளது. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநா் அநுருத்த யஹம்பத் இப்போதும் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றாா். பிக்குகள் மற்றும் சிங்களத் தரப்பினரின் பின்னணியில் அவா் செயற்படுகின்றாா். அதனால்தான் ஜனாதிபதியின் உத்தரவுகள் எதுவ…

  2. இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய பரபரப்பான கதைகளை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்திருக்கின்றன. ஏழு ஆண்டுகளாகியும் இன்னமும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுக்களைக் கொண்டதாகவே இறுதிப்போர் இரகசியங்கள் இருக்கின்றன. அந்தப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத்தளபதி என்ற வகையில் தனக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும், தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலவும் பீல்ட் மார்ஷல் சரத…

  3. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த நாட்கள் – மனோகணேசன் July 30, 2020 விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த அந்த தருணங்கள் பற்றிய பதிவொன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்புமாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார் புலிகளும் ரணிலும் மகிந்தவும் நானும் கருணாவும் மௌலானாவும் என்ற தலைப்பில் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது- விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த அடுத்தநாள் பிரதமர் ரணிலை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். நான் விடுதலை புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. ஆகவே அப்போத…

  4. நல்­ல­வரா, கெட்­ட­வரா? - முகாபே ஒரு சகாப்தம் 'நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலு­நா­யக்கர் என்ற கதா­பாத்­திரம். அவ­ரிடம் சிறு­வ­யது மகள் கேட்பாள்' அப்பா, நீங்க நல்­ல­வரா, கெட்­ட­வரா?' அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் 'தெரி­ய­லையே அம்மா!' சிம்­பாப்­வேயின் நீண்­ட நாள் ஜனா­தி­பதி ரொபர்ட் முகா­பேயும் அதே மாதிரி தான். மக்­களின் நேசத்­தையும், வெறுப்­பையும் சம்­பா­தித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலை­வரா, மோச­மா­ன­வரா என்று சிம்­பாப்வே மக்­களைக் கேட்டால், தெரி­ய­லையே என்று தான் பதில் கூறு­வார்கள். கால­ணித்­துவ ஆட்­சியின் அடிமைத் தளை­களில் இருந்து தமது தேசத்­திற்கு விடு­தலை தேடித்­தந்த தைரி­ய­மா­ன­தொரு தலைவன். அந்தத் தலைவன், தனது 95 வயதில் இறு…

  5. ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் 04 மார்ச் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா? கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநாடானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் …

    • 1 reply
    • 738 views
  6. உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர் March 31, 2020 - admin · அரசியல் கொரோனோ ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும் விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று ஆணையிடப் பட்டது. இது திட்டமிட்ட பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும். உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்தில் இன்று உலகம் இருக்கும் நேரத்தில், அது போன்ற ம…

  7. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும் - யதீந்திரா அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உறுதியான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்னும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நம்பிக்கையூட்டப்பட்ட அளவிற்கு விடயங்கள் எதுவ…

  8. ரணிலும் மறதியும் மன்னிப்பும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 பெப்ரவரி 20 புதன்கிழமை, மு.ப. 12:10 Comments - 0 மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை. வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து போயிருக்கும். மானிட வளர்ச்சி என்பது, அதன் நற்குணவியல்புகள், ஒழுக்கத்தின் விருத்திகள் சார்ந்தது. அது தொடர்பிலான உரையாடல்கள், திறந்த மனதோடு நிகழ்த்தப்பட வேண்டியவை. ஆனால், அந்த உரையாடல்களின் போது, அறம் என்கிற இன்னொரு மானிட உன்னதம், பேணப்பட வேண்டும். கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து, போர்க் குற்றங்கள…

  9. இந்திய ஆன்மாவும் ஏழுபேர் விடுதலையும் பா.செயப்பிரகாசம் மூன்று தமிழருக்கு வாய்ப்பான ஒரு தீர்ப்பை 18.02.2004 அன்று உச்சநீதிமன்றம் நல்கியிருக்கிறது. மூன்று தமிழர் மட்டுமல்ல, உலகத்தமிழினம் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டிய தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. அப்போதும் மூவரும் குற்றவாளிகள் அல்ல என்று சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய நினைத்தது அந்த விசயத்தில் அல்ல. கருணை மனுவைப் பரிசீலிப்பதில் அநாவசியமான காலதாமதம் செய்யப்பட்டதைக் காரணமாக்கி தண்டனையைக் குறைத்தது. ('நீண்ட காலதாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையைக் குறைக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானது தான். அந்தக் கருத்து சரியானதா என்பதை நாம் ஆராய…

    • 1 reply
    • 737 views
  10. Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம் பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் : (ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்) http://www.mediafire.com/?8l8t4kew6p3i8ol [ 0 ] சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள். துண்…

  11. ஒருபோதும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார ஒதுக்கீடு வராது! வராது! பிரதமர் நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகையில் ஏறக்குறைய 17.5 விழுக்காடு உள்ள உயர் சாதி மக்களில் நலிந்த பிரிவுகளின் மக்களுக்கு மய்ய மாநில அரசுகளின் கல்வியிலும் உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வியிலும், மய்ய மாநில அரசுகளின் வேலைகளிலும் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து அதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி விதி 15இல் 6ஆவது உட்பிரிவையும் விதி 16இல் 6வது உட்பிரிவையும் சேர்த்துள்ளது. அவை 19.1.2019 முதல் நடப்புக்கும் வந்துவிட்டன. அவற்றின் தமிழாக்கம் பின்வருமாறு: பிரிவு 15 (6) (அ) உட்பிரிவு (4) மற்றும் (5)இல் குறிப்பிடப்பட்டுள்ள …

  12. ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து, 11 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், தமிழ் இன அழிப்பு, தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. 2006-2011... தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தது தி.மு.க. முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சகல துறைகளிலும், அவரின் அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆட்சி அராஜகத்தின் உச்சத்தை தமிழக மக்கள் உணர்ந்த காலகட்டமும் அதுதான். 2004 தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, இரண்டு கம்யூ…

  13. வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன் சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்க…

  14. தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ‘புதிய வழமை' என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்ன…

  15. தமிழர்களும் ‘மலசலகூட’ அரசியலும் தனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார். அந்த கிராமத்துக்கே வெறும் இரண்டே இரண்டு மலசலகூடங்களே இருப்பதால் அம்மக்கள் பெரும் அவதிக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் முகங்கொடுப்பதாக கோடிகாட்டிய அவர், குறைந்தது 10 புதிய மலசலகூடங்கள் கட்டுவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை அவர் வைத்ததன் பின்னர், இதற்கான எதிர்வினைகள் பல்வேறுபட்டனவாக இருந்தன. சிலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக “நல்லாட்சி அரசாங்கத்துக்…

  16. உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற பெயருடன் இயங்கும் அமைப்பினால் (Reporters Without Borders' World Press Freedom Index) இன்று 2014 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையேயான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சென்ற வருடத்தை விட 13 படிகள் கீழிறங்கி அமெரிக்கா 46 ஆம் இடத்தையும் சிறிலங்கா 165 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வருடம் அமெரிக்காவின் பின்னடைவுக்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முதலாவதாக சமுக வலைத் தளமான விக்கிலீக்ஸில் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்த முன்னால் இராணுவ வீரருக்கு அமெரிக்க அ…

    • 5 replies
    • 736 views
  17. தமிழ்த்தேசிய கூட்டைமப்புடன் முட்டிமோதும் சுதந்திரக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற மிதவாதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருக்கின்ற மிதவாத தலைவர்களும் வெளியே வந்து அரசியல் நோக்கங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் புதிய அர­சி­ய­ல­மைப்பு வரப்­போ­கின்­றதா? அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் வரப்­போ­கின்­றதா? என்று தெரி­யாமல் நாட்­டு­மக்கள் குழப்­பத்­தி­லேயே இருக்­கின்­றனர். அர­சி­யல்­வா­தி­களும் மக்­களை குழப்பும் செயற்­பா­டு­க­ளி­லேயே தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதா­வது ஒரு­நே­ரத்தில் முழு­மை­யான அர­சி­…

  18. கொரோனாக் கவரேஜ் – நிலாந்தன்… April 25, 2020 இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழரும் ஆவணப்பட இயக்குனருமாகிய சோமிதரன் சில கிழமைகளுக்கு முன் தனது முகநூலில் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.யுத்த காலங்களில் ஊடகங்களில் வரும் நியூஸ் அப்டேட் போலவே கொரோனா அப்டேட்டும் இருக்கிறது என்ற பொருள்பட அவருடைய பதிவு அமைந்திருந்தது. யுத்த காலங்களில் வரும் செய்திகளில் கொல்லப்பட்ட படைவீரர்கள் எத்தனை பேர் விடுதலைப்புலிகள் எத்தனை பேர் காயப்பட்டவர்கள் எத்தனை பேர் கைப்பற்றிய ஆயுதங்களின் எண்ணிக்கை எத்தனை போன்ற விவரங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் வரும். அப்படித்தான் இப்போதும் கொரோனா அப்டேட் எனப்படுவது எத்தனை பேர் சாவு எத்தனை பேருக்கு நோய்த் தொற்று எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு இர…

  19. "திராவிட கட்சிகள் நேர்மையற்று கொள்கையற்று செத்து வீழ்ந்து விட்டது" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விகடன் டாட்காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அரசுக்கு தரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளாரே? இது காலங்கடந்தது. ‘இசைப்பிரியாவுக்கு இப்படி நடந்துவிட்டது; இனிமேலும் போகலாமா? இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? நாம் தமிழர்கள் தானா? இதற்கு மேலும் இந்தியா போகலாமா? என்று கேட்கிறார். இதைத்தானே நாங்கள், ‘இதற்கு மேலும் இந்த அரசில் பங்கேற்கலாமா?’ என்று அன்று கேட்டோம். இன்று எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அன்…

  20. யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி ? யதீந்திரா கடந்த மாதம் 29ம் திகதி, இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஜ.என்.எஸ் கஞ்சர் (Khanjar) திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, குக்குரி வகுப்பு (Khukri-class) ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல். அன்று மாலை ஒரு வரவேற்பு விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. யூலை – 29ம் திகதி, இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதி. இவ்வாறானதொரு திகதியில், இந்திய கடற்படைக் கப்பலின் வருகை தற்செயலானதுதான் ஆனால் முக்கியத்துவம் மிக்கது. 1990ம் ஆண்டு…

    • 2 replies
    • 736 views
  21. இலங்கையின் பேரினவாத பரிணாம வளர்ச்சியில் தற்போதைய ஜாதிக ஹெல உறுமய (ஜா.ஹெ.உ) வந்தடைந்துள்ள பரிமாணத்தை உற்றுநோக்குவது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு அத்தியாவசியமானது. வரலாற்றில் பேரினவாத அமைப்புகள் வெவ்வேறு முகமூடிகளுடன் வந்து அரசியல் அழுத்தக்குழுக்களாக இயங்கி அரசை இனவாத தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும், இனவாதப் பாதையில் வழிநடத்துவதற்கும் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான அரசியல் தீர்மானங்கள், சட்டங்கள், சட்ட அமுலாக்கம், மட்டுமன்றி இதுவரை நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களுக்கும், யுத்தத்தத்தின் பின்னணியிலும் இந்த சக்திகளின் பாத்திரம் விசாலமானது. இனத்தின் பேரால் மட்டுமல்ல கூடவே பௌத்த மதத்தையும் சமாந்தரமாக பயன்பட…

  22. விக்னேஸ்வரன் வரமா, சாபமா? வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைக் குழப்­பங்­க­ளைத் தொடர்ந்து அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைக் கட்­சி­யி­லி­ருந்து 6 மாதங்­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக நீக்­கி­யி­ருக்­கி­றது ரெலொ அமைப்பு. அதன் மூலம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஊடாக கட்­சிக்­குள் உடைவு அல்­லது குழப்­பம் ஏற்­பட்ட மூன்­றா­வது அமைப்­பாகி இருக்­கி­றது ரெலோ. முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­ற­தில் இருந்தே சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஏதோ­வொரு விதத்­தில் கட்­சி­கள் அனைத்­தை­யும் பாதித்­துள்­ளன. கூட்­ட­மைப்­பில் உள்ள கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­களை மட்­டு­…

  23. கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்! ஓர் ஆட்சி மாற்­றத்தின் ஊடாக உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அர­சியல் ஸ்திரத்­தன்மை ஆட்டம் கண்­டி­ருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. அர­சியல் ஸ்திரத்­தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது மிகவும் முக்­கியம். உறு­தி­யான அர­சியல் நிலைமை இல்­லாமல் ஆட்­சியைக் கொண்டு நடத்­து­வது என்­பது கடி­ன­மான காரியம். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளான இரண்டு அர­சியல் கட்­சி­களும் பலப்­ப­ரீட்­சைக்­கான மோதல்­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. தனித்து ஆட்­சியை நடத்­து­வதா? அல்­லது இணைந்து செயற்­ப­டு­வதா என்­பதில் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் முடிவு காண முடி­ய­வில்லை. அதி­கா­ரத்தைத் தொடர்­வ­த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.