Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் -என்.கே.அஷோக்பரன் “சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த் தேசத்தின் பங்கு உள்வாங்க ப்படவில்லை என்பதுதான், பட்டாவர்த்தனமான உண்மை. சோல்பரி அரசியலமைப்பு என்பது பிரித்தானியர்கள் நீங்கள் சிறுபான்மையினர், உங்களுக்கு பிரிவு 29(2) த…

  2. ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி? 2015ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­ப­தற்கு மூன்று பௌத்த குரு­மாரே வெவ்­வேறு வகை­களில் செய­லாற்­றி­யி­ருக்­கி­றார்கள். முத­லா­மவர் மாது­ளு­வாவே சோபித தேரர். இரண்­டா­மவர் கிரம்பே ஆனந்த தேரர். மூன்­றா­மவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோ­ராவர். முத­லி­­ரு­வரும் ஒரு­வ­கை­யிலும் மூன்­றா­மவர் வேறு­வ­கை­யிலும் பங்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவின் விட­யத்­திலும் உயர் நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் விட­யத்­திலும் மஹிந்த ராஜ­பக் ஷ நடந்து கொண்ட முறைகள் மாது­ளு­வாவே சோபித தேர­ருக்கு வெறுப்­பேற்­றி­யி­ருந்­தன. இது பற்றி இவர் பல­முறை மஹிந்­த­விடம் எடுத்துக் கூறியும…

    • 2 replies
    • 667 views
  3. வைரஸா? தேர்தலா? ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்மூலம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு உதவிகள் கிடைக்கும் என்றுமிருந்தது. இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஊடகவியலாளர்களிடம் விசாரித்தேன். யாழ் மாவட்ட செயலர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அப்படி ஒரு இலக்கத்தை கொடுத்ததாகச் சொன்னார்கள். இப்போது உள்ள நிலைமைகளை பொறுத்தவரை அது ஒரு நல்ல செயல். உதவி தேவைப்படுவோர் நேரடியாக மாவட்ட செயலககத்தோடு தொடர்பு கொள்ளலாம். ஆன…

    • 1 reply
    • 667 views
  4. இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு Veeragathy Thanabalasingham on March 21, 2023 Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும். அதை எதிர்த்து பெரிதாக வாதிடுவதும் கஷ்டமானதாக தோன்றும். ஆனால், அவ்வாறு நடைமுறையில் சாத்தியமானதாக உலகில் எங்குமே முன்னுதாரணம் ஒன்றை எவராலும் கூறமுடியாது. அந்தக் கருத்தை எமது…

  5. இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை கடிவாளத்தை கையில் எடுத்துள்ளார். தலையணை ஒன்று உறை வித்தியாசம் என்பது போல தமிழ்த் தேசியத்தின் கொள்கையும் கோட்பாடும் ஒன்றே. அந்த வகையில் தேசியக் கட்சிகளின் தலையும் தலைமைத்துவமும் மாறுகின்ற போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்பு விடுதலை உரிமைப் போராட்டம் நடத்துகின்ற கட்சிகளுக்கு இருக்க முடியாது. இது ஒருவகை அஞ்சலோட்டம் போன்றது. தடியை மற்றவரிடம் கைமாற்றுகின்ற போது கையிலெடுத்துக் கொள்பவர் ஓட வேண்டியதுதான். வெற்றியில்லாத நீண்ட அஞ்சலோட்டமாக மாறியிருக்கும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் சமகாலத்தில் தடியை கையிலெடுத்திருப்பவர் மாவை என்று கூறலாம். தனக்கு ஆப்பு வைப்பதற்கு முன்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியை தம்மகப்படுத்தி காத்துக் கொண்ட ஆனந்…

  6. தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு இழக்கிறதா..? ஜெனீவா போயிருக்கும் வன்னி எம்.பி கனகரத்தினமா ஈழத் தமிழினத்தின் குரல்… தமிழர் கூட்டமைப்பை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நம்புவதாக தெரியவில்லை என்று சென்ற வாரம் எழுதியிருந்தோம். யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு சம்மந்தரை சந்தித்து கேட்டிருந்தனர். சுய நிர்ணய உரிமையை விடக்கூடாது என்று கூட்டமைப்பு மற்றவர்களை வலியுறுத்தினால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பை மற்றவர்கள் வலியுறுத்தினால் அது ஆபத்தானது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை யாழ். ஆயர் போடவில்லை. நேற்று முன்தினம் சம…

  7. தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டங்களாக விருத்தி பெற்றுள்ளதைக் காணலாம். தேசிய இனங்கள் மீதான, பெருந் தேசிய இன அகங்கார ஒடுக்குமுறையை, ஆளும் வர்க்கப் பெரும் தேசியவாதிகள் கட்டவிழ்த்து வந்துள்ளார்கள். அதை எதிர்த்துப் போராடும் தரப்புகள், சுயாட்சிக் கோரிக்கைகளையும் அதற்கும் அப்பாலாகப் பிரிவினைக் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்துள்ளன. இத்தகைய, இன மதத் தேசிய முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைச் சூழலையும் தத்தமது நோக்கங்களுக்குத் தக்கதாக ஏகாதிபத்திய வல்லாதிக்கச் சக்திகள் பயன்படுத்தி வந்துள்ள…

  8. “பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்.... தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது” இப்படி கூறியிருப்பவர் அம்பிடியே சுமனரதன தேரோ என்கிற பௌத்த பிக்கு. இவர் சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார். கடந்த 19 அன்று மட்டகளப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி …

  9. தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. தமிழ் நாட்டின் விருது நகர் ரோட்டறிக் கழகத்தின் இளையோருக்கான தலைமைத்துவ விருதுகளை வழங்கும் நிகழ்வு அது. (RYLA-Rotary Youth Leadership Awards) கனடாவை மையமாகக் கொண்டியங்கும்”ஈ-குருவி-புதிய வெளிச்சம்”அமைப்பு தமிழகத்தின் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையோடு இளம் தொழில் முனைவோருக்கான வதிவிடக் கருத்தரங்கு ஓன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது. இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளை, தொழில் திறன்களைக் கட்டியெழுப்புவது அக்கருத்தரங்கின் நோக்கமாகும். அதில் பங்குபற்றி…

  10. சிங்கங்களை இழக்கும் காடுகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜூன் 02 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மா…

  11. கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.? ஆர்.யசி ஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில மணித்தியாலங்களைக் கூட ஒப்பந்தத்தை மீறிய அடுத்த போராட்டங்கள். இதனிடையில் 2018. 02.24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடி 30 நாட்கள் போர் நிறுத்தத்தை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்கின்றது. பல ஆண்டுகளாக களத்தில் குருதி கண்ட அமெரிக்கா 30 நாட்கள் ஓய்வை விரும்புகின்றது. ஆனால் புதிய நண்பனான ரஷ்யா ஓய்வை விரும்பவில்லை. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேர போர் நிறுத்தம் போதும் என்ற நிபந்தனையில் தொடர்ச்சியாக யுத்தத்தை நடத்தி வருகின்றது. ஒரு நாட்டின் அரசியலை யுத்தங்களே தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும்,யுத்தங்கள் அரசியல…

  12. கொரோனாவுக்கு அரசியல் சிகிச்சை -எம்.எஸ்.எம். ஐயூப் புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதில், இலங்கைக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே, பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள், பல மாதங்களாக ஆய்வுகூடப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், களப் பரீட்சைகளிலும் ஈடுபட்டதன் பின்னரே, மருந்துகளைப் பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கின்றன. இலங்கையில், புதிய மருந்துகள் முதலில் பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்ட பின்னரே, ஆய்வுகூடப் பரிசோதனைக்கு விடப்படுகின்றன. இது, அரசாங்கம் எந்தளவு கவலைக்குரிய நிலைமையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அமெரிக்காவில் ‘பைஸர்’ என்ற பல்தேசிய மருந்துக் கம்பனி, ஜெர்மனியில் ‘பயோஎன்டெக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இ…

  13. 2009 மே க்கு பிறகு நடந்த பல மாற்றங்கள் பல தமிழர்களின் எல்லைகளை மீறிய செயல்கள் என்பது இலங்கை பிரச்சனைகள் கவனிப்பவர்களுக்கு சொல்லாமே விளங்கும் விடையம் ஆகும். அதே போல நாங்களும் மாற்றங்களை எதிர் பார்த்து செய்த கருமங்கள் பல. ஆனால், மாற்றங்கள் என்னவோ சாண் ஏறி முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது. அத்தோடு கூட்டமைப்பு அரசாங்துடனான பேச்சு, மீள் குடியேற்றம், புலம் பெயர்ந்த உறவுகள் உறவு, சுண்ணாகம் குடி நீர் பிரச்சனைகள்,உட்கட்சி உரசல்கள்.. ....... இன்ன பல விடயங்களில் ஒரு தெளிவற்ற போக்கை கொண்டிருப்பதும் ஒன்றும் மறைவான விடயம் அல்ல. எனது நண்பர்கள் சிலர் - அதே போல் உங்களுக்கும் இருக்க கூடும்; மேற்குறிப்பிட்ட காரணங்களால் கூட்டமைப்பையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வாருவதற்காகவும், கயேந…

    • 1 reply
    • 666 views
  14. முஸ்லிம் அரசியல்: மூன்றாவது அணி? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:21 மந்திரவாதிகள், பரிகாரிகள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏதாவதோர் அமானுஷ்ய சக்தியை, தம்மோடு வைத்திருப்பார்கள். இவற்றைத் தீயசக்திகள் என்றும் ஜின்கள் என்றும் அழைப்பதுண்டு. இதற்கொப்பாக, தமக்கு விரும்பியவற்றைச் செய்விப்பதற்காக, பெருந்தேசியமும் வெளிநாடுகளும் கட்டமைப்புகளையும் அணிகளையும் முகவர்களையும் கொண்டிருக்கின்றன. அவ்வாறே, உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள், தமது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தாமாகவே அரசியல் கட்சிகளையும் ஆயுதக் குழுக்களையும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அணிகளையும் உருவாக்கி, ஊட்டி வளர்ப்பது, இப்போத…

  15. மஹிந்த்தவின் காவடியாட்டம் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு அணியான அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை ஒருவாறு முடிவடைந்து விட்டது. பொது எதிரணியைப் பொறுத்தவரை இந்த பாதயாத்திரை மாபெரும் வெற்றி என்று கூறிக் கொண்டிருப்பதுடன். ஆளும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சுபநேரம் ஆரம்பமாகி விட்டது எனவும் அந்த அணியினர் சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் கால்வீக்கம் ஏற்படும் வரை பாதயாத்திரை செய்வதனால், எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. இனவாதத்தை பொங்கியெழ மீளவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கிறா…

  16. வடமாகாணசபையின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்:- கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதே நாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற்கட்டுரை எழுதுபவர்கள் சிலரும், ஓர் ஊடகவியலாளரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்கள். அச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியவரும் அதில் பங்குபற்றினார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக சந்திப்பு நடந்தது. பலதைப் பற்றியும் உரையாடப்பட்டது. ஒரு மாற்று அணியைக் குறித்தும் உரையாடப்பட்டது. விக்னேஸ்வரன் மிகவும் வெளிப்படையாகப் பேசினார். ஐக்கியத்தைக் குலைப்பது இப்பொழுது நல்லதல்ல என்பதே அவருடைய பதிலின் சாரா…

  17. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்­டணிக் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் விரக்­தியும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆணி­வே­ரையே ஆட்­டம்­காண வைத்­தி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்ளிட்­ட­வர்­களின் வெளி­யேற்றம், அர­சாங்­கத்­துக்குப் பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை விட, மஹிந்த ராஜபக்ஷ குடும்­பத்தின் தலை­மைத்­து­வத்­துக்கும் பெரும் சவா­லாக மாறி­யி­ருக்­கி­றது என்­பதே உண்மை.மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அவ­ருடன் இணைந்து கொண்­டுள்­ள­வர்­களும், ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்­டி­ருந்தால், அது பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய விட­ய­மன்று. மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப…

  18. ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது. உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. …

  19. காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன் 91 Views கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் வெளிப்படுத்திய கோபாவேசம், சட்டவரைபின் குறிப்பிட்ட பகுதியை தாம் மீள எழுதுகின்றோம் என்று அரசு அறிவிப்பை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சட்டத்தை முழுமையாகக் கைவிடுவதே அரசு உண்மையில் மேற…

  20. கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்? - நிலாந்தன் கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. தவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம்.இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம் .எனவே தவராசாவை சுமந்திரன் ப…

  21. சுமந்திரனின் கூட்டத்தில் சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் திண்டாட வைத்த கலாநிதி

  22. ஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் இன்று (27) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரில், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோரும் யோசனை தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கவே அறிவித்துள்ளது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசாங்கத்திடமே அறிவித்தது. ஹிலரி கிளின்டன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அனுப்பி கடிதம் மூலம் அமெரிக்கா இதனை அறிவித்திருந்தது. இதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் மரியோ ஒடாரோ மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஆக…

  23. வன்னிப் பகுதியில் சர்வதேசத்தின் வழிநடத்தலில் சிங்களத்தின் கோரத் தாண்டவம் உச்சம்பெற்று அப்பாவி உயிர்கள் ஒரே நேரத்தில் காவுகொள்ளப்பட்டு குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று, வரும் 18 ஆம் நாள் இரண்டு ஆண்டுகளை எட்டுகின்றன. ஆனால், வன்னிப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அப்பாவி மக்களை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி வகை தொகையின்றி துடிக்கத் துடிக்கக் கொன்றொழித்த சிங்களக் கொடுங்கோல் அரசின் இராணுவத்தினர், அந்த மக்களுக்குரிய சொத்துக்களை சூறையாடித் தனதாக்கிக் கொண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட உணவின்றி, தாகத்திற்கு நீர்கூட இன்றி, உறவுகளை இழந்த துன்பம் ஒருபுறம் வாட்ட செய்வதறியாது…

  24. சிங்களவர்களுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களை பலவீனப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழினத்தின் தாயகமாகும். ஈழத் தமிழினத்தின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஈழத்தில் நாகர்கள், இயக்கர்கள் என்ற தமிழினத்தின் மூதாதையர்களே வாழ்ந்து வந்தனர். ‘எலு’ என்ற தமிழ் மொழியின் ஆதி வடிவத்தை இவர்கள் பேசியதோடு,இலங்கை முழுவதையும் ஆண்டனர். இந்த வேளையில் தான் ஈழத்தின் அண்டை நாடான இந்தியாவின் கலிங்க தேசத்தின் இளவரசன் விஜயனும் அவனது தோழர்கள் எழுநூறு பேரும் அந்த நாட்டில் துர் நடத்தைகளில் ஈடுபட்டதனால், அந்த நாட்டு மன்னரால் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்தனர். இவர்களின் வருகை ஈழத்தில் சிங்கள இனத்தின் தோன்றலுக்கு வழிவகுத்ததோடு, இலங்கைத் தீவில் சிங்கள அ…

  25. பாகிஸ்தானின் அண்மைய நிகழ்வுகள் இந்திய – பாகிஸ்தான் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வழிவகுக்குமா? இரா­ணுவ சதி­க­ளுக்கும், இரா­ணுவ ஆட்­சிக்கும் நீண்­ட­காலம் உட்­பட்ட பாகிஸ்தான் மீண்டும் உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­ துள்­ளது. பாகிஸ்தான் சட்ட அமைச்சர் சாஹிட் ஹமீட் இஸ்­லா­மிய தீவி­ர­வா­த கட்சி­களின் தொடர்ச்­சி­யான வழி­ம­றிப்பு போராட்­டத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து இறங்­கி­யுள்ளார். அர­சாங்­கமும் அவர்­களின் தொடர்ச்­சி­யான போராட்­டத்­திற்கு அடி­ப­ணிந்­துள்­ளது. அண்­மையில் பாகிஸ்தான் அர­சாங்கம் தேர்தல் சட்­டத்தில் திருத்­த­மொன்றை மேற்­கொண்­டது. அத்­தி­ருத்த சட்­டத்தில் அல்­லா­ஹ்வுக்கு மரி­யாதை செலுத்தும் வாசகம் இடம்­பெ­ற­வில்லை என ஆட்­சே­பித்து இஸ்­லா­மிய தீவி­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.