அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
பாதாளத்தை நோக்கிய 75 ஆண்டுகள் எம்.எஸ்.எம் ஐயூப் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், முன்னைய வருடங்களின் சுதந்திர தின நிகழ்வுகளைப் போல் ஜொலிக்கவில்லை. வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் முன்னர் போல் தேசிய கொடி பறப்பதை காணக்கூடியதாக இருக்கவில்லை. இதற்கு முன்னர் பல வருடங்களிலும், எதிர்க்கட்சிகள் அரச அனுசரணையுடன் நடைபெறும் சுதந்திர தின விழாக்களை பகிஷ்கரித்துள்ளன. கடந்த வருடம், ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இம்முறை சுதந்திர தினத்துக்கு எதிராக, நாட்டின் தென்பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஏனைய விடயங்களைப் போலவே, ச…
-
- 0 replies
- 444 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களை கவனத்தில் கொள்ளுங்கள் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவுமில்லை. நிவாரணங்கள் சரியான முறையில் அந்த மக்களை சென்றடையவுமில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருப்பதுடன் நீதிக்காக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது முக்கியத்துவமற்றது என யாரும் கருதிவிடக் கூடாது நாட்டின் தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து…
-
- 0 replies
- 453 views
-
-
பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான ஏக்கத்தை புரிந்துகொள்ளாத நகர்வுகள் ரொபட் அன்டனி அரசாங்கம் நல்லிணக்க விடயத்தில் அவசரமாக முன்னேற்றங்களை வெளிக்காட்டவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இருந்து அரசாங்கம் செயற்படவேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தி அடையாத நல்லிணக்க பொறிமுறையில் அர்த்தமில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். அந்தவகையில் செய்ட் அல் ஹுசைன் அறிக்கை குறித்து அரசாங்கம் ஆழமான முறையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை கடந்தவாரம் வெளிவந்…
-
- 0 replies
- 373 views
-
-
பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும் ரொபட் அன்டனி குடும்பமொன்று சமூகத்தில் பொருளாதார ரீதியிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறிச்செல்வதற்காக தமது முழு முயற்சியையும் மேற்கொண்டு நகர்வுகளை முன்னெடுக்கும். அதில் வெற்றிபெறுகின்ற குடும்பங்களும் உள்ளன. முன்னேற்றமடையாத குடும்பங்களும் உள்ளன. எப்படியிருப்பினும் ஒரு குடும்பம் சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத்தரத்தை அடையவேண்டுமென்றால் கடின உழைப்புடன்கூடிய அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு அந்தக் குடும்பத்தினால் தனித்து அதனை செய்ய முடியாது. அதற்கு மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்…
-
- 0 replies
- 457 views
-
-
கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடா…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதும், அவர்களுக்குரித்தான சொத்துகள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற இனவெறுப்பு நடவடிக்கைகள், கடந்த இரு வாரங்களாக அதிகரித்துக் காணப்படுகின்ற ஒரு சூழலில், நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் …
-
- 0 replies
- 252 views
-
-
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? Hasanah Cegu isadeen on May 3, 2019 பட மூலம், Lakruwan Wanniarachchi Photo, Los Angeles Times எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அ…
-
- 0 replies
- 956 views
-
-
பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த 29ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு, கிளஸ்டர் குண்டு தொடர்பான நம்பகமான விசாரணை, இராணுவ மய நீக்கம் உள்ளிட்ட விடயங்கள் பற்றித்தான் ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளியாகின. ஆனால் செய்ட் அல் ஹூசைனின் வாய்மூல அறிக்கையின் 34வது பந்தியில் இராணுவ மறுசீரமைப்பு தொடர்பாக…
-
- 0 replies
- 684 views
-
-
பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும் | இரா மயூதரன்
-
-
- 2 replies
- 455 views
-
-
பானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன்! நம்ம மூதாதையர் ஒரு பழமொழி சொல்வர், ”பானைக் கரியைப் பார்த்து சட்டி கறுப்பு எண்டதாம்” என்று. எங்கடை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் இந்த வார கேள்வி பதிலைப் பார்த்ததும் எனக்கு சட்டென்று இந்தப் பழமொழிதான் மூளையில் பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா, ”மாட்டேன், மாட்டேன்”’ என்று கதற, சம்பந்தர் ஐயாவும் சுமந்திரன் ஐயாவும் விடாப்பிடியாய் குறை இழுவையாய் இழுத்துக்கொண்டுவந்து ”ஒபாமாவோடும் விளாடிமிர் புடினோடும் சரிநிகர் சமானமாகக் ஒரே மேசையில் அமரும் தகுதி பெற்றவர் இவரே!” எனத் தமிழ்மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டினர். பல தியாகங்களைச் செய்த மாவை ஐயா, இதிலும் தன்னிலும் மூத்த அரசியல்வா…
-
- 1 reply
- 684 views
-
-
பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ திக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும். கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இலங்கை வருகை சர்வதேச கவனத்தைப் பெற்றது. தனது நீண்ட ஆசியப் பயணத்தின் ஓர் அங்கமாக அவர் இலங்கைக்கு வந்தது தற்செயலல்ல. எவ்வாறாயினும் உலகளாவிய பெருமன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்ற வகையில் அவரது ஆசிய சுற்றுப்பயணத்தை திக்விஜயமாகவே கொள்ளத் தகும்;. இவ்வாண்டுடன் தனது பதவிக் காலம்…
-
- 0 replies
- 545 views
-
-
பான்கிமூனும் தமிழர்களும் நிலாந்தன்:- ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான்கிமூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை அவர் வானிலிருந்து கொண்டே பார்த்தார். தான் பார்த்தவற்றைப் பற்றி பின்வருமாறு கூறினார்......'நான் உலகம் முழுவதும் பயணம் செய்ததோடு இது போன்ற பல இடங்களுக்கும் விஜயம் செய்திருக்கிறேன்.ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப்பயங்கரமான காட்சிகள் இவைதான்.' என்று.அதன் பின் அவர் மகிந்த ராஜபக்;ஷவிடம் சில வாக்குறுதிகளைப் பெற்றார். அதற்கடுத்த ஆண்டு ஐ.நா மன்றில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாராட்டுப் பத்திரம…
-
- 0 replies
- 535 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் பலதரப்பினரி டையேயும் பரபரப்பையும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருந்த பின்ன ணியில் பல சம்பவங்கள் நடந்தேறியுள் ளன. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் பல ஒப்புதல்களை அளித்திருந்தது. ஆயினும் உள்நாட்டில், அத்தகைய ஒப்பு தல்களுக்கு முரணான வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றுக்கு நேர் முரணான வகையில் அரசியல் ரீதியாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடு ரீதியாகவும் சாதாரண அரசியல்வாதிகள் தொடக்கம், அரச தலைவர்களான ஜனாதிபத…
-
- 0 replies
- 443 views
-
-
பாப்பரசர்: ஆண்டகையின் அரசியல் அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை. இவ்விரண்டுக்கும் இடையிலான உறவு, உலக வரலாற்றின் திசைவழியில் தவிர்க்கவொண்ணாச் செல்வாக்குச் செலுத்தியது. சிலுவைப் போர்களில் தொடங்கி, புனிதப் போர்கள் வரை, இலட்சக்கணக்கானோரைக் காவு கொண்ட பெருமையும் இவ்விரண்டுக்கும் இடையிலான உறவுக்குண்டு. இன்றும், அரசியலில் மதத்தின் செல்வாக்கு இருக்கிறது. அது ‘நாகரிகமடைந்த’ ஜனநாயக நாடுகள் தொட்டு, ‘நாகரிகமடையாத’ மூன்றாமுலக நாடுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். கடந்த மாதம் 30 ஆம் திகதி, வெனிசுவேலாவில் நடைபெற்ற அரசமைப்புச் சபைக்கான தேர்தலில், ஹியுகோ சாவேஸின…
-
- 0 replies
- 295 views
-
-
பாம்பியோவின் பயணத்தினை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா இலங்கை.? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அமெரிக்க உறவின் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோவின் விஜயம் ஒரு வரலாற்று நிகழ்வென இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மைக் பாம்பியோவின் விஜயம் இலங்கை அரசியல் பரப்பில் ஜேவிபி உட்பட பல தரப்பினரிடமும் அதிக கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை ஆடசியாளர்கள் பாம்பியோவை எதிர் கொண்ட விதத்தையும் அதன் மறுபக்கத்தையும் தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். முதலாவது மைக் பாம்பியோவும் இலங்கை ஜனாதிபதியும் சந்தித்த போது ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயங்களை நோக்குவோம். இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல வெளிநாட்டு ம…
-
- 1 reply
- 1k views
-
-
பாரசீக வளைகுடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு நிலையானது, நிலையற்றது. அதன் உள்ளார்ந்த அரசியல் கட்டுமானங்கள், பாதுகாப்பு நிலைமைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மேற்கத்தேய நாடுகளின் தலையீடு, ஐ.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி நிலைமை என்பவற்றின் அடிப்படையில், மேலும் சிக்கலான ஒன்றாகவே காணப்படுகின்றது. பிராந்திய நிலைமைகளைத் தாண்டி உலக வல்லரசுகளின் வல்லரசாண்மையைப் பரீட்சிக்கும் ஒரு தளமாக, குறித்த வளைகுடா அமைவது, அதன் பிராந்திய பாதுகாப்பு நிலைமையைச் சமநிலையில் வைத்திருக்க விடுவதில்லை. …
-
- 0 replies
- 415 views
-
-
தமிழ்க் கவிதைகளின் நவீன கால வரலாறு சுப்ரமணிய பாரதியில் இருந்து தொடங்குகிறது என்பது பரவலான பார்வை. அவரது முறுக்கு மீசையையும், மிடுக்கான கோட்டையும் போலவே உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்ற அவரது வரிகளும், அவரது அடையாளத்தோடு கலந்தவை. ஆனால், எல்லா வரலாற்று மனிதர்களின் வாழ்விலும் அவர்களது எழுச்சியான பக்கங்களைப் போலவே, சங்கடமான பக்கங்களும் இருக்கும். தமது எழுச்சிமிகு விடுதலைப் போராட்டப் பாடல்களால் பெரிதும் அறியப்பட்ட சுப்ரமணிய பாரதியின் வரலாற்றிலும், அப்படி ஒரு பக்கம் உண்டு. பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்து புதுவைக்கு சென்ற பாரதியார் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகாலம் புதுவையில்…
-
-
- 1 reply
- 398 views
-
-
பாரபட்சம் இந்த நாட்டை முப்பது வருடங்களாக ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படுகின்ற தாமதமும், இழுத்தடிப்பும் ஆட்சியாளர்களின் அரசியல் நேர்மை, அரசியல் நிர்வாக நேர்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக…
-
- 0 replies
- 500 views
-
-
பாரம்பரிய இனத்துவ-தேசியவாதத்தின் தோல்வி? - யதீந்திரா இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இனத்துவ மற்றும் மதப்பிணைப்பு தேசியவாதம் தொடர்பில் கேள்விகளை முன்நிறுத்துகின்றது. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியானது, சிங்கள பௌத்த-தேசியவாதத்தின் மீளெழுச்சியாகவே நோக்கப்பட்டது. கோட்டபாயவும், சிங்கள-பௌத்த இனத்தின் நவீன காவலானாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இந்த பின்புலத்தில்தான், தன்னையொரு சிங்கள-பௌத்த தலைவனாக பிரகடணம் செய்தார். நான்தான், நீங்கள் தேடிய தலைவன் என்றார். இவைகளெல்லாம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் எழுச்சிக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்டபாய ஒரு விடயத்தை திரும்பத்…
-
- 0 replies
- 610 views
-
-
பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும் இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத் தடை செய்வதாகவும், அந்நீதிமன்றம் அறிவித்தது. இது, மிகவும் முக்கியமான தீர்ப்பாக அமைந்தது. அதைவிட, எதிர்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளுக்கான முன்னோடியாகவும் கூட, இது அமையக்கூடும். இதனால்தான், இது பற்றியும் இதைப் போன்ற வேறு சில விடயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ‘முத்தலாக்’ என்ப…
-
- 0 replies
- 326 views
-
-
பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா? BharatiSeptember 12, 2020 இரா.துரைரத்தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி கட்சி தலைவர் எஸ். சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சி சார்ந்தவர்களிடம் காணப்பட்டது. ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி அறிந்தவர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு…
-
- 0 replies
- 612 views
-
-
யாழ்ப்பாண குடாக்கடல் மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் டைனமைற் மூலம் மீன்பிடி என்பது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் சாதாரண விடயமாகும். டைனமைற் ரக வெடி பொருட்களை நீர்மட்டத்திற்கு மேலாக வெடிக்க வைப்பதன் மூலமாக எதிர்பாராத அதிர்வ லைக்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மீன்களையும் கொன்று அறுபடை செய்வதே அந்த நுட்பமாகும். அந்தவகையிலேயே தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி, ஜெலிக்னைற் குச்சிகள் கடத்தப்பட்டு பிடி படுகின்ற கதை அமைகின்றது. யாழ். குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இத்தகைய டைனமைற் மீன்பிடியை கடற்படையின் மூலம் முன்னெடுப்பது ஒன்றும் புதிதல்ல. தேவையான வெடிபொருட்களுக்காக எறிகணையொன்றை வெட்டிப்பிளக்க முற்பட்டு இருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததும் பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கலாம். …
-
- 1 reply
- 546 views
-
-
எனது நண்பர் ஒருவர் திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியை எனக்கு அனுப்பியிருந்தார். ஏரிக்கரை பத்திரிகையான தினகரன் பத்திரிகை எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் பத்திரிகை மற்றும் அரசாங்க பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே. ஆனபடியால் சாதாரணமாக நான் தினகரன் பத்திரிகை பார்ப்பது குறைவு அப்படியிருந்தும் எனது நண்பர் மூலம் இவ் செவ்வியை பார்க்க கிடைத்ததற்கு முதலில் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துகொள்கின்றேன். இனி திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களின் செவ்வியில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் சிலவற்றைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபை…
-
- 2 replies
- 478 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.
-
- 4 replies
- 692 views
-
-
07 OCT, 2024 | 12:57 PM வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரு…
-
-
- 3 replies
- 363 views
- 1 follower
-