அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
மே18 இல் ‘புலிகள்’ ஏன் வந்தார்கள்? -லக்ஸ்மன் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பது சிங்கள மக்களை நிச்சயமாக கிலி கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால், ஏன் அதனை இந்த நேரத்தில் இந்தியா செய்தது என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலேயே, இந்தப் புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுகிறது என்பதுதான் பொதுவான விமர்சனமாகும். மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்கக்கூடிய நிலைமை உருவாகியிருந்தது. இந்த நிலைமையானது, தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்துக்கும் அவர்கள் அனுபவித்த வலிகளுக்கும் ஒரு நிம்மதியான நிலையை ஏற்படுத்தும் என்பது உண்மை. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொ…
-
- 0 replies
- 421 views
-
-
அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:
-
- 29 replies
- 6.2k views
-
-
சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எமது நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டவாக்கம் தொடர்பாக அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழுவினால் அரசியலமைப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை நாம் விவாதித்துக்கொண்டிருக்கின்றோம். இது மிக முக்கியமான ஒரு விவாதமும் வரலாற்றுச் சிறப்பான விவாதமுமாகும். எமது முதலாவது அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாகும். அது பிரித்தானியர்களினால் ஆக்கப்பட்டது. - அதன்கீழ் நாம் சுதந்திரம் பெற்றோம். இரண்டாவது அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும்: முதலாவது குடியரசு அரசியலமைப்பு. …
-
- 1 reply
- 416 views
-
-
கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா? பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது. கடந்த 12 ஆம் திகதி, யாழ்ப்பாண பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட்டாக ந…
-
- 0 replies
- 298 views
-
-
மோடியின் வெற்றியும் இந்திய-இலங்கை உறவும் - யதீந்திரா நரேந்திர மோடி - இன்றைய சூழலில் இலங்கை அரசியல் சூழலில் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் சூழலிலும் உன்னிப்பாக நோக்கப்படும் ஒரு பெயராகும். இதற்கு என்ன காரணம்? இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தோல்வியடையும் என்பதும் நரேந்திர மோடியின் தலைமையில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே! ஆனால் பி.ஜே.பி, கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி தனித்து ஆட்சியமைக்குமளவிற்கு தனிப்பெரும்பான்மையை பெறும் என்பதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மேற்படி வெற்றிதான் அனைவரது பார்வையும் மோடியின் மீது திரும்புவதற்கான காரணமாகும். மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின் முற்போக்கு சக்திகள் என்…
-
- 1 reply
- 875 views
-
-
அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை கொளுத்தும் ட்ரம்ப் மீண்டும் மத்திய கிழக்கின் பூதாகரமான மிக நீண்ட வரலாற்றை உடைய இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் நெருப்பினை கொளுத்தி கொழுந்துவிட்டு எரியச் செய்தவர் வேறு யாருமல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியான அமெரிக்க ஜனாதிபதி பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். வட கொரிய அதிபர் மின்னாமல் முழங்காமல் தமது அணுகுண்டு அபிலாஷைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்க வைத்து சாதித்துக் கொண்டிருக்கையில் டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கிறார். வடகொரிய ஜனாதிபதியோ அமெரிக்கா அழித்…
-
- 0 replies
- 429 views
-
-
புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்படும் தடை நடவடிக்கைகளிற்குப் புலம்பெயர்தமிழ் மக்களின் பரப்புரைசெயற்பாடுகளின் பலவீனமே காரணம் என அண்மையில் ஒய்வுநிலை பேராசிரியர் ஒருவர் மிக கூர்மையான கருத்தொன்றை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். தமிழீழ ஆதரவு கருத்தேட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதில் குறைபாடுள்ளதாக விவாதித்தார். சிங்கள கருத்தேட்ட நடவடிக்கைகள் கனடாவில் வலுவாக இருந்தமையே கனடா புலிகள் மீது விதித்த தடைக்கான முக்கிய காரணம் எனக் காரணம் கூறினார். புலத்தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கியமானதொரு விவாதமாக இதுவுள்ளது. விடுதலைப் போரின் வலுவாகத் திகழும் புலத்தமிழ் சமூகம் இந்தப் பரப்புரை முனையில் தன்பணியினை சரியாக செய்யாதுள்ளது என்கின்ற பேராசிரியர…
-
- 0 replies
- 1.3k views
-
-
மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும். இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம். மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது. இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர். இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
2023:பேச்சுவார்த்தைகளின் ஆண்டா ?பேய்க்காட்டப்படும் ஆண்டா? - நிலாந்தன் புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது. புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று அல்லது நாலு நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்பதே வெளியுலகத்தை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் சீரியஸ் ஆக இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஓர் உத்தி அது. அவ்வாறு காட்டவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. ஏனெனில் இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தர வேண்டும் என்பதை விடவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தைப் பிணை எடுக்கக்கூடிய நாடுகளை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். …
-
- 0 replies
- 853 views
-
-
சுமந்திரனின் பதில் என்ன? யதீந்திரா சுமந்திரன் எப்போதும் தன்னை பற்றிய விடயங்கள் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் ஒருவர். இதற்காகவே அவ்வப்போது அவர் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு. இது ஒரு தேர்தலரசியல் தந்திரம். அண்மையில் கூட ஊடகவியலாளர்களுக்கு வகுப்பெடுப்பது போன்று ஏதோ சில விடயங்களை பேசியிருந்தார். உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் கனடிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அரசியலிலிருந்து விலகும் எண்ணம் இருப்பதாகவும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் சுமந்திரன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் காண்பித்து வரும் ஆர்வத்தை பார்த்தால் அவருக்கு அரசியலிலிருந்…
-
- 0 replies
- 593 views
-
-
கற்ற பாடம் எங்கே பெற்ற இணக்கம் எது? யுத்தத்தை வென்று சமாதானத்தை ஏற்படுத்திய முப்படையினரின் தியாகத்தைப் பாராட்டி நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் யுத்த காலத்தில் உயிரிழந்த பொதுமக்களையும் நினைவுகூர வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மே மாதம் 18ஆம் திகதி பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு யுத்தத்தில் வென்ற நாளாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாலேயே சமாதானம் உருவானது எனவும் கூறியுள்ளார். உண்மையில் முப்படையினர் தற்கொலை சார்ந்த கொரில்லா போர் முறையை முறியடித்து நாட்டை அமைதிப்படுத்தியிருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்கள் எல்லோர் மீதுமே போர்க்குற்றம் சுமத்தவும் மு…
-
- 1 reply
- 584 views
-
-
அன்புள்ள மகிந்தா மாமாவுக்கு, நான் கடிக்க மிளகாய் எழுதிக்கொள்வது, அவசர அலுவலாக வெளியூர் சென்றிருந்தததால் சில மாதங்களாக அரசியல் அலசல்களில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் தற்போதைய உங்களின் நிலை குறித்து வேதனையடைந்த நான் சில ஆலோசனைகளை கூறிவிடலாம் என நினைக்கின்றேன். எனது ஆலோசனை என்பது உங்களை சுற்றி இருப்பவர்கள் கூறுவதுபோல குரங்குவால் போல் நீண்டு செல்லாது. இந்த பத்தியின் முடிவில் ஒரு வரியில் எனது ஆலோசனை இருக்கும். அதனை பார்த்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையால் நீங்களும், உங்களை சுற்றியுள்ளவர்களும் வெகுவாக ஆடிப்போய்விட்டிர்கள் என்பதை உங்களின் நடவடிக்கைகளில் இருந்து அறிந்…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஏசு ஜென்ம பூமி எப்படியிருக்கு இன்று? ஐரோப்பா, அமெரிக்கா என்று பல பகுதிகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்கினர். பைபிளின்படி பாலஸ்தீனம்தான் தங்களது தாயகம் என்று முடிவெடுத்து அவர்கள் பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினார்கள். இந்தியாவில் ராமஜென்ம பூமி பிரச்னை ஏற்கெனவே இரண்டு மத்திய அரசுகளை 'ஸ்வாகா' செய்தது போதாதென, இப்போது மூன்றாவது அரசின் ஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஜவ்வல்லாடிக் கொண்டிருக்க ஏசு பிறந்த பூமி, அதுவும் அடுத்த மில்லெனியத்தின் முதல் ஆண்டில் எப்படியிருக்கிறது என ஒரு பார்வை. மாட்டுக் கொட்டகையில் மேரி மாதாவுக்குப் பிறந்தார் ஏசுபிரான் என்பது நமக்குத் தெரிந்தத…
-
- 0 replies
- 1.9k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவாரா? என்.கே அஷோக்பரன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது! கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய வதந்தி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படப் போகிறார் என்பதுதான்! அரசியலமைப்பின் படி, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவி விலகினாலோ, ஜனாதிபதியால் அவர் பதவி விலக்கப்பட்டாலோ, அல்லது அவர் எம்.பி பதவியை இழந்தாலோ, பாராளுமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைக்கக் கூடியவர் என்று ஜனாதிபதி நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பிரதமராக நியமிக்க முடியும். ஆகவே, இதன் நடைமுறை ரீதியிலான இரத்தினச் சுருக்கம், ஜனாதிப…
-
- 0 replies
- 296 views
-
-
மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்காளில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்ட, இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்…
-
- 0 replies
- 968 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பி.மாணிக்கவாசகம் October 28, 2018 வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த சூட்டோடு சூடாக அதன் முதலமைச்சர் புதிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் தனது அரசியலைவிட்டு, ஒதுங்கி இருக்கமாட்டார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த போதிலும், பொதுவாக புதிய அரசியல் கட்சியொன்றை அல்லது புதியதோர் அரசியல் முன்னணியைத் தொடங்கப் போவதாகவே அவருடைய அறிவித்தல் அமைந்திருக்கும் என்ற வெறுமனான எதிர்பார்ப்பே அரசியல் வட்டாரங்களில் மேலோங்கியிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் புறந்தள்ளி, தான் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை ‘தமிழ் மக்கள் கூட்ட…
-
- 0 replies
- 398 views
-
-
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புவரை சபைக்குள் காடைத்தனம் தொடருமா? - வீரகத்தி தனபாலசிங்கம் கடந்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பாராளுமன்றத்திற்குள் நடந்தவை நாட்டு மக்கள் சகலரையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.பாராளுமன்ற செயற்பாடுகளை தொலைக்காட்சயில் நேரடி ஒலிபரப்பு செய்யும் நடைமுறை இருப்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான பிரிவினர் கடந்த வௌள்ளிக்கிழமை சபைக்குள் முன்னென்றும் இல்லாத வகையில் கட்டவிழ்த்துவிட்ட காடைத்தனத்தை நாட்டு மக்கள் முழுமையாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் தங்களது பிரதிநிதிகள் என்று இனிமேலும் அழைக்க மக்கள் விரும்பவேமாட்டார்கள். சபைக்குள் காடைத்தனம் செய்பவர்கள் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொ…
-
- 0 replies
- 435 views
-
-
யாழ்ப்பாணம்-2019 ஜனவரி – வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும் -நிலாந்தன் January 20, 2019 கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் காயப்பட்டுள்ளார்கள். நாச்சிமார் கோயில் அதிகம் சனப்புழக்கமான ஓர் இடம். யாழ்ப்பாணத்தில் பெருஞ்சாலைகளில் ஒன்றாகிய காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம். இந்த இடத்தில்தான் தைப்பொங்கல் தினத்தன்று தாக்குதல் நடந்தது. இதற்கு முன் கடந்த புதுவருட தினத்தன்று கொக்குவில் காந்தி சனசமூக நிலையத்தில் வாளேந்திய இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளார்கள். தாங்கள் அங்கு வரப்போவத…
-
- 0 replies
- 475 views
-
-
83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு – நிலாந்தன்… July 27, 2019 83 ஜூலை தொடர்பில் பசில் பெர்னாண்டோ கொழும்பு டெலிகிராப்பில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அந்த இன அழிப்புக்கு சூத்திரதாரி அப்போது இருந்த அரசுத் தலைவர் ஜெயவர்தனவே என்று குற்றம் சாட்டியுள்ளார்.கொல்லப்பட்ட 13 ராணுவத்தினரின் உடல்களை கொழும்புக்கு கொண்டு வந்து கூட்டாகத் இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டும் என்று படைத் தரப்பும் ஏனைய சில தரப்புக்களும் கேட்ட பொழுது ஜெயவர்த்தனா அதற்கு சம்மதித்தார். ஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அருகருகே வாழும் கொழும்பில் அவ்வாறு கூட்டாக இறுதிக் கிரியைகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதிருந்த கொழும்பு நகர …
-
- 0 replies
- 666 views
-
-
வாழைப்பழ யுத்தம்! வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை அரசுகளையே, வாழைப்பழ குடியரசு என்று அழைக்கின்றனர். இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஓ.ஹென்றி. ஹோண்டுரஸ் நாட்டின் பொம்மை அரசைக் குறிக்க அவர் வாழைப்பழக் குடியரசு என்னும் பதத்தைப் பயன்படுத்தி…
-
- 0 replies
- 2.2k views
-
-
"நிதானம்" "நிதானம் இழந்த அரசியல் தலைவர்களே நிம்மதி கொடுக்கா கொள்கை எதற்கு ? நித்தமும் உங்களுக்குள் பிளவு வேறு நியாமான ஒற்றுமை குலைந்தது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 423 views
-
-
கிளீன் சிறீலங்கா:பொதுக் கழிப்பறைகள் - நிலாந்தன் கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக நிறுத்தும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடுகளை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து வழியில் பேருந்துகள் இடைநிறுத்தப்படுகின்ற உணவகங்களில் உள்ள கழிப்பறை வசதிகளைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக் காட்டினார். நண்பர…
-
- 0 replies
- 307 views
-
-
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். இன்னொரு வகையில் சொன்னால், மொழி ஒரு இனத்தின் குரல் அல்லது வார்த்தைகள் எனலாம். ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்தல் என்பது அந்த இனத்தை கழுத்தில் பிடித்து திருகுவதற்கு ஒப்பானது. அதாவது கொலை செய்வதற்கு ஒப்பானது. இலங்கைத் தீவில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது தொடர்ந்தும் தோல்வியைத்தான் தழுவி வருகிறது. இலங்கையில் தனிநாடு குறித்த கோரல்கள் உருவாகுவதற்கு தனிச்சிங்கள சட்டம் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 1956 களில், அன்றைய காலத்தில் தனிச்சிங்களச் சட்டம் உருவானபோது அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்று சிங்கள இடதுசாரித் தலைவர்கள் எச்சரித்தார்கள். தனிச்சிங்களச் சட்டம் என்பது இந்த தீவில் இரு நாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும் என்…
-
- 1 reply
- 663 views
-
-
வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல், இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் போராட்டத்தில் ஆதரவை திரட்டுதல் என பல்வேறு நோக்கங்களுக்காக முன்னாள் முதல்வர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அல்லாமல், ஈழத் தமிழ் மக்களின் மேம்பாடு கருதிய பயணமே இதுவாகும். தமிழகம் என்றும் ஈழத்துடன் நெருங்கிய பந்தத்தை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய ஆதரவு சக்திகளையும் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள …
-
- 1 reply
- 899 views
-
-
வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் குறித்துப் பேசுவது பிதற்றல் அல்ல தமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் பற்றி பேசுவது பிதற்றல் அல்ல. எமது உரிமைகளின உத்வேகக் குரல் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியாளரின் வாராந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது கேள்வி :- தமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் என்றெல்லாம் உங்கள் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் பிதற்றிவருகின்றன. இது சாத்தியமானதொன்றா? சிங்கள அரசாங்கங்களுடன் சேர்ந்து எம்மை நாம் முன்னேற்றாமல் இவ்வாறான பழைய பல்லவிகளைப் பாடி வருவது எந்தளவுக்குப் பொ…
-
- 0 replies
- 488 views
-