அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
தலைகீழ் மாற்றம் -பி.மாணிக்கவாசகம் November 28, 2018 ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆசியாவில் நீண்டகால ஜனநாயகப் பெருமையுடையதாகக் கருதப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. எண்ணிக்கையில் …
-
- 0 replies
- 488 views
-
-
கடந்து வந்த- 10 வருடங்கள்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழர்களில் பலரும் காணாமலாக்கப்பட்டனர். இது விடயத்தில் சிங்கள வர்கள் அல்லது ஆயுதம் தாங்கிய சிங்களவர்கள் முதன்மைச் சூத்திரதாரிக ளாக இனங்காணப்படுகின்றனர். 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதிக்குப் பின்பான நாள்களில் பெருந்தொகையானவர்களை உயிருடன் இலங்கை இராணுவத்திடம் கையளித்த நிலையில் அவர்களுக் என்ன நடந்தது என்பதாக அவர்தம் உறவுகளின் நீண்ட காலத் தேடலே தற்போது முனைப்படைந்துள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் ஆகும். அந்தக் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பத்த…
-
- 0 replies
- 743 views
-
-
எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் பிறப்பு: ஜனவரி 17.1917 நாவலப்பிட்டி, இலங்கை இறப்பு: டிசம்பர் 24.1987 தமிழ்நாடு, இந்தியா தொழில்: நடிகர், அரசியல்வாதி வாழ்க்கைத் துணை: தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி பிள்ளைகள்: கிடையாது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெருந்தொகை நிதியை அளித்து போராட்டத்தை முன்னெடுக்க உதவியிருந்தார். பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூற…
-
- 3 replies
- 1.3k views
-
-
இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்? - ஸர்மிளா ஸெய்யித் Sharmila Seyyid on May 12, 2019 பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம் ஆன்மீகமானதும், அது முழுக்க முழுக்க ஆழ் மனத்தோடு தொடர்பான ஒரு உள்மன யாத்திரை என்பதுமே மதம் பற்றிய எனது புரிதல். இருந்தும் நாட்டின் தற்போதைய சூழலில் நானும் ஒரு தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிற…
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்கும் கடன்,எதிலும் கடன்,எங்கும் ஊழல்,எதிலும் ஊழல். இதுவே அரசின் தாரக மந்திரம் போல இந்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் கோடி ஒதுக்கீடு,பத்து கோடி ஒதுக்கீடு என வரி பணம் ஒதுக்கி செலவு செய்வதில் உள்ள அரசின் ஆர்வத்திற்கு ஒரு எல்லையே கிடையாது.நாட்டில் பணக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் உள்ள ஆர்வத்திற்கு தான் ஒரு எல்லை உண்டா...! காலம் காலமாக பணக்கார வர்க்கம் மட்டும் முன்னேற அனைத்தையும் செய்துவரும் அரசு தேவையா என என்ன தோன்றுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எழுத்தாளர் படுகொலை,நிருபர் படுகொலை, செய்திதாளுக்கு தடை,இணையதள சேவை என கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எல்லாமே கோலாகலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. முதலாளிகள் ஆதரவு,செய்தி தா…
-
- 1 reply
- 557 views
-
-
‘நேர் கொண்ட பார்வை’ காரை துர்க்கா / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே, தமிழர்கள் மீதான பேரினவாதத்தின் கொடூரக் கரங்கள் நீளத் தொடங்கிவிட்டன. எனவே, இதிலிருந்து இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, காலங்காலமாகவே இலங்கைத் தமிழ் மக்கள் மனங்களில் குடிகொண்ட…
-
- 1 reply
- 782 views
-
-
தமிழினத் தலைவர் யார்; முதல்வர் ஜெயலலிதா வகுத்த அதிரடி வியூகம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் "யார் தமிழின தலைவர்" என்ற போட்டி கடுமையாக நடக்கிறது. ஒவ்வொரு முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதும், "இது தமிழர்களுக்கு எதிரான ஆட்சி" என்று தி.மு.க. தலைவர் பிரசாரம் மேற்கொள்வார். இதை "தமிழுக்காக பணிகளை மேற்கொண்டது நான்தான்" என்று முதல்வர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா அறிவிப்பார். அதுவும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வரின் நடவடிக்கையில் அதிரடியான மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அத்தமிழருக்காக ஆதரவு கொடுக்கும் தமிழக அமைப்புகளே முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி போஸ்டர் போடுகின்றன. இந்நிலையில் இப்போது தமிழர்களின் புத்தாண்டு சித்திரையா? தை மாதமா?…
-
- 0 replies
- 642 views
-
-
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6924255 வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 52.25 வீதத்துடன் வெற்றிவாகை சூடியிருக்கிறார். மிகவும் பரபரப்பாகவும் கடுமையான போட்டிக்கு மத்தியிலும் நடைபெற்ற இந்த தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் மிக அமோகமாக ஆதரவளித்து வாக்குகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ர…
-
- 0 replies
- 289 views
-
-
[size=2] [size=4]காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:- ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார். தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் ச…
-
- 0 replies
- 865 views
-
-
அவர்கள் யாரை விட்டுவைத்திருக்கிறார்கள்? தெருத்தெருவாக அனாதைகளாக அலைகின்ற ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறோம் என மனித குலத்தை அசிங்கப்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் ஆபிரிக்காவில் பல்தேசிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட வாழ் நிலங்களும் இயற்கை வளங்களும் ஆயிரக்கணக்கான மக்களைச் சாட்சியின்றி கொன்று குவித்திருக்கிறது. முன்பெல்லாம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து துப்பாக்கிகளோடும் பரிவரங்களோடும் வந்திறங்கிய இராணுவ அதிகாரிகளுக்குப் பதிலாக இப்போது உள்ளூர் தரகர்களின் துணையோடு மேற்குலகக் காப்ரட் கனவான்கள் வந்து போகிறார்கள். பட்டினியோடு போராடி தெருவோரத்தில் மரணித்துப் போகும் பச்சைக் குழந்தைகளின் பிணங்களில் மேல் நடந்து வந்…
-
- 0 replies
- 537 views
-
-
இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்! 14 Jun 2025, 4:46 PM சாக் பியூசாம்ப் வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியத…
-
- 0 replies
- 391 views
-
-
வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் September 21, 2025 — கருணாகரன் — “மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மா…
-
- 0 replies
- 185 views
-
-
திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும் November 24, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்…
-
- 0 replies
- 200 views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன அழிப்பு நினைவுநாள், இலங்கை சுதந்திர தினம் முதலிய நாட்களில் ஏராளமான தமிழ் இளையவர்களால் அதிகம் பகிரப்படுகிறது. ‘நீ ஸ்ரீலங்கன் இல்லை என்றால் எதற்காக ஆசிரியர் உத்தியோகம் செய்கிறாய்?’ என்பது தொடங்கி, ‘எந்த நாட்டின் அடையாள அட்டையை பயன்படுத்துகிறாய்’ என்பது வரை கேள்விகள் நீளும். அந்தக் கவிதையே யாவற்றுக்குமான பதிலை சொல்லி விடுகிறது. அண்மைய காலத்தில், கொரோனா பேரிடர் காலத்தில் சிங்கள இராணுவத்தை வைத்து அரசு செய்கிற அரசியலையும் வடக்கு கிழக்கில் அதனால் ஏற்படுகிற அச்சுறுத்தலை…
-
- 0 replies
- 464 views
-
-
அமைச்சரவைத் தீர்மானம். வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்! --- --- --- *வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை... *ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா? *மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா? *முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்... -- -- --- வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் -- 26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளி…
-
-
- 12 replies
- 691 views
- 1 follower
-
-
இந்திய - சீன எல்லை நெருக்கடி; சொந்த செலவில் சூனியம் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நெருக்கடியான காலகட்டங்களில் திசை திருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல், திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற வினாக்களுக்கு மௌனத்தை மட்டுமே பரிசளிக்கின்றன. அந்த மௌனம் சொல்லும் செய்தி வலுவானது. வினாக்களுக்கான விடைகள் அந்த மௌனத்திலேயே ஒளிந்திருக்கின்றன. சில தினங்களுக்கு முன் இந்திய - சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக குண்டுகள் வீசப்படாமல், துப்பாக்கிகள் பயன்படுத்தப்படாது நடந்த இந்த மோதலில் உயிரிழப்புகள் ஏ…
-
- 3 replies
- 972 views
-
-
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங் களில் பல்வகை குண இயல்புகள் கொண்ட பாத்திரங்கள் நிறையவே உண்டு. அதில், வீஷ்மர் என்ற பாத்திரம் மிகவும் மரி யாதைக்குரியதாக - கடும் சந்நியாசத்திற்குரிய தாக - தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற் றியதாக - ஆட்சி தனக்குரியதென்று தெரிந்தும் அது எனக்கு வேண்டாம் என்று பதவியை உதறித் தள்ளிய உத்தம குணமுடையதாக காண முடியும். பிதாமகர் என்று போற்றப்பட்ட வீஷ்மர் குரு ஷேத் திரப் போரில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. மகாபாரதக் கதையை கூறுவோரிடம் ஐயா! பிதாமகர் வீஷ்மர் குருஷேத்திரப் போரில் உயிர் துறந் தது ஏன்? அதுவும் தனது சிஷ்யனின் கையால் உயிர் துறந்தார் அல்லவா? அப்படியாக ஒரு அவல நிலை அந்தப் பெருமகனாருக்கு ஏற்பட்டது எதற்காக? இப்படியயல்லாம…
-
- 4 replies
- 7.6k views
-
-
திரிசங்கு நிலையில் சுமந்திரன் சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது, சரியான முறையிலும் எடுக்க வேண்டும். இது, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானது. பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தோன்றிய சர்ச்சைகள் மாத்திரமன்றி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கும் கூட, இது பொருத்தமுடையது தான். அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிட்டு வாக்குகளை உடைக்க, தமிழர்களுக்கு கிடைக்க கூடிய ஒரு ஆசனமும் அங்கு இல்லாமல் போனது. இந்…
-
- 0 replies
- 612 views
-
-
மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகைய…
-
- 0 replies
- 580 views
-
-
ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஏனெனில், அக்கட்சியின் யாப்பின் பிரகாரம், அப்பதவி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தப் பதவியை வகிப்பவர் கட்சித் தலைவர் என்று கூறும் அளவுக்கு, அது அ…
-
- 0 replies
- 380 views
-
-
இந்தமுறை நான் இலங்கை சென்றிருந்தபோதுகல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டுள்ள நண்பர் ஒருவர் இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். கல்வித்துறையில் இராணுவத் தலையீடு குறித்துத்தான் அவரது கவன ஈர்ப்பு அமைந்தது. ‘தலையீடு’ என்கிற சொல்அதன் முழுமையான பரிமாணத்தை உணர்த்தப் போதுமானதல்ல. இலங்கை அரசமைவும் சமூகமும் பல்வேறுஅம்சங்களில் இராணுவமயப்பட்டு வரும் நிலை கல்வித்துறையில் வெளிப்படும் தன்மை என்றுதான் அதைச் சொல்லவேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே சற்று வாசித்திருந்தபோதிலும் முழுமையாகஅறிந்திராததால் அவரிடமும் கல்வித்துறை சார்ந்த பிற நண்பர்களிடமும் கேட்டறிந்தபோது சற்றுவியப்பாகவும் கவலையாகவும் இருந்தது. பல்வேறு வகையான அர…
-
- 4 replies
- 1k views
-
-
ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 112 Views மிகவும் சின்னம் சிறிய சிறீலங்கா அரசு உலக நாடுகளை ஒரு அணியில் இணைத்து தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்தியிருந்தது. இந்த அணியில் எதிரும் புதிருமாக இருப்பதாக நாம் கருதும் இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தன, அமெரிக்காவும் ரஸ்யாவும் இருந்தன. ஏன் தற்போதைய எதிரிகள் என நாம் கருதும், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் யப்பானும் இருந்தன. சிறீலங்காவின் இந்த வெற்றியானது அதன் இராஜதந்திரத்திர அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். தனது அணுகுமுறையில் சிறீலங்கா அரசு மேலும் முன்நகர்ந்துள்ளதையே தற்போது ஜெனீவாவி…
-
- 4 replies
- 772 views
-
-
-
- 0 replies
- 304 views
-
-
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்.கே. அஷோக்பரன் தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும…
-
- 5 replies
- 843 views
-
-
-
- 4 replies
- 938 views
-