Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஐ.நா. தோற்று விட்டதா? நிலாந்தன் 20 அக்டோபர் 2013 இலங்கைத்தீவின் இறுதிக் கட்டப் போரில் ஐ.நா. மன்றம் தனது நடவடிக்கைகளில் தோல்வி கண்டுவிட்டதாக ஐ.நா.வின் இறுதி அறிக்கை கூறுவதாக இன்ரசிற்றி பிரஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது. ராஜந்திர, சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகளை அமுல்படுத்தும் கொள்ளளவு போன்ற விடயங்களில் ஐ.நா. மன்றம் தோல்வி கண்டுள்ளதாகவும், தமது அதிகாரிகளை மாறுபட்ட சூழ்நிலைமைகளில் ஒழுங்குபடுத்தவும், ஈடுபடுத்தவும், அபாயகரமான செயற்பாடுகளின்போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஐ.நா. மன்றம் தவறிவிட்டது என்றும் தெளிவான தலைமைத்துவம் இல்லாமையால் இது விடயத்தில் மாறுபட்ட செய்திகள் அனுப்பப்பட்டதுடன் இதனால் நல்ல சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்டன என்றும் அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்ட…

  2. ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் என்னும் ஆயுத இயக்கம் அழிவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த எந்தவொரு விடயமும் தமிழர்களுடன் நேரடியான தொடர்புடையவை அல்ல. அனைத்தும் யுத்த வெற்றிக்குச் சொந்தமான, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்பானவை. உள்ளுக்குள்ளும் வெளியிலும் அரசாங்கம் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வருகின்ற அனைத்தும் அரசாங்கத்தின் தொடர்சியான இருப்புடன் தொடர்புபட்டவையாகும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆட்சிக்கவிழ்ப்பு அரசியல் பிரவேசம், மற்றும் யுத்தவெற்றிக்கு உரியவரான ஜனாதிபதி ராஜபக…

  3. அரசியல் என்பது கடவுள் வாதமல்ல யதீந்திரா அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. கருத்தியல் அர்த்தத்தில் அரசியல் ஒரு விஞ்ஞான வாதமாகும். அதனால்தான் அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்று அழைக்கிறோம். ஆனாலும் என்னதான் இதுபற்றி அறிவில் நாம் முதிர்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டாலும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, அவ்வப்போது அரசியலை ஒரு மதவாதப் பண்புடனேயே அணுக முற்படுகிறோம், அணுகியும் வருகிறோம். அரசியல் எப்போதெல்லாம் கடவுள்வாதப் பண்பைப் பெறுகிறது? அரசியலில் பல்வேறு புரிதல்களுக்கு இடமுண்டு என்பதை மறுக்கும்போது, ஒரு அரசியல் நிலைப்பாடு முற்றிலும் எதிர்பா ரா…

  4. யாழ்ப்பாணம், கொழும்பில் இருந்து லக்ஸ்மி சுப்ரமணியன் சிறிலங்கன் எயர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சேவை தொடக்கம், சிறிலங்காவின் தலைநகரிலுள்ள சனத்தொகை நிரம்பிய தெருக்கள் வரை, தற்போது சிறிலங்காவில் பல்வேறு மாற்றங்களைக் காணமுடியும். 1975ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வரும்வரை சிறிலங்காவானது பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்தது. ஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவின் நகரங்களைத் தாண்டி அதற்கப்பால் இலங்கையர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் வேறுபட்டவை. 'நாங்கள் எமது சொந்த நாட்டை விட தம…

  5. யுக்ரேன் போர்: நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதில் தரும் வகையில் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன. நேட்டோ என்றால் என…

  6. அரசாங்கத்தின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும் அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன்; முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த வினைத்திறன் தமிழத்தேசிய கூட்டமைப்பு- தமிழத்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுக்கு ஏன் இல்லாமல்போனது? ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தமது வெற்றிகளை மாத்திரம் தற்போது கருத்தில் எடுத்திருப்பதால் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இந்திய நிலைப்பாடு தொடர்பான விடய…

  7. தற்போதய இலங்கை நிலவரத்தில் தமிழர் செய்யவேண்டியது என்ன? திரு. சுதன் ராஜ்

    • 2 replies
    • 364 views
  8. தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது! -எஸ். ஹமீத்- இன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான இத்தகு தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் அதியுயர் பீடம் தொடக்கம் சாதாரண தரத்திலுள்ள இனவெறி இதயம் தாங்கிகளினால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கப்படுகின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மையே. தன்னுடைய எதிர்கால அரசியல் இருப்பை இலங்கையின் அரச சிம்மாசனத்தில் இருத்தி அழகு ப…

  9. இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது? புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த, …

  10. மக்களுக்கு மேலாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கு August 15, 2022 Photo, DECCANHERALD, AFP Photo “மனிதகுலத்தின் இயற்கையான வாழ்வுச்சூழல் ஒரு போர்நிலையில் இருந்தது. அதில் வாழ்வு தனிமையானதாக, தரம் தாழ்ந்ததாக, வெறுக்கத்தக்கதாக, கொடுமையானதாக, குறுகிய காலமுடையதாக இருந்தது. ஏனென்றால், தனிமனிதர்கள் ‘எல்லோரும் எல்லோருக்கும்’ எதிரான ஒரு போர் நிலையில் இருந்தார்கள்” என்று தத்துவஞானி தோமஸ் ஹொப்ஸ் கூறினார். அதனால் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதை தத்துவஞானி ஜோன் லொக் சமூக ஒப்பந்தம் (Social Contract) என்று அழைத்தார். தனிமனிதர்கள் தங்களது சுதந்திரங்களில் சிலவற்றை விட்டுக்கொடுத்து ஆட்சியாளரின் அதிகாரத்துக்கு அல…

  11. தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் ஜெனீவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் விட­யங்­களில், அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யி­ழக்கத் தொடங்கி விட்­டது. அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தெரி­வித்து வரு­கின்ற, வலி­யு­றுத்தி வரு­கின்ற கருத்­துக்­களே இதனை உணர்த்­தி­யி­ருக்­கின்­றன. கொழும்­புக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான, ஜேம்ஸ் சென்­சென்ப்­ரெக்னெர் கடந்த வியா­ழக்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அப்­போது சம்­பந்தன் இரண்…

  12. தடுத்து நிறுத்துவது யார்? | Dr.Sathiyamoorthy | Dr.Gadambanathan

  13. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தினுள் இலங்கைத்தீவு, ஜனாதிபதி தேர்தலை சந்திக்கப்போகின்ற சூழல் மற்றும் சீனாவின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்த இந்தியாவின் கரிசனையும் கவலைகளும் அதிகரித்துள்ள சூழலிலேயே அவரது பயணம் இடம்பெற்றுள்ளது. இதனால், அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் அஜித் டோவலின் இலங்கைப் பயணம் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்பட்டது. அவரது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமானது காலியில் கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் நடைபெற்ற காலி கலந்துரையாடல் என்ற கடற்படையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கடல் பாதுகாப்பு …

  14. இலங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும் முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்டகாலம் ஒன்றினுள் தள்ளியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான நிலைப்பாட்டின் அணுகுமுறையின் விளைவே இது! நிகழ்ந்து முடிந்த இலங்கைத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷேவை எதிர்த்து நின்றவர்கள் யார்? மைத்திரிபால சிறீசேன யார்? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த கடைசி நான்கு நாட்கள் மகிந்தவின் குறுங்காலப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். பொன்சேகா யார்? ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறிப்படைத் தளபதி. சந்திரிகா குமாரதுங்கா யார்? சிங்களப் படைவெறியர்கள் கிரிசாந்தியைப் படுகொலை செய்த காலத்தில் கோனேஸ்வரியின் பெண்குறியில் வெடிகுண்டைச் செருகி வெடிக்கச் செய்தபோது…

  15. துவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்கேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம் மு.திருநாவுக்கரசு சிலம்பிற்கு மகிமை கண்ணகியால் கிடைத்தது. சிம்மாசனத்திற்கு மகிமை அதில் வீற்றிருக்கூடியவரின் தரத்தால் கிடைக்கும். கண்ணகியின் காற்சிலம்பு உடைந்தேனும் நீதியை உரைத்தால் அது வரலாற்றில் அழியாவரம் பெற்றது. திரு.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் சளையாது ஒலித்தன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாவலனாய் வரலாற்றில் ஓர் இடத்தை தனக்கென பதித்துள்ளார். திரு.விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சராய் பதவியில் இருந்த இந்த ஐந்தாண்டு காலங்களிலும் அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு மதிப்பீடாகவே இக்கட்டுரை அமைகிறது. அரசியல் நடவடிக்கைகளை அதன் விள…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்லும் திங்கட்கிழமை, 11 ஜூலை 2011 06:04 வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் ஏக்க நிலைக்கு தள்ளி விடும். ஈழத் தமிழினத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒட்டி மாறுபட்ட கருத்தில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பேரழிவைத் தடுக்க முடியுமா என்பது பெரும் கேள்வி எனினும் இன்றைய சூழ்நிலையில் எமக்கு வேறு மாற்று இயக்கமில்லை. விலை போவதற்கென்றே …

  17. தென்கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தருக்கு. . மதிப்புக்குரிய உபவேந்தருக்கு, ஐயா சிங்கள மாணவர்களின் அமையாமை தொடர்பான குழப்பங்களால் கடந்த ஒக்டோபர் 24ம் திகதி மூடபட்ட தொழில் நுட்ப்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்கள் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென அறிக்கப்பட்டுள்ளது. . அரசாங்கம் செயலிழந்து நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமாகும் நிலையில் சிங்கள முஸ்லிம் உறவுகள் தெளிவற்றிருக்கும் சூழலில் இன்னும் சற்று பொறுத்திருக்கலாம். எனத் தோன்றுகிறது. . நாட்டில் சிங்கள முஸ்லிம் உறவுகள் கொதிநிலையைநோக்கி உயர்ந்து செல்கையில் தென்கிழக்கு பல்கலைக் கழகம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதனால் முன்னைவிட அதிகரித்த நிதானத்துடனும் கூடிய விட்டுக்கொடுப்புடனும் பல்…

    • 0 replies
    • 659 views
  18. சீறும் சீனத்து டிராகன் உலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள் என்று அடித்து சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதிலும் ஆசியாவின் நோயாளி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா தன்னுடைய உள்நாட்டு சந்தையை எழுபதுகளில் வெளிநாடுகளுக்கு திறந்து விட்டதன்மூலம் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. சீனா மேலை நாடுகளுக்குத் தன்னுடைய சந்தையைத் திறந்து விட்டதுமல்லாமல் தன்னுடைய தொழிற் வளங்களை இந்த உலகமயமாக்கலின் மூலம் பெருக்கிக் கொண்டு உள்ளது. இன்று கிட்டத்தட்டதிட்ட தினமொரு புதிய தொழிற்சாலை திறக்கப்படும் அளவிற்கு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிவரும் சீனாவின் வணிகப்பொருட்கள் உலகெங்கிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. …

  19. ஜனவரி தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆகஸ்ட் தேர்தல் by Veeragathy Thanabalasingham - on July 8, 2015 படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்க ஜனாதிபதி சிறிசேன இணங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கையை சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரே…

  20. கறை மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:31 Comments - 0 நாட்டில் எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சமும் பதற்றமும், மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது. இன்னும் என்ன சம்பவம் நடந்து, அதன் மூலமாகவும், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணம் (இமேஜ்), மேலும் சிதைவடைந்து விடுமோ என்ற கவலை, இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தினதும் இயல்புநிலை, ‘ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள் முடங்கும் ஓர் அப்பாவியைப் போல’, முடங்கிக் கிடக்கின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, கொச்சிக்கடை, தெமட்டகொட, கட்டுவான, மட்டக்களப்பு, தெஹிவளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொ…

  21. தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு Editorial / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:31 Comments - 0 -இலட்சுமணன் ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸ் நண்பர் ஒருவர் சொல்கிறார். ‘எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கீறலேனும் ஏற்பட வேண்டும்’ என்று நினைப்பது போலத்தான். கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதான வெறுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, மற்றுமோர் இரத்தக்கறை…

  22. தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்.. May 27, 2019 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர், மூன்று வாரங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாட்டில் நிலவுகின்ற ஒரு மோசமான வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. அது நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கிய இறைமையுள்ள அரசாங்கத்தையும் மீறிய ஒரு கும்பலாட்சி – குண்டர்களின் ஆட்சி நாட்டில் நிலவுவதையே அடையாளப்படுத்தி உள்ளது. யுத்த வெற்றிவாத அரசியல் மனோநிலை சார்ந்த எதேச்சதிகார ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் நல்லாட்ச…

  23. அப்துல் கலாமிற்கு எனி 3 நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காதீங்கப்பா. இந்தியாவின் புகழ் பூத்த அணு குண்டு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமிற்கு எனி 3 நாட்கள் சாப்பாடு (சோறு தண்ணி) கொடுத்திட்டு.. 3 நாட்கள் கொடுக்காமல் விட வேணும். 1 நாள்.. சமையல்காரர்களுக்கு.. சமையலுக்கு விடுதலை..! அப்போது தான் தெரியும்... கடல் வளத்தில் ஜீவனோபாயம் செய்யும் மக்களின் பசியும் வலியும். கலாம் அவர்கள் மன்னார் வளைகுடாவில் மீனவர் பிரச்சனைக்கு முன் வைத்துள்ள 3 நாள் ஈழப் பக்க மீனவர் மீன் பிடி.. 3 நாள் தமிழக பக்க மீனவர் மீன் பிடி.. 1 நாள் இரு பகுதிக்கும் மீன் பிடியில் இருந்து விடுதலை என்பது பற்றி இதனையே சொல்ல முடிகிறது. தமிழக தமிழ் சொந்தங்களுக்கும்.. ஈழத்தமிழ் சொந்த…

  24. ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’; நல்ல நாடகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:05 Comments - 0 ஒவ்வொரு தேசங்களும் தங்களது மக்கள் நலன் கருதி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உலக வழமை. நம் நாட்டிலும் காலத்துக்குக் காலம், அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைக் கவரக் கூடிய வகையில் வண்ணமயமான வார்த்தை ஜாலங்களுடன் அவை நடைமுறைக்கு வருகின்றன. அவற்றுக்கெனப் பொதுவான நோக்கங்கள் பல இருந்தாலும், தமிழர் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்போது, சில மறைமுக நோக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தன; கொண்டிருக்கின்றன; கொண்டிருப்பன என்பதே உண்மை. அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை வினைதிறனான முறையில் இனங்க…

  25. "விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு": செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள் தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும். முல்லை மண்ணில் அரங்­கேற்­றப்­பட்ட மனி­தப்­பே­ர­வ­லங்­க­ளுக்­கான நீதிக்­கோ­ரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கையில் அதே மண்ணில் வர­லாற்­றுப்­ப­ழைமை வாய்ந்த செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆல­யத்தில் இரா­ணு­வத்­தி­னரின் பங்­கேற்­புடன் உரு­வான பௌத்த விகாரை இன முறு­கல்­க­ளுக்கு வித்­திட்­டது. தற்­போது அந்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியின் மர­ணத்தின் பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.