அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9218 topics in this forum
-
சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும்-Rule of Law and democracy -பா.உதயன் —————————————————————————————————————— ஆக்குவதும் நானே அழிப்பதுவும் நானே என்பது போல் நானே அரசு “l am the state“ என்றான் 1655 இல் பாரிஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயிஸ். ஒரு கையில் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்து சட்டம், நீதி, நிர்வாகத்திற்கு (Executive legislative and judiciary) இடையிலான அதிகாரப் பிரிவும் (Separation of power) சமநிலை சட்ட வரையறையும் ( Checks and balances) இல்லாத விடத்தில் தனி நபர் சுதந்திரமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்தும் ஒருவர் கையில் இருந்தால் இது ஓர் சர்வாதிகார ஆட்சியே (Authoritarianism ) ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற…
-
- 0 replies
- 424 views
-
-
போதை விற்பனையாளர்களாலும் உள்வீட்டார்களாலும் குறி வைக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் புலனாய்குத்துறை அதிகாரிகள். ஜேவிபி க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள இந்தியா.அடுத்துவரும் தேர்தல்களில் கோடிகோடியாக பணத்தை கொட்ட தயாராகும் இந்தியா. அமெரிக்கா தனது தரப்பில் அரசுகளை பிரட்டக் கூடிய ஆளை அனுப்பி வைத்ததைப் போன்று இந்தியாவும் தனது அணியிலிருந்து ஒருவரை இறக்கியுள்ளது. கூடிய விரைவில் வடகிழக்கு இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில்.
-
- 0 replies
- 582 views
- 1 follower
-
-
இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 20 வியாழக்கிழமை, மு.ப. 01:53Comments - 0 வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. அவரது கருத்துகள், முழுமையாகச் சரியானவையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இராஜராஜ சோழனின் காலம் பொற்காலம் என்றும்…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. எந்த வேட்பாளர்களை களமிறக்குவது, எப்படியான தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று, பல நாடுகளின் தூதரகங்களே இறங்கி நின்று காரியமாற்றுகின்ற ஒரு செயற்கை ஜனநாயக நடைமுறைதான் சிறிலங்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதவுபெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமானமுறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
கறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே, எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்பட…
-
- 3 replies
- 975 views
- 1 follower
-
-
கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கடந்த காலத்திலும் அண்மைக்காலத்திலும் தவறுகளைச் செயதிருந்தாலும், நாட்டின் ஜனநாயக சமநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு முக்கியமான கூறு ஆகும். அது ஒரு மத்திய பாதைக் கட்சியாக இருந்துவந்திருக்கிறது. அதன் பொதுவான திசையமைவு நாட்டின் அரசியலில், பொருளாதாரத்தில், வெளியுறவு விவகாரங்களில் மற்றும் கலாசார / தேசிய பிரச்சினைகளில் தேவையானதாகும். இந்த விவகாரங்கள் தொடர்பில் அந்த கட்சி பல தடவைகள் தவறிழைத்திருந்தாலும், அதன் தேவை அவசியமானதேயாகும். சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்கள் '1956 தனிச்சிங்கள சட்டத்தை' நினைவுபடுத்தக்கூடும், ஆனால் மத்திய பாதையில் நேர்கோடு இருக்கமுடியாது. இலங்கை இப்போது ஒரு முட்டுச்சந்தில் வந்து நிற்கிறது.மத்திய பாதைக்கு புத்…
-
- 0 replies
- 448 views
-
-
'மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் -1' இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை. இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேல…
-
- 0 replies
- 1.4k views
-
-
சவூதி அரேபியாவில் பாரியளவில் தலை துண்டிப்பு தண்டனைகள் அரபு உலகில் வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியான சவூதிஅரேபியாவின் சர்வாதிகார முடியாட்சி, ஒரேதடவையில் 47 கைதிகளைக்கொன்று, இரத்தஆற்றுடன் இந்த புத்தாண்டை வரவேற்றது. அரச படுகொலைகளின் இந்த அலை, அவ் அரசராட்சியில் 12 வெவ்வேறுசிறைசாலைகளில் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டு இடங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார்கள்,அதேவேளையில் வேறு நான்கு இடங்களில் துப்பாக்கிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆளும் அரச குடும்பத்தின் முற்றுமுழுதான அதிகாரத்தைஎதிர்க்க நினைக்கும் எவரொருவருக்குமான ஒரு பயங்கர எச்சரிக்கையாக,பின்னர் அந்த தலையற்ற சடலங்கள் சிலுவையில் அறையப்பட்டுபொதுவிடத்தில் தொங்கவ…
-
- 0 replies
- 727 views
-
-
அப்டேட் செய்யப்படாத தமிழ் வாக்குகள்? நிலாந்தன்… November 16, 2019 இக்கட்டுரை வாசிக்கப்படுகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும். அம் முடிவுகள் தொடர்பில் இக்கட்டுரை விவாதிக்காது. ஆனால் அம்முடிவுகளின் மீது தமிழ் வாக்காளர்கள் புத்தி பூர்வமாகத் தாக்கம் செலுத்தியிருக்க முடியும், செலுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்குக் கோணத்திலிருந்து இக்கட்டுரை எழுதப்படுகிறது. 2005 இல் புலிகள் இயக்கம் ஜனாதிபதித் தேர்தல் மீது அவ்வாறான ஒரு தலையீட்டைச் செய்தது. அதன் விளைவுகளே இன்று வரையிலும் இலங்கைத் தீவின் ஜனாதிபதித் தேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணித்தது. அதன்மூலம் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜ…
-
- 0 replies
- 685 views
-
-
பலரும் கணித்ததுபோல் பரபரப்பு – கடினம் – போட்டி இல்லாமலேயே தேர்தலில் வென்று, ஜனாதிபதி ஆகியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச. அவரின் இந்த வெற்றி – அவர் சார்ந்த சிங்கள – பௌத்தத்தின் வெற்றியாக மட்டுமே கருதப்படுகின்றது – கொண்டாடப்படுகிறது. இதுவே உண்மையும்கூட, தேர்தல் பிரசாரத்தின்போது, “தமிழர்களின் – சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றிபெறுவேன்”, என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கூற்று இன்று நிரூபணமாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், தென்னிலங்கையில் பலம் மிக்க – மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்க…
-
- 0 replies
- 417 views
-
-
விக்கினேஸ்வரன் தலைமையில் ஒருமாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான கலந்துரையாடல்கள் கடந்த ஒரு வருடமாகவே இடம்பெற்றுவருகின்றது ஆனாலும், இன்னும் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில் விக்கினேஸ்வரனை மீளவும் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கின்ற சூழலிலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேக்களின் கட்சியான சிறிலங்காபொதுஜனபெரமுரன அதி கூடிய ஆசனங்களைபெற்று, ஆட்சியமைக்கக்கூடியநிலைமை காணப்படுவதாலும், யாழ்ப்பாணத்திலுள்ள சில சிவில் சமூக பிரமுகர்கள், இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஈடுபடும் சிலர் ஏற்கனவே தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 418 views
-
-
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீத…
-
- 0 replies
- 181 views
-
-
சுமந்திரனின் நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும் -இந்திரன் ரவீந்திரன் 2018 நவம்பர் 09 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து, பதவி இறக்கப்பட்ட ரணிலின் பிரதமர் பதவியைப் பாதுகாத்து அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் திரு.சுமந்திரனும் திரு.சம்பந்தனின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்ததில் போய் முடிந்தமைதான் உலகம் அறிந்த அவர்களின் சாணக்கியம். இது ரணிலைக் காப்பாற்றப் போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் சம்பந்தரின் பதவி பறிபோனதில் முடிந்தது. இலங்கை நாடாளுமன்றம் நெருக்குதலுக்கு உள்ளாகும் காலத்தில், கைப்பிள்ளை கணக்காக சண்டைக்கு கிளம்புவதில் காட்டும் ஆர்வத்தை அதே அரசியல் யாப்பின் கீழ்…
-
- 0 replies
- 519 views
-
-
அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
சம்பவம் 1 பேராசிரியர் மோகனதாஸ் துணைவேந்தராக இருந்தகாலப்பதியில் பல்கலைக்கழக மாணவர்கள் போர்நிறுத்தக் கண்காணிப்பு அலுவலகம் நோக்கி நடாத்திய அமைதிப் பேரணி இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு மிகமோசமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு மாணவர்கள் மட்டுமன்றி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப் பலரும் துப்பாக்கிப் பிடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டனர். இத் தாக்குதலின் போது தன்னை துணைவேந்தர் என சிங்களத்தில் அறிமுகம் செய்த போதும் பேராசிரியர் மோகனதாசும் அவரோடு சேர்த்து அப்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவச்சந்திரனும் மோசமாக தாக்கப்பட்டனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் காண்டிபன் தலையில் படுகாயம் அடைந்து நினைவிழந்த நிலையில் பேர…
-
- 2 replies
- 991 views
-
-
-
தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலா…
-
- 0 replies
- 680 views
-
-
ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…
-
- 0 replies
- 374 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-21 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-20
-
- 0 replies
- 317 views
-
-
ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? நிலாந்தன் January 24, 2021 வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பில் இவ்வாறு ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. குறிப்பாக கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் ஜெனிவாவில் தமிழ்மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து நீண்ட ஆலோசனைகளின்பின் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணம் இது.இம்முயற்சிகளின் தொடக்கம் தமிழ் டயஸ்போறாதான். லண்டனை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்பு ஒன்று முதன்முதலாக அப்படி ஒரு ஆவணத்தை உருவாக்கி சுமந்திரனுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை பக்கமுடை…
-
- 0 replies
- 773 views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? – அகிலன் 51 Views மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைவிட, சிறீலங்கா அரசாங்கமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டிருக…
-
- 0 replies
- 309 views
-
-
அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழக்கும் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளிலும், இராணுவ முகாம்களின் எதிரிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள். இந்தப் போராட்டங்கள் அரசியல் ரீதியாக, அரசியல் தலைமைகளினால் வழிநடத்தப்படவில்லை. ஆனால் போராட்டங்கள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களாகின்றன. ஆனால் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலையில் காலக்கெடு விதித்து மீறியதைத் தவிர அந்தப் பிரச்சினைக்கு முற்றுமுழுதாகத் தீர்வு காண்பதற்குரிய அக்கறையை அ…
-
- 0 replies
- 371 views
-
-
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி? தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி உருவாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவாகும் அந்த அணியில், இப்போது காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு ஈஸ்வரன் தலைமையிலான கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட ‘மதச்சார்பின்மை’ பேசும் கட்சிகள் எல்லாம், ஓரணியில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. விவசாயிகளுக்கான போராட்டம் என்ற அளவில் 25.4.2017 அன்று நடைபெற்ற முழு அடைப்பை நோக்கினாலும், இது ஒரு மாற்று அரசியல் அணி என்பதில் சந்தேகமில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்ன…
-
- 0 replies
- 382 views
-
-
வடக்கு மாகாணசபை: அரசியல் தீர்வை கையாள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் - யதீந்திரா வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு பெற்றிருக்கும் அமோக வெற்றியானது, தமிழ் மக்கள் சலுகைகளை விடவும் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. விடுதலைப்புலிகளை போரில் வெற்றிகொள்ள முடிந்த அரசாங்கத்தால், தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதையும் மேற்படி வெற்றி நிரூபித்திருக்கிறது. யுத்தத்திற்கு பின்னர் அத்தகையதொரு வாய்ப்பை அரசாங்கம் பெற்றிருந்தும் கூட, அதனை முறையாக பயன்படுத்துவதில் அரசாங்கம் பெரிய முன்னேற்றங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிரு…
-
- 2 replies
- 818 views
-