அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
[size=4]இதற்கான பதிலைத் தேடும்போது இந்தியா,சீனா,மேற்குலகு என்கிற மூன்று முக்கிய சக்திகளின் நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 80 களின் ஆரம்பத்தில் உருவான இந்திய-அமெரிக்க ஆதிக்கப்போட்டி இற்றைவரை நீடிப்பதை அவதானிக்கலாம். அதேவேளை கடந்த பத்தாண்டுகளாக சீனாவில் ஏற்பட்டுள்ள துரித பொருளாதார வளர்ச்சி, மூன்றாவது சக்தியொன்றின் நேரடித்தலையீட்டினை இலங்கையில் ஏற்படுத்துவதைக் காண்கிறோம். மலாக்கா நீரிணைக்கு மாற்றீடாக, இந்துசமுத்திரக் கடற்பிராந்தியம் சீனாவிற்குத் தேவைப்படுவதால் இம்மாற்றம் நிகழ்கிறது. எண்ணெய் மற்றும் கனிம பொருட்களுக்கான சீனாவின் வழங்கல் பாதையில் ,கேந்திய முக்கியத்துவம் வாய்ந்த கடல் பிராந்தியமாக இவையிரண்டும் மாறிவிட்டதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.[/size] [size=4…
-
- 1 reply
- 936 views
-
-
இலங்கையின் நெருக்கடி மற்றும் சிறிய அரசுகளின் சங்கடங்கள் By T. SARANYA 16 SEP, 2022 | 03:30 PM இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் அதன் சிக்கலான வெளிநாட்டு உறவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகஸ்ட் 16 அன்று, அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகம் யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பலை வரவேற்றது. பயணத்தை ஒத்திவைக்குமாறு கொழும்பு கேட்டிருந்த போதிலும், பின்னர் இணங்கி, ஆகஸ்ட் 22ம் திகதி வரை கப்பலை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதித்தது. இந்த விடயத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்று இந்தியா மறுத்தது, எனினும் விஜயம் குறித்து தனது கவலையை பதிவு செய்தது. பெய்ஜிங் கப்பல் ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்று வாதிடுகி…
-
- 2 replies
- 538 views
- 1 follower
-
-
இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று October 29, 2024 பிரசாத் இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜ…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையின் பயணம்? யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது. அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் முடியவில்லை. அரசியற் தீர்வை முன்வைக்கவும் இயலவில்லை. எந்தப் பாதையிலும் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் இறுகித் தேங்கிப்போயுள்ளது அரசாங்கம். கடந்த இரண்டாண்டுகளில் கொழும்பு கொண்டாடிய விழாக்களையும் அது அடைந்த பெருமிதங்களையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் …
-
- 1 reply
- 569 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,G.L.PEIRIS'S FACEBOOK படக்குறிப்பு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவிகளை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவர், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதிய…
-
- 0 replies
- 329 views
-
-
அமெரிக்காவின் ஜனநாயம்மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டார்.அவரது விஜயத்தை உற்றுநோக்கும் போது அதுமிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளதாக தெரிகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முல்லைதீவிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார். தனது இலங்கை விஜயத்தின் போது அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட விடயங்களை வைத்துப்பார்க்கும்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் குறித்து அவர் உற்சாகமடைந்திருப்பதாக புலனாகியுள்ளது. அவர் இலங்கைப் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் அவர் இன்னும் நம்பி…
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்பிலிருந்து தமிழர்கள் ஏன் விலகி இருக்க வேண்டும் ? 00000000 ”தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்கான ஆற்ற லை கொண்டிருக்கவில்லை , புதிய அரசியலமைப்பு ஏற்கனவே பெற்ற சில நன்மைகளை மாற்றியமைக்க முடியும். ” 00000000000 ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதற்கும் அரசியலமைப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துவதற்கும் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. புத்திசாலித்தனமானது தமிழர் கட்சியானது செயல்முறையை மெதுவாக்க முயற்சிக்கும். மிகவும் சிறப்பானதும் சாத்தியமானதுமானவழி புதிய அரசியலமைப்பை தடுக்க தமிழ் அல்லது சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பாரிய கூட்டணியை தமிழ் த் தேசிய கூட்டமைப்பு…
-
- 0 replies
- 388 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க, இலங்கையின் புதிய ஜனாதிபதி (தேர்வு) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 23 செப்டெம்பர் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா? இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் (…
-
-
- 1 reply
- 453 views
- 2 followers
-
-
BY AMAL JAYASINGHE AFP-JIJI இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. தனது கதாநாயர்களாக சேகுவேராவையும் கார்ல்மார்க்சினையும் கருதும் அனுரகுமார திசநாயக்கவிற்கு நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள தனியார் வர்த்தக அமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியால் சீற்றமடைந்த மக்களின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க பெற்றார். இலங்கை வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக தான் முன்வைத்து…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
மலையக மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இம்மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்மாவட்டத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது ஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தாலும் கூடுதலான சிங்கள வாக்குகளே அவருக்கு இம்மாவட்டத்தில் கிடைத்திருந்தன. முக்கியமாக பெருந்தோட்ட பகுதி வாழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் சஜித் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 413 வாக்குகளை (66.37%) பெற்றிருந்தா…
-
- 0 replies
- 553 views
-
-
Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலை…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை; சீனாவை சார தயாராகிறதா.? இலங்கையின் வெளியுறவுக கொள்கை தனித்துவமான பக்கத்தினை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளது என்பதை கடந்த வாரங்களில் இதே பகுதியில் தேடியுள்ளோம். இவ்வாரம் அதன் இன்னோர் பக்கத்தினையும் அதனால் ஏற்படவுள்ள அரசியல் களத்தையும் நோக்குவது பொருத்தமானதாக அமையும் என எதிர்பார்த்து இக்கட்டுரை தயார்செய்யப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு பதிலாக வங்காளவிரிகுடாவிலுள்ள நிக்கேபார் தீவிலுள்ள (Great Nicobar Island) துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு இந்திய மத்தியரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்புதிய இடமாற்றத் துறைமுகத்தை (Transit Point) அமைப்பதற்கான மூலோபாய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan 1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், குடியேறியவர்களை அவர்களின் பூர்வீகம் பொருட்படுத்தாமல் வரவேற்கவும் தனது அமைச்சரவை கூட்டாளிகளை வழிநடத்துவதன் மூலம் சிங்கப்பூரை ‘மூன்றாம் உலக’ நாட்டிலிருந்து ‘முதல் உலக’ உலகளாவிய பெருநகரமாக மாற்றினார். இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகள…
-
- 3 replies
- 743 views
-
-
இலங்கையின் பொருளாதார சவால்களை 2023ல் வெற்றிக் கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு, வரி வருமானத்தை அதிகரித்தல், வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல், வர்த்தக நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்த்தல், மின்சார பிரச்னை, மனித உரிமையை பாதுகாத்தல், தேர்தல் நடத்துதல், எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட புவிசார் அரசியல் ஆகிய பிரச்னைகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுடன் 2023ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது. இந்த பிரச்னைக…
-
- 1 reply
- 566 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை இன்று சந்தித்துள்ள பொருளாதார பிறழ்வு நிலையை, தமக்குச் சாதகமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் நிற்பது ஜே.வி.பி கட்சியாகும். தன்னுடைய பயங்கரவாத வரலாற்றை, அதைக் கண்டிராத, அறிந்திராத இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து மறைக்கவும், தனது மார்க்ஸிஸவாத அடையாளத்தை மறைக்கவும், அரசியலுக்குப் புதிதான தாராளவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்வோரோடு கைகோர்த்துக்கொண்டு, என்.பி.பி (தேசிய மக்கள் சக்தி) என்ற புதுப்பெயரில், புது சின்னத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கோடு “தேர்தலை நடத்து; தேர்தலை நடத்து” என்று கூக்குரலிட்டுக் கொண்டும்…
-
- 0 replies
- 866 views
-
-
இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் உடன்படுகின்றதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான ஒரு விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி, நிச்சயமாக இலங்கையர்களின் கைகளில் இல்லை என்பதாகும். அப்படியாயின், இப்போது எழுகின்ற கேள்வி, அது யார் கைகளில் இருக்கின்றது என்பதாகும். இலங்கையின் பொருளாதாரம், தனது தன்னிறைவுச் சுயசார்புத் தன்மையை இழக்கத் தொடங்கியது முதல், அந்நியர் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல் February 11, 2015 Photo, AP Photo/Eranga Jayawardena வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ம…
-
- 0 replies
- 178 views
-
-
இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான்! நெருக்கடிகள், மக்களுக்கு வாய்ப்பை மட்டும் வழங்குவதில்லை; ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்தது; இன்ன பிறருக்கு, அடுத்த ஜனாதிபதி கனவைக் கொடுத்துள்ளது. அயல்நாடுகள், அவர்தம் நலன்களை வெற்றிகரமாக வென்றெடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் நெருக்கடிகள் வாய்ப்பாகிறது. ஜூன் 10ஆம் திகதி, ‘பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு’ (கோப…
-
- 1 reply
- 417 views
-
-
இலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா? -(கலைஞன்) இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `றோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 942 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய அமெரிக்கா, இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய முடியாதளவிற்கு பயணத்தடையை விதித்திருந்தது. இந்தத் தடை அறிவிக்கப்பட்டிருக்கும் சம வேளையிலேயே ஜ.நா மனித உரிமைகள் பேரiயின் கூட்டத் தொடரும் ஆரம்பித்திருந்தது. மேலோட்டமாக பார்த்தால் அமெரிக்காவின் பயணத் தடைக்கும் ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் தொடர்புள்ளதான ஒரு தோற்றம் தெரியக் கூடும். இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் பேசுபவர்களும் இவ்வாறான தொணியில் பேசுவதையும் ஆங்காங்கே காண முடிகின்றது. ஆனால் அமெரிக்காவின் பயணத் தடை அறிவிப்பிற்கும், ஜ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் – இரண்டாம் பாகம் ? - யதீந்திரா இலங்கையின் அரசியல் கடிகாரம் மீளவும் பழைய காலத்தை நோக்கித் திரும்பக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான மனித உரிமைகள் விவகாரம் மீளவும் கூட்டான விவாதங்களை ஏற்படுத்தலாம். இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அதாவது, மீளவும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் ராஜபக்சக்களின் அரசாங்கமானது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் முடிவை நிராகரித்திருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் வார்தையில் கூறுவதனால், முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை இறந்துவிட்டது. அதனை இனி உயிர்ப்பிக்க முடியாது. உண்மையிலேயே அந…
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குதலுக்கு; சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய பல பிழையான பலமான ஐதீகங்களும், புனைவுகளும் செல்வாக்கு செலுத்தி வருவதை நாம் அறிவோம். அப்பேர்பட்ட புனைவுகள் தான் தமிழர்கள் அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பது போன்ற பீதிகள். “தமிழர்களுக்கு தமிழ்நாடு இருக்கிறது எங்களுக்கு உலகில் எவர் உண்டு” என்கிற வாசகம் சிங்களத்தில் பிரபல்யம். இந்தியா இலங்கையில் பண்பாட்டு ரீதியில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அரசியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வி இலங்கை வாழ் மக்களிடம் நிலவவே செய்கிறது. என்னதான் இந்திய – இலங்கை பண்பாட்டு உ…
-
- 0 replies
- 3.8k views
-
-
இலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை.! - நா.யோகேந்திரநாதன்.! இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியா மீண்டும் அக்கறை காட்டத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1980ம் ஆண்டு காலப்பகுதி தொட்டே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான கரிசனையை இந்தியா காட்டி வந்தாலும் கூட அவை பேச்சுகள், அறிக்கைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று விடுவதுண்டு. இதுவரை ஆக்கபூர்வமான எவ்வித பலா பலன்களும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக இலவு காத்த கிளிகளின் நிலையிலேயே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பரிதாப நிலைமையை எட்டியுள்ளன. இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினைகளில் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் எமது தமிழ்த் தலைமைகள் இந்தியா பற்றிய நம…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் - ரணில் விக்ரமசிங்க 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPARTMENT OF GOVERNMENT INFORMATION இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் 11ம் தேதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளெழுவதற்கு, இந்தியா வழங்கிய 'உயிர் மூச்சே' காரணம் என ரணில் விக்ரமசிங்க, தனது கொள்கை பிரகடன உரையில் இன்று கூறினார். 9வ…
-
- 0 replies
- 769 views
- 1 follower
-
-
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் எதிர்ப்பதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை. ஆனால் குறித்த பிரேரணையை, தமிழ் தரப்பினரில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்க பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசாங்கம் கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத…
-
- 2 replies
- 1.1k views
-