நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சிங்கள அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா.? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் த…
-
- 0 replies
- 471 views
-
-
நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alamy (இந்தக் கட்டுரை The Conversation-ல் முதலில் வெளியானது. பிறகு Creative Commons உரிமத்தின் கீழ் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.) ஜூன் 1348ல் இங்கிலாந்தில் மக்களுக்கு புதிரான நோய் அறிகுறிகள் தென்படுவதாகத் தகவல்கள் பதிவாயின. அவை லேசான அறிகுறியாக மற்றும் தெளிவில்லாமல் இருந்தன. தலைவலி, வேறு வலிகள் மற்றும் குமட்டல் என இருந்தது. அதைத் தொடர்ந்து வலி மிகுந்த கருப்பான மேடுகள் அல்லது நிண நீர்க் கட்டிகள் போன்றவை அக்குள் அல்லது தொடை இடுக்கில் தோன்றின. அதனால் அதற்கு பூபோனிக் பிளேக் என பெயர் வைக்கப்பட்டது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு முற்றிய நிலையில் அதிக காய்ச்சல் ஏற்பட்ட…
-
- 0 replies
- 471 views
-
-
பலாலி விமான நிலையம் தொடர்ந்தும் இயங்குமா....? By T. Saranya 17 Aug, 2022 ம.ரூபன். பலாலி - சென்னை விமான சேவைகள் ஜூலை மீண்டும் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஜூன் 18 இல் பலாலியில் உறுதியளித்திருந்தார். சட்டச்சிக்கல், எரிபொருள் பிரச்சினை விமான நிறுவனத்தின் எதிர்பார்ப்பு காரணமாக நடைபெறாது என அவருடன் பலாலிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னர் கூறியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் இதற்கு உத்தரவிட்டிருந்தார். ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனங்களுடன் பேச்சு நடாத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சிறிப…
-
- 0 replies
- 471 views
-
-
புதைகுழி தேசம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி: ஆனந்த விகடன் 26 Mar, 2014 'புத்தன்பாதம், செத்த பிணங்கள் புதையும் கல்லறையோ..!’ இது ஈழத்து வில்லிசைப் பாடல் வரிகள். ஈழத் தமிழர் படுகொலைகளுக்குப் பின்னர், இலங்கையில் சிங்களர்கள் பாதம் பதித்த இடங்கள் எல்லாம் இப்போது மனிதப் புதைகுழிகளாக உருமாறிவிட்டன. திருக்கேதீஸ்வரம், இறுதிப் போர் நடந்த மூங்கிலாறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதே, இப்போது ஈழக் கொலைக் களத்தின் சாட்சி. இந்தியா, தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்க, தமிழகம் கூட்டணிக் கணக்குகளுக்குள் சிக்கி உழன்றுகொண்டிருக்க... ஈழ நிலவரம் கண்டுகொள்ளப்படாத…
-
- 0 replies
- 471 views
-
-
கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி Jun 16, 20190 நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு …
-
- 1 reply
- 471 views
-
-
சமீபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பும் அதனோடு தொடர்பான அரசியலும் பற்றி யாழ்பாணத்தில் இருந்து பல்கலை கழக மாணவன் ஒருவர் தனது ஆதங்கத்தை தனது முக நூலில் பதிவு செய்துள்ளார். அதன் வீடியோவில் தமிழர்கள் சிந்திக்கவேண்டிய பல விடயங்கள் இருப்பதால் அந்த வீடியோவின் பதிவை இங்கு இணைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழர்கள் தமது இருப்பை நிலைநாட்ட தற்போது கல்வி ஒன்று தான் எஞ்சியுள்ளது அதையும் கெடுக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளிடம் கேட்கிறார் அந்த மாணவன். வீடியோ இணைப்பு
-
- 3 replies
- 471 views
-
-
“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. சுத்திவர நாசங்கள் நடக்கிறபோது “நாசம் அறுப்பான்” எப்பிடி பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறது? முடியல.. அதுவும் முல்லைத் தீவு அபிவிருத்தி ஒன்றியம் குரே ஐயாவை சந்திச்சு போட்டு விட்டினமே ஒரு அறிக்கை அத பாத்த உடன பிளட் பிறசர் தலைக்கு அடிச்சிட்டுது… “முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துகிறார்கள். எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அர…
-
- 0 replies
- 471 views
-
-
Proud To Be Tamil தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிடப்பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது. பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பத…
-
- 0 replies
- 470 views
-
-
ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், மிக நவீன ராணுவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் முன்னேறிய விமானப்படையை கொண்ட உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அந்த நாட்டால், தாலிபன்களை ஏன் தோற்கடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவால் ஏன் ஒரு நவீன போரை வெல்ல முடியவில்லை என்று அமெரிக்க அறிவுஜீவிகள் குழப்பமடைகிறார்கள். செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) அமெரிக்கப் படைகளை திரும்பப்பெற்றவுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஈடுபாடு முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வியும் முக்கியமானது. குறிப்பாக சீனாவும் ரஷ்யாவும் முன்னே வந்து தாலிபன்களு…
-
- 2 replies
- 470 views
-
-
சிறப்புக் கட்டுரை: கமலா ஹாரிஸ் உதாரணத்திலிருந்து கற்க வேண்டியது என்ன? மின்னம்பலம் ராஜன் குறை அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் சென்ற வாரம் தன்னுடைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என்பவரை அறிவித்துள்ளார். சென்ற வருடம் கமலா ஹாரிஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவே போட்டியிட முன்வந்தவர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முனையும் பத்து பன்னிரண்டு பேரில் அவரும் ஒருவராக இருந்ததால் அவர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது நவம்பர் மாதம் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஜனநாயகக் கட்சி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. ஜோ பைடன் அண…
-
- 1 reply
- 470 views
-
-
மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா? ஒரு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு துறைகளுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கல்வித்துறையின் அபிவிருத்தியினால் பல்வேறு சாதக விளைவுகள் ஏற்படும். எனவே தான் உலக கல்வித் துறையின் அபிவிருத்தி கருதி முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் உயர்கல்வி குறித்து நாம் பேசுகின்றபோது பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கு உந்து சக்தியாக அமைகின்றன. எமது நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகம் ஒன்று இல்லாத நிலையில், மலையக பல்கலைக்கழகம் என்ற ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற…
-
- 0 replies
- 469 views
-
-
உன்னை பார். உங்களைச் சுற்றிப் பார். உலகைப் பார். எல்லா சேவைகளுமே பெரும்பாலும் நின்றுவிட்டன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன. நாங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் கொரோனா வைரஸ். நடந்தது என்ன? நூறு நாட்களுக்கு முன்பு, ஒரு நுண்ணுயிர் நம் உலகிற்கு வந்தது. அது நம்மில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது மிக வேகமாக பரவியது, சீனாவின் வூஹானில் இருந்து சில வாரங்களில் நம் வாழ்வில் ஓடியது.நேரமும் தூரமும் இனி தேவையில்லை. எங்கள் வாழ்க்கை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.மார்ஷல் மெக்லூஹான் சொன்னது சரிதான். கனடா தகவல் தொடர்பு கோட்பாட்டாளர் உலகமயமாக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி சரியாக கூறி இருந்தார். அறிவியலும் த…
-
- 2 replies
- 469 views
-
-
இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா? கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித ஜனாதிபதிக்கு என்ன நடந்துள்ளது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலகில் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கட்சி மாறுவதை அறிந்திருக்கின்றோம். ஆனால் நாட்டின் தலைவர் கட்சி மாறி செயற்படுவதை எங்கும் கண்டதில்லை. நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்த் தரப்புடன் இணைந்து தனக்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது வரலாற்றில் நமது நாட்டில் தான் பதிவாகியுள்ளது என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 469 views
-
-
—————————————– சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை. அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசார…
-
- 1 reply
- 468 views
-
-
[ செவ்வாய்க்கிழமை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் - பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் , 26 பெப்ரவரி 2013, 08:41 GMT ] [ நித்தியபாரதி ] "சிங்கள பௌத்தர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள அரசாங்கமாகும். ஜனநாயக மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள இனத்தை அழிக்கின்றன" ஐக்கிய அரபுக் குடியரசு United Arab Emirates நாட்டினை தளமாகக் கொண்ட Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரம்: சிறிலங்காவில் நிலவும் பௌத்த தீவிரவாதம் ம…
-
- 1 reply
- 468 views
-
-
ராஜீவ்காந்தி, கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அக்கியோருடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டார். ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், தி.மு.க தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றிருக…
-
- 0 replies
- 468 views
-
-
காணொளி : இலங்கைத் தமிழர் தொடர்பாகவும் , கூடாங்குளம் தொடர்பாகவும் சீமானின் பேச்சு...
-
- 0 replies
- 468 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம்தான் இன்றைய திகதியில் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு, திருகோணமலை - என்று பிள்ளை செல்லுமிடமெல்லாம், ராணுவ நெருக்கடிகளையும் மீறி, தமிழ் மக்கள் திரளுகின்றனர். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால்கூட, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்வதைப் போல, கடைசி வாய்ப்பான நவ்விப் பிள்ளையைச் சந்தித்து மன்றாடுகிறார்கள் அவர்கள். நவநீதம் பிள்ளையின் யாழ் வருகையின் போது, காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுநாளே மிரட்டப் பட்டதும், "இப்படியெல்லாம் புகார் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைகள் மாதிரியே நீங்களும் …
-
- 0 replies
- 468 views
-
-
எம்மை நாம் உணர்ந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை மக்கள் கொலை செய்யப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டது என்று சில சந்தர்ப்பவாத இணையத்தளங்கள் மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய முயற்சித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதி உச்சகட்ட மனித அவலத்துடன் நிறைவு பெற்றுள்ளது. இனவிடுதலைப் போரின் நியாயத்தை அழித்தொழிப்பதற்கான போரை முன்னெடுத்த இலங்கையரசு ஒரு தெihகையாக இரு நாட்களுக்குள் 20,000 தமிழ்மக்கள் உட்பட கணக்கிலடங்கா மக்கள் கொலை செய்யப்பட்டள்ளனர். பாதுகாப்பு வலயத்திற்குள் பாதுகாப்பிற்காக வந்த தமிழர்களில் 13,000 பேர வரை காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ன நடந்தி…
-
- 0 replies
- 467 views
-
-
ஏ.எஸ்.எம் ஜாவித் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், 34 வருடங்கள் கடந்தும் முழுமையான மீள் குடியேற்றம் செய்யப்படாது கண்டுகொள்ளப்படாத சமூகமாக உள்ளனர். வடக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் ஒன்றோடொன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கரி நாளாக 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிகளைக் குறிப்பிடலாம். விடுதலைப் புலிகளால் வடக்கை விட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற சடுதியான அறிவித்தல் ஒவ்வொரு வடமாகாண முஸ்லிம்களையும் தட்டுத்தடுமாறி நிலை குல…
-
-
- 7 replies
- 467 views
-
-
கொரோனா தோற்றம்: இயற்கையானதா? மனித உருவாக்கமா? – விவாதங்களும் சர்ச்சைகளும் July 22, 2021 ரூபன் சிவராஜா இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசை திருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இதற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை உலகம் முழுவதுமாக 3,4 மில்லியன் வரையான மக்கள் அந்தக் கொடும் கிருமிக்குப் பலியாகியுள்ளனர் என்கின்றன உத்தியயோகபூர்வமான பதிவுகள். பதிவுக்கு உட்படாத (Unrecorded) இறப்புகளும் பாரிய எண்ணிக்கையில் உள்ளன. கொரோனா வைரஸ்…
-
- 0 replies
- 467 views
-
-
எபோலா என்ற வார்த்தையே எனக்குள் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வார்த்தையைக் கேட்பதுகூட வெறுப்பாக இருக்கிறது. அது என்னுடைய குடும்பத்தையும் பள்ளிப் படிப்பையும் நாசமாக்கிவிட்டது. வாழ்க்கை திடீரெனத் துன்பமயமாகிவிட்டது. என்னுடன் அத்தையும் சில உறவினர்களும் இந்த வீட்டில் இப்போது இருக்கிறார்கள் என்பது மட்டுமே எனக்கு ஆறுதல். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் முன்பு மகிழ்ச்சி யாக இருந்தோம். இப்போதோ நான் பீதியில் ஆழ்ந் திருக்கிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமான மக்கள், நண்பர்கள், பல குடும்பங்கள் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகிவிட்டனர், இன்னமும் இறந்து கொண்டிருக்கின்றனர். உறவினர்களை இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எபோலா உண்மைய…
-
- 0 replies
- 467 views
-
-
இடையில் மாற்றமடைந்ததா சீனாவின் உணவுக் கலாசாரம்? உணவு பழக்கவழக்கமென்பது நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவொன்றுதான் . என்றாலும் தென்கிழக்காசியாவின் உணவுக்கலாசாரம் என்பது மற்றைய நாடுகளில் உள்ள பலரையும் மிரளவைத்து விடுகின்றதென்றால் அது மிகையில்லை! அவ்வகையில் சீனர்கள் ஏன் நமக்கு அருவருப்பாக தெரியக்கூடிய பலவற்றையும்கூட உணவாக உண்ணுகின்றனர் என்பதே இன்றைய இக்கட்டுரையின் கரு . இன்றைய சூழலில், உலகில் உள்ள அனைவருக்குமே China என்றாலே கடுங்கோபம் வருமளவிற்கு அந் நாட்டிலிருந்து பரவிய covid19 கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகின்றது! கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் பரவிய சார்ஸ் (2002) போன்ற வைரஸ்களும்கூட சீனாவின் whuhan மானிலத்திலுள்ள ” wildlife market ” என்கிற வனவிலங்…
-
- 0 replies
- 467 views
-
-
-
தமிழ்க் கூட்டமைப்பிடமே தீர்வின் சாவி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 அண்மையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில், எவ்வித புதிய விடயமும் உள்ளடங்கி இருக்கவில்லை. “பொதுத் தேர்தலை நடத்தி, புதிதாக நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதே, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உள்ள ஒரே தீர்வு” என, அவர் கூறினார். இது, அவரோ அவரது அணியினரோ, முதல் முறையாகக் கூறும் விடயம் அல்ல. அவரது அணியினர், பல்வேறு குழுக்களின் பெயர்களில் நடத்தி வரும், ஆர்ப்பாட்டங்களின் பிரதான சுலோகமாக இருப்பதும், பொதுத் தேர்தல் ஒன்று வேண்டும் என்பதேயா…
-
- 0 replies
- 467 views
-