Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்கா சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் என்ற எதிர்பார்ப்பை தமிழர் தரப்பு தமக்குள் உருவாக்கிக்கொண்டது துரதிஷ்டமே. எவ்வாறாயினும், இதுவொரு முதலாவது தீர்மான வரைவு மட்டுமேயாகும். இறுதியானது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.இதில் அடுக்கடுக்கான பல திருத்தங்கள் செய்யப்பட்டே இறுதியான வரைவு தயாரிக்கப்படும். அது இதைவிட வலுவற்றதாகவும் இருக்கலாம். சில வேளைகளில் வலிமையானதாகவும் இருக்கலாம். அது அமெரிக்காவுடன் இந்த நகர்வில் இணைந்துகொள்ளும் நாடுகளின் ஆதரவை பொறுத்த விடயமேயன்றி புலம்பெயர் தமிழர்களோ, இங்குள்ள தமிழர்களோ, தமிழ்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ கொடுக்கும் அழுத்தங்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்காது. இந்த முதல் தீர்மான வரைவு, உண்மையில் எதைக் கோருகிறது என்ற மயக…

  2. ஜெனிவாவும் சில அவதானிப்புகளும் 2012, 2013 ஆண்டுகளில் அமெரிக்கா தனது பிரேரணையினை சமர்ப்பித்து இருந்தது. அதற்கு ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தது. இந்தியா சார்பாக வாக்களித்தாலும் அது மதில் மேல் பூனை போன்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது. இந்த வருட நிலை என்னவெனில், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு நேரடியாக சென்று நிலைமையினைப் மதிப்பீடு செய்து சபைக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளார். இந்த அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு சிபாரிசு செய்து உள்ளார். இதற்கு சார்பான வகையில் அமெரிக்க பிரேரணையும், பிரித்தானிய, கனேடிய, மசிடோனிய, மொரிசியஸ் ஆதரவும் அமைந்து உள்ளன. வழமை போல் மதில் மேல் பூனையாக இந்தியா. இங்கே நமது பத்திரிகையாளர்கள் சிலர், மனித உரிமை ஆணையாளர் சிபார்சு அறிக்கையினை விட்…

  3. காணொளி : அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் இலங்கை விவகாரம்..ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு அவுஸ்ரேலியா ஆதரவு வழங்க வேண்டும் என்று, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rCIyA6R2ewI http://www.akkinikkunchu.com/2014/03/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/

    • 1 reply
    • 630 views
  4. விடுப்பு மூலை: தேசியத் தொண்டு நந்தி முனி பல ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். 'காரைநகரில் நேவி நடாத்தும் ஒரு ஹொட்டல் இருக்கிறதாமே. அங்க குடும்பத்தோட போய் லஞ் எடுப்பமா?' என்று கேட்டார். நானும் அந்த ஹொட்டலைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனான். அதை ஒருக்காப் பார்ப்பம் என்று தோன்றியது. எனவே, அவருடைய அழைப்பை ஏற்று போனோம்... கடற்காற்றில் சாப்பாடு சுமாராயிருந்தது... ஆனால் உறவினர் அமைதியிழந்தவராகக் காணப்பட்டார். அவர் சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சுச் சாப்பிடவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவாறு யந்திரத்தனமாகச் சாப்பிட்டார். பில் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமாராக ஆயிரத்து ஐநூறு வரும். எனக்குத் திகைப்பாக இருந்தது. சாப்பிட்டது செமிக்காது …

  5. திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?-கண்ணதாசன் சொன்ன உண்மைகள்! திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார். …

  6. அமெரிக்காவின் காலடிக்குள் குழி தோண்டும் இலங்கை அமெரிக்காவின் காலடிக்குள் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் ஒன்றைத் தேடும் முயற்சியில் இலங்கை தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு கீழே, தென் அமெரிக்க நாடுகளை தன் பக்கம் திருப்பும் திட்டமே இது. இந்த முயற்சியை இலங்கை அரசாங்கம் தொடங்கியது, இப்போதல்ல. அதற்கான முயற்சிகள், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போதே, தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும், அதற்கான பலன், கடந்த ஆண்டு கூட ஜெனிவாவில் சரியாக கிடைக்கவில்லை. இந்த ஆண்டிலாவது, தென் அமெரிக்க நாடுகளின் மூலம் இலங்கை பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் நீடிக்கின்றன. இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த ப…

  7. நான் அறிந்த வகையில் பிரபாகரன் மட்டுமே மாவீரன்: - நடிகர் ராஜ்கிரன் [Tuesday, 2014-02-25 22:43:26] மனிதாபிமானமிக்க தலைமை பண்புக்கு தகுதியான உலகின் ஒரே தலைவன் நானறிந்த வரையில் மாவீரன் பிரபாகரன் மட்டுமே. ஈழ மக்களின் லட்சியம் உன்னதமானது...நேர்மையானது. அதனால்தான், மனித நேயத்தை விரும்பும் எல்லோருக்கும் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104433&category=IndianNews&language=tamil

  8. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிங்களப் பேரினவாத அரசின் கோரப் பற்களைப் பிடுங்குவதற்காக சர்வதேச சமூகம் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்ற நிலையில் அதன் தீவிரத் தன்மையையும் கடந்து அவுஸ்திரேலியா சிட்னியில் ஒரு குழுவினர் மிகத் தீவிரமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பணியினை செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்துகின்ற மிக முக்கிய குழுவாக தம்மை அறிவித்துக்கொள்கின்ற அமைப்பு ஒன்று இந்த நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. அந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பது எதற்காக என்று ஆராய்ந்தால் அது “பண்ணையாரும் பத்மினியும்” என்ற தென்னிந்திய சினிமாப் படத்தினை திரையிடுவதற்கு மக்களைத் திரட்டுவதற்காக என்ற பதிலே கிடைத்திருக்கிறது. குறித்த அமைப்பி…

  9. இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!! வழிப்போக்கன் அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு, நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது. உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வ…

  10. இசைப்பிரியா எனும் ஓர் அபலைக்கான மனித இதயம்…! -எஸ்.ஹமீத் அந்த இளம் பெண்ணின் மரணம் எல்லோரையும் போலவே என்னையும் நிலைகுலைய வைத்திருக்கிறது; உணவில் பிடிப்பின்மையையும் உறக்கத்தில் நிம்மதியின்மையையும் தந்து விட்டிருக்கிறது; நடையின் வேகத்தையும் செய்கின்ற வேலைகளில் இயல்பாகவே இருக்கும் அக்கறையையும் வெட்டி வீசியிருக்கிறது; எப்போதாவது கிடைக்கும் சந்தோஷத்தின் மீதும் அபூர்வமாக உதிக்கும் புன்னகையின் மீதும் கவலைகளையும் விரக்திகளையும் போர்த்தி விட்டிருக்கிறது. சிந்தனைகளின் விஸ்தாரங்களைச் சுருக்கி மீண்டும் மீண்டும் அவளின் மரணமென்ற அந்த ஒரு புள்ளியில் மட்டுமே மனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சொந்த வாழ்க்கையின் துயரங்களுக்கு மேலாக அவள் மீதான துக்கமும் அனுதாபமும் …

  11. இப்ப என்ன சொல்ல வாறியள் கொழும்பான்.

  12. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உருகும் ஜெயலலிதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்...? முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2002 ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில், பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி இடம்பெற்றிருந்த அனல் வரிகளின் ஃபிளாஷ்பேக் இது..! "படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை…

  13. விடுப்பு மூலை: வன்னியிலிருந்து ஓர் அலைபேசி அழைப்பு நந்தி முனி இம்முறை மாசிப் பனி மூசிப் பெய்யவில்லை. எனினும், விடியப்புறம் எழும்ப மனமில்லாமல் சுருண்டு கிடந்தேன். அலைபேசி அலறியது. திடுக்கிட்டு எழும்பி யார் என்று பார்த்தேன். புதுக்குடியிருப்பில் இருந்து ஒரு சிநேகிதன் எடுத்திருந்தான். சிநேகிதன்: என்னடாப்பா நித்திரையை குழப்பிட்டனே? நந்திமுனி: இல்லை. பறவாயில்ல கத. சிநேகிதன்: என்ன புதினங்கள்? நந்திமுனி : ஒண்டுமில்ல. எல்லாம் வழம போலதான்... அது சரி அதென்ன பின்னணியில ஒரு இசைபோகுது? சிநேகிதன்: ஓ..அதுவா? அதுதான் பேக்கரிக்காரர்களின் தேசிய கீதம். நந்திமுனி: தேசிய கீதமோ. சிநேகிதன்: ஓம். பருத்தித்துறையில இருந்து தெய்வேந்திரமுனை வரைக்கும் ஒரே இசைதான். கொழும்பில…

  14. ஆம் ஆத்மிக்கட்சியின் ஆட்சி அண்மையில் நடந்த டெல்கி சட்டமன்றத்தேர்தலில் புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கட்சி முதல்முறையிலேயே 70 தொகுதிகளில் 28 இல் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.அறுதிப்பெரும்பான்மை பெறாமையினால் காங்கிரசு வழங்கிய ஆதரவுடன் சிறுபான்மை அரசை அமைத்தது. இவர்கள் ஊழலுக்கு எதிராகக் கொண்டுவந்த சட்டவரைவைச் சபையில் சமர்ப்பிப்பதை காங்கிரசும் பாரதிய ஜனதாக்கட்சியும் ஒன்றுசேர்ந்து எதிர்த்ததினால் ஆத்மிக்கட்சி அரசு 49 நாட்கள் ஆட்சியின் பின்பு பதவி விலகியது.இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரசும்,பாஜகவும் ஊழல்பற்றிய விடயங்களில் தாம் ஒன்றுபட்டவர்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளனர்.இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களான அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எத…

  15. பட்டி மன்றம் ஒன்று நடாத்தி ஒரு முடிவிற்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ..........இதற்கு நடுவர்கள் யாரும் இல்லை .உங்கள் கருத்துக்களே நடுநிலைமை ..............சரி எதைப்பற்றி ........................ம்ம்ம்ம்................இது தேவையா அல்லது இவனுக்கு லூசா என்றெல்லாம் நினைப்பவர்கள் இங்கே நிச்சயம் கருத்திட மாட்டார்கள் என்ற துணிவில் .............. சீமான் என்னும் எம்மைப்போல தமிழன் யார் ??? இவனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன உறவு ,பிணக்கு .........அலசி ஆராய்வோம் .முடிவிற்கு வருவோம் . உண்மையை அறிவோம் திசை நோக்கி பயணிப்போம் ..........................ஏனனில் ஒரே திசையில் செல்பவர்களே கருத்து வேறுபாடுகளுடன் பயணிக்க முடியாமல் இருக்கும் சிக்கல்களை களைந்தெறியும் முகமாக .....…

  16. இந்தியா சொல்ல வரும் செய்தி என்ன? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தினால் கடந்த வாரம், 20 ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பில் முக்கியமான ஊடகங்களின் மூத்த ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவா தீர்மானத்துக்கான தயார்படுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த…

  17. அண்மையில் அமெரிக்கா போயிருந்த லிலித் வீரதுங்க, அங்கே மாதம் $66,000 செலவில் பிடித்து வைத்திருக்கும் PR நிறுவனம் “THOMPSON ADVISORY GROUP (TAG) மூலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு விளக்கம் அளித்தார். இதன் போது பெரும் செலவில் கொழும்பு அழைக்கப் பட்ட CNN நிகழ்ச்சி தொகுப்பாளர் உதவியுடன் தயாரிக்கப் பட்ட ஆவணம் காண்பிக்கப் பட்டது. இந்த 'பிலிம்' இங்கே.... இடையில் கோத்தா வெட்டி முழக்குகிறார் பார்த்து கருத்து சொல்லுங்கள். (நான் இன்னும் பார்க்கவில்லை. .)

  18. விடுப்பு மூலை - கிண்டக் கிண்ட எலும்புக்கூடுகள் நந்தி முனி வன்னியப்பு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கான பஸ்ஸில் ஏறினார். ஒரேயொரு சீற் மட்டும் இருந்தது. அதற்கு அருகில் இருந்தவரை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு கண்ணைக் கூசி உற்றுப் பார்த்தார்.. ஓ அது எட்வேட் மாஸ்டர். மன்னாரிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்துக்குப் போறார் போலும். மாஸ்டரும் அப்புவை அடையாளம் கண்டுவிட்டார். பொக்கணையில் கடைசியாகக் கண்ட பின் இப்பொழுதுதான் இருவரும் சந்திக்கிறார்கள்.... எட்வேர்ட் மாஸ்டர்: வாங்கே அப்பு. எவ்வளவு காலத்துக்குப் பிறகு சந்திக்கிறம் அப்பு: ஓமோம்... நீங்கள் கடலால போனனீங்கள், நாங்கள் கடலேரியால போனனாங்கள். வேற வேற நலன்புரி நிலையங்கள். பிறகு எல்லாரும் தீவுகளா…

  19. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புதைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும் வகையில் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் புதுவரவு, வழக்கறிஞர் செ.துரைசாமி எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்’ என்ற புத்தகம். இவர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆரம்பத்தில் இருந்து ஆஜரானவர். 'விகடன் பிரசுர’த்தின் வெளியீடான இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான கே.சந்துரு இந்தப் புத்தகத்தை வெளியிட, முன்னாள் போலீஸ் எஸ்.பி-யான சக்திவேலும், ராஜீவ் கொலை வழக்கு கைதியான நளினியின் தாய் பத்மாவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர். பத்மாவிடம் பேச…

  20. தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் கிராமங்கள். இவையெல்லாம் மட்டுநகர் மண…

  21. ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்-பரா பிரபா விவரங்கள் உருவாக்கப்பட்டது: 24 ஜனவரி 2014 ஒரு பேப்பர் - இதழ் 207 இல் ‘சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்’ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது. சில தமிழர் அமைப்புக்களும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் தென்னாபிரிக்காவின் ‘உண்மையைக் கண்டறிதலும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு’ (TRC – Truth and Reconciliation Commission) தொடர்பாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முனைவதாகத் தெரிவதால், இது பற்றிய மேலதிக தகவல்களை எழுதுதல் இங்கு அவசியமாகின்றது. ஆர்ஜன்ரீனா, சிலி, பெரு, சியராலியோன் மற்றும் பஹ்ரெயின் போன்ற நாட…

  22. யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! Print Email Details Published on Saturday, 18 January 2014 20:56 Written by ndpfront Hits: 373 . மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த க…

  23. வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் ஏராளமான வாசகங்களும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நியூசிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய விளம்பரம் வேகத்தின் விபரீதத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு நிமிடம் யோசிக்காவிட்டால், வேகம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை காட்டும் விதத்தில் இந்த விளம்பரம் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேகத்தைவிட விவேகம் டிரைவிங்கின்போது மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.