நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
அன்பு சகோதரர் கமலுக்கு , முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? Jan 31 2013 08:36:30 இஸ்லாமிய சகோதரனின் மனத்திறந்த மடல் விஸ்வரூபம் படம் தொடர்பான விவாகரங்கள் உணர்ச்சியின் உச்சக் கட்டத்திற்கு சென்ற பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை கமலுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது , உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் 'உ…
-
- 0 replies
- 602 views
-
-
24-01-2013 அன்று மாலை 15:30 தொடக்கம் 16:30 வரை Niscemi மாளிகையில் இ.ஈ.மக்களவையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புளும் இணைந்து பலேர்மோ மாநில முதல்வரின் உத்தியோகபூர்வமான வாசஸ்த்தலதலமான Niscemi மாளிகையில் ஓர் அரசியல் சந்திப்பைமேற்கொண்டனர். இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இ.ஈ.மக்களவையின் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை, உப தலைவர் ஐசஸ்வின், ஆலோசகர்கள் லீனப்பு, றஞ்சித் அரசியல் ஊடக பொறுப்பாளர் தட்சாயினி தவராஐசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு ஐமால், பொருளாளர் சச்சிதானந்தம், சிசிலி மாநில தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் ஸ்ரேபனோ எட்வேட் , உறுப்பினர் சச்சியானந்தம் , தமிழர் புணர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.க…
-
- 0 replies
- 494 views
-
-
சீன மீனவர் ஒருவர் படகொன்றையும் மோட்டோர் சைக்கிளையும் பயன்படுத்தி நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய படகு ஒன்றை உருவாக்கியுள்ளார். புஜியான் மாகாணத்தில் ஸங் ஸொயு நகரைச் சேர்ந்த சென் குவோஹொங் (43) என்ற மீனவரே 4.5 மீற்றர் நீளமும் 1.6 மீற்றர் அகலமும் 750 கிலோகிராம் நிறையும் உடைய படகை உருவாக்கியுள்ளார். இந்தப் படகு வீதியில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேத்தில் பயணிக்கக் கூடியது. இதனை உருவாக்கிய நபர் 13 வயது முதல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=76
-
- 1 reply
- 521 views
-
-
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர். …
-
- 2 replies
- 684 views
-
-
இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள். இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை. மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான் வரலாறு. இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். 5 மாணவர் படுகொலை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
பெற்றோர்களை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டமொன்றை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பிள்ளைகளால் பராமறிக்கப்படாமால் தனிக்கப்படும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இங்கு 60 வயதுக்கு மேலான முதியவர்கள் 16 கோடியே 70 இலட்சம் பேரும் 80 வயதுக்கு மேல் 10 இலட்சம் பேரும் உள்ளதாக தெரிவிக்கிகப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு குழந்தை சட்டம் சீனாவில் அமுலில் உள்ளது. இதனால், ஒரு பிள்ளை மட்டுமே கொண்ட குடும்பங்களில் அப்பிள்ளை வளர்ந்து தம் இருப்பிடம்விட்டு வேறு இடங்களுக்கு செல்வதால் பெற்றோர் கவனிக்கப்படாமல் விடப்படும்…
-
- 3 replies
- 519 views
-
-
1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன? தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2. ஏன் இவ்வளவு குற்றங்கள்? தனிமனித ஒழுக்கம்,…
-
- 1 reply
- 579 views
-
-
வன்னியில் இருந்து ச.பாரதி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு அனுப்பிவைத்த பதிவு இது கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள கிராம அலுவலர்கள் போருக்கு முன்னர் காணிகளை கொள்வனவு செய்து வீடுகட்டி வாழ்ந்து வந்த பலருடைய காணிகளை ஏற்கனவே காணியை விற்றவருக்கோ அல்லது காணிக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கோ பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் செயற்பட்டு வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். இதிலும் அதிகளவு பாதிக்கப்படுபவர்கள் கணவனை இழந்த பெண்களும், சரணடைந்த போராளிகளதும், குடும்பத் தலைவர் இல்லாமல் வாழ்கின்ற பெண்களுமே. இவர்களே தமது குடும்ப வாழ்விற்கான வருமானத்தை ஈட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உழைக்க வேண்டிய தேவையுடன், பிள்ளைகளை பராமரிக்க வேண்டியதுடன், …
-
- 1 reply
- 461 views
-
-
http://www.tamilmurasuaustralia.com/2013/01/blog-post_21.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா----- படங்களை பார்க்க மேல் உள்ள இணையத்தை கிளிக் செய்யவும் ------நேரடியாக இணைக்கமுடியவில்லை
-
- 4 replies
- 563 views
-
-
தமிழாக்களுக்கு உரிமை குடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டிருந்த உலகமெல்லாம் இப்ப வட மாகாணத்துக்கு எலக்சன் வையுங்கோ எண்டு சொல்லுற அளவுக்கு வந்திருக்கினம் எண்டது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உடனை எலக்சன் வைச்சால் என்ன நடக்கும் எண்டு தெரிஞ்ச ‘றாஜ‘ குடும்பம் அங்கை கண்ணி வெடி கிடக்குது சனத்தைக் குடியேற்ற வேணும் எண்டு அதை இதைச் சொல்லிக் காலத்தைக் கழிச்சதும் தெரியும். இனியும் இழுத்தடிக்கிறது கஸ்ரம் எண்டு தெரிஞ்சதும் 2013 செப்டம்பரிலை எலக்சன் எண்டு திகதி வைச்சிருக்கிறதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தே…
-
- 3 replies
- 781 views
-
-
சுதந்திரத்தின் போது இலங்கையில் தமிழர் சனத் தொகை 11% ஆக இருந்தது. புலம் பெயர்தல், அழிவுகள் மூலம் இது குறைந்திருக்க வேண்டும் அல்லவா. எனினும் அண்மைய கணக்கெடுப்பினை வைத்து மனோ கணேசன் ஒரு சிந்தனைக்குரிய ஆய்வினை வெளியிட்டு உள்ளார். சனத்தொகைக் கணக்கெடுப்பு என்ன சொல்கின்றது? சிங்களவர் - 74.9% இலங்கைத் தமிழர் - 11.2% முஸ்லிம்கள் - 9.2% இந்தியத் தமிழர் - 4.1% ஆக சுதந்திரத்தின் போது இருந்த வீதாசாரத்தினை இலங்கைத் தமிழர் தக்க வைத்து உள்ளார்கள் போல் தெரிகின்றது அல்லவா. குறிப்பிடத்தக்க கல்வி அறிவும், குறைவான சனப்பெருக்கமும், புலம் பெயர்தலும் கொண்ட இலங்கைத் தமிழர், அதே வீதாசாரத்தினை தக்க வைத்தது எங்கனம் சாத்தியமானது என மனோ கணேசன் ஆராய்ந்தார். 1981 ம் ஆண்டின் பின்னர், சிறிம…
-
- 1 reply
- 813 views
-
-
http://www.youtube.com/watch?v=GlFd5rSYvZw 35ஆவது நிமிடத்தில் இருந்து ...
-
- 0 replies
- 582 views
-
-
சவூதி அரேபியாவை தமது தாயகமாக விளித்துக் காலம் காலமாக இஸ்லாமிய தமிழர்களிடையே நயவஞ்சக அரசியல் புரிந்துவரும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தில் கரிபூசிய சம்பவமாக கடந்த வாரம் சவூதியில் நிகழ்ந்தேறிய ரிசானா என்ற இஸ்லாமிய தமிழ் யுவதியின் தலைதுண்டிப்பு சம்பவம் திகழ்கின்றது. ‘நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் தமிழ் மொழியில் பேசினாலும் சவூதி அரேபியாதான் எங்கள் தாயகம். எனவே நாங்கள் தமிழர்கள் அல்ல’: இதுதான் காலம்காலமாக சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு துணைநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டகம் செய்யும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைக்கும் வாதம். ஆனாலும் சவூதி அரேபியாவில் தமது ஆணிவேரைத் தேடித் தம்மைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளும் இந்…
-
- 0 replies
- 636 views
-
-
தலைவர் என்றால் எப்படியும் இருக்கலாம் என்று இங்கு வரையறை செய்யப்பட்டுள்ளது .அல்லது அப்படி நடந்து கொள்கின்றனர்.மகளுக்காக செய்வதை போல் மக்களுக்கு செய்த தலைவர்.பேரன்களுக்கு செய்ததை போல் பெருசுகளுக்கு செய்யாத தலைவர் இவர் பெயர் தான் தமிழின தலைவர். இந்த புகைபடைத்தை பாருங்கள் ,இந்த அளவு நேசித்த நேசித்த குழந்தைகளை கூட இனத்தின் மானம் காக்க போர் முனைக்கு அனுப்பிய தலைவன். இப்படி தான் இருக்க வேண்டும் ,இதை விட்டு அளவுக்கு மேல் சொத்தை சேர்த்து விட்டு ,வாய்தா வாங்கியே உலக சாதனை செய்வது.மகனுக்காக கட்சி வளர்ப்பது,அடுத்தவன் மேல் சவாரி செய்தே காலத்தை ஓட்டுவது இப்படி மேலும் பலர் நம் தமிழ் நாட்டில் தலைவர்களாக வலம் வந்து நம்மையும், நம் நாட்டையும் வளம் கொழிக்க செய்பவர்களா…
-
- 0 replies
- 521 views
-
-
9 ஜனவரி பாரிஸ் நகரில் மீண்டும் ஒரு அரச பயங்கரவாதம். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பின் நிறுவன உறுப்பினர் Sakine Cansiz மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் Fidan Dogan மற்றும் Leyla Soylemez படுகொலை செய்யப்பட்டார்கள். குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டம் தமிழீழ மக்களின் விடுலை போராட்டம் போல் நிலம், மொழி, கலை, கலாச்சாரம், உரிமை பாதுகாப்பு போராட்டமாகும். நாம் தமிழீழ தாயகத்திற்காக போராடுவது போல் அவர்களும் குர்திஸ்தான் நாட்டின் உருவாக்கதிட்காக போராடுகிறார்கள். அவர்களும் சர்வதேச புவியல் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்த்த மரியாதையை கொண்டவர்கள், எமது மக்களின் அற்பணிப்பில், எமது போராட்டத்தில் பல வழிகளில் ஒன்ற…
-
- 8 replies
- 701 views
-
-
மனிதர்களை நெறிப்படுத்துவதற்காகத்தான் அனைத்து மதங்களும் சட்டங்களை இயற்றின. அந்த சட்டங்கள் மனித சமூகத்தின் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் என்பதே ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும் கூட. இஸ்லாமிய சமூகத்தை நெறிப்படுத்தும் ஷரீஆ சட்டதிட்டங்கள் மீதும் இவ்வாறான நம்பிக்கையே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் கூட இருக்கும். எனவே, ஷரீஆவைப் பின்பற்றுவதாகக் கூறும் நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப ‘மொழிபெயர்க்கப்படும்’ ஷரீஆ மற்றவர் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத விடயமாகும். அதையும் விட முக்கியமாக, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை எவ்வாறு ‘மொழிபெயர்க்கப்படுகின்றன’ ,…
-
- 3 replies
- 685 views
-
-
சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை
-
- 0 replies
- 437 views
-
-
-
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது. பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. இத்தகைய கொடியவர்கள் சமூகத்தில் களையப்பட வேண்டும், இந்த கொடுமையான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை பாரபட்சமற்ற வகையில் வெளிக…
-
- 2 replies
- 444 views
-
-
மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாட்டில் அனைத்துலக தமிழீழ மக்களவை சார்பில் திருசோதி அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அனைத்துலக மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள் பேரவை. முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர் தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல் மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக இருக்கின்றோம் இதனை புரிந்து…
-
- 0 replies
- 356 views
-
-
டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு; சில சிந்தனைகளும் கண்டனங்களும்! டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய பிறகு மாணவி உயிர் பிரிந்தது உலகையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கி வலது சாரிகளின் பேச்சுக்கள் மிகவும் அருவருப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் பலர் கூறும் கருத்துக்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணராததாகவே படுகிறது. டெல்லியில் கடும் போராட்டம் நடந்தது, காவலர் ஒருவர் பலியானார். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனை மத்தியதர வர்க்க வெளிப்பாடு என்று கொஞ்சம் சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் பலர் பேஸ்புக், பிளாக் என்று கருத்து மழை பொழிந்து வருகின்ற…
-
- 0 replies
- 522 views
-
-
செங்கல்பட்டு ‘சிறப்பு’ முகாமில் இருந்து தமிழ் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்ட உங்கள் சகோதரன் பேசுகிறேன், எழுதுகிறேன்... கெஞ்சவில்லை! இங்கே பெயர்தான் சிறப்பு முகாம். மற்றபடி இது ராஜபக்சேவின் வதை முகாமுக்கு முன்னோடியான முகாம்தான். தமிழகத்தில் ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாம்கள் நிறைய உள்ளன. அவற்றில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. யுத்தகாலத்தில் இங்கே வந்த எங்கட ஜனங்களுக்கு, வீடுகள் கட்டித் தாரோம் என்ற பெயரில் சில கொட்டகைகளை எழுப்பித் தந்திருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் தினம்தோறும் தங்களது அன்றாடத்தை நகர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து அகதிகளை ஏற்கிறது என்றால்... சர்வதேச சட்டங்கள் கிடக்கட்டும், மனித நேய சட்டப்…
-
- 1 reply
- 690 views
-
-
பதவியினைப் பறித்த கிறிஸ்மஸ் பார்ட்டி கொலம்பியாவிற்கான கொண்டுராஸ் தூதுவர் Carlos Rodriguez கிறிஸ்மஸ் பார்ட்டியினை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தார். இரு விபச்சாரப் பெண்களும் அழைக்கப் பட்டார்கள். எல்லாம் நன்றாகத்தான் போனது. பார்டி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து திருப்பி வேலைக்கு வந்தால் இரண்டு லப்டோப்கள் காணமல் போன சங்கதி தெரிந்து போலிசினைக் கூப்பிட்டார்கள். அட, யாரு ஆட்டையினை போட்டது எண்டு முதலே தெரிந்திரிந்தால் கூப்பிட்டு இருக்க மாட்டார்கள். லவட்டிக் கொண்டு போனது விலை மாதர்கள். விஷயம் வெளியில் பரவ, இப்ப தனது நாட்டினை தவறாக பிரதிநித்துவப் படுத்தியதற்க்காக தூதுவர் ராஜினாமா செய்ய வேண்டியதாகி விட்டது. தூதுவர் தனது 'காரியத்தில்' கண்ணாய் இருந்திருக்க, அவர்களும…
-
- 6 replies
- 762 views
-
-
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. ஆடம் லான்சா அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது. ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் …
-
- 4 replies
- 626 views
-
-
ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்தில்…
-
- 0 replies
- 418 views
-