நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4200 topics in this forum
-
அன்று முதல் இன்று வரையுள்ள டக்ளஸ் பற்றிய ஒரு பதிவு........ இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்…
-
- 2 replies
- 930 views
-
-
-
- 13 replies
- 1.1k views
-
-
என் தலைவனும் நானும் இதை எழுதவேண்டும்போல் உள்ளது எங்கேயாவது கொட்டவேண்டும் இல்லையென்றால் நான் உயிர்வாழ்வது கடினம் எனக்கு சில உண்மைகள் தெரிந்தாகணும் சில கேள்விகளுக்கு பதில்வேண்டும் இங்கு எழுதுபவர்களாயினும்சரி அறிக்கை விடுபவர்களாயினும் சரி உள்ளக புறஅக உளவுத்துறையினராக இருந்தாலும்சரி பதில் தெரிந்தால் எழுதுங்கள் ஊகங்கள் தேவையில்லை தங்களது மூளையை உபயோகிக்கவேண்டாம் நெஞ்சையும் தொட்டுசொல்லவேண்டாம் கண்ணால் கண்ட சாட்சி மட்டும் இருந்தால் அல்லது அவர்கள் யாரையாவது நீங்கள் கண்டிருந்தால்..... மட்டும் இதற்கு பதில் தாருங்கள் அதிலும் என் தலைவன் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் பதில் தாருங்கள் நான் அதை ஏற்கவேண்டுமாயின்.…
-
- 43 replies
- 7.2k views
-
-
பொய்யாக வன்னி மக்களுக்கு உதவ என பல தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் வருகின்றார்கள். எல்லாரும் போராட்ட காலத்தில் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே இப்போ புது புது நிறுவனங்களின் பெயர்களோடு வலம் வருகிறார்கள். தங்கள் பணப்பையை நிரப்புவதே முதல் நோக்கமாக கொண்டுள்ளார்கள். அண்மையில் LITTLE AID என்ற பெயர் கொண்ட ஒரு நிறுவனம் மக்களிடம் காசு சேர்க்க அலைகிறார்கள். அவர்களின் பின்புலம் எல்லாம் சிரிலங்கன் தூதரகத்தின் ஒற்றர்களாக இருப்பவர்கள். இதில் சேர்க்கப்படும் காசில் தான் இங்கு புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க கொச்சைப்படுத்த சாதி, ஊர் சொல்லி இழிவான கட்டுரைகள் எழுதி இதழ் வெளியிடுகிறார்கள். LITTLEAID இனையவலையில் போடப்பட்டிருக்கும் தகவல் எல்லாம்…
-
- 6 replies
- 1.7k views
-
-
பி.பி.சி. ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. "தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன். ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற "செஞ்சோலை' குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து "செஞ்சோலை' பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது "என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்' என்டுதான் தலைப்பிட்டேன்'' என்றார். தொடர்ந்தவர், "பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவிய…
-
- 0 replies
- 536 views
-
-
தமிழர் வாழ்வியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் சமூக ஆய்வு, சமூக விழாக்கள், இசை முயற்சிகள், பதிப்பு முயற்சிகள், சமுதாய ஊடகம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்- சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சாதித்து வரும் "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இளமையும் துடிப்பும் மிக்க இந்த கத்தோலிக்க குரு, ஈழச் சிக்கல் தீவிரம் கொண்டிருந்த 90-களின் இறுதியில் ஒரு வெற்றிகரமான வானொலி இதழிய லாளராக ஈழ அகதிகளுக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மாநகர வாழ்வில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் "சென்னை சங்கமம்', "சென்னை மாரத்தான்' ஆகிய சமுதாய விழாக்களை இணைந்து உருவாக்கியவர்களில் ஒருவர். சுதந்த…
-
- 1 reply
- 909 views
-
-
துரோகத்தின் பரிசு. எழுதியவர்: க.வாசுதேவன் பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப…
-
- 1 reply
- 749 views
-
-
-
- 0 replies
- 644 views
-
-
பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன. தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே! ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பு…
-
- 5 replies
- 952 views
-
-
வருங்கால போராளி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 5 replies
- 1.8k views
-
-
2007இன் பிற்பகுதியில் சிறிலங்கா அரசின் வான்படை தேசியத் தலைவரை குறிவைத்து பல வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் சில தாக்குதல்கள் தேசியத் தலைவர் நின்ற இடங்களில் நடத்தப்பட்டிருந்தன. தேசியத் தலைவர் ஒரு சந்திப்பை நடத்தி விட்டு, அங்கிருந்து வெளியேறிய ஓரிரு நிமிடங்களில் சிறிலங்கா வான்படை விரைந்து வந்து குண்டு வீசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது பற்றிய செய்திகள் கிடைத்த பொழுது என்னுடைய மனம் மிகவும் குழப்பமும், கிலேசமும் அடைந்திருந்தது. "நடப்பது போர், இதில் யாருக்கும் எதுவும் நேரலாம்" என்பதை உணர்ந்திருந்தேன். "தலைவருக்கு சாவு வராது" என்பது கூட ஒரு மூடநம்பிக்கைதான். ஆனால் "தலைவர் போரில் இறந்தாலும், நாம் எம்முடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டு…
-
- 8 replies
- 1.2k views
-
-
வழமையாக எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் இந்திய அணி விளையாடும் போது அதற்கு ஆதரவளிப்பதை தார்மீகக் கடமையாகக் கொண்டிருந்த ஈழத்தமிழ் மனசுகள் பல.. அண்மைய ஐ சி சி யின் 20/20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்ற போது மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆதரித்து ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொண்டன. போட்டித் தொடரின் ஆரம்பத்தில் இருந்து அரை இறுதி வரை செல்வாக்குச் செய்து வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் பாகிஸ்தானிடம் தோற்ற போதும் மனசுகள் சங்கடப்பட்டுப் போயின. இறுதிப் போட்டியில் கிரிக்கெட் களத்தில் சிங்களப் பயங்கரவாதிகள் தோற்ற போது மனசுகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்தன. இதுதான் இன்றைய ஈழத்தமிழர் பலரின் மனங்களில் கிரிக்கெட்டின் நிலை. இதற்குக் காரணம்.. இப்போட்டி…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர். நேற்றைய தினமணி நாளிதழில் "தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். "இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்" என்று தொடங்குகிறது அவரது கட்டுரை. "Loyal than the king" – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் ப…
-
- 28 replies
- 5k views
-
-
மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கை-இன்று சர்வதேச அகதிகள் தினம் வீரகேசரி நாளேடு 6/20/2009 9:20:08 AM - ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு குடும்பம், தத்தமது சொந்த வீட்டிலிருக்கும் வரை அதிதித்துவமே மாறாக அகக்காரணங்களாலோ புறக் காரணங்களாலோ பலவந்தமாகவோ பலவந்தமற்ற முறையிலோ வெளியேறி விடுமிடத்து அத்தகையோர் அகதிகளே. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பதுபோல சொந்த இருப்பிடத்தின் அருமை அகதி முகாம்களில் தெரியாதிருக்க முடியாது. சுமார் 280,000 பேர் அகதிகளாக அல்லலுறுகின்றனர் அகதி முகாம்களிலே. அது ஒரு கட்டுக்கடங்காத எண்ணிக்கை எனில் எவருமே ஏற்றுக் கொள்ள முடியும். அகதிகள் பராமரிப்பானது எத்தகைய திறத்தவரிடமிருந்து கிடைக்கப் பெறினும் கட்டுக்கடங்கா…
-
- 0 replies
- 516 views
-
-
-
- 0 replies
- 696 views
-
-
அண்ணன் திருமா அவர்களுக்கு, அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கியுள்ளீர்கள். இதையே நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரோ, ஏன் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னரோ முழங்கியிருந்தால் நாங்களும் ஆ...வென்கிற வாயுடன் கைதட்டி அண்ணன் திருமா வாழ்க என்று வானதிரக் கத்தியிருப்போம். ஆனால் ஈழத்தமிழரிடமிருந்த இறுதி நம்பிக்கைகள் மட்டுமல்ல. எங்கள் உறவுகளையும் இருபத்தையாயிரத்திற்கு மேல் இழந்துபோய் மிகுதி மூன்று இலட்சம் உறவுகளையும் முட்கம்பி வேலிகளுக்குள் நாளுக்கு நாள் விசாரணையின் பெயராலும் வியாதிகளாலும் இழந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் 5 ம் கட்ட ஈழப்போர் என்கிற முழக்கம் மீதம் இருக்கின்ற ஈழத்தமிழர்களையும் கட்டம் கட்டம…
-
- 2 replies
- 931 views
-
-
இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா? இதன் ஒரு கட்டமாக புலம் பெயர் தமிழர்கள் இலங்கை சென்று இலங்கை புலனாய்வு கடத்தல் பிரிவினரிடம் கப்பம் செலுத்துகின்றனராம். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம் ஏதொ ஒருவகையில் புலம் பெயர் தமிழர்களின் பணம் இலங்கை அரசின் கல்லாப் பெட்டியை நிரப்பி விடுகிறது மொத்தத்தில் இலங்கை பயங்கரவாத அரசின் வெற்றிக்கு நாமே துணை தமிழனை வைத்து பிழைக்க தெரிந்த ஜென்மங்கள்
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கபோகிறது... ராஜபக்சே பேட்டி..
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழத் தேசியக்கொடியில் இன்றைய உலகத்தின் படைக்கலமான துவக்கும், சன்னங்களும் இருப்பது கூடாது என்றும் அது சரியல்ல என்றும் சில தமிழர்களும், வேறு இன மக்களும் ஒரு பிழையை உருவாக்க முனைகின்றனர் இவர்களுக்கு சில விளக்கத்தை கொடுக்கலாம் என்றுதான் இவ்விபரம் தரப்படுகின்றது. அதாவது நாட்டின் தேசியக்கொடிகள் கால நீரோட்டத்தோடு சுதந்திரப்போராட்டம் தொடங்கிய அந்த அந்த காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றது. இதன்படி எடுத்துப்பார்த்தால் முன்னைய சுதந்திரமான நாடுகளின் சில கொடிகளில் அம்பு, வில்லு, வாள், கேடயம் போன்ற கருவிகள் இருக்கின்றன. இது அந்த அந்தக் காலங்களில் எப்படியான ஆயுதம் கொண்டு சண்டையிட்டார்களோ அதை தங்கள் கொடிகளில் சின்னமாகப்பதிந்தார்கள். உதாரணத்திற்கு சிங்களச் சிறீலங்காவின் கொடி…
-
- 7 replies
- 1k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து.... 12/06/2009 இந்த பேரனர்த்தமானது, இந்திய மத்திய அரசால் திட்டமிடப்பட்டும், மு.கருணாநிதியால் ஊக்குவிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும், வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தால் தான் சொன்னதை சரியான தருணத்தில் நடைமுறைப்படுத்தத் தவறிய தவறினாலுமே நிகழ்த்தி முடிக்கப்பட்டது என்பதே தமிழர்களின் கருத்தாகும். கொழும்பும், இந்திய அரசும் சேர்ந்து நிகழ்த்திய இந்த பேரவலத்தை அவசரமாக மூடிமறைக்க முற்பட்டு, மணிக்கூட்டின் கம்பிகளை பின்னோக்கி நகர்த்தித் தங்கள் பேச்சுக்களை பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஒரு தீர்வாக அமுல்ப்படுத்துவது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தனது தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்திலும் கூட கொங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி பதின்மூன்றாவது …
-
- 0 replies
- 451 views
-
-
குறுகுறுப்பு, படபடப்பு எதுவும் இல்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனை இனிய முகத்துடன் இலங்கையில் வர வேற்றார் மகிந்தா ராஜபக்ஷே. ஒரு மினி டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். 24 மணி நேரம். அனுமதிக்கப்பட்ட பகுதி கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. எரிந்து போன கார் டயர்களையும் குப்பைக் கூளங்களையும் போர்க் களத்தில் பார்த்து இருக்கிறார் பான் கீ மூன். முகாம்களில் வழிய வழியத் தமிழர்கள். திரும்பிச் செல்லும்போது, வீதி முழுவதும் ராஜபக்ஷேவின் சிரிக்கும் கட்-அவுட்கள். 'இதுவரை இப்படிப்பட்ட கொடுமையான காட்சியை நான் கண்டதில்லை!' என்று பான் கீ மூன் கருத்துத் தெரிவித்த பிறகும், உதவிப் பணிகள் புரிவதற்குக்கூட ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை இலங்கை. காரணம், ஐ.நா. குறித்த பயம் இலங்கைக்கு இல…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கைத் தமிழர் அரசியலில் அடுத்தது என்ன....? இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் மக…
-
- 1 reply
- 543 views
-
-
ஐ.நா.வின் கள்ள மௌனம்! சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம். ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழு…
-
- 0 replies
- 491 views
-
-
அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்த…
-
- 35 replies
- 4.1k views
-
-
`புதியன புகுதலும் பழையன கழிதலும்` என்பது முன்னெப்தையையும் விட தமிழ் மக்கள் தற்சமயம் தாரக மந்திரமாக கொள்ளவேண்டி அரசியல் அரிச்சுவடியாக போயுள்ள அவலத்தையும் தண்டனையையும் வரலாறு எமக்கு திணித்துள்ளது. நான்காவது `ஈழப்போர்` முடிவு மூன்று லட்சம் எம் தமிழ் மக்களை முகாம்களுக்குள் முடக்கியுள்ளது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை அரசியல் கைதிகளாக அரச படையினர் இன்னும் உயிருடன் வைத்துள்ளனர். வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் சூனியத்துக்குள் தமிழ் மக்கள் மூழ்கியுள்ள இன்றைய சூழலில் நாம் நடந்து வந்த பாதையை மட்டும் அல்ல எமது இலக்கு குறித்தும் மீள்பார்வைகள் செய்ய வேண்டியுள்ளது. மூன்று லட்சம் மக்களினதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகளின் எதிர்க…
-
- 7 replies
- 1.6k views
-