நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம்: அதன் நல்ல, தீய மற்றும் அவலட்சணமான விடயங்கள் அம்பிகா சற்குணநாதன் on April 3, 2023 Photo, Ishara S.kodikara/AFP, THE GUARDIAN நல்ல விடயங்கள் மார்ச் 22, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் பெரும்பாலான பகுதிகளை மீளக் குறிப்பிடும் சட்ட மூலமாகக் காணப்படுகின்றது. கைதினைக் குறிப்பிட்டு ஆவணமொன்று வழங்கப்படல், பெண்கள் மீதான சோதனைகள் பெண் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படல், மொழிபெயர்ப்புக்கான அணுகல் அத்துடன் தடுப்புக்காவல் ஆணை ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்படும் நபர்கள் 14 நாட்களுக்…
-
- 0 replies
- 160 views
-
-
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவதில் பிரச்சனை. இலங்கையின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றின் கருத்து பாராளுமன்றில் சபாநாயகரினால் வாசிக்கப் பட்டது. அவ்வாறு நீக்குவது தொடர்பில் மக்கள் குடிஒப்பம் பெறப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை விட்ட ரணில், நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தவிர்ந்த ஏனைய விடயங்கள் பாராளுமன்றில் சமர்பிக்கப் படும் என்று தெரிவித்தார். ஆக, பிரதமருக்கு அதிகாரம் கிடைக்கும் என திட்டம் போட்ட ரணிலுக்கும், அதன் மூலம் மீண்டும் அரசியலுக்கு வரலாம் என திட்டம் போட்ட மகிந்தருக்கும் ஆப்பு. எனினும், மகிந்தரினால் வந்திருக்கக் கூடிய அரசியல் நெருக்கடியை தவிர்க்க இது உதவக் கூ…
-
- 0 replies
- 308 views
-
-
மற்றுமொரு இனநெருக்கடியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லாதீர்கள் - தேசிய சமாதானப் பேரவை வேண்டுகோள் (செய்திப்பிரிவு) இன்னெரு இனநெருக்கடியின் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று நாட்டின் அரசியல் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டிருக்கும் ஸ்ரீலங்கா தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களையும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அடுத்துத் தோன்றியிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசியல் வேறுபாடுகளிலிருந்து வெளிக்கிளம்பி தலைமைத்துவத்தை வழங்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பில் தேசிய சமாதான…
-
- 0 replies
- 178 views
-
-
இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தமிழர்கள் எவ்வாறு ஆதரிப்பது?: இறுதியில் எமக்கு எஞ்சியது ஏமாற்றமே..! சிங்கள பௌத்த ஆதரவை கொண்டிருக்கும் கோத்தாபய தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்று இதயசுத்தியுடன் எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்குவாரா? தமிழ்த் தரப்பின் விட்டுக்கொடுப்புக்களை தென்னிலங்கை கருத்திற்கொள்ளாது எதனையும் வழங்காது ஏமாற்றிவிட்டது. எமது தரப்பின் இராஜதந்திரம் தோற்றுவிட்டது. இத்தகையதொரு நிலைமையானது அடுத்த தலைமுறையின் சிந்தனைகளில் திசைமாற்றத்தினை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்த…
-
- 3 replies
- 358 views
-
-
எகிப்து உயர் நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி `வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய பகுதிகளை `தாரை வார்ப்பதில்’ ஒரு புது வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறது. இது எந்த அளவுக்கு `நமக்கு' உதவும் என்பது, சட்ட வல்லுனர்களின் பார்வை, நீதிமன்ற அணுகுமுறையைப் பொறுத்தது. ஆனால் மிக நிச்சயமாக `குறிப்பிடப்பட வேண்டிய' ஒரு தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை. செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவுகள் `திரான்', மற்றும் `சமாபிர்'. தனது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட இவ்விரு பகுதிகளையும், எகிப்து அரசு, சவுதி அரேபியாவுக்கு `தாரை வார்த்து' கொடுத்தது. சவுதி மன்னர் சல்மான், கடந்த ஏப்ரல் மாதம், எகிப்துக்கு சென்றபோது, அந்நாட்டுக்கு ஏரா…
-
- 0 replies
- 316 views
-
-
காணொளி http://www.tamilkathir.com/news/361/58/90/d,view_video.aspx நன்றி சங்கதி
-
- 0 replies
- 1.8k views
-
-
'பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு' - இலங்கையில் சர்ச்சை யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் அம்பாறை மாவட்டம் - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. இந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (19ஆம் திகதி) நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன், முஹுது மகா விகாரையைச் சுற்றியுள்ள 72 ஏக்கர் பரப்…
-
- 0 replies
- 352 views
-
-
இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது. “இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை. இது இலங்கை அரச விளம்பரம் என்பதை கவனத்திற்கொள்க: இதனை 2020 யூ…
-
- 23 replies
- 4.7k views
-
-
சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! கம்பவாரிதி தனது வலைத்தளத்தில் எழுதிப் பிரசுரித்த கட்டுரை. எமது தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கெ…
-
- 0 replies
- 640 views
-
-
நீண்ட நாட்களாக பெல்ஜியம்- அமெரிக்காவினாலும், ஐ. நாவின் அதிகாரிகளின் துணையினாலும் செய்து முடிக்கப்பட்டதாக நம்பப்பட்டிருந்த காங்கோவின் முதல் பிரதமமந்திரி பாட்ரிஸ் லுமும்பாவின் படுகொலை , இங்கிலாந்தின் உளவுப் பிரிவான எம்16-னால் நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மை 40 வருடங்கள் கழித்து வெளியாகி உள்ளது. ஆப்ரிக்கா தேசியத்தினை மாற்றி அமைத்திருக்குமளவு வல்லமையும் நேர்மையும் வாய்ந்த மிகச் சிறந்த மக்கள் தலைவன் லுமும்பா. நாம் அனைவரும் படித்து அறியவேண்டிய ஆப்ரிக்க தலைவர்களில் முதன்மையானவர். இவரது படுகொலை ஆப்ரிக்காவினை அடுத்தகட்ட காலனியாதிக்கத்திற்கு தள்ளியது எனலாம். ஒட்டு மொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் முன்மாதிரியாக நாட்டினை காங்கோவில் உண்டாக்கி இருக்கும் வல்லமை இவருக்கு உண்டு. நாட…
-
- 0 replies
- 617 views
-
-
இந்திய எம்.பிகளுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடடிதம் இது 2013-04-12 22:29:07 இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய சர்வகட்சிப் பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு! அன்புடையீர், இவ்வறிக்கை 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் ஈடுபாடு கொண்ட ஈழத்துக் காந்தி என்றும், தந்தை செல்வா எனவும் அழைக்கப்படும் சா.ஜே.வே. செல்வநாயகம் (இராணி வழக்கறிஞர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகிய வீ.ஆனந்தசங்கரி ஆகிய என்னால் சமர்ப்பிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்த நாளில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் மதன்ஜீத்சிங் என்பவரது பெயரால் உருவாக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுப்பதற்கான 2006ஆம் ஆண்டுக்கு…
-
- 4 replies
- 671 views
-
-
இலங்கையினை குழப்பிய ஸ்டாலினின் அறிக்கை இந்தியா, ஐநா சபையில், இலங்கை பிரேரணை மீது, எந்த விதமாக நடந்து கொள்ளும் என்று இன்னமும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், இலங்கை வெளியுறவு செயலர், இந்தியா தமக்கு, ஆதரவு தரும் என்று அறிவித்தது எங்கனம் என்று கேள்வி கேட்டுள்ள ஸ்டாலின், 9 கோடி தமிழர்கள், இந்தியா, இலங்கையில் உள்ள தமிழர்களை கை விட்டால் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பிரதமர் மோடி உறுதியான தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று வந்த போதும், மோடி, கோத்தபாயவுடன் பேசிய போதும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படாத ஒரு முக்கிய முடிவினை, இலங்கை வெளியுறவு செயலர் அறிவிப்பது எங்கனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்…
-
- 0 replies
- 696 views
-
-
http://irruppu.com/?p=34035
-
- 0 replies
- 326 views
-
-
சண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின் கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார். அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28) என்பவரும் இறந்து பட்டார். அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற …
-
- 2 replies
- 1.2k views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு அமைதியை ஏற்படுத்தலாம். இலங்கையல் சிங்களவர், தமிழர் பிரச்சனைக்குத்தூபமிட்டு வளர்த்து அமைதியில்லா இலங்கையை உருவாக்கியவர்கள் முற்று முழுதாக இந்தியர்களே. சிங்களவர் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக் விரும்பினாலும், இதை இப்படிச் செய் அப்படிச்செய் என்று சிங்களத்திற்கும், தமிழர்களுக்கு உரிமைக்காகப் போராடு என்ற ஆயுதத்தையும் அள்ளிக் கொடுத்து உரிமையை கேட்பது போன்று கொடுக்காதே என்ற சிங்களத்திற்கும் சொல்லி இரு இனங்களும் தொடர்ந்து பிர்சனைப்படுவதால் வேறு வல்லரசுகள் இலங்கையில் கால்பதிக்காது வைத்துக் கொள் இதுவே வழி என்ற ரீதியில் இலங்கையை நடத்தி வந்தது இந்தியாதான். மிரட்டல்களும் தட்டல்களும் எங்கே எப்போது போடவேண்டும் என்று அங்கே போட்டு இரு இனங்களையும் அமை…
-
- 2 replies
- 674 views
-
-
வெலிஓயா சிங்களக் குடியேற்றம் நாயாறு நோக்கி விரிவடைகிறது மகாவலி 'எல்' வலயத்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதி வரைக்கும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான மணலாறு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பகுதியை மகாவலி 'எல்' வலயமாகப் பிரகடனம் செய்தது. அத்துடன் நிர்வாக ரீதியாக இந்தப் பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடனும் இணைத்துள்ளது. இந்தநிலையில் தற்போது சிறிலங்கா அரசாங்கம் மகாவலி 'எல்' வலயத்தை நாயாறு வரைக்கும் வரிவாக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நீர்ப்பாசன, நீரியல் வளங்கள் முகாமைத்துவ பிரதி அமைச்…
-
- 0 replies
- 701 views
-
-
எதற்காக மைத்திரிபால சிறிசேன? பல தலைகள் இருந்தாலும், எதற்காக மைத்திரிபால சிறிசேன தேர்வு செய்யப்பட்டார் என்பது பலரது கேள்வியாயிருந்தாலும், சந்திரிகாவின் இந்த ரணிலுடன் சேர்ந்த நடவடிக்கையில் பெரும்பாலும், இந்திய, அமெரிக்க திரை மறைவு பங்களிப்பு உள்ளதாக கொழும்பு அவதானிகள் கருதுகின்றனர். காரணம் மகிந்தரின் சீன அன்பு. பயமுறுத்தல் என்ற ஒரே ஒரு ஆயுதத்தினை வைத்தே, நாடு முழுவதனையும் ஆள முனைந்தனர், மெடுமுலன சண்டியர்களான அண்ணன் தம்பிமார். 'ஆத்தில ஓடுது தண்ணி, அண்ண பிடி, தம்பி பிடி' என எல்லாம் எமக்கே என்று ஆட்டையினைப் போட்டு கொண்டிருந்தார்கள். 'சிறிய பாம்பாயினும் பெரிய தடி கொண்டு அடி' என்ற வகையில் எந்த சிறிய தேர்தலிலும் பெரு வெற்றி அடைந்தால் தான், எதிராளி பயப்படுவான், இருப்பவன் ஓடா…
-
- 5 replies
- 885 views
-
-
தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன. தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது. இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்…
-
- 4 replies
- 1.6k views
-
-
மரண தண்டனையை நேர்மையாக எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 03 புதன்கிழமை, பி.ப. 12:31 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம், குண்டைக் கட்டிக் கொண்டு தாக்குதலுக்குத் தான் போகாமல், மற்றவர்களை ஏவி, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், அவன் கைது செய்யப்பட்டான் என்றும் வைத்துக் கொள்வோம். இந்தப் படுபாதகச் செயலுக்காக, சஹ்ரானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா? 2015ஆம் ஆண்டு, புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவியைக் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கி, கொலை செய்தவர்கள் விடயத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா? அதே ஆண…
-
- 0 replies
- 258 views
-
-
July 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அது ஒரு பொல்லாத இரவு. அந்த இரவு தலைநகராகிய கொழும்பில் ஆரம்பித்த வன்முறைகள் நாடெங்கிலும் பரவலாகி ஏழு தினங்களுக்கு மேலாக தொடர்ந்தன. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களின் தமிழர்கள் மீதான தா…
-
- 0 replies
- 436 views
-
-
ஒருவாரமாக NTT நிகழ்ச்சிகள் எதுவும் புதிப்பிக்க படவில்லையா?
-
- 9 replies
- 2.9k views
-
-
தமிழீழப் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் இருந்த அற்ற சொற்ப ஜனநாயகமுறைமைஅழிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதுவே ஜனநாயகம் எனும் பெயரில்சர்வாதிகாரத்தையும் , பெரும்பான்மையினரின் அடக்கு முறைக்கும் வன்முறைக்கும், வழிகோலியது.இது ஒரு குடும்ப அரசியலாக மாற்றம் பெற்றுவந்தமையை அறிந்த இந்தியாவும் பலமேற்குலகும் தாம்இலங்கையில் காலடி வைப்பதற்கும், குடும்ப அரசியலை ஒழித்துக் கட்டுவற்கும், முக்கியமாக தன்பொருளாதார, பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டுமே இராஜபக்சவின் குடும்ப ஆட்சிகவிழ்க்கப்பட்டது. மீண்டும் ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புவது என்பது மிக இலகுவானது அல்ல. அதற்கான முயற்சியைஇந்த அரசு செய்கிறது என்பதில் ஐயம் இல்லை. இப்படியாக ஜனநாயகமுறை கட்டி எழுப்பப்படும்வேளை நாமும் எமது ந…
-
- 0 replies
- 379 views
-
-
முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:06 நன்றி மறத்தல் என்பது அரசியலில் சாதாரணமானது. கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுதல் என்பது சர்வசாதாரணமானது. முஸ்லிம் மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, எவ்வாறு ஏமாற்றுப் பேர்வழிகளாகச் செயற்படுகின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் தலைவர்கள், கட்சிகள், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவது தொடராகக் காணப்படுகின்றது. மஹிந்த ஆட்சியில் மட்டுமல்ல, இன்றைய ஆட்சியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 20 வருடகால ஆட்சியில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தை, அரசாங்கங்…
-
- 0 replies
- 402 views
-
-
பாதுகாப்பு படையினாரால் வீடு இடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஜம்லா சோகி கேரளாவில் நக்சல் பயங்கரவாதிகள் ஊடுறுவி விட்டதாக மன்மோகன் சிங் பத்திரிக்கையாளர்களைக் கூட்டி அண்மையில் அறிவித்திருக்கிறார். குற்றால மலையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. உள்நாட்டு அச்சுறுத்தல் எல்லைமீறி போய்விட்டதாக ப.சிதம்பரம் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளுகிறார். சல்வாஜுடும் போன்ற ஆயுதக் குழுக்களை மாநில அரசுகள் கட்டியமைத்திருக்கின்றன. பல்லாயிரம் கோடி செலவில் ‘ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்’ எனும் படையெடுப்பை சொந்த மக்களின் மீது ஏவி விட்டிருக்கிறது மைய அரசு. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டில்? எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? …
-
- 0 replies
- 649 views
-