Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பகுதியில் இன்றும் கடும் மோதல்

Featured Replies

Saturday, 19 April 2008

மன்னாரை நோக்கி நகரும் படையினரும் விடுதலைப் புலிகள் தரப்பும் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்குகளில் கடும் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பகுதியினரும் எறிகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பரப்பன்கண்டல் மற்றும் அடம்பன் பகுதிகளின் ஊடாக இராணுவம் முன்னேற முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை.

http://www.ajeevan.ch/

தயவு செய்து ஆபிரிக்காவில் எடுத்த புகைப்படங்களை எமது செய்திகளுடன் இணைத்து நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். புலிகள் சிறுவர்களை தமது இராணுவத்தில் பாவிக்கிறார்கள் என்ற பரப்புரையை செய்யதான் நீங்களும் உங்கள் இணையத்தை பாவிக்கிறீர்களா? படங்கள் கிடைக்காவிட்டால் பரவாயில்லை ஆனால் இது நீங்கள் புலிகளின் பெயரை மேலும் மழுங்கடிக்கவே போட்டுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. உங்களுக்கும் சிறீ லங்கா அரச நண்பர்களுக்கும் உள்ள நட்பு தனிப்பட்ட முறையில் இருக்கும் வரை அது உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் அதை அரசியலில் கொண்டு வருவது போராட்டத்தை கொச்சைப்படுத்தவே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியது!

யாழ் கள நிர்வாகிகளே நீங்கள் இது போன்ற விடயங்களை ஊடக சுதந்திரம் என்று ஊக்கவிப்பதால் தான் நமது விடுதலை இன்னமும் பின் தள்ளிப் போகிறது! தயவு செய்து கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடப்பது நன்று!

இந்தப் படத்தின் பின்புல அரசியலை தயவு செய்து கவனத்தில் எடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே, நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் படத்தில் இருப்பது சிங்களப் போலீச்காரன் போலவும் கிடக்கு.

நீங்கள் கூறுவது போல் அது ஆப்பிரிக்க ராணுவச் சிறுவன் ஒருவன் என்றால் நிச்சயமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய ஒன்றுதான்.

அஜீவனின் இணையத்தில் இந்த செய்திக்காக இணைக்கப்பட்ட படமானது முன்பு எங்கேயோ "கருங்காலி கருணாவின்" கும்பலின் படத்தில் பார்த்தது போலுள்ளது. இப்படத்தை புலிகளின் படம் என்று எங்குமே பார்த்த ஞாபகம் இல்லை!!!

"எந்தப் புத்தில் எத்தப் பாம்பு இருக்கிறதோ" நாமறியோம் பராபரவே!!!

சீருடையைப் பார்க்கும்போது அமைப்பின் சீருடை போல் தெரியவில்லை. இவ்வாறான சீருடைகள் அமைப்பின் சீருடையாக இருப்பதற்கும் வாய்ப்பில்லை. அமைப்பின் சீருடையின் வடிமைப்பில்கூட ஓரு நேர்த்தியிருக்கும்.

படத்தில் இருப்பது தமிழீழ தேசியத் துணைப் படை வீரர்கள்.

ஒரு சில ஆண்டுகளிற்கு முன்னர் இப்படம் பன்னாட்டு முகவர் செய்தி நிறுவனம் ஒன்றினால் எடுக்கப்பட்டது.

தேசியத் துணைப்படை வீரர்களின் மேலதிக படங்களிற்கு:

http://aruchuna.net/categories.php?cat_id=63

சரி! அப்ப செய்தி சொல்லுது புலிகள் இராணுவம் மோதல் என்று! அனால் இந்தப் படம் யாரை குறிப்பிடுகிறது!

மன்னாரில் கருணா குழு இல்லை! துணை இராணுவப்படையும் இல்லை!

புலிகள் எதிர் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்ற செய்தியே இந்த செய்தியின் முக்கிய செய்தி! அப்ப படம்???

தங்கள் உள்நோக்கம் என்ன என்பது நன்கே புரிகிறது திரு அஜீவன் அவர்களே! வாழ்க உங்கள் பணி!!!!

  • தொடங்கியவர்

இப் பகுதியை இப்போதுதான் பார்க்க கிடைத்தது.

கருத்துகளுக்கு நன்றி!

பெரும் பாலான தமிழர்கள் தமிழர் போராட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல.

ஆனால் ஆதரவானவர்களையும்

ஒரு சிலர் எதிரானவர்கள் ஆக்கினார்கள் என்பதே உண்மை!

தன்னை விட அடுத்தவர்கள்

தமிழர் போராட்டத்துக்கு எதிரரானவர்கள் என்ற ஒரு சிலரின் மனோபாவம் காரணமாக

பலர் எதிரிகளாக உருவாக்கப்பட்டிருப்பதும்

தன்னை விஞசி இன்னொருவன் வரக் கூடாது என்பதால் ஏற்பட்ட காழ்புணர்வுகள்

காரணமாக பலர் எதிரிகளாக்கப்பட்டார்கள் என்பதுமே யதார்த்தம்.

அது குறித்து தெரிந்து கொள்ள வெகுதூரம் போக வேண்டியதில்லை.

நம்மை சுற்றி உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும்?

சுட்டவர்களும்

சுருட்டிக் கொண்டவர்களும்

எத்தனை எத்தனை?

நம்மை நிலைக்க வைத்துக் கொள்வதற்காக

நாம் முயல வேண்டுமே தவிர

அடுத்தவனை குழியில் தள்ளி

அவன் மேல் நிற்பதால்

எவரும் உயர்ந்து விடப் போவதில்லை.

இதுவே உண்மை!

தவறு ஒன்று ஏற்பட்டிருந்தால்

அதை சுட்டிக் காட்டினால்

திருத்திக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

அதற்காக கடினமான வார்த்தைகளையும்

உங்கள் கோபதாபங்களையும் தவிருங்கள்.

இது எனக்காக மட்டுமல்ல

ஏனையவர்களுக்கும் முன் மாதிரியாக இருப்பதற்காக

உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அது உங்களை மட்டுமல்ல

எமது இனத்தையே மேன்மைப்படுத்தும்.

(இதை ஒருவர் மின் அஞ்சல் வழி எனக்கு அனுப்பியிருந்தார்.

அதனால்தான் இந்த கருத்துகளைக் கூட இன்று என்னால் பார்க்க முடிந்தது.)

அண்மையில்

எனக்கு நடந்த ஒரு சம்பவம்

நான் ஒரு தமிழ் புத்தகத்்துக்காக

சில குழந்தைகளது குரல்களை பதிவு செய்ய ஒரு இடத்துக்கு சென்றிருந்தேன்.

அப் புத்தகம் தமிழர் நலனில் அக்கறையுள்ளவர்களது என்பது மட்டுமல்ல

அவர்கள் ஒரு தலைவரால் கெளரவிக்கப்பட்டவர்களும் கூட...

(இன்றைய ஐரோப்பிய சூழலை கருத்தல் கொண்டு சில கருத்தாடல்களை தவிர்க்கிறேன். எமது வீரத்துக்காக யாரையும் காவு கொள்ள நான் தயாரில்லை.மன்னிக்கவும்)

அதற்கு முட்டுக் கட்டை போட அப் பகுதியில் முக்கியமான ஒருவர் முனைந்திருந்தார்.

அங்கு போன போதுதான் அது குறித்து எனக்கு தெரிந்தது.

நான் அவரை அழைத்து நேரடியாகவே அது குறித்து நட்பாக பேசினேன்.

குழந்தைகள் எம்மவர் குறித்து நல்ல அபிப்பிராயம் உருவாக செயல்படுங்கள்.

உங்கள் குழந்தையும் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி இல்லையா? என்றேன்.

"சரி, செய்யுங்கோ நல்ல விசயம்" என்று போனவர்

மீண்டும் சம்பந்தப்பட்டவர்களை இரவு 11 மணிக்கு தொலைபேசியில் அழைத்து

மிரட்டி இருக்கிறார்.

( எப்படி மிரட்டியிருப்பார் என்பதை நான் இங்கு எழுத விரும்பவில்லை. அமைப்புகளின் பெயர்களால் சுயநலம் தேடுவது எப்படி என்பதை அப்போதுதான்உணர்ந்தேன்.)

அவர்கள் பயந்த பயம் எனக்கு இரவு 12 மணிக்கு தொலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவித்தார்கள்.

அவர்களிடம் அவரது தொலைபேசி எண்ணைக் கூட வாங்க முடியவில்லை.

அவர்கள் அதைத் தரக் கூட பயந்தார்கள்.

அவர்களோடு பேசிக் கொண்டே

மேலிடம் ஒன்றுடன் பேசுகிறேன் இருங்கள் என்று கூறிவிட்டு

எனது கைத் தொலைபேசியால்

தகவலை பரிமாறினேன்.

பின்னர் அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தார்கள்.

அது முற்று முழுதாக நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை.

அடுத்த நாள் அவர் தெரியாமல் ஏதோ நடந்து விட்டது என்றாராம்.

"தமிழன் சும்மா சொன்னால் கேட்க மாட்டான்

சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால்தான் கேட்பான்" என்று ஒருவர் சொல்வார்.

அது உண்மைதான்.

இது போல் சில பிரச்சனைகள் உண்டு.

புலியால் பிரச்சனை இல்லை.

புலி வேடத்தில்

புலிகளுக்கு எதிரிகளை உருவாக்க ஒரு சாரார் புலிகள் வேடத்தில் காய் நகர்த்தல்களை செய்கிறார்கள்.

அவதானம் தேவை!

உணர்ச்சி வசப்படுவதால் எதுவும் ஆகாது.

என்னோடு வேலை செய்த தமிழர்களுக்கு கூட

தமது வேலைகளை தக்க வைத்துக் கொள்ள போராடி

எனக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொண்டேன்.

அவர்களோ யூதாசைப் போல என்னைக் காட்டிக் கொடுத்து

பதவியில் நல்ல பெயரும் நன்மைகளும் பெற்றார்கள்.

நான் வெளியேறி விட்டேன்.

தாம் தோண்டிய குளியில் இன்று அல்லல்படுகிறார்கள்.

தன் வினை தன்னைச் சுடும்.

இது வாய் சவடால் அல்ல?

நாட்டுக்காக உழைப்பதாக தனக்கு பெயர் வாங்க உழைப்பவன்

தாயக உணர்வு கொண்டவனில்லை.

தாயகத்தில் செத்து மடியும் எத்தனையோ அப்பாவிகளின் பெயர்கள் நமக்குத் தெரியாது.

ஆனால் அவர்களது ஆத்மாவின் ஆசைகள் நிராசையாகக் கூடாது.

அன்றைய சுவிஸ் பொறுப்பாளர் முரளி கூட அன்று யாரோ சொன்னதை வைத்து முரண்பட்டார்.

இன்று அவர் என்ன செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் அண்மையில் கனடாவில் சந்தித்தேன்.

நான் மாறவில்லை அப்படியே இருப்பதாக சொன்னார்.

நான் சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொண்டேன்.

இயற்கை மாறாது? :rolleyes:

இப்படியானவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்காணிக்க வேண்டும்.

இவர்கள் நன்மை போல் பெரும் தீங்கு செய்பவர்கள்.

நான் உள்ளேயும் வெளியேயும் நானாகவே வாழ்கிறேன்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாது.

அது பலருக்கு தவறாக தெரியலாம்.

மிக நெருக்கமானவர்களுக்கு என்னை தெரியும்.

பணத்தாலோ அல்லது வேறு எந்தவிதத்திலும் என்னை வாங்க முடியாது.

எனது மனச் சாட்சிக்கு விரோதமாக எதுவுமே செய்ய மாட்டேன்!

அதனால் தூங்கும் போது நிம்மதியாக என்னால் தூங்க முடிகிறது!

அது மட்டுமே எனது நிம்மதி!

வேண்டாம் தேவையற்ற விரோதங்கள்

நமக்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது.

நமது பலவீனத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்

நாம்.........................?

சேர்ந்தே வெல்வோம்!

அல்லலுறும் மக்கள் விடிவுக்காய் வெகு தூரம் போக வேண்டும்!

நன்றி!

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.