Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதுவது என்றால் சில தகவல்களை நேரடியாக அறிந்து எழுதினால் மட்டுமே அவை உண்மையாக அமையலாம். உண்மை இருந்தாலே எழுதுவதில் ஒரு சமூக நோக்கம் இருக்கும்.

 

 இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு பிற நாட்டில் நடப்பவற்றை எழுதுவது என்றால் மூன்றாம் தரப்பு ஊடான தகவல்களை வைத்தே எழுத முடியும். எனவே அவ்வாறு எழுதுவதால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

 

நிச்சயமாக ....... :) இங்கிலந்தில்  நடப்பதையோ  பிரான்சில்  நடப்பதையோ நான் எழுதும் போது  நேரடியாக  நீங்கள் நின்று பார்க்காமலேயே   அதனோடு சம்பந்தப் படாமலேயே  கனடாவில்  இருந்து  நீங்கள் மறுப்பது போல் இல்லாமல் :icon_mrgreen:  நிச்சயமாக  சம்பவங்களில் கலந்து கொண்டு அல்லது சம்பவங்களின்  உரையாடல்களை நெரில் அறிந்து எழுதுகிறேன். <_< 

  • தொடங்கியவர்

புலிகள் காலத்தில் ஆவணப்படுத்தல் என்பது ஓரளவிற்கு இருந்தது. இன்று எமது வரலாற்றை, தியாகங்களை, அழிப்புக்களை, கொலைகளை நாம் ஆவணப்படுத்த தவறுகின்றோம்.

 

 

இந்த ஒளிப்பதிவில் சி.என்.என். முருகதாஸ் அவர்களின் தியாகத்தை ஆவணப்படுத்தி உள்ளது:

 

Edited by akootha

  • தொடங்கியவர்

ஆமாம்! யாரும் இனி வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் நடப்பது பற்றியும் எழுதாதீர்கள்! இனிமேல் அந்த அந்த நாட்டில் உள்ளவர்கள்தான் அந்த அந்த நாட்டைப் பற்றி எழுத வேண்டும். மீறினால் எச்சரிக்கைப் புள்ளி வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

 

இலங்கையில் நடப்பனவற்றை அங்குள்ள ஊடகவியலாளர்கள் ஊடாக நாம் செய்திகளை பெற்று இங்கே யாழ் களத்தில் இணைக்கின்றோம். எனவே அந்த செய்திகளை பற்றி விவாதிக்கலாம்.

 

அதேபோல் பிரான்சில் இல்லை கனடாவில் இல்லை இங்கிலாந்தில் என புலம்பெயர் தேசங்களில் ஊடகவியலாளர்கள் எழுதும் கருத்துக்களில் உண்மை இருக்கும் சாத்தியங்கள் உள்ளன.

ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் நான் எனது நண்பர்கள் ஊடாக பெரும் 'செய்திகளை வைத்து கதைகள் கட்டுரைகள்' எழுதலாம். அதற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.

  • தொடங்கியவர்

நிச்சயமாக ....... :) இங்கிலந்தில்  நடப்பதையோ  பிரான்சில்  நடப்பதையோ நான் எழுதும் போது  நேரடியாக  நீங்கள் நின்று பார்க்காமலேயே   அதனோடு சம்பந்தப் படாமலேயே  கனடாவில்  இருந்து  நீங்கள் மறுப்பது போல் இல்லாமல் :icon_mrgreen:  நிச்சயமாக  சம்பவங்களில் கலந்து கொண்டு அல்லது சம்பவங்களின்  உரையாடல்களை நெரில் அறிந்து எழுதுகிறேன். <_<

 

உண்மையில் நீங்கள் எழுதுவதன் நோக்கம் நாங்கள், புலம்பெயர் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதற்காகவும் எமது தாயக மக்கள் விடுதலை பெறவும் வேண்டும் என்பதற்காகவும், நன்றிகள்.

அகிம்சை வழியாக பின்னர் ஆயுதம் தாங்கி எமதினம் போராடியது. இன்று நாம் எதிர்பார்த்த சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.

 

 ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், ஐ.நா. அமைதிப் படையை நிலைநிறுத்தல், இராணுவ ரீதியான அழுத்தங்கள் வழங்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

ஆயினும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் "வீட்டோ' அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர இயலாது என்று மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116712

 

 

எனவே இந்த கட்டுரை எழுதுவது போக மிகுதி நேரத்தை அதற்காகவும் நீங்கள் செலவழிப்பீர்கள் என நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

 உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.


எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்

முருகதாசன்

 

 

இன்றுள்ள தாயக நிலைமைகளை சர்வதேசத்தின் முன்னால் கொண்டுவரக்கூடிய நிலைமையில் உள்ளவர்கள் புலம்பெயர் மக்கள் மட்டுமே. இன்று பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடக்காமல் போகும் சாத்தியம் உள்ளது, ஐநாவில் சில நிபந்தனைகளுடன் கூடிய தீர்மானம் வரும் சாத்தியம் உள்ளது. பொருளாதார தடைகள் வரலாம். ஐ.நா. படை கூட தமிழீழம் செல்லலாம். சர்வசன வாக்கெடுப்பு கூட நடக்கலாம்.

 

 

முருகதாஸ் கேட்டது போன்று அந்த மக்கள் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதே அவருக்காக நாம் செய்யும் உண்மையான கடமை.


அதை சரிவர செய்யும்பொழுது அவரின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்யும் அனைவருமே முகவரி அற்று

போய்விடுவார்கள்.

 

எனவே வாருங்கள் முருகதாஸ் கேட்டதை  செய்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவதே, உகந்தது போல உள்ளது! இதன் மூலம் நாங்களே எதிரிகளுக்கான விளம்பரத்தை, இலவசமாகச் செய்கின்றோம்!

 

முருகதாசனின் நினைவை, இதயத்தில் சுமந்தபடி பயணத்தைத் தொடர்வதே புத்திசாலித் தனமானது.

ஒரு குழந்தையொன்று , விளையாட்டுப் பொருளைக் கொஞ்சநாளைக்கு விளையாடிவிட்டு, ஆர்வமிழப்பது போல, இவர்களும் ஆர்வமிழந்து விடுவார்கள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.