Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம்; தனது தற்துணிவில் கொண்டு செல்கிறார் நவநீதம்பிள்ளை

Featured Replies

இலங்கை விவகாரத்தை இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையின் பின்னர், இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவுசெய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

தனக்கு இருக்கும் தற்துணிவின் அடிப்படையிலேயே அவர் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.நா.மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் பின்னடித்துவருகிறது.

இந்நிலையில் இம்முறையும் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையொன்றை அமெரிக்கா ஜெனிவாக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளது.

அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு தனது தற்துணிவின் அடிப்படையில் எடுத்துச்செல்கிறார் என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பின்னர் இலங்கை அரசு மனித உரிமை விடயங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்தன.

ஆயினும் அந்தப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு தொடர்ந்தும் இழுத்தடிப்பைச் செய்துவருகிறது. அத்துடன் நாட்டின் மனித உரிமை விடயங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஐ.நா. முகவர் அமைப்புக்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் சட்டத்தின் ஆட்சியும் இலங்கையில் கேள்விக்குறியான நிலையில் உள்ளது என உலக நாடுகள் பலவும் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் இலங்கை விவகாரத்தை இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன.

இதன் வெளிப்பாடாக கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணையை விடவும் இம்முறை வரவுள்ள பிரேரணை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பிரேரணை அங்கு நிறைவேற்றப்பட்ட பின்னர், இலங்கை விவகாரத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதற்கு மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், ஐ.நா. அமைதிப் படையை நிலைநிறுத்தல், இராணுவ ரீதியான அழுத்தங்கள் வழங்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆயினும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் "வீட்டோ' அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர இயலாது என்று மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இலங்கை விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மேற்குலக நாடுகள் விடாப்பிடியாக இருப்பதால் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறும் சாத்தியம் உள்ளதாக கொழும்பு இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=237411826310632967

  • தொடங்கியவர்

மாநாட்டின் பின்னர் பொருளாதார தடை?
2013 ஃபெப்ரவரி மாதம் 09 சனிக் கிழமை- பி.ப 01:21

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டுடன், இலங்கைக்கு பொருளாதார தடை ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இதனை தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார, சில குழுக்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
 
மனித உரிமைகள் மாநாட்டுடன் இலங்கைக்கு பொருளாதார தடையை ஏற்படுத்துவதற்கான பிரசார வேலைகளை தற்போதும் சிலர் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த நிலையில் அதனை தவிர்த்துக் கொள்வதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

http://www.hirunews.lk/tamil/53064

  • தொடங்கியவர்

இம்முறை இந்தியாவும் அமெரிக்காவும் இவ்வாறான ஒருநிலைப்பாட்டை எடுப்பதற்கு என்ன காரணம்:
 
தமிழின படுகொலையா ?  - இல்லை
சிங்களம் மக்களின் சனநாயகம் சிறிது சிறிதாக நசுக்கப்படுவதா ? - இருக்கலாம்.
 
இவற்றையும் தாண்டி ஒரு நாற்பது பில்லியன் பொருளாதாரத்தை கொண்ட இலங்கையில் சீனா இட்டுள்ள ஆறு பில்லியன்கள் முதலீடா??
சீனா பல நீண்டகால திட்டங்களுடன் காலை ஊன்றி வருகின்றது. அதற்கு உதவியாக அது பலமான சிங்கள இராணுவத்தை மகிந்த பக்கம் வைக்க பண உதவி செய்து வந்துள்ளது.
 
பலமில்லாத சிங்கள எதிர்க்கட்சி, மகிந்தாவிற்கு  பலமான ஆதரவை கொண்ட பாதுகாப்பு துறைகள் உள்ள நாட்டில் தமக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் மேற்குலகம் உள்ளது.

இறுதியாக உள்ள வழிகளில் ஒன்று - பொருளாதார நெடுக்கடி.
 
அவர்களே ஒரு பொருளாதார தடையை கொண்டுவர எண்ணும்பொழுது நாம் நாமாக அதை முன்வந்து நடைமுறைப்படுத்துவோம்.
ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் முதலில் பொருளாதார தடையை இயலுமான வழிகளில் கொண்டுவரல் வேண்டும் !

  • தொடங்கியவர்

ஐ.நா. அமைதிப்படை நிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தர வழி அமைத்து தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா படை (மேற்குலக உள்நுழைவு) இலங்கையில் காலூன்றுவதற்கு இந்தியம் விட்டுவிடுமா? :rolleyes:  குள்ளநரி மூளை முழுவேகத்தில் வேலைசெய்யப் போகுது.. :rolleyes:

  • தொடங்கியவர்

ஐநா படை (மேற்குலக உள்நுழைவு) இலங்கையில் காலூன்றுவதற்கு இந்தியம் விட்டுவிடுமா? :rolleyes:  குள்ளநரி மூளை முழுவேகத்தில் வேலைசெய்யப் போகுது.. :rolleyes:

 

இந்தியா மறுத்தால் ஒரு நாள் இந்தியாவிற்குள் நிற்கும் சீன படைகள்  :o 

 

பாகிஸ்தான் துறைமுகத்தை அந்த நாடு சீனாவிடம் கொடுத்துள்ளது. 72 மணி த்தியாலத்திற்குள் அம்பாந்தோட்டை முழு கடற்படை முகாமாக மாற்றப்படும் வல்லமையை சீனா கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மறுத்தால் ஒரு நாள் இந்தியாவிற்குள் நிற்கும் சீன படைகள்  :o

 

பாகிஸ்தான் துறைமுகத்தை அந்த நாடு சீனாவிடம் கொடுத்துள்ளது. 72 மணி த்தியாலத்திற்குள் அம்பாந்தோட்டை முழு கடற்படை முகாமாக மாற்றப்படும் வல்லமையை சீனா கொண்டுள்ளது.

 

இருக்கலாம்.. ஆனால் ஐநா படையை முந்திக்கொண்டு, அல்லது ஒரு அந்நியப் படையுடன் இந்தியப் படைகள் போய் நிற்கும் என்கிறன்.. :rolleyes: என்ன சொல்லுறீங்கள்? :D

  • தொடங்கியவர்

இருக்கலாம்.. ஆனால் ஐநா படையை முந்திக்கொண்டு, அல்லது ஒரு அந்நியப் படையுடன் இந்தியப் படைகள் போய் நிற்கும் என்கிறன்.. :rolleyes: என்ன சொல்லுறீங்கள்? :D

 

மீண்டும் ஒருமுறை இதை சந்திக்க விருப்பம் என்றால்.... வரலாம்  :D

 

Rajiv1987hit.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஆண்மையில்லாத இந்தியாவை கைவிட்டு ஐரா அமைதிப்படை என்ற போர்வையில் தனது படையை நிறுத்தும் ஆகவே தமிழர்கள் அமெரிக்கா சார்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை இதை சந்திக்க விருப்பம் என்றால்.... வரலாம்  :D

 

Rajiv1987hit.jpg

 

சிங் இவ்வளவு துடியாட்டம் இல்லையே.. :unsure: கொண்டை காப்பாற்றும் என நினைக்கிறன்.. :D

 

  • தொடங்கியவர்

சிங் இவ்வளவு துடியாட்டம் இல்லையே.. :unsure: கொண்டை காப்பாற்றும் என நினைக்கிறன்.. :D

 

 

இந்த செப்டெம்பரில் லோக்சபா தேர்தல் நடந்தால் இவர் வரலாம்  :D

 

rahul-gandhi-malinga.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.