Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும். அரசியல் துறை பொறுப்பாளரின் புத்தாண்டு செய்தி.

Featured Replies

'ஈழத்தமிழருக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்'

புத்தாண்டை ஒட்டி 'சுடர் ஒளி'க்கு கருத்து வெளியிட்போதே அவர் இவ்hவறு தெரிவித்தார்;

ஈழத்தமிழருக்கு நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றறுத் தென்படத் தொடங்கிவிட்டது. சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகாமானவiயாக உருவெடுத்து வருகின்றன.

இது வரை காலமும் ஈழத்தமிழர் பக்கத்திலிருந்த நியாயாங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக் கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும்.

களத்திலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மேலும் உறுதி பெற்று, சாதகமான பெறு பேறுகளை வெளிப்படுததும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது.

தமிழர் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் வாழும் நம் மக்கள் உவகை கொள்ளும் செய்திகள் புததாண்டோடு கிட்டும்.

இப்படி அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நன்றி சுடாஒளி

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரைப் புத்தாண்டைப் பேணுவதன் மூலம் உழவர் பண்டிகையாம் தைப்பொங்கலின் தரங்குன்றாது காப்போம்.

சித்திரைப் புத்தாண்டைப் பேணுவதன் மூலம் உழவர் பண்டிகையாம் தைப்பொங்கலின் தரங்குன்றாது காப்போம்.

தைப்பொங்கல் தானே தமிழர் திருநாள்?

நடேசன் அண்ணா சுடரொளிய மட்டும் கூப்பிட்டு சொன்னவர் சித்திரையிலதான் தமிழ்ப் புத்தாண்டு..... பேப்பர் விக்கிறதுக்கு இதில்ல இன்னமும் வரும்......

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு என்பன தமிழரின் திருநாட்களாகும். ஆனால் சிலர் ஆட்டுக்குள் மாட்டை விடுவது போலத் தைப்பொங்கலைப் புத்தாண்டு என அறிவிப்பதன் மூலம் தைப்பொங்கலைச் சிதைக்க முனையும் செயற்பாடு தான் பிரச்சனைக்குரியது.

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்னவென்றால் தைப்பொங்கலும் தமிழரின் திருநாளாகும்.

நடேசன் அண்ணா சுடரொளிய மட்டும் கூப்பிட்டு சொன்னவர் சித்திரையிலதான் தமிழ்ப் புத்தாண்டு..... பேப்பர் விக்கிறதுக்கு இதில்ல இன்னமும் வரும்......

ஏன் உங்களைக் கூப்பிட்டுச் சொல்லவில்லை என்று ஆதங்கமோ? பாலா அண்ணா நோய் வாய்ப்பட்டிருந்தபோதும் அவர்களைத் தான் கூப்பிட்டுச் சொல்லி நீங்கள் அறிந்தீர்களாக்கும்.

ஆடிப்பிறப்பு, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு என்பன தமிழரின் திருநாட்களாகும். ஆனால் சிலர் ஆட்டுக்குள் மாட்டை விடுவது போலத் தைப்பொங்கலைப் புத்தாண்டு என அறிவிப்பதன் மூலம் தைப்பொங்கலைச் சிதைக்க முனையும் செயற்பாடு தான் பிரச்சனைக்குரியது.

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்னவென்றால் தைப்பொங்கலும் தமிழரின் திருநாளாகும்.

ஏன் உங்களைக் கூப்பிட்டுச் சொல்லவில்லை என்று ஆதங்கமோ? பாலா அண்ணா நோய் வாய்ப்பட்டிருந்தபோதும் அவர்களைத் தான் கூப்பிட்டுச் சொல்லி நீங்கள் அறிந்தீர்களாக்கும்.

சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது இந்துக்களின் பழக்கம் இது இந்துக்களின் திருநாள்..........

பாலாண்ணா நோய்வாய்ப்பட்டத முதல்ல வெளிய சொன்னது ஏசியன்ரிபியூன். அப்ப அவங்களக் கூப்பிட்டுச் சொன்னாங்களா பாலாண்ணாக்கு வருத்தம் வந்திட்டு எண்டு.....

சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது இந்துக்களின் பழக்கம் இது இந்துக்களின் திருநாள்..........

பாலாண்ணா நோய்வாய்ப்பட்டத முதல்ல வெளிய சொன்னது ஏசியன்ரிபியூன். அப்ப அவங்களக் கூப்பிட்டுச் சொன்னாங்களா பாலாண்ணாக்கு வருத்தம் வந்திட்டு எண்டு.....

வட இந்திய இந்துகள் சித்திரையிதான் புத்தாண்டு கொண்டாடுகிறார்களா...?? குழப்பமா இருக்கே..?? :wub::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

08_11_07_nadesan_01_65162_200.jpg

pic: tamilnet.com

"ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்'' இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன் உறுதி கூறியிருக்கின்றார். புத்தாண்டை வரவேற்கும் முகமாக அவர் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஈழத்தமிழர்களுக்கு நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றுத் தென்படத் தொடங்கிவிட்டது.

சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகமானவையாக உருவெடுத்து வருகின்றன.

இதுவரை காலமும் ஈழத் தமிழர் பக்கத்திலிருந்த நியாயங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக்கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும்.

களத்திலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மேலும் உறுதி பெற்று, சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. தமிழர் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் வாழும் நம்மக்கள் உவகை கொள்ளும் செய்திகள் புத்தாண்டோடு கிட்டும்.

இப்படி நம்பிக்கை வெளியிட்டார் நடேசன்.

http://www.sankathi.net/content/full_leadn...amp;ucat=1&

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்திய இந்துகள் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்களா...?? குழப்பமா இருக்கே..?? :):D:unsure:

இலங்கையில் தமிழரிடம் இருந்து பெற்ற சிங்களவர்களும் இந்துக்கள் என்று சுடரண்ணை சொல்ல வாறர் போலக் கிடக்குது. சித்திரையைத் தவிர்ப்பதன் மூலம் சிங்களம் உலகில் தனித்துவமான இனம் என்று கஸ்டப்படுகின்ற சிங்களவர்களுக்கு இடம் கொடுக்கினம் போலக் கிடக்குது. இதன் மூலம் இலங்கை சிங்களவர்களுக்கே என்ற மாதம் மட்டுமல்லாமல், சித்திரைப் புத்தாண்டு சிங்களவர்களுக்குரியது என அவர்கள் தங்களை தனித்துக்காட்ட நல்ல உதவி.

எனக்கு ஏற்கனவே திராவிட அமைப்புக்கள் என்போர் சிங்களவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க மறைமுக உதவி செய்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏலவே உண்டு.தமிழ்நாட்டில் புத்த விகாரை அமைத்தலும், புத்தர் சிலை வைக்கப் போகின்றோம் என்பதும் இதே அர்த்ததில் இருக்கலாம்.

வித்தியாதரன் அறிவிக்கும் வரை நோய் முற்றியது தெரியாதாக்கும். பாலா அண்ணா நோய்வாய்ப்பட்டது, 15 வருடங்களுக்கு மேலாக.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

உங்களிடம் ஒரு கேள்வி, திராவிடர் அமைப்பையும் அவர்களின் செயற்பாட்டையும் குறை கூறாது உங்களால் ஒரு கருத்தாவது எழுத முடிவதில்லையே, அது ஏன் ? தமிழர் எனப்படும் சமூகமும் திராவிடத்தின் ஒரு பகுதிதான் என்று ஏன் ஏற்றுக் கொள்கிறீர்களில்லை ?

திராவிட ஆரிய வேறுபாட்டை ஏன் எப்போதுமே இந்துத்துவத்துக்கு எதிரான போராகக் காட்ட முற்படுகிறீர்கள் ?

தமிழும் சைவமும் கூடப் பிறந்த ரெட்டைச் சகோதரர்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயம்தானே ? அப்படியிருந்தும் திராவிடப் போராட்டம் என்பது இந்துத்துவத்துக்கு எதிரானது என்று ஏன் கருதுகிறீர்கள் ? அப்போராட்டமானது இந்து சமயத்தை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கப் போராடும் ஒரு சமூகமான பிராமணர்களுக்கு மட்டுமே எதிரானது என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சுடரைப் போல உங்கினை புலம்பெயர்ந்த சில பேர் கண்டறியாத உலகத்தைக் கண்ட திகைப்பில குழம்பிப் போய் இருக்கினம். சித்தம் தெளிய எல்லாம் சரி வரும். உவை உளறட்டும்.. உலகம் தான் நியதித்தபடி நடக்கும்..! :D

தூயவன்,

உங்களிடம் ஒரு கேள்வி, திராவிடர் அமைப்பையும் அவர்களின் செயற்பாட்டையும் குறை கூறாது உங்களால் ஒரு கருத்தாவது எழுத முடிவதில்லையே, அது ஏன் ? தமிழர் எனப்படும் சமூகமும் திராவிடத்தின் ஒரு பகுதிதான் என்று ஏன் ஏற்றுக் கொள்கிறீர்களில்லை ?

திராவிட ஆரிய வேறுபாட்டை ஏன் எப்போதுமே இந்துத்துவத்துக்கு எதிரான போராகக் காட்ட முற்படுகிறீர்கள் ?

தமிழும் சைவமும் கூடப் பிறந்த ரெட்டைச் சகோதரர்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயம்தானே ? அப்படியிருந்தும் திராவிடப் போராட்டம் என்பது இந்துத்துவத்துக்கு எதிரானது என்று ஏன் கருதுகிறீர்கள் ? அப்போராட்டமானது இந்து சமயத்தை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கப் போராடும் ஒரு சமூகமான பிராமணர்களுக்கு மட்டுமே எதிரானது என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை.

அடிப்படைக் கேள்வி.. பிராமணர்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் தானே..??! பிராமண எதிர்ப்பென்று.. தமிழர்களைத் தமிழர்கள் எதிர்க்கச் சொல்வது அநியாயமாக நீங்கள் உணரவில்லையா..??! சமூக மூடநம்பிக்கைகள் பிராமண சமூகத்தை மட்டும் சார்ந்தல்ல.. உலகெங்கும் பல மட்டங்களில் இருக்கிறது. அதற்கு இந்துமதமும்.. பிராமண சமூகமும் தான் காரணம் என்பது போல சிலர் செய்யும் தமிழர்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பலவீனப்படுத்தும் சில திராவிடம் பேசும் குழுக்களின் சில செயற்பாடுகளைத்தான் தூயவன் கண்டிக்கிறார் என்று நினைக்கிறேன். அது தவறே அல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல பிராமணர்களை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எனக்குப் புரியவே இல்லை. நாயிற்கு எங்கே அடிபட்டாலும், பின் காலைத் தூக்குவது போல, தமிழனுக்கு நடக்கின்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் பிராமணன் தான் பொறுப்பு என்று முடிச்சுப் போடுவது ஒரு தீர்வா?

இதன் மூலம் தமிழனுக்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைப்பது தடுக்கப்படுகின்றது. திசை மாற்றப்படுகின்றது.

சாதியம் என்று பார்த்தாலும் சாதியத்தால் அனுபவித்தவர்கள் எல்லோரும் தான். யாழ்ப்பாணத்து வேளாளர் வர்க்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியிருக்கின்ற போது பிராமணர்களை மட்டுமே குற்றம் நாட்டுவது தப்பிக்கின்ற செயல் தானே?

மொழி என்று பார்த்தாலும் அங்கே பிராமணர்கள் நிறையவே தமிழுக்காகச் செய்திருக்கின்றார்கள். சம்பந்தர், உமாபதி, பாரதியார் என்று நிறையப்பேர் ..

மேலும் ராமசாமிக்குப் பிராமண எதிர்ப்பு வாதம் வைக்க வேண்டிய தேவை என்னவென்றால் அவரது *** நண்பரும் அரசியல் போட்டியாளருமாகிய ராஜாஜி பிராமணர் என்பதாலும், தனக்குக் காங்கிரஸ்சில் முக்கிய பதவி கிடைக்காமைக்கு மாற்றுவழியாகவும், ராஜாஜியைப் பழி வாங்கவும் திராவிடம் என்ற கோட்பாட்டைத் தூக்கினார். அதற்குத் தமிழ்மக்கள் அனைவரும் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மலையாளி, தெலுங்கன், கன்னடன் ஆகியோர்களே திராவிடக் கொள்கையைத் தூக்கி எறிந்தபிறகு தமிழன் மட்டும் ஏன் சுமக்க வேண்டும்.

என்றைக்குமே நான் திராவிடன் கிடையாது. தமிழன் மட்டுமே.

என்றைக்குமே இவர்கள் தமிழை வளப்படுத்தியது கிடையாது. ஏதாவது ஒரு வழியில் கூறு போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஒரு விடயம் சொல்லுங்கள். இவர்கள் வர முன்பு இருந்த தமிழ் எழுச்சியை விட இவர்கள் ஏதாவது சாதித்துள்ளார்களா? அதன் பின்னரான தமிழின் வீழ்;சசிக்கு இவர்களின் செயற்பாடும் ஒரு காரணமில்லையா?

இவர்களால் தான் தமிழனம் அழிகின்றது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

உதை நடேசன் அண்ணை வெளியிட இல்லை... அவரின் படத்தை போட்டு நெடுக்கால போவான் வெளியிட்டது போலத்தான் கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை என்னவோ நடக்குது.என்னை தவிர.

இலங்கையில் தமிழரிடம் இருந்து பெற்ற சிங்களவர்களும் இந்துக்கள் என்று சுடரண்ணை சொல்ல வாறர் போலக் கிடக்குது. சித்திரையைத் தவிர்ப்பதன் மூலம் சிங்களம் உலகில் தனித்துவமான இனம் என்று கஸ்டப்படுகின்ற சிங்களவர்களுக்கு இடம் கொடுக்கினம் போலக் கிடக்குது. இதன் மூலம் இலங்கை சிங்களவர்களுக்கே என்ற மாதம் மட்டுமல்லாமல், சித்திரைப் புத்தாண்டு சிங்களவர்களுக்குரியது என அவர்கள் தங்களை தனித்துக்காட்ட நல்ல உதவி.

இதனை நான் இப்போது வந்து சொல்லி உதவிசெய்யத் தேவையில்லை. ஏற்கனவே பலதடவை சொல்லியாச்சு சிங்களம் தனியான இனம் தமிழர் தனியான இனம் எண்டு. நீங்கள் இப்ப சொல்லுறதப் பாத்தா சிங்களவரும் தமிழர் தான் எண்டுற மாதிரி இருக்கு. அப்பிடி எண்டா ஏன் சண்டை பிடிக்கிறீங்க தனிநாடு வேணும் எண்டு சேர்ந்து வாழலாமே :wub:^_^

  • கருத்துக்கள உறவுகள்

உதை நடேசன் அண்ணை வெளியிட இல்லை... அவரின் படத்தை போட்டு நெடுக்கால போவான் வெளியிட்டது போலத்தான் கிடக்கு....

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401183

இச்செய்தி சுடர் ஒளிக்கு வழங்கப்பட்டு.. அது பிரசுரித்ததை.. சங்கதி மீள் பிரசுரம் செய்து பிரதான செய்தியில் போட்டிருந்தது. :wub:^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. பிராமணர்களில் பலர் தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை தமிழராகக் காட்டிக் கொள்வதைவிட பிராமணர்களாகக் காட்டிக் கொள்வதையே விரும்புகின்றனர்.

சரி, இன்றைக்கு தமிழ்நாட்டிலும், இந்திய மத்திய அரசியலிலும் ஈழத் தமிழர்க்கு ஆதரவான ஒரு பிராமணரைக் காட்டுங்கள். இந்து ராம், பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், முன்னாள் டிக்சீத், ஜயலலிதா, சுப்ரமணியசுவாமி, சோ, பட்டிமன்றம் விசு என்று எங்களுக்குத் தெரிந்த அனைவருமே தமிழரின் போராட்டத்திற்க்கு எதிரானவர்கள் தானே ? இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது பலம் பொறுந்திய பிராமணர்களாலும், தமிழ்நாட்டின் கியூ பிரிவு மற்றும் சவுத் புளொக் என்பன தமிழ்ப் பிராமணர்களால் வழிநடத்தப்படுகின்றன என்பதும் நாம் கேள்விப்பட்டதுதான்.

முன்னொரு கருத்தில் சிவசேனா ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பதாக எழுதியிருந்தீர்கள். ஆனா அதே சிவசேனாதான் பம்பாய் இந்து முச்லீம் கலவரத்தில் அநியாயமாக தமிழரையும் அடித்தனுப்பியது என்பதை ஏனோ எழுத மறந்து விட்டீர்கள். சிவ சேனையினதும், அதன் கூட்டாளியான பாரதீய ஜனதாவினதும் அடிப்படையே இந்துத்துவம்தான் என்பதும் அவர்கள் முழுமையாக நம்பும் ராமர்கதையில் தமிழன் அரக்கனாகக் காட்டப்பட்டிருக்கிறான் என்பதும் நீங்கள் அறியாதது அல்லவே ?அவர்கள் தமது அடிப்படையையே எமக்காக மாற்றிக் கொள்வார்களா என்ன ?

தூயவன் , நெடுக்கு ,

நான் பிராமணர்களுக்கோ, இந்து மதத்திற்கோ எதிரானவன் அல்ல. தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நிற்கும் எல்லாமே எமக்கு எதிரானவை தானே ? சிலவேளை ராமசாமிப் பெரியார் தனது அரசியல் நலனுக்காக பிராமண எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம், ஆனால் அப்போதிருந்த பிராமணச் சமூகம் மற்ற சமூகங்களை மத ரீதியாக நடத்திய விதம் நீங்கள் அறியாததா ?

மற்றும்படி பிராமணர்கள் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு உதவி செய்தால் நிச்சயம் எமக்கு நண்மையே !

தூயவன்,

நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. பிராமணர்களில் பலர் தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை தமிழராகக் காட்டிக் கொள்வதைவிட பிராமணர்களாகக் காட்டிக் கொள்வதையே விரும்புகின்றனர்.

சரி, இன்றைக்கு தமிழ்நாட்டிலும், இந்திய மத்திய அரசியலிலும் ஈழத் தமிழர்க்கு ஆதரவான ஒரு பிராமணரைக் காட்டுங்கள். இந்து ராம், பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், முன்னாள் டிக்சீத், ஜயலலிதா, சுப்ரமணியசுவாமி, சோ, பட்டிமன்றம் விசு என்று எங்களுக்குத் தெரிந்த அனைவருமே தமிழரின் போராட்டத்திற்க்கு எதிரானவர்கள் தானே ? இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது பலம் பொறுந்திய பிராமணர்களாலும், தமிழ்நாட்டின் கியூ பிரிவு மற்றும் சவுத் புளொக் என்பன தமிழ்ப் பிராமணர்களால் வழிநடத்தப்படுகின்றன என்பதும் நாம் கேள்விப்பட்டதுதான்.

முன்னொரு கருத்தில் சிவசேனா ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பதாக எழுதியிருந்தீர்கள். ஆனா அதே சிவசேனாதான் பம்பாய்இந்து முச்லீம் கலவரத்தில் அநியாயமாக தமிழரையும் அடித்தனுப்பியது என்பதை ஏனோ எழுத மறந்து விட்டீர்கள். சிவ சேனையினதும், அதன் கூட்டாளியான பாரதீய ஜனதாவினதும் அடிப்படையே இந்துத்துவம்தான் என்பதும் அவர்கள் முழுமையாக நம்பும் ராமர்கதையில் தமிழன் அரக்கனாகக் காட்டப்பட்டிருக்கிறான் என்பதும் நீங்கள் அறியாதது அல்லவே ?அவர்கள் தமது அடிப்படையையே எமக்காக மாற்றிக் கொள்வார்களா என்ன ?

தூயவன் , நெடுக்கு ,

நான் பிராமணர்களுக்கோ, இந்து மதத்திற்கோ எதிரானவன் அல்ல. தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நிற்கும் எல்லாமே எமக்கு எதிரானவை தானே ? சிலவேளை ராமசாமிப் பெரியார் தனது அரசியல் நலனுக்காக பிராமண எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம், ஆனால் அப்போதிருந்த பிராமணச் சமூகம் மற்ற சமூகங்களை மத ரீதியாக நடத்திய விதம் நீங்கள் அறியாததா ?

மற்றும்படி பிராமணர்கள் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு உதவி செய்தால் நிச்சயம் எமக்கு நண்மையே !

திரு எம்.கே நாராயணன் பிராமணர் அல்ல!

தமிழகத்தின் கியூ பிரான்ச் என்பது தமிழக அரசின் கீழ் வரும் ஒரு நிறுவனம்!

டெல்லி சவுத் புளொக்கில் தற்போதும் அதிகபட்சமாக பிராமணர்கள் இருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது?

டெல்லியில் இன்று எதையும் அழிக்கவும் ஆக்கவும் சக்தி படைத்தவராக இருக்கும் சோனியா என்ன பிராமணரா? தேர்தல் வந்தால் இந்திய அரசியலையே மாற்றும் அளவுக்கு சக்தி படைத்த மாயாவதி என்ன பிராமணரா? இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் என்ன பிராமணரா? இன்னும் பட்டியலிட்டால் இந்த தலைப்பு மிக நீண்டுவிடும்

சுப்பிரமணியம் சுவாமி, சோ.ராமசாமி போன்றவர்கள் இலஙகை அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறீலங்காவின்

ஏஜென்டுகளாக செயற்படும் திருடர்கள். அவர்கள் பிராமண சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை

பிராமணர்களை தமிழர்கள் அல்ல என்று கடந்த 60 வருடங்களாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களின்

பாதிப்புகள் , சில பிராமணர்களின் தமிழ் மொழிப்பற்றை பாதித்து இருக்கக்கூடும். ஆனால் விபரம் தெரிந்த நாளில் இருந்தே தமிழீழ விடுதலையின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வரும் எம் போன்றவர்களும் பிராமண பின்னணி கொண்டவர்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

மற்றும் பீட்டர் அல்போன்சா, ஞானசேகரன், ஜி.கே.வாசன், காங்கிரஸ் கிருஸ்ணசாமி என்று புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் இவர்கள் எல்லாம் பிராமணர்களா? அப்படி இவர்கள் வைக்கும் கருத்துக்களுக்கு இவர்கள் சார்ந்த சமுதாயத்தை குற்றம் சாட்டுவது எப்ப்டி நியாயமாகும்?

இன்று இந்திய தேசியத்திற்கு ஆதரவானவர்கள் ஈழவிடுதலைக்கு எதிராக இயங்குவதன் பின்னணிக்கு பல்வேறு அரசியல் அசம்பாவிதங்களும் காரணம். இதை வேண்டுமென்றால் பிறிதொரு கட்டுரையில் ஆராய்வோம்

Edited by vettri-vel

தமிழீழ பிராச்சினை வேறு தமிழ்நாட்டு பிரச்சினை வேறு அங்கு பிராமண சமூகத்தால் கொடுமைபடுத்தப்பட்டிருகின்ற

தமிழீழ பிராச்சினை வேறு தமிழ்நாட்டு பிரச்சினை வேறு அங்கு பிராமண சமூகத்தால் கொடுமைபடுத்தப்பட்டிருகின்ற

Edited by vettri-vel

வெற்றி வேல் அண்ணாவுக்கு ஒரு ஓ போடு....

உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா??

இந்த கொடுமைகள் எல்லா உயர் வகுப்பினராலும் செய்யப்பட்டது. இதற்கு ஆங்கிலேயரின் அரசும் உடந்தையாக இருந்திருக்கிறது , இதற்கு பிராமண சமுதயத்தை மற்றும் எப்படி குற்றம் சாட்ட முடியும்?

மனிதர்களை மாடாக்கி, மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் ரிக்சா வண்டியை கொண்டுவந்த ஆங்கிலேயர்களையும், மதம் மாற மறுத்தவர்களை மலம் தின்ன வைத்த போத்துக்கீசர்களையும், தமிழ் பெண்களை தேடித்தேடி கற்பழித்த கஜினி முகமதுகளையும் மறந்து விட்டோம். ஏன் என்றால் அதை பேசினால் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை.

இந்துமத துவேசத்தை விட்டுவிட்டால் கொள்கை என்று சொல்லிக்கொள்ள தமிழகத்தில் சில கட்சிகளிடம் வேறு என்ன உள்ளது? எப்படி அரசியல் பிழைப்பு நடத்துவது?

அரசியல் பிழைப்புக்கு அவன் அவன் அடிக்கும் கரணங்களை சமுதாய புரட்சியாக நினைத்தால் ஏமாந்து போவீர்கள்!!!

சாதிக்கொடுமைகள் எல்லா சாதியினராலும் செய்யப்பட்டன என்றாலும் ...

அதற்கான மூலம் பிராமணர் உருவாக்கிய வர்ணாஸ்ரம தர்மம் இல்லையா???

முன்பெல்லாம் நாரதர் சபேசன் போன்றோர் இந்துக்களை தாக்குகின்றனர் நாங்கள் பதிலுக்கு தாக்குகிறோம் என்றீர்கள் ஆனால் இப்போது தேவையே இல்லாமல் திராவிடத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.

தமிழகத்தில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு பிராமணனையாவது உங்களால் காட்ட முடியுமா...

கேட்டால் திராவிட இயக்கத்தால் தான் அவர்கள் தமிழை வெறுத்து விட்டதாக நீங்கள் சொல்லலாம்.....உணமையில் அவர்கள் தங்கள் தாய்மொழியாக தமிழைக்கருதினால் ஒரு இயக்கம் தங்களை இழிவு செய்கிறது என்று அதை வெறுப்பார்களா??

தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழ் இனம் என்றே கருதுகின்றனர்..ஆனால் ஈழத்தில் அவர்கள் தமிழ் பேசினாலும் ... ஏன் தங்களை தமிழராக அடையாளப்படுத்துவதில்லை???

உங்களை ப்போன்ற சிலரின் மததுவேஷமே அதற்கு காரணம் என்றால் ஏற்பீர்களா???

சாதிக்கொடுமைகள் எல்லா சாதியினராலும் செய்யப்பட்டன என்றாலும் ...

அதற்கான மூலம் பிராமணர் உருவாக்கிய வர்ணாஸ்ரம தர்மம் இல்லையா???

முன்பெல்லாம் நாரதர் சபேசன் போன்றோர் இந்துக்களை தாக்குகின்றனர் நாங்கள் பதிலுக்கு தாக்குகிறோம் என்றீர்கள் ஆனால் இப்போது தேவையே இல்லாமல் திராவிடத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.

தமிழகத்தில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு பிராமணனையாவது உங்களால் காட்ட முடியுமா...

கேட்டால் திராவிட இயக்கத்தால் தான் அவர்கள் தமிழை வெறுத்து விட்டதாக நீங்கள் சொல்லலாம்.....உணமையில் அவர்கள் தங்கள் தாய்மொழியாக தமிழைக்கருதினால் ஒரு இயக்கம் தங்களை இழிவு செய்கிறது என்று அதை வெறுப்பார்களா??

தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழ் இனம் என்றே கருதுகின்றனர்..ஆனால் ஈழத்தில் அவர்கள் தமிழ் பேசினாலும் ... ஏன் தங்களை தமிழராக அடையாளப்படுத்துவதில்லை???

உங்களை ப்போன்ற சிலரின் மததுவேஷமே அதற்கு காரணம் என்றால் ஏற்பீர்களா???

மாதமோ சித்திரை

நேரமோ பத்தரை

வீட்டிலோ யாவரும் நித்திரை

விரிந்ததோ எந்தன் மனத்திரை

அதில் கிழிந்ததோ சிலரின் முகத்திரை

இதில் அண்ணன் வேலுக்கு என்ன பிரச்சினை!

^_^:wub::lol:

தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழ் இனம் என்றே கருதுகின்றனர்..ஆனால் ஈழத்தில் அவர்கள் தமிழ் பேசினாலும் ... ஏன் தங்களை தமிழராக அடையாளப்படுத்துவதில்லை???

தமிழகத்தில் தமிழர்கள் பெரும்பானமையாக இருப்பதால், தமிழர்களிடம் அரசியல் பலம் இருப்பதால், தமிழர்களுடன் சேர்ந்துவிட்டார்கள், இங்கே இலங்கைத்தீவில் சிங்களவர்களிடம் அரசியல் பலம் இருப்பதால் சிங்களவர்களுக்கு ஜால்ரா போட்டு பிழைக்கிறார்கள்! இது கூட புரியவில்லையா!

நீங்கள் சொல்வது போல் ஈழத்தமிழர்களிடம் மதத்துவேசம் இருந்திருந்தால் கிறித்தவரான தந்தை செல்வாவை நாம் ஈழத்தமிழர்களின் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம். இல்லாத மதப்பிரிவினையை சில கூடாநட்புகள் ஈழ்த்தமிழரிடம் உருவாக்கிவிடுமோ என்று தான் நாம் அஞ்சுகிறோம்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.