Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் சற்று முன்னர் விடுதலை செய்துள்ளனர். அசாத் சாலி தற்போது தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
 
கடந்த மூன்றாம் திகதி அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைவாகவே அசாத் சாலி விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.
 
அசாத் சாலியை, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய புலானய்வுப் பிரிவினர் நீதிமன்றின் அனுமதியைப் பெற்றுக் கொண்டிருந்தனர். இதன் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்;து அசாத் சாலி உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
இந்த நிலையில் நேற்றைய தினம் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டதனை ஒப்புக் கொள்வதாகவும் அந்த ஊடகம் தமது கருத்துக்களை பூதாகாரமாக்கி வெளியிட்டமை வருத்தமளிப்பதாகவும் அசாத் சாலி தமது கடிதத்தில் தெரிவித்திருந்தார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவ்வாறான ஓர் பின்னிணியில் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலிலிருந்து சற்று முன்னர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் நிலை பாதிப்பு காரணமாக அசாத் சாலி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது
 
 
 
அசாத் சாலி மன்னிப்புக் கோரி ஜனாதிபதிக்கு நேற்றிரவு சத்தியக்  கடிதம் அனுப்பியுள்ளார்?
10-05-2013 01:45
 
 
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி சென்னையில் வைத்து தெரிவித்திருந்த கருத்து, அறியாமல் செய்த தவறு எனவும்  அதற்காக மன்னிப்புக் கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றிரவு சத்திய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் மட்டத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
 
சத்திய கடிதம் மூலம் அசாத் சாலி, ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரியுள்ளதால், அவர், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இன்று (10) விடுதலை செய்யப்படலாம் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91607/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானமுள்ள முஸ்லிம் :D

4399686691047964437asad%20sally2.jpg

தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி இதோ

May 10, 2013  08:17 pm

lg-share-en.gif

​கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இன்று (10) நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு அசாத் சாலி நேற்று (09) அனுப்பியதாகக் கூறப்படும் அந்த சத்திய வாக்குறுதியில் கீழ்காணும் விடயங்கள் அடங்குகின்றன.

இந்தியாவின் சஞ்சிகைக்கு தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டு பிரசுரமானதாகவும் தான் அதுகுறித்து சஞ்சிகை அதிகாரிகளுடன் உரையாடி கருத்தை சரிசெய்து மீண்டும் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையில் ஒருபோதும் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ மாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ள அசாத் சாலி அவ்வாறான நிலையை மூன்று தசாப்தங்கள் நிலவிய யுத்தத்தின் மூலம் கண்டுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒருமைப்பாடு, சுயநிர்ணயம் மற்றும் அனைத்து மக்களுக்காகவும் முன்னின்றதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அசாத் சாலி கூறியுள்ளார்.

இந்திய ஊடகத்திற்கு தான் அளித்த பேட்டியால் யாரும் ஏமாற்றப்பட்டிருந்தால் அல்லது அசௌகரியத்திற்கு உட்பட்டிருந்தால் அதற்கு தனது கவலையை வௌியிடுவதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

´பொப்புயூலர் பிரன்ட் ஒப் இந்தியா´ என்ற அமைப்பின் மாநாட்டிற்கு தான் முதல் முறையாக சென்றிருந்ததாகவும் அந்த அமைப்பின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் அசாத் சாலி சத்திய வாக்குறுதி அளித்துள்ளார்

 

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=38811

 

Posted Today, 11:29 AM

1102151979929878675Ranil%20speak2.jpg

 

 

மக்களின் எதிர்ப்புதான் அசாத் சாலியின் விடுதலைக்கு காரணம

May 10, 2013  08:32 pm

 
மக்களின் எதிர்ப்பு காரணமாகவே அசாத் சாலியை விடுதலை செய்ய அரசாங்கத்திற்கு நேரிட்டதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுவரை தீவிரவாதியாக நடத்தப்பட்ட அசாத் சாலி இன்று மக்கள் எதிர்ப்பால் விடுதலையானார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலையின் பின் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அசாத் சாலியை பார்வையிடச் சென்ற வேளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசியல்வாதிகளை அழிக்க அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் மக்கள் ஒன்றுதிரண்டால் இதனை தடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அசாத் சாலியை அரசாங்கம் பழிவாங்கியதாக தெரிவித்தார்.

அசாத் சாலி மன்னிப்பு கோரியுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திஸ்ஸ, அது தவறில்லை என்றார்.

 

 

178278889sali.jpg

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் இன்று (10) விடுதலை செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தற்போது கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்

 

 

http://www.adaderana.lk/tamil/news.php?mode=head&nid=1268

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.